என் மலர்
நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள் கூட்டம்"
- பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
- கூட்டம் முடிந்ததும் விமானம் மூலம் சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னை:
பீகாரின் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டம் முடிந்ததும் விமானம் மூலம் சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.
தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிராக நடைபெற்ற கூட்டமாக இதைக் கருத வேண்டாம்.
எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் 7 முக்கிய கருத்துக்களை எடுத்து வைத்தேன்.
பிரதமர் வேட்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்தியாவின் பன்முகத்தன்மை, ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டும்.
மீண்டும் பா.ஜ.க. வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. நிச்சயம் தோற்கடிக்கப்படும்.
மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் மிக முக்கியம் என்பதை வலியுறுத்தினேன் என தெரிவித்தார்.
- நிதிஷ்குமார் நாடு முழுவதும் பயணித்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
- எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் சிம்லாவில் நடைபெறும்,
பாட்னா:
பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித்தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், கூட்டம் முடிந்ததும் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. வரும் பாராளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளோம். அது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விரைவில் மற்றொரு கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தங்களுடன் இணைந்து செயல்படாமல் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளுடன் கை கோர்ப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.
தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா பேசுகையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு நீக்க விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நிலைப்பாட்டை விமர்சித்தார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவரான சரத்பவார் பேசுகையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நாங்கள் இருவரும் 25 ஆண்டுகளாக கடுமையான எதிரிகளாக இருந்து சண்டை போட்டவர்கள். இப்போது இணைந்து செயல்படவில்லையா? அதேபோலதான் நாம் அனைவரும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.
- ஜனநாயகம் எப்படி குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நாடு கண்கூடாக காண்கிறது.
- எதிர்க்கட்சிகள் அதிகாரத்திற்காக அல்லாமல் கொள்கைகளுக்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.
பாட்னா:
பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, மகாத்மா காந்தியின் இந்தியாவை, கோட்சேவின் நாடாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது என்றார்.
நாட்டில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், ஜனநாயகம் எப்படி குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பதை நாடு கண்கூடாக காண்பதாகவும், அதனை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்கொள்வதாகவும் மெகபூபா குறிப்பிட்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மற்றொரு முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா பேசும்போது, எதிர்க்கட்சிகள் அதிகாரத்திற்காக அல்லாமல் கொள்கைகளுக்காக ஒன்றிணைந்து, நாட்டில் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
- எதிர்க்கட்சிகளின் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவம் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
- தமிழக ஆளுநர் தனது சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்து வருகிறார்.
மதுரை
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மதுரையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரதீய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஆசையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளன. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவமாகும். பா.ஜ.க.வுடன் தனியாக மோதினால் வெல்ல முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தேர்தலை த.மா.கா. சந்திக்கும். விரைவில் எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய உள்ளன.
டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடினால் தான் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை காக்க முடியும். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது அமலாக்கத் துறை சோதனையை சரி என்கிறது. ஆனால் ஆளுங் கட்சியாக மாறிய பின் தவறு என்கிறது.
தி.மு.க. மக்களுக்கு அதிக வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியுள்ளது. தமிழக ஆளுநர் தனது சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத் தலை வர் ராஜாங்கம், நிர்வாகிகள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், சித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முதல் கூட்டத்தின் முடிவில் 2வது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என கூறப்பட்டது.
- கூட்டம் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த 23ம் தேதி எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் நிதிஷ் குமார்," வரும் பாராளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்றாக இணைந்து சந்திக்க திட்டமிட்டு உள்ளோம்" என கூறினார்.
இந்நிலையில், 2வது கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் ஜூலை 13,14ம் தேதிகளில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார்.
- பெங்களூரு ஆலோசனை கூட்டம் தள்ளிப்போவதற்கு வேறு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
- பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன.
ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரளுமா? என்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைமையை ஏற்க சில மாநில கட்சி தலைவர்கள் இன்னமும் தயங்குகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் இடையே நிலவும் கருத்து வேற்றுமைகளை விலக்கி ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை பீகார் முதல்-மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டார். அவரது தொடர் முயற்சி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் சந்திப்பு நடந்தது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஸ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட 16 கட்சிகள் பங்கேற்றன. அப்போது தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
அடுத்த கட்டமாக மாநில அளவில் கூட்டணிகளை உருவாக்குவது, நாடு முழுவதும் 450 தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்துவது மற்றும் குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை வகுப்பது ஆகியவற்றை முடிவு செய்ய 2-வது முறையாக மீண்டும் சந்தித்து பேச எதிர்க்கட்சிகள் தீர்மானித்தன. 2-வது முறையாக சிம்லாவில் சந்திக்க முதலில் திட்டமிடப்பட்டது.
ஆனால் பருவமழை காரணமாக அந்த கூட்டத்தை கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரில் நடத்த முடிவு செய்தனர். வருகிற 13, 14-ந்தேதிகளில் பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த இருந்தனர்.
இந்த நிலையில் பெங்களூரு ஆலோசனை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த கே.சி.தியாகி உறுதிப்படுத்தினார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்குவதால் பெங்களூரு கூட்டத்தை ஒத்திவைப்பதாக அவர் கூறினார்.
ஆனால் பெங்களூரு ஆலோசனை கூட்டம் தள்ளிப்போவதற்கு வேறு சில முக்கிய காரணங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பீகார் மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 10-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதுபோல கர்நாடகா சட்டசபை கூட்டமும் இன்று தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த இரு சட்டசபைகள் கூடும் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்களை ஒரே இடத்தில் ஒன்று திரட்டுவது சாத்தியம் இல்லாததால் எதிர்க்கட்சிகளின் கூட்டம் ரத்தாகி இருக்கிறது. காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளும் பெங்களூரு கூட்டத்தை ஒத்திவைக்க வலியுறுத்தியதாக தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கட்சி தலைவர் சரத்பவார் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளார். பாட்னா கூட்டம் முடிந்த நிலையில் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு வெவ்வேறு வகைகளில் சிக்கல் எழுந்துள்ளது.
இதன் காரணமாகவே பெங்களூரு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. எனவே அதுவரை எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்காது என்று கூறப்படுகிறது.
இதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக புதிய தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று தெரியவில்லை.
- கடந்த மாதம் 20-ந்தேதி பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் சந்திப்பு நடந்தது.
- ஜூலை 13, 14-ம் தேதிகளில் பெங்களூருவில் அடுத்த கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன.
ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரளுமா? என்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைமையை ஏற்க சில மாநில கட்சி தலைவர்கள் இன்னமும் தயங்குகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் இடையே நிலவும் கருத்து வேற்றுமைகளை விலக்கி ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை பீகார் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டார். அவரது தொடர் முயற்சி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி பீகார் மாநிலம் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் சந்திப்பு நடந்தது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், தேசிய மாநாட்டு கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட 16 கட்சிகள் பங்கேற்றன. அப்போது தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜூலை 13, 14-ம் தேதிகளில் பெங்களூருவில் அடுத்த கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் பெங்களூருவில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.
- கலவரம் நடக்கும் மணிப்பூர் தலைநகர் இம்பால் போய் பார்க்கவில்லை.
- பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது.
மதுரை:
பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மணிப்பூரில் நடைபெறும் மதக்கலவரம் நீடித்துக் கொண்டே செல்கிறது. அங்கு மனித உரிமைகள் நிறைய நடக்கிறது. மெய்தி எனும் இந்து சமுதாயம் சுமார் 50 சதவீதம் பேர் உள்ளனர். மாற்று சமுதாயத்தினர் அவர்களை முந்த முயற்சிக்கிறார்கள்.
பிரதமர் மோடி அமெரிக்கா போவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. கலவரம் நடக்கும் மணிப்பூர் தலைநகர் இம்பால் போய் பார்க்கவில்லை. பிரதமர் உடனே போய் கலவரத்தை அடக்க முயற்சி செய்ய வேண்டும்.
பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பொறுத்தவரை ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து வந்தால் ஒற்றுமையாக செயல்பட்டால் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு உள்ளது. நரேந்திர மோடி பிரதமராக இருந்த காலத்தில் எதுவும் செய்யவில்லை.
கோவில்கள் அனைத்தும் வெளிவர முயற்சி செய்து கொடுத்தோம். ஜாதி, மதம் மற்றும் அனைத்து இந்துக்களையும் ஒற்றுமையாக்க முயற்சி செய்தோம். இந்து ஒற்றுமைக்காக பா.ஜனதாவுக்கு ஓட்டு கிடைக்கும். பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள்.
வெள்ளைக்காரர்கள், முஸ்லிம்கள் நமது கலாச்சாரத்தை கெடுத்து விட்டு சென்றனர். அதை மீட்பதற்கும், மறுமலர்ச்சி ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என இந்துக்களிடம் எண்ணம் வந்துள்ளது. அதற்காக நமக்கு ஓட்டு கிடைக்கும்.
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க பெயர் வைப்பது குறித்து பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது. பிரபுல் பட்டேல் என்னிடம் கூறினார். மதுரை விமான நிலைய திறப்பு விழா சமயத்தில் மேடையில் பிரபுல் பட்டேல் அறிவிக்க இருந்த நேரத்தில் ப.சிதம்பரம் அறிவிக்க விடாமல் தடுத்து விட்டார்.
முத்துராமலிங்க தேவர், தேவர் என்பதை தவிர நாட்டுடைய விடுதலைக்காக போராடியவர். ராஜ குடும்பத்தை சேர்ந்தவர். மதுரை விமான நிலையத்திற்கு அவர் பெயர் வைக்காதது எனக்கு மிகவும் வருத்தம். இன்றைக்கு ஆட்சியில் இருந்தாலும் யாரும் ஆதரவு அளிக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. யாரும் ஆதரிக்கவில்லை.
இவர்கள் கடிதம் கொடுத்தால் பாராளுமன்றத்தில் பேசி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க ஏற்பாடு செய்வேன். ஒருவருக்கு ஒருவர் பொறாமையில் பேசி செயல்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதல் ஆலோசனை கூட்டத்தில் டெல்லியின் அவசர சட்டம் தொடர்பாக காங்கிரசுக்கும், ஆம்ஆத்மி கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
- பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தும் வகையில் சோனியா காந்தி தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
புதுடெல்லி:
அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன.
ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரளுமா? என்பதில் தொடர்ந்து சந்தேகம் நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைமையை ஏற்க சில மாநில கட்சி தலைவர்கள் தயங்குகிறார்கள்.
எதிர்க்கட்சிகள் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிகளை ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் மேற்கொண்டார். அவரது தீவிர முயற்சியால் கடந்த மாதம் 23-ந்தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது.
இதில் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள் உள்பட 16 கட்சிகள் பங்கேற்றன.
தேசிய அளவில் பா.ஜனதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று இந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது கூட்டத்தை இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பருவமழை காரணமாக அந்த கூட்டத்தை கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தை நாளையும் (13-ந்தேதி), நாளை மறுநாளும் (14-ந் தேதி) நடத்த முடிவு செய்து இருந்தனர். ஆனால் அந்த தேதியில் கூட்டம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு அனுப்பி உள்ளது. புதிதாக 8 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, கொங்குநாடு மக்கள் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
பாட்னாவில் ஜூன் 23-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தோம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் வருகை தர வேண்டும். நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.
சோனியா காந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். பாட்னா கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. பெங்களூருவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி எதிர்க்கட்சிகளுக்கு விருந்து அளிக்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசை தயார்படுத்தும் வகையில் அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
இந்த கூட்டத்தில் மாநில அளவில் கூட்டணிகளை உருவாக்குவது, நாடு முழுவதும் 450 தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்துவது, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுப்பது ஆகியவை குறித்து முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
முதல் ஆலோசனை கூட்டத்தில் டெல்லியின் அவசர சட்டம் தொடர்பாக காங்கிரசுக்கும், ஆம்ஆத்மி கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அவசர கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் ஆதரவை தெரிவிக்காவிட்டால் அடுத்த கூட்டத்தை புறக்கணிக்க போவதாக கெஜ்ரிவால் மிரட்டினார். அப்போது அவரை மம்தா பானர்ஜி, சரத்பவார் ஆகியோர் சமாதானப்படுத்தினர்.
பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்க ஆம்ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் அழைப்பு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சோனியா தலைமையில் நடக்கும் 2 நாள் கூட்டத்தில் பங்கேற்க இப்போது 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- கூட்டத்திற்கு வரும் தலைவர்களுக்கு சோனியா காந்தி நாளை விருந்து அளிக்க உள்ளார்.
சென்னை:
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது.
பிரதமர் மோடிக்கு எதிராக அணி திரளும் வகையில், பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 23-ந்தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்தது. அப்போது அதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதன் 2-வது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நாளை நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடக்கும் 2 நாள் கூட்டத்தில் பங்கேற்க இப்போது 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
கூட்டத்திற்கு வரும் தலைவர்களுக்கு சோனியா காந்தி நாளை விருந்து அளிக்க உள்ளார். அதைத் தொடர்ந்து நாளை மறுதினம், எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்க உள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை பெங்களூரு புறப்பட்டு செல்கிறார். சோனியா காந்தி அளிக்கும் விருந்தில் பங்கேற்கும் அவர் பெங்களூரில் தங்கி இருந்து நாளை மறுநாள் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
முதல் கூட்டம் பாட்னாவில் நடந்த போது பெரிய அளவில் விவாதங்கள் நடக்கவில்லை. ஒருமித்த கருத்துடன் பிரதமர் வேட்பாளரும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் இப்போது நடைபெற உள்ள 2-வது ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி ஒற்றுமை, பிரசார உத்திகள் பிரதமர் வேட்பாளர் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
- மத்திய பா.ஜனதா அரசின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கிறது.
நெல்லை:
மூத்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நல்லசிவத்தின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.
அதன்படி நெல்லை, ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே அவரது நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமை குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
நாளை மற்றும் நாளை மறுதினம் பெங்களூருவில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. பா.ஜனதாவை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து கூட்டம் நடத்தப்படுகிறது.
இதுவரை மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 150-க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்ட சூழலிலும் 36 லட்சம் மக்கள் தொகை கொண்ட மணிப்பூரில் இருந்து பல்லாயிரம் நபர்கள் வெளியிடத்திற்கு குடிபெயர்ந்த சூழலிலும் அங்கு நடக்கும் கலவரத்தை பாரத பிரதமர் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை.
மணிப்பூரில் நடக்கும் மோதலுக்கு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.-ன் அணுகுமுறை சரியில்லாதது தான் காரணம். இந்திய நாட்டில் பழங்குடியின மக்களுக்கென மாநில வாரியாக தனித்தனி சட்டங்கள் உள்ளது.
யாரிடமும் எந்த கருத்தும் கேட்கப்படாமல் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமனம் செய்து அங்குள்ள ஆட்சியை சீர்குலைக்கும் செயலை பா.ஜனதா செய்து வருகிறது. தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
விலைவாசி உயர்வு, விலையை கட்டுப்படுத்துவது போன்றவைகள் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. உணவு உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தடுக்க மத்திய அரசு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.
ஆனால் தமிழகத்தில் மாநில அரசு தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் குறைந்த விலைகளில் தக்காளி விற்பனை செய்து வருவது வரவேற்கத்தக்கது.
மத்திய பா.ஜனதா அரசின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. வருகிற 23-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொள்கிறார்.
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த நோக்கம்.
மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் கட்சிகளிடம் வேறுபாடுகள் இருந்தாலும் அகில இந்திய அளவில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது.
எத்தனை ஊழல் வழக்குகள் இருந்தாலும் பா.ஜ.க.வில் யாரேனும் சேர்ந்தால் அவர்கள் புனிதராகி விடுகிறார்கள். இப்படிப்பட்ட கேவலமான நடவடிக்கையை பா.ஜ.க. செய்து வருகிறது. மக்கள் அவர்களை கண்டிப்பாக நிராகரிப்பார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
இவர் அவர் கூறினார்.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
- பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியும் பங்கேற்கிறது.
பெங்களூரு:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே, கடந்த மாதம் 23-ம் தேதி காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தினர். அதில் பாராளுமன்ற தேர்தலை ஓரணியில் திரண்டு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பெங்களூரு தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள். அப்போது தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது.
காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்கின்றன.
எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் ஓட்டலுக்கு முன்புறத்தில் தலைவர்களை வரவேற்கும் வகையில் அவர்களின் உருவ படங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. அந்த ஓட்டல் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டுவது, குறைந்தபட்ச பொது செயல் திட்டங்களை உருவாக்குவது, ஒருவேளை எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை தற்போது நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.