என் மலர்
நீங்கள் தேடியது "ஆர் என் ரவி"
- பாரதத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக தான் வாழ்ந்து வருகிறோம்.
- ஒரு காலத்தில் இந்தியாவின் பேச்சை மற்ற நாடுகள் கவனிக்காது, ஆனால் இப்போது நமது பிரதமர் பேசும் போது உலகமே உற்றுப் பார்க்கிறது.
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தின் 50-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி அங்கு கட்டப்பட்டுள்ள பொன் விழா அரங்கத்தை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மடத்தின் தலைவர் சுபுதேந்திர தீர்த்தர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:-
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் உருவானது. பாரதம் உருவான போதே சனாதன தர்மமும் உருவானது. அது வாழையடி வழையாக ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்படுகிறது. அதன் ஒளியும் தலைமுறைகளுக்கு வந்து கொண்டு இருக்கிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே பாரதம் என்றுதான் சொல்லப்பட்டு உள்ளது. இந்த பாரதத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு பிறகுதான் ஆங்கிலம்தான் உயர்ந்தது என்றும், அவர்களுடைய கலாச்சாரம்தான் சிறந்தது என்றும் பரப்ப தொடங்கினார்கள்.
நமது அரசியலமைப்பு வரை படத்தில் கூட குருகுல காட்சிகள்தான் இடம் பெற்று உள்ளன. ஆனால் ஆங்கிலேயர்கள்தான் பிரிவினைவாதங்களை தொடங்கி வைத்தார்கள். 1947-க்கு பிறகு தான் இந்தியாவே உருவானது போல சிலர் சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது.
நமது இந்த புனிதமான மண்ணில் எத்தனையோ மகான்கள் பிறந்து வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள்.
ராமானுஜர், அரவிந்தர் அந்த வரிசையில் 400 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்த ராகவேந்திரரும் ஒருவர். அந்த மகான்கள் உலகம் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும் என்று தான் பாடுபட்டார்கள். அதை தான் மக்களிடம் பரப்பினார்கள். பாரதமும், சனாதனதர்மமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. அதை பிரிக்க முடியாது.
பாரதம் உயர்ந்தால் சனாதன தர்மமும் உயரும். தாழ்ந்தாக சனாதன தர்மமும் தாழும். சனாதன தர்மம் என்பது எல்லோரும் சமம் என்பதுதான். இதில் வேற்றுமை கிடையாது.
எல்லோரையும் ஒரே குடும்பமாகதான் சொல்கிறது. மனிதர்கள் நிறத்தில் மாறுபட்டாலும் மனிதர்கள் என்பதை போலத்தான் சனாதன தர்மமும்.
பாரதம் வலிமையான நாடாக இருக்க வேண்டும். அதற்காகதான் தயாராகி கொண்டு இருக்கிறோம். ஒரு காலத்தில் இந்தியாவின் பேச்சை மற்ற நாடுகள் கவனிக்காது, ஆனால் இப்போது நமது பிரதமர் பேசும் போது உலகமே உற்றுப் பார்க்கிறது.
நமது பிரதமர் பாரதத்தின் நாடி துடிப்பை அறிந்து வைத்துள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதாவது சுதந்திரம் கிடைத்து 100 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.
இதற்கு மடங்கள், மக்கள் எல்லோரது பங்களிப்பும் வேண்டும். ஆன்மீகத்துடன் சேர்ந்தே பாரதம் வளர வேண்டும்.
தமிழகம் புனிதமான பூமி. சென்னையும் அழகான நகரம். இங்கு ஆங்காங்கே கழிவுநீர் ஓடுகிறது. ஓடைகள் திறந்து கிடக்கிறது. அவைகளையெல்லாம் சீர்படுத்த வேண்டும்.
இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான சென்னை கிளை உறுப்பினர் சேகர் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆங்கிலேயர்கள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தார்கள்.
- அனைவரும் ஒரு குடும்பம் என இந்தியாவை எழுப்ப வேண்டும்.
கோவை:
கோவை பேரூர் தமிழ் கல்லூரி வளாகத்தில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் 7 நாட்கள் நடைபெறும் நொய்யல் பெருவிழா இன்று தொடங்கியது.
விழாவினை கவர்னர் ஆர்.என்.ரவி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
சந்நியாசிகள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதை நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்.
நம் நாட்டில் நீர்நிலைகளுடனான தொடர்பு என்பது நமது உணர்வுகளுடன் தொடர்புடையதாகும்.
ஆனால், பல ஆண்டுகளாக அந்தியர்களால் படையெடுப்பு காரணமாக அந்த உணர்வானது மறைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் நம் கலாச்சாரம், உயிர்த்தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்தார்கள்.
அவர்களின் படையெடுப்புக்கு பிறகே இந்தியர்கள் சாதி, மதம் என பிரிக்கப்பட்டோம். அந்நியர்களே ஆரியன், திராவிடன் என பிரிவினையை ஏற்படுத்தினார்கள். அந்நியர்களின் படையெடுப்புக்கு பிறகே நாம் தனித்து விடப்பட்டோம்.
அன்னை இயற்கையை பாழாக்கி வரும் இந்த காலத்தில் இதுபோன்று நிகழ்வு அவசியம். அன்னை இயற்கையை பாழாக்கி வருவதன் விளைவு தான், பருவநிலை மாற்றத்திற்கு காரணம். தண்ணீர் இல்லையென்றால் ஒன்றும் இல்லை. அதனால், நீரை அன்னையாக பாவித்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ரிஷிகளின் வெளிச்சமே தற்போது உலகத்திற்கு தேவையானது. அனைவரும் ஒரு குடும்பம் என இந்தியாவை எழுப்ப வேண்டும். நாம் யார் என்பதை உணர வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மாநிலத்தில் உள்ள 75 ரெயில் நிலையங்களை உலகதரத்திற்கு நவீனமயமாக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளது.
- ஏற்கனவே ரூ.35,580 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்திய ரெயில்வே தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டு ரூ. 6,080 கோடியை சாதனை அளவாக ஒதுக்கியுள்ளது. மேலும், மாநிலத்தில் உள்ள 75 ரெயில் நிலையங்களை உலக தரத்திற்கு நவீனமயமாக்கும் பணியிலும் ஈடுபட்டு உள்ளது. ஏற்கனவே ரூ.35,580 கோடிக்கு பணிகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டு மக்கள், பாரத பிரதமர் நரேந்திர மோடி தங்கள் மீது கொண்டுள்ள அன்புக்காகவும் திருநெல்வேலி-மதுரை-சென்னை மற்றும் சென்னை விஜயவாடா இடையே இரண்டு வந்தே பாரத் ரெயில் சேவைகளை மாநிலத்துக்கு வழங்கியதற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.
- சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று பாண்டியன் தீப்பெட்டி கம்பெனி தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
- விருதுநகர் சென்று பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகிறார்.
சென்னை:
கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சென்னையில் இருந்து நாளை மறுநாள் (28-ந் தேதி) காலை 10 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் கவர்னர் அங்கிருந்து கார் மூலம் குற்றாலம் செல்கிறார்.
அங்கு விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுடன் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார்.
அதன் பிறகு ஆழ்வார் குறிச்சிக்கு சென்று பாரம்பரிய பானை தயாரிக்கும் தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார். மாலையில் சிவசைவம் அவ்வை ஆசிரமத்துக்கு சென்று ஆசிரம குழந்தைகள் மற்றும் பணியாளர்களை சந்திக்கிறார்.
சிவ சைவபதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். 29-ந் தேதி கோவிந்தப்பேரி சென்று நெல்கட்டும் செவல் கிராமம் செல்கிறார். பூலித்தேவர் அரண்மனையை பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து ஒண்டி வீரன் நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் ராஜபாளையத்தில் உள்ள விஸ்வகர்மா சங்கத்தை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்திற்கு சென்று பாண்டியன் தீப்பெட்டி கம்பெனி தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
அதன் பிறகு விருதுநகர் சென்று பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் 29-ந் தேதி இரவு மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
- நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
- இவருக்கு பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்', இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தின் மூலமாக பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் பலர் ரஜினிகாந்த் கோவிலுக்கு பாலாபிஷேகம் செய்து பொது மக்களுக்கு உணவு வழங்கினார்கள்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்த மதிப்பிற்குரிய ஆளுநர் திரு.ரவி அவர்களுக்கும், இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு அறிக்கையில், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த மதிப்பிற்குரிய திரு.எடப்பாடி பழனிச்சாமி, திரு. ஓ. பன்னீர் செல்வம், திரு.அண்ணாமலை, திரு.சந்திரபாபு நாயுடு மற்றும் என்னை வாழ்த்திய என்னுடைய அனைத்து மத்திய, மாநில அரசியல் நண்பர்களுக்கும்.., நண்பர் திரு.கமலஹாசன், திரு.இளையராஜா, திரு.வைரமுத்து, திரு.S.P.முத்துராமன், திரு.ஷாருக்கான் மற்றும் கலையுலகத்தை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்..,

ரஜினிகாந்த் அறிக்கை
திரு.சச்சின் டெண்டுல்கர், திரு.சுரேஷ் ரெய்னா, திரு.ஹர்பஜன் சிங் மற்றும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும்.., அனைத்து துறை சார்ந்த என்னுடைய நலவிரும்பிகளுக்கும், நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும்.., என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும், உலகெங்கும் இருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...
உழைப்பு:-"பொழுதைப் போக்கும்! வறுமையை நீக்கும்!! உடலினை காக்கும்"
"உழைத்திடுவோம் மகிழ்ந்திடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- மக்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை.
- அடுத்த மாதம் கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்த அழைக்கப்படுவாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.
சென்னை:
தமிழக சட்டசபையின் ஆண்டு முதல் கூட்டம் ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதம் சட்டசபை கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் இருந்த காரணத்தால் இந்த மாதம் சட்டசபை கூடுவதற்கு வாய்ப்பில்லை.
மதுரையில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை 24-ந் தேதி திறந்து வைக்க செல்கிறார். 25-ந்தேதி சென்னையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். 26-ந்தேதி குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை தொடர்ந்து 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல உள்ளார்.
இதனால் சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-வது வாரம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொது பட்ஜெட் தனியாகவும், வேளாண் பட்ஜெட் தனியாகவும் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கலாம் என்பதை அறிய துறை வாரியான ஆய்வுக் கூட்டங் கள் தலைமைச் செயலகத் தில் நேற்று முதல் நடை பெற்று வருகிறது.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தொழில்துறை மற்றும் சிறு தொழில் துறை நிறுவனங்களின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து கலந்தாலோசனை நடத்தினார். இதேபோல் ஒவ்வொரு துறை வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கூட்டங்கள் முடிந்த பிறகு வணிகர் சங்க பிரதிநிதிகளையும் அழைத்து நிதி அமைச்சர் ஆலோசனைகள் நடத்த இருக்கிறார்.
இதன்பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படும். முதலமைச்சர் கூறும் கருத்துக்களுக்கு ஏற்ப பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம் பெறும்.
அந்த வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என்பதால் தேர்தலில் மக்களை கவரும் வகையில் பல புதிய அறிவிப்புகளை பட்ஜெட்டில் இடம்பெற செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
அதேபோல் பெண்கள் மாணவ-மாணவிகளை கவரும் வகையில் இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப் புகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்று உள்ளதால் புதிதாக தொழில் துவங்கும் நிறுனங்களுக்கு பட்ஜெட்டில் புதிய சலுகைகள் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
உலக நாடுகளுடன் தமிழ்நாட்டுக்கு வலுவான இணைப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு-குறு நடுத்தர நிறுவனங்கள் பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சி அடைந்து வருவதால் அத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது. மொத்தத்தில் மக்கள் நலனை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை அளித்து பட்ஜெட்டில் அவற்றை இடம் பெற செய்வார் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் சலுகைகள் இடம்பெறும் வகையிலும் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என தெரிகிறது. அதற்கேற்ப பட்ஜெட் உரை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் வேளாண் பட்ஜெட்டும் தயாராகி வருகிறது.
அடுத்த மாதம் கூடும் சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரை நிகழ்த்த அழைக்கப்படுவாரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.
ஏனென்றால் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அரசின் சார்பில் தயாரித்து வழங்கப்பட்ட உரையை கவர்னர் ஆர்.என்.ரவி முழுமையாக வாசிக்கவில்லை. சில வரிகளை தவிர்த்துவிட்டார். அதுமட்டுமின்றி சில வார்த்தைகளை சொந்தமாக சேர்த்து படித்தார். இதனால் கவர்னர் சொந்தமாக சேர்த்து படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறவில்லை.
இந்த பிரச்சினை காரணமாக தேசிய கீதம் இசைப்பதற்கு முன்னதாகவே கவர்னர் ஆர்.என்.ரவி சட்டசபையில் இருந்து வெளியேறிவிட்டார். இதன்பிறகு கவர்னருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துவிட்டது.
இந்த சூழலில் இந்த ஆண்டு ஜனவரி மாதம்கூட வேண்டிய சட்டசபைக் கூட்டம் இதுவரை தொடங்க படவில்லை.
அடுத்த மாதம் தான் (பிப்ரவரி) சட்டசபை கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகையால் இந்த கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்கு கவர்னர் அழைக்கப்படுவாரா? அல்லது கவர்னர் உரை இல்லாமலேயே சட்டசபை கூட்டம் தொடங்குமா? என்பது இனிமேல் தான் தெரியவரும்.
- கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடந்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.
தொடர்ந்து, இன்று அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தை வந்தடைந்தது.
பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட சைவ ஆதீனங்க குருமகாசந்நிதானங்கள், ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
+2
- சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.
- 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர். என். ரவி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் கலையரங்கத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.
முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்காக பல்கலைக்கழகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் பட்டம் பெறும் மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என். ரவி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
தொடர்ந்து விழா மேடைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். சிறப்பு அழைப்பாளர் நளினா வியாஸ், துணைவேந்தர் சந்திரசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 40 ஆயிரத்து 622 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் தங்கப் பதக்கம் பெற்ற 108 மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 மாணவர்கள் என 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 27 பேர் கலந்து கொள்ளவில்லை.
இதைத்தொடர்ந்து 432 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டம் வழங்கினார். பின்னர் பதக்கம் பெற்ற பல்கலைக் கழக மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.
இதனையொட்டி பல்கலைக்கழக வளாகம் முழுவதுமாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
- கவர்னர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு 18-ந் தேதி சென்னை திரும்புகிறார்.
ஊட்டி:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 4 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்ட த்திற்கு இன்று வருகிறார்.
இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை வழியாக ஊட்டிக்கு செல்கிறார்.
அங்கு ஊட்டி தாவரவி யல் பூங்கா பகுதியில் உள்ள ராஜ்பவனில் தங்கி ஓய்வெ டுக்கிறார். அதனை தொட ர்ந்து நாளை (16-ந் தேதி) ஊட்டி அடுத்த முத்தநாடு மந்து பகுதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி செல்கிறார்.
அப்போது அங்கு வசி த்து வரும் தோடர் இன மக்களை சந்தித்து, அவர்களுடன் சிறிது நேரம் கலந்து ரையாடுகிறார்.
தொடர்ந்து நாளை மறுநாள் (17-ந் தேதி) ஊட்டியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கவர்னர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை ஊட்டிக்கு வருகை தரும் கவர்னர் ஆர்.என்.ரவி வருகிற 18-ந் தேதி வரை ஊட்டியில் தங்கி இருக்கிறார்.
தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு 18-ந் தேதி சென்னை திரும்புகிறார். அன்று காலை ஊட்டியில் இருந்து கார் மூலமாக புறப்படும் அவர், அங்கிருந்து கோவை விமான நிலையம் வந்து, விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊட்டி ராஜ்பவன், கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 400 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கவர்னர் மாளிகை உள்ள தாவரவியல் பூங்கா பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தமிழகத்தில் பிஏ, எம்.ஏ. வரலாறு, அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
- வள்ளலார், அய்யா வைகுண்டர், சுவாமி சகஜானந்தா போன்றோர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு இரண்டு நாட்களாக (நேற்று, இன்று) நடைபெற்றது.
இன்றைய மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசும்போது கூறியதாவது:-
தமிழகத்தில் பிஏ, எம்.ஏ. வரலாறு, அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. தேவகோட்டை, பெருங்காமநல்லூரில் விடுதலை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழக கல்லூரிகளின் பாடத்திட்டம் திராவிட இயக்க கதைகளால் நிரம்பியுள்ளது. வள்ளலார், அய்யா வைகுண்டர், சுவாமி சகஜானந்தா போன்றோர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர்.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் இணைந்தனர். சுதந்திர போராட்ட இருட்டடிப்பு தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரித்துவிடும்.
இவ்வாறு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
- கல்வி மட்டுமே தகுதியையும், தலைமை பண்பையும் கொடுக்கும்.
- மாணவர்கள் வாழ்வில் நேர மேலாண்மையை நெறிப்படுத்த வேண்டும் என்றார்.
சென்னை:
தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, விளிம்பு நிலையில் உள்ள சுமார் 5,000 மாணவர்களை தனியார் கேளிக்கை பூங்காவிற்கு இன்பச் சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்தது.
இந்நிலையில், மாணவர்களின் இன்பச்சுற்றுலாவை கவர்னர் மாளிகையில் இருந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது மாணவர்களிடம் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, கல்வி மட்டுமே பிறருக்கு நன்மை செய்யும் பலம், வலிமை மற்றும் தலைமை பண்பை கொடுக்கும். மாணவர்கள் கடுமையாக முயன்று கல்வி பயில வேண்டும். மாணவர்கள் வாழ்வில் நேர மேலாண்மையை நெறிப்படுத்த வேண்டும். மாணவர்கள் தேர்வுக்கு தயாராக பிரதமர் மோடி எழுதிய எக்ஸாம் வாரியர்ஸ் (Exam Warriors) புத்தகத்தை படிக்கவேண்டும் என தெரிவித்தார்.
- சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது என்ற வாசகம் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கிறது.
- ஒரு வேளை, இதன் காரணமாக, ஆளுநர் உரையை ஆளுநர் படிக்காமலேயே புறக்கணிந்துவிட்டாரோ என்ற எண்ணமும் எழுந்துள்ளது.
சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சட்டசபைக்குள் நுழைந்த ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சட்டசபையில் இருந்து சென்றார். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்தார்.
இந்நிலையில் பொய்மையின் மறு உருவமாகத் திகழும் ஆளுநர் உரை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆளுநர் பேருரை என்பது ஆட்சியாளர்கள் இனி செய்யப் போகின்ற காரியங்களையும், கடைப்பிடிக்க இருக்கின்ற கொள்கைகளின் விளக்கத்தையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள், ஆனால். இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநரின் உரை பேரறிஞர் அண்ணா அவர்களின் கூற்றுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், திட்டங்களே இல்லாத உரையாக, உண்மைகளை மறைக்கின்ற உரையாக ஆளுநர் உரை அமைந்தள்ளது. ஆளுநர் ஆற்றிய உரை என்று புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருந்தாலும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குள் ஏற்பட்ட அமளி காரணமாக உணயை வாசிக்காமல் ஆளுநர் சென்றுவிட்டார். ஒருவேனை, ஆளுநர் அவர்கள் இந்த உரையை வாசித்து இருந்தால், அந்த உரையில் இடம்பெற்றுள்ள கருத்துகளுக்கு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் கொடுத்தது போல் ஆகிவிடும்.
அந்த அளவுக்கு உண்மைக்கு மாறான தகவல்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளன. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால், சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை, "சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது" என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு போதைப் பொருட்களின் புகலிடமாக விளங்குகிறது என்பதும்; அன்றாடம் பல கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன என்பதும்; திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கொலை வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு, வேங்கைவயலில் உள்ள பட்டியல் பிரிவினர் பயன்படுத்திய மேல்நிலைக் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது குறித்த வழக்கு என பல வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும்; மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்படுவதும், அண்ணா பல்கலைக்கழக மாலாவி அந்தப் பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும் நாடறிந்த உண்மை.
இவற்றையெல்லாம் மறைத்து, சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் நிர்வகிக்கப்படுகிறது என்ற வாசகம் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கிறது. ஒரு வேளை, இதன் காரணமாக, ஆளுநர் உரையை ஆளுநர் படிக்காமலேயே புறக்கணிந்துவிட்டாரோ என்ற எண்ணமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆளுநர் உரையின் 58-வது பத்தியில், "மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அவர்களது எதிர்பார்ப்புகளுக்கும் மேலாகவே நிறைவேற்றியுள்ளதுடன், குறுகிய காலத்தில் செய்த இச்சாதனைகள் குறித்தும், ஒருபித்த முன்னேற்றம் குறித்தும் இந்த அரசு பெருமிதம் கொள்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவர்களுக்கான பதவி மற்றும் ஊதிய உயர்வு, சத்துணவுப் பணியாளர்களுக்கான கால முறை ஊதியம்.
மாதம் ஒரு முறை மின் கட்டணம், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, ரேஷன் கடைகளில் கூடுதலாக உ தவாக உகு உளுத்தம் பருப்பு மற்றும் கூடுதலாக ஒரு கிலோ அரிசி, 100 ரூபாய் எரிவாயு மானியம், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான வஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு என பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.
இதற்கு முற்றிலும் முரணாக ஆளுநர் உரையில் தெரிவிப்பது என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல், ஆளுநர் உரையின் பத்தி 4-ல், மகளிர் உரிமைத் தொகை 1.15 கோடி குடும்பங்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 2.20 கோடி குடும்பங்கள் இருக்கின்ற நிலையில், 1.15 கோடி குடும்பங்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்கியிருப்பது ஒருதலைபட்சமானது. இது தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு மின் கட்டண உயர்வு வாகன வரி உயர்வு பத்திரப் பதிவு உயர்வு விலைவாசி உயர்வு என பல்வேறு காரணிகள் மூலம் மாதம் 5,000 ரூபாய் வரை கூடுதல் நிதிச் சுமை சுமத்தப்பட்டிருக்கிறது.
தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 1,000 மின்சாரப் பேருந்துகள் உட்பட, 7,713 பேருந்துகள் புதிதாக வாங்கப்படும் என்றும், 500 பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கைகள் வாயிலாக அறிவிக்கப்பட்டன. ஆனால், இதுவரை 2,578 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அறிவிக்கப்பட்டதில் 33 விழுக்காடு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
தி.மு.க. அரசின் எல்லாத் திட்டங்களும் இந்த நிலையில் தான் உள்ளன. நீட் தேர்வு ரத்து என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. இன்று அதுபற்றி வாய் திறக்காதது ஏழையெளிய மாணவ, மாணவியரை வஞ்சிக்கும் செயல்.