என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிளர்ச்சியாளர்கள்"

    • துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி வருகின்றனர்.
    • ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநா தெரிவித்திருந்தது.

    வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    இரண்டு வருட போருக்குப் பிறகு, சூடானின் தலைநகர் கார்ட்டூமில்  உள்ள அதிபர் மாளிகையை பாராளுமன்ற படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக சூடான் ராணுவம் அறிவித்துள்ளது.

    நேற்று (வெள்ளிக்கிழமை) கார்ட்டூமில் RSF கட்டுப்பாட்டில் இருந்த அதிபர் மாளிகையை சூடான் ராணுவம் முழுமையாகக் கைப்பற்றியதாக சூடான் தொலைக்காட்சி மற்றும் இராணுவ வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

     

    துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (RSF) உறுப்பினர்களைத் தேடி, மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் சூடான் இராணுவம் இப்போது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

    உள்நாட்டு போரில் கடந்த 2 வருடமாக நாடு முழுவதும் பொதுமக்கள் மீது வன்முறை, வெறிச்செயல்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை குறைந்தது 20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் போரில் 1.4 கோடிக்கும் அதிகமான மக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகள் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வருகிறது.

     

    கடந்த 1 ஆண்டில் (2024இல்) மட்டும் சூடானில் ஆண் குழந்தைகள் உட்பட 221 குழந்தைகள் ராணுவ வீரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐநாவுக்கான குழந்தைகள் நிறுவனம் (யுனிசெப்) அறிக்கை மதிப்பிடுகிறது .

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ப்வேரா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • உகாண்டா காவல்துறையும் உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையும் சந்தேக நபர்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    மேற்கு உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லையில் உள்ள போண்ட்வே பகுதியில் லுபிரிரா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்குள் நுழைந்த கூட்டணி ஜனநாயகப் படையைச் சேர்ந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இதில், 38 மாணவர்கள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள ப்வேரா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சம்பவம் குறித்து உகாண்டா போலீஸ் படையின் செய்தித் தொடர்பாளர் ஃப்ரெட் எனங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " பள்ளிக்கூடத்தில் ஒரு தங்குமிடம் எரிக்கப்பட்டது மற்றும் ஒரு உணவுக்கூடம் சூறையாடப்பட்டது. இங்கு இதுவரை 41 உடல்கள் பள்ளியில் இருந்து மீட்கப்பட்டு ப்வேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன.

    உகாண்டா காவல்துறையும் உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையும் சந்தேக நபர்களை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

    • கூட்டத்துக்குள் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
    • தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

    போர்ட்-ஓ-பிரின்ஸ்:

    ஹைதி நாட்டு தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சின் வடக்கு புறநகர் பகுதியில் பாதிரியார் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்தவ பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அணிவகுத்து சென்றனர்.

    அப்போது கூட்டத்துக்குள் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

    • குக்கி கிளர்க்காரர்கள் துப்பாக்கி, ராக்கெட், டிரோன் என அதிநவீன தொழில்நுட்ப கருவிகளின்மூலம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்
    • நேற்று மதியம் முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் ராக்கெட் குண்டு விழுந்து வெடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்

    மணிப்பூரில் பழங்குடி அந்தஸ்து தொடர்பாக மெய்தி மற்றும் குக்கி இனக்குழு மகக்ளுடையிலான மோதல் கலவரமாக வெடித்து 220 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கடந்த வருடம் முதல் நடந்து வரும் இந்த கலவரத்தில் இரண்டு குக்கி சமூகப் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியான பின் நாட்டு மக்களின் கவனமும் அரசியல்வாதிகளின் கவனமும் மணிப்பூரை நோக்கி திரும்பியது.

    இதுவரை எந்த தீர்வும் காணப்படாமல் இன்றளவும் கலவரங்கள் தொடர்ந்து வருகின்றன. சுமார் 70,000 மக்கள் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆயுதமேந்திய குக்கி கிளர்க்காரர்கள் துப்பாக்கி, ராக்கெட், டிரோன் என அதிநவீன தொழில்நுட்ப கருவிகளின்மூலம் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு இம்பாலில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி டிரோன் மூலம் மெய்தி இன மக்கள் வசிக்கும் 2 கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். நேற்றைய தினம் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தாக்குதல்கள் அரங்கேறின. பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் நேற்று மதியம் முன்னாள் முதல்வர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் ராக்கெட் குண்டு விழுந்து வெடித்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 வயது சிறுமி உள்பட 5 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில் இன்று [சனிக்கிழமை] ஜிரிபாம் மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மாவட்டத் தலைநகரில் இருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தவரைச் சுட்டுக்கொன்றனர்.

    தொடர்ந்து மாவட்டத் தலைநகரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள இடத்தில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு இடையில் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மூன்று பழங்குடியின போராட்டக்காரர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர் மணிப்பூரில் மீண்டும். மணிப்பூரில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கத்தொடங்கியுள்ள நிலையில் அம்மாநில பாஜக முதல்வர் பைரேன் சிங் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

    • அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது.
    • தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் அலெப்போ உள்ளது.

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா அதிபராக பஷர் அல் அசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.

    பஷரை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் புதின் தலையீட்டால் பஷர் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். போராட்டக்காரர்களை ஒடுக்க ரஷியா பஷருக்கு பேருதவி செய்தது.

    2012 ஆம் ஆண்டுமுதல் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு அலெப்போ நகரை ரஷியா தனது விமானப்படை மூலம் மீட்டு 2016 ஆம் ஆண்டில் அதிபர் பஷர் அல் அசாத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அதன் பிறகான காலத்தில் சிறிய அளவிலான எதிர்ப்பு அங்கங்கே போராட்டங்கலகள் என்ற அளவில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போராக மாறியுள்ளது.

     

    முந்தைய போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் திடீரென மீண்டும் ராணுவத்துடன் சண்டையைத் தொடங்கியுள்ளனர். அமரிக்கா மற்றும் ஐநா சபையால் பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்ட இதன் தலைவராக அபு முகமது அல்-கோலானி உள்ளார். முந்திய காலங்களில் அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது

     

    இந்நிலையில் தற்போது வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் டசன் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் அலெப்போ நகரில் இருந்து ராணுவம் தாற்காலிகமாக பின்வாங்கி உள்ளது.

     

    மேலும் அலெப்போவில் மையம் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று [சனிக்கிழமை] அலெப்போ புறநகர்ப் பகுதியில் ரஷிய மற்றும் சிரிய போர் விமானங்கள் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் வரலாற்று காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பு பேணி வந்துள்ளது.
    • அலெப்போ நகர் வரலாற்றுக் காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருகிறது.

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா அதிபராக பஷர் அல் அசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.

    பஷரை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் புதின் தலையீட்டால் பஷர் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். போராட்டக்காரர்களை ஒடுக்க ரஷியா பஷருக்கு பேருதவி செய்தது.

    2012 ஆம் ஆண்டுமுதல் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு அலெப்போ நகரை ரஷியா தனது விமானப்படை மூலம் மீட்டு 2016 ஆம் ஆண்டில் அதிபர் பஷர் அல் அசாத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அதன் பிறகான காலத்தில் சிறிய அளவிலான எதிர்ப்பு ஆங்காங்கே போராட்டங்கள் என்ற அளவில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது மீண்டும் உள்நாட்டுப் போராக மாறியுள்ளது.

    முந்தைய போராட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்ட ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் திடீரென மீண்டும் ராணுவத்துடன் சண்டையைத் தொடங்கியுள்ளனர். அமரிக்கா மற்றும் ஐநா சபையால் பயங்கரவாத அமைப்பாக வரையறுக்கப்பட்ட இதன் தலைவராக அபு முகமது அல்-கோலானி உள்ளார். முந்திய காலங்களில் அல் கொய்தா உடன் நெருங்கிய உறவை இவ்வமைப்பு பேணி வந்துள்ளது

    இந்நிலையில் தற்போது வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் டசன் கணக்கான படையினர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் அலெப்போ நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனையடுத்து அலெப்போவில் மையம் கொண்டுள்ள கிளர்ச்சியாளர்கள் மீது ரஷிய ராணுவம் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 300க்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் -இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள அலெப்போ நகர் வரலாற்றுக் காலம் தொட்டே சிரியாவில் முக்கிய நகரமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • டமாஸ்கஸ் - இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் அலெப்போ
    • ஹோம்ஸ் நகரை கைப்பற்றினால் டமாஸ்கஸ் நோக்கி எளிதில் முன்னேற முடியும்.

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியா அதிபராக பஷர் அல் ஆசாத் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு சிரியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் உள்நாட்டுப் போராக வெடித்தது.

    ஆசாத்தை ஆதரிப்போர் மற்றும் எதிர்ப்போர் என இரு பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் கொல்லப்பட்டனர். ரஷிய அதிபர் புதின் தலையீட்டால் ஆசாத் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த வாரம் முதல் ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.

    அல் கொய்தாவுடான் நெருங்கிய தொடர்பில் இருந்த இவ்வமைப்பு ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ளது. கடந்த வாரம் வடமேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் படையினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சிரியா ராணுவம் தெரிவித்தது. அலெப்போ நகரை கிளர்ச்சியாளர்கள் கடந்த சனிக்கிழமை கைப்பற்றிய நிலையில் ராணுவம் அங்கிருந்து வெளியேறியது.

     

    சிரியாவுக்கு ஆதரவாக மீண்டும் ரஷியா ராணுவ விமானங்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தலைநகர் டமாஸ்கஸ் - இல் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு பகுதியில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கட்டுபாட்டுக்குள் வைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து நேற்றைய தினம் ஹமா நகரையும் கைப்பற்றி உள்ளனர்.

     

    ஹமா[hama] நகரம் தலைநகர் டமாஸ்கஸ் - அலெப்போ இடையிலான நேரடி இணைப்புப் பாதை கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் ஏராளமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் நகர் பகுதியில் தாக்குதல் தொடர்ந்தால் மக்களும் பாதிக்கப்படுவர் என்பதால் ஹமா நகரை விட்டு வெளியேறியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

     

    இதனால் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் ஹமா நகரம் சென்றுள்ளது. கிழக்கில் உள்ள இரண்டு நகர்களை தொடர்ந்து தற்போது மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் [homs] நகரைக் கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். தாக்குதலுக்கு அஞ்சி ஆயிரக்கணக்கானோர் ஹோம்ஸ் நகரை விட்டு வெளியேறியுள்ளனர்.

    ஹோம்ஸ், கிழக்கு பகுதி நகரங்களுடன் டமாஸ்கஸ் ஐ இணைக்கிறது. இந்த நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றும் பட்சத்தில் தலைநகர்  டமாஸ்கஸ் நோக்கி கிளர்ச்சிப் படைகள் முன்னேறுவது எளிதாக அமையும்.  

    • அதிபர் ஆசாத்தின் புகைப்படத்தைப் பள்ளிச் சுவர்களில் கிராப்பிடி ஆக வரைந்து எதிர்ப்பை பதிவு செய்த பள்ளி மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர்
    • முந்தைய உள்நாட்டு போரின் போது தாரா கிளர்ச்சியின் பிறப்பிடமாக இருந்தது

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ள அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.

    ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ நகர் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைக்குள் சென்றது.

     

    ராணுவம் அங்கிருந்து வெளியேறிய நிலையில் முந்திய உள்நாட்டு போரின் போது உதவிய ரஷியா மீண்டும் போர் விமானங்களை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் துரிதமாக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் கடந்த வியாழனன்று ஹமா நகரையும் கைப்பற்றினர். 

    கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் ஏராளமான ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் நகர் பகுதியில் தாக்குதல் தொடர்ந்தால் மக்களும் பாதிக்கப்படுவர் என்பதால் ஹமா நகரை விட்டு வெளியேறியுள்ளதாக ராணுவம் தெரிவித்தது.

    தொடர்ந்து மத்திய சிரியாவில் உள்ள ஹோம்ஸ் நகருக்கு கிளர்ச்சியாளர்கள் குறிவைத்துள்ளதால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர். ஹோம்ஸ், கிழக்கு பகுதி நகரங்களுடன் டமாஸ்கஸ் ஐ இணைப்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

     

    இந்நிலையில் தாரா [Daraa] நகரையும் ராணுவத்திடம் இருந்து கிளர்ச்சியாளர்கள் இன்று கைபட்டறியுள்ளனர். முந்தைய உள்நாட்டு போரின் போது தாரா கிளர்ச்சியின் பிறப்பிடமாக இருந்த ஒன்றாகும்.

    இங்கே 2011 ஆம் ஆண்டில் அதிபர் ஆசாத்தின் புகைப்படத்தைப் பள்ளிச் சுவர்களில் கிராப்பிடி ஆக வரைந்து எதிர்ப்பை பதிவு செய்த பள்ளி மாணவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தாரா நகரில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அதுவே உள்நாட்டு போராக பின்னர் பரிணமித்தது.

     

    அலெப்போ - ஹாமா ஆகியவை இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான தஹ்ரிர் அல் ஹாம் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்ட நிலையில் தாரா நகரை உள்ளூர் ஆயுதக்குழு ஒன்று கைப்பற்றி உள்ளதாக சிரிய மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது.

    தாரா நகரின் 90 சதேவீதம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்ற நிலையில் ராணுவம் அங்கிருந்து வெளியேறி வருகிறது. ஜோர்டான் நகரில் எல்லையில் தாரா மாகாண பகுதிகள் அமைந்துள்ளதால் நிலைமை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த உள்நாட்டு போரின் போது நாடு முழுவதும் 500,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    • சிரிய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
    • விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல்.

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது. சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கியுள்ளனர்.

    ஆசாதின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் வடமேற்கு சிரியாவில் நடத்திய தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ நகர் கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைக்குள் சென்றது.

    இந்த நிலையில், சிரியா தலைநகர் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்ததாக சிரிய கிளிர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகரில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்பதாக தெரிவித்துள்ளனர். எனினும், இது குறித்து சிரிய அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    இது குறித்து அந்நாட்டின் ஷாம் எப்.எம். ரேடியோ வெளியிட்ட தகவல்களில் டமாஸ்கஸ் விமான நிலையம் கைப்பற்றப்பட்டு, அங்கிருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், விமான சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிரிய தலைநகர் வடக்கில் உள்ள சயித்நயா ராணுவ சிறைக்குள் நுழைந்து தங்களது குழுவை சேர்ந்த சிறைவாசிகளை விடுவித்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸ்-ஐ அரசாங்கப் படைகள் கைவிட்டதைத் தொடர்ந்து முந்தைய நாள் இரவு, எதிர்க்கட்சிப் படைகள் அதைக் கைப்பற்றின. ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் பஷார் ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அதிபர் பஷார் ஆசாத் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான வதந்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

    • அதன்பின் நடந்த ரத்தக்களரியில் 500,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
    • தாரா மக்கள் நடத்திய போராட்டங்களில் போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது.

    ஆசாத் ஆட்சியின் வீழ்ச்சி 

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக அவரது குடும்பமே சிரியாவில் ஆட்சியில் இருந்தது.

    இதற்கிடையே அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பிரச்சனைகள், சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றை எதிர்த்து கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. ரஷியாவின் உதவியுடன் அப்போது தனது ஆட்சியை ஆசாத் காப்பற்றிக்கொண்டார்.

     

    அதிபர் பஷர் அல் ஆசாத் 

    உலக சக்தியான ரஷியாவின் உதவியுடன் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் அமைதியின்மை தொடரவே செய்தது. அதன் விளைவாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் முக்கிய நகரங்களையும் கடைசியாக டமாஸ்கஸ் உட்பட அலெப்போ, ஹமா, தாரா உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர். அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    'எஜாக் எல் டோர், யா டாக்டர்'

    2011 ஆம் ஆண்டு சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஒரு இளைஞனின் 14 வயது பள்ளிச் சிறுவனின் புரட்சிகரமான செயல் நாட்டின் தலைவிதியையே மாற்றியமைத்துள்ளது.2011 சிரியா உள்நாட்டு போரின் பிறப்பிடமாக விளங்கும் தாரா நகரத்தில் இந்த கதை தொடங்குகிறது.

    நாடு முழுவதும் மக்கள் மனதில் அடக்கி வைத்திருந்த எதிர்ப்பு சிறுவனின் கிராஃபிட்டி ஓவியமாக முதல் வடிவம் பெற்றது. தாரா நகரை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் மௌவியா சியாஸ்னே, அதிபர் ஆசாத் உடைய புகைப்படத்தைப் பள்ளி சுவரின் கிராஃபிட்டி ஓவியமாக வரைந்து அவரின் மருத்துவ பட்டத்தை குறிப்பிட்டும் வகையில்  ['எஜாக் எல் டோர், யா டாக்டர்'] ['இது உங்களின் முறை டாக்டர்'] என்று எழுதுகிறான். இது உள்ளூர் காவல்துறையினரின் கண்ணில் படவே, மௌவியாவும் அவனது நண்பர்களும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். 

     

     26 நாட்கள்

     ஆசாத்தின் முகபாரத் [ரகசிய போலீஸ்] அவர்களைக் காவலில் வைத்து 26 நாட்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்துகிறார்கள். தாரா மக்கள் மத்தியில் இந்த செய்தி காட்டுதீ போல் பரவி கோபத்தை ஏற்படுத்துகிறது. சிறுவர்களை விடுதலை செய்யவேண்டி அவர்களின் பெற்றோர்களும், தாரா மக்கள் பலரும் நடத்திய போராட்டங்களில் போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது.

    26 நாட்கள் சித்திரவதைக்குப் பின்னர் விடுதலையான சிறுவர்களின் படங்கள் சிரியா முழுவதும் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. தாராவில் மட்டுமின்றி சிரியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மார்ச் 15, 2011 சிரியா முழுவதும் "எதிர்ப்பு தினம்" அனுசரிக்கப்படுகிறது. இது பின்னர் நாடு தழுவிய இயக்கமாக மாறுகிறது. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

     

    கிளர்ச்சி > போராட்டம்  

     எதிர்த்து பேசுவோரைச் சிறையில் அடைத்தனர் அவ்வாறு அடைக்கப்பட்ட எண்ணற்றோரைச் சித்திரவதைக்கு உட்படுத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் ஆயுதங்களை ஏந்தி கிளர்ச்சியாளர்களாக மாறுகின்றனர்.

    அதன்பின் நடந்த ரத்தக்களரியில் 500,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 13 மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.

    ரஷியாவின் உதவியால் அப்போது தப்பிய ஆசாத் ஆட்சி தற்போது கடந்த வாரம் திடீரென புத்துயிர் பெற்ற கிளர்ச்சியால் ஒரே வாரத்தில் வீழ்ந்துள்ளது. இதனால் நேற்று வரை கிளர்த்தியாளர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் இனி ஆட்சியாளர்கள் என்று குறிப்பிடப்படுவார்கள்.

     

    • மேற்கு நாடுகள் ரஷியா மீது பல தடைகள் விதித்திருந்தும் ஆசாத்தின் விஸ்வாசம் ரஷியா பக்கமே உள்ளது.
    • துருக்கி HTS ஐ விரும்பாத போதிலும் சிரியாவில் உருவான கிளர்ச்சியை ஆதரித்து வருகிறது.

    சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் 2011 முதல் 13 ஆண்டுகளாக பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரிட்டனர். ஆனால் அவரை அதிகாரத்திலிருந்து வெளியேற்ற முடியவில்லை.

    திடீரென கடந்த வாரத்தில் ஒரு சாதராண நாளில் தொடங்கி 13 நாட்களுக்கும் குறைவாக நீடித்த ஒரு தாக்குதலில், அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி தூக்கி எறியப்பட்டுள்ளது. அதிபர் ஆசாத் நாட்டை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இடம் பொருள் ஏவல் என்றால் அது மிகையாகாது.

    இடம் பொருள் ஏவல்

    'ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

    கருதி இடத்தாற் செயின்'  என்ற திருக்குறளே இங்கேயும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது.

    கடந்த 2011 தொடங்கிய உள்நாட்டுப் போரில் அதிபர் ஆசாத்துக்கு பக்கபலமாக ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் கிளர்ச்சியை ஒடுக்க பேருதவியாக இருந்தது. கடைசியாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த சொற்ப அலெப்போ நகர் பகுதிகளையும் ரஷியா கைப்பற்றி 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஆசாத்துக்கு பரிசளித்தது ரஷியா. தற்போது மேற்கு நாடுகள் ரஷியா மீது பல தடைகள் விதித்திருந்தும் ஆசாத்தின் விஸ்வாசம் ரஷியா பக்கமே உள்ளது.

     

    ஆசாத்

    இருப்பினும் ரஷியா தற்போது உக்ரைன் போரில் ஈடுபட்டு வருவதால் சிரியாவில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ஈரான் இஸ்ரேலுடன் மோதிக்கொண்டு உள்ளது. ஆசாத்தின் இரண்டு கூட்டாளிகளும் திசைதிருப்பட்டிருக்கும் நிலையில் சிரியா எடுப்பார் கை பிள்ளையாக இருப்பது காத்திருந்த கிளர்ச்சியர்களுக்கு உறைத்துள்ளது

    மேலும் முந்திய கிளர்ச்சியில் போராட்டக்காரர்களை ஒடுக்க ஆசாத்துக்கு முக்கிய உதவியாக இருந்த மற்றொரு அமைப்பு அண்டை நாடான லெபனானில் இயங்கி வந்த ஹசன் நஸ்ரல்லா தலைமையிலான ஹிஸ்புல்லா. ஆனால் தற்போது இஸ்ரேலுடனான மோதலில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டு பெரும் படைகளையும் ஹிஸ்புல்லா இழந்துள்ளது.

    நவம்பர் 27 அன்று லெபனானில் போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில் தங்களை சேதங்களில் இருந்து மீட்டுருவாக்கம் செய்து வரும் ஹிஸ்புல்லா இந்த முறை ஆசாத்துக்கு உதவி செய்யாமல் கை விரிந்துள்ளது.  

    ஊழல் - கொள்ளை

    இதற்கிடையே சிரியாவிலும் உள்நாட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்டன. பெரிய அளவிலான ஊழல் மற்றும் அதிகாரிகளே கொள்ளையடித்த காரணத்தால் ராணுவ பீரங்கிகள் மற்றும் விமானங்களில் எரிபொருள் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குத் தகவல் வந்துள்ளது.

    மேலும் பல சிரியர்கள் தங்கள் நாட்டு மக்களுடன் சண்டையிட விரும்பாததால் லெபனானுக்கு தப்பிச் சென்றதால் ராணுவ வீரர்கள் கையில் ஆயுதங்கள் இருந்தாலும் எந்த திசையிலும் இருந்து உதவி இல்லாமல் மன உறுதியை இழந்திருந்தது கிளர்ச்சியாளர்களுக்குச் சாதகமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

    அல்-கோலானி

    கிளர்ச்சிக் கூட்டணியின் முக்கிய தலைமையாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) அமைப்பு செயல்பட்டது. முந்தைய காலங்களில் அல்-கொய்தாவுடனான தொடர்பை பேணி வந்த அமைப்பே இந்த HTS .

     

    அல்-கோலானி

    இந்த அமைப்பின் தற்போதைய தலைவரான அபு முகமது அல்-கோலானி திட்டத்தின் பேரிலேயே கடந்த வாரம் இந்த முழு அளவிலான தாக்குதல் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி உள்ளிட்ட பல நாடுகளில் கோலானி பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

     

    HTS

    துருக்கியின் கை

    துருக்கி HTS ஐ விரும்பாத போதிலும் சிரியாவில் உருவான கிளர்ச்சியை ஆதரித்து வருகிறது. எனவே தற்போதைய நடவடிக்கையில் துருக்கியின் பங்கு உள்ளதாகவும் அரசியல் அரங்கில் அனுமானங்கள் எழுந்துள்ளன. ஆனால் துருக்கி வெளியுறவு துணை அமைச்சர் நுஹ் யில்மாஸ் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

     

    குஷியில் இஸ்ரேல்

    பஷர் அல் அசாத் ஆட்சியின் வீழ்ச்சியில் மற்றொரு வெற்றியாளர் இஸ்ரேல். சிரியாவில் ஆட்சி மாற்றம் ஈரான், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுக்கு ஆயுதங்களை வழங்கிய பாதையைத் தடுத்துள்ளது.

    ஏற்கனவே பலவீனமான ஹிஸ்புல்லாவை இப்போது இஸ்ரேல் அதிக பலத்துடன் அழிக்க முடியும். கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இஸ்ரேலிய விமானப்படை போர் விமானங்கள் சிரியா முழுவதும் அபாயகர ஆயுதங்கள் இருக்கும் இலக்குகளை அழித்து அவை கிளர்ச்சியாளர்கள் வசம் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    மற்றொரு புறம் ரஷிய ஆதரவு ஆசாத்தை ஒழித்துக்கட்ட மேற்கு நாடுகள் கிளர்ச்சியாளர்களுக்கு ஊக்கமளித்து உதவியதாகவும் அரசியல் அரங்கில் கருத்து நிலவுகிறது.

    • சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர்.

    டமாஸ்கஸ்:

    சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து 50 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடங்கள் மற்றும் நீண்ட தூர ராக்கெட்டுகள் பயங்கரவாதிகளின் கைகளில் சிக்காமல் இருக்க வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் அரசு படைகள் வெளியேறிய பகுதிகளில் இஸ்ரேல் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை கைப்பற்றியுள்ளது.

    வடக்கு சிரியாவில், அமெரிக்காவின் ஆதரவுடன் குர்திஷ் தலைமையிலான படைகளிடமிருந்து மன்பிஜ் நகரத்தை எதிர்க்கட்சி படைகள் கைப்பற்றியதாக துருக்கி கூறியது. கடந்த காலத்தில் சண்டையிட்ட ஆயுதக் குழுக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதை இது காட்டுகிறது.

    ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். அதேசமயம், பிரதமர் முகமது காஜி ஜலாலி தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், புதிய தலைமையை கொண்டு வருவதற்காகவும் கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.

    சிரியாவில் அரசாங்கம் இன்னும் செயல்பட்டு வருவதாகவும், இயல்பு நிலையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் பிரதமர் முகமது காஜி ஜலாலி கூறி உள்ளார்.

    "அதிகார மாற்றம் சுமுகமாக இருக்கும் வகையில் பணியாற்றி வருகிறோம். பாதுகாப்பு நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் அரசாங்கம் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. கிளர்ச்சிக் குழு தலைவர் அபு முகமது அல்-கோலானி என்று அழைக்கப்படும் அஹ்மத் அல்-ஷாராவை சந்திக்க தயாராக இருக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.

    ×