என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டிக்கர்"

    • ஒரு ஆட்டோ நிறுத்தப் பகுதியில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படவேண்டும்.
    • ஸ்டிக்கர் ஒட்டுவதன்மூலம், வெளியூா் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரில் குறுகலான சாலைகள் உள்ளன. ஆனால் இங்கு 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் கூடலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

    இதற்கிடையே தேவாலா, பந்தலூரில் உள்ள ஆட்டோக்கள், உரிய அனுமதி இன்றி கூடலூரில் இயக்கப்படுகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று உள்ளூர் ஆட்டோ டிரைவர்கள் புகாா் அளித்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு ஆட்டோ நிறுத்தப் பகுதியில் இருந்து 15 கி.மீ. தூரம் வரை மட்டுமே இயக்கப்படவேண்டும். ஆனால், தொலை தூரத்தில் இருந்து வந்து, கூடலூா் நகரில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டினர்.

    இந்த நிலையில் கூடலூா் நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களை அடையாளம் காணும் வகையில் பிரத்யேக ஸ்டிக்கா் ஒட்டுவது என்று போக்குவரத்து வட்டார அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன் ஒருபகுதியாக அங்கு இயக்கப்படும் உள்ளூா் ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இதற்கான பணிகளில் கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி. செல்வராஜ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் குமாா், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூடலூரில் உள்ளூர் ஆட்டோக்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதன்மூலம், வெளியூா் ஆட்டோக்களை எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனா்.

    • அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிககள் ஸ்டிக்கர்களை விநியோகம் செய்தனர்.
    • சிலர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறும் மாநாடு குறித்த விளம்பர ஸ்டிக்கர், செல்போன் ஸ்டிக்கர் உள்ளிட்டவற்றை,அதிமுக ., நிர்வாகிகளுக்கு பல்லடம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கரைப்புதூர் நடராஜன் வழங்கினார்.

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் தண்ணீர் பந்தல் ப.நடராஜன், சென்னியப்பன் ,பரமசிவம், வைஸ் முத்துக்குமார், ஆறுமுகம், சுப்ரமணியம், மங்கையர்க்கரசி கனகராஜ், சதீஷ்குமார், இச்சிப்பட்டி நாச்சிமுத்து, கிட்டுசாமி, வேலுச்சாமி, நெய்க்காரர் மணி மற்றும் ஒன்றிய, ஊராட்சி கழக நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாற்றுக்கட்சியில் இருந்து விலகி கரைப்புதூர் நடராஜன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் பலர் இணைந்தனர்.

    • துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • அந்தந்த துறையின் லோகோ ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துக்களை ஒட்டி உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் துணை போலிஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார் கூறியதாவது;-

    திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்டவைகளில் போலீஸ், பிரஸ், வக்கீல் மற்றும் அரசு துறையின் கீழ் பணியாற்றுபவர்கள் அந்தந்த துறையின் லோகோ ஸ்டிக்கர்கள் மற்றும் எழுத்துக்களை ஒட்டி உள்ளனர். இது முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானதாகும். அரசு வாகனங்களில் மட்டுமே அந்தந்த துறையின் சார்பில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம். தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட கண்டிப்பாக அனுமதி கிடையாது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றமும் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது.

    எனவே, திருக்கோவிலூர் பகுதியில் வாகனங்களில் ஒட்டப்பட்டு இருக்கும் ஸ்டிக்கர்களை உடனடியாக தாங்களாகவே அகற்ற வேண்டும். அரசு அறிவித்துள்ளபடி நம்பர் பிளேட்டுகளில் நம்பர் தெரியும்படி இருக்க வேண்டும். வருகிற 20-ந்தேதியில் இருந்து திருக்கோவிலூர் நகரப் பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுவார். வீதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது.
    • சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் சுமார் 100 இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாகனங்களில் சமீப காலமாக பத்திரிகை, ஊடகம், போலீஸ், வழக்கறிஞர், மருத்துவர், மாநகராட்சி, உயர்நீதிமன்றம், தலைமை செயலகம், மின்சாரத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவது அதிகரித்து வருகிறது.

    மேலும் இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்தபோது, பலர் தங்கள் வாகனங்களில் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கர்களுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை என்பதும், போலியாக ஸ்டிக்கர்களை ஒட்டி இருப்பதும் தெரியவந்தது.

    குறிப்பாக குற்றச்செயல்களில் ஈடுபடும் சிலர் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போலீசாரின் கவனத்தை திசை திருப்பி தப்பி முறைகேடுகளில் ஈடுபடுவதும் கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பலர் வாகன நம்பர் பிளேட்டுகளில் பெரிதாக ஸ்டிக்கர் ஒட்டி, வாகன பதிவு எண்களை மிகவும் சிறியதாக எழுதியுள்ளனர். இதனால் சாலைகளில் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை முக்கிய சாலை சந்திப்புகளில் ஏஎன்பிஆர் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் துல்லியமாக கண்டறிந்து வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை.

    சென்னையில் 16 சந்திப்புகளில் 76 ஏஎன்பிஆர் கேமராக்கள் உள்ளன. அவைகளில் சிறிதாக எழுதப்பட்ட பதிவு எண் சிக்குவதில்லை.

    எனவே இதுபோல போலியாக ஸ்டிக்கர் ஒட்டுபவர்களை கண்டுபிடிக்கவும், வாகன பதிவு எண்களை சிறிதாக எழுதுவதை தடுக்கும் வகையிலும், போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் சுதாகர் கடந்த 27-ந்தேதி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டார்.

    அதில், 'சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ் என பல்வேறு துறைகளை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு போலீசாரிடம் இருந்து எளிதாக தப்பி விடுகிறார்கள்.

    எனவே தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பவர்கள் மே 1-ந்தேதிக்குள் அதை அகற்றிக்கொள்ளலாம். அப்படி அகற்றாமல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது இன்று முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்று எச்சரித்தார்.

    இந்த நிலையில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் தங்களின் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள போக்குவரத்து போலீசார் அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அதுபோன்றவர்கள் தங்கள் வாகனங்களில் தங்களின் துறைகளை குறிப்பிட்டு ஸ்டிக்கர் ஒட்டிகொள்ள போக்குவரத்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அதே நேரத்தில் அந்த துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஊடகம், வக்கீல், மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டினால் கடும் நடவடிக்கை பாயும் என்றும் போலீசார் எச்சரித்து இருந்தனர்.

    அதே போன்று வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது என்றும் போக்குவரத்து போலீசார் விளக்கம் அளித்துஉள்ளனர்.

    அதன் அடிப்படையில் சென்னையில் விதிகளை மீறி வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக போலீசார் இன்று முதல் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். இதற்காக சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் சுமார் 100 இடங்களில் இந்த அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது.

    இன்று காலையில் இருந்தே போலீசார் கடுமையான வாகன சோதனை நடத்தி விதிமுறைகளை மீறி நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் விதிமுறைகளை மீறி போலியாக ஸ்டிக்கர் ஒட்டி இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். இன்று முதல் முறையாக விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர். முதல் முறை வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னரும் 2-வது முறையாக விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினார்கள்.

    வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்கள், வாகன பதிவு எண்ணை குறிப்பிட்ட அளவை விட சிறியதாக எழுதியவர்கள், சம்பந்தப்பட்ட துறை சாராதவர்கள் தங்கள் வாகனங்களில் பத்திரிகை, ஊடகம், போலீஸ், வக்கீல், மருத்துவர் என போலியாக ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் ஆகியோர் மீது போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தனர். இந்த அதிரடி சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது
    • சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் சுமார் 100 இடங்களில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனை நடத்தினர்

    சென்னை:

    சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ் என பல்வேறு துறைகளை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு போலீசாரிடம் இருந்து எளிதாக தப்பி விடுகிறார்கள்.

    எனவே தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பவர்கள் மே 1-ந்தேதிக்குள் அதை அகற்ற வேண்டும். அப்படி அகற்றாமல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது இன்று முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்று எச்சரித்தார்.

    அதன் அடிப்படையில் சென்னையில் விதிகளை மீறி வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக போலீசார் இன்று முதல் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். இதற்காக சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் சுமார் 100 இடங்களில் இந்த அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது.

    இன்று முதல் முறையாக விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர். முதல் முறை வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னரும் 2-வது முறையாக விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினார்கள்.

    இந்நிலையில், வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு செய்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. இதில் 121 போலீஸ் வாகனங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • இந்த மனு குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவு.

    தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து இருக்கிறது. மேலும், மே 1 ஆம் தேதி முதல் இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நல சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே. ஸ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணையில், மருத்துவர்கள் விதிமீறல்களில் ஈடுபடவில்லை. பணி நிமித்தமான அவசர பயணம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக மனுதாரர் தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, ஆம்புலன்ஸ்-க்கு விலக்கு தரப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு தனியாக விலக்கு தர சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்தது.

    இதையடுத்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், இந்த மனு குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, மே 22 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது. 

    • பல்வேறு துறைகளை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்
    • தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது.

    சென்னை:

    சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ் என பல்வேறு துறைகளை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு போலீசாரிடம் இருந்து எளிதாக தப்பி விடுகிறார்கள்.

    எனவே தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பவர்கள் மே 1-ந்தேதிக்குள் அதை அகற்ற வேண்டும். அப்படி அகற்றாமல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்று சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து இருக்கிறது. மேலும், மே 1 ஆம் தேதி முதல் இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீசாரின் வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் போலீஸ் என ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை நீக்கி, வேப்பேரி போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். வாகனங்களில் உள்ள ஸ்டிக்கர்களை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    வேப்பரி போக்குவரத்து போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



    • மே 1 ஆம் தேதி முதல் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • வாகனத்தின் முன்பக்கம், பின்பக்கம் மட்டுமே ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்

    தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் உள்ளிட்ட ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து இருக்கிறது. மேலும், மே 1 ஆம் தேதி முதல் இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நல சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே. ஸ்ரீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணையில், மருத்துவர்கள் விதிமீறல்களில் ஈடுபடவில்லை. பணி நிமித்தமான அவசர பயணம் செய்வதில் சிரமம் ஏற்படுவதாக மனுதாரர் தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு, ஆம்புலன்ஸ்-க்கு விலக்கு தரப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு தனியாக விலக்கு தர சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்தது.

    மனு குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, மே 22 ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தது.

    இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வாகனங்களில் மருத்துவர்கள் என்பதை குறிக்கும் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

    அதே சமயம், வாகனத்தின் முன்பக்கம், பின்பக்கம் மட்டுமே ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்றும் வாகனத்தின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலோ, ஸ்டிக்கர் ஒட்டுவதை தவறாக பயன்படுத்தினாலோ நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், வாகனங்களில் ஸ்டிக்கரை மருத்துவர்கள் தவறாக பயன்படுத்தினாலோ அல்லது மருத்துவர் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் வாகனங்கள் சந்தேகிக்கும் முறையில் இருந்தாலோ காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்த நீதிமன்றம், மருத்துவ கவுன்சிலின் வாதத்தை கேட்ட பிறகு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

    • தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது.
    • மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கு ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

    சென்னையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ் என பல்வேறு துறைகளை சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு போலீசாரிடம் இருந்து எளிதாக தப்பி விடுகிறார்கள்.

    எனவே தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டி இருப்பவர்கள் மே 1-ந்தேதிக்குள் அதை அகற்ற வேண்டும்.

    அப்படி அகற்றாமல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்று எச்சரிக்கப்பட்டது. 

    அதன் அடிப்படையில் சென்னையில் விதிகளை மீறி வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு அபராதம் விதிப்பதற்காக போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இனில் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டினால் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கு ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

    • கொல்கத்தாவில் ஒருவர் தனது காருக்கு பின்பு, BELIEVE A SNAKE NOT A GIRL என்று எழுதியுள்ளார்.
    • சீரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற வாசகத்தை நாம் பார்த்திருப்போம்.

    மேற்குவங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் பெண்களை அவமதிக்கும் வகையில் காரில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை போலீசார் அகற்றினர்.

    கொல்கத்தாவில் ஒருவர் தனது காருக்கு பின்பு, BELIEVE A SNAKE NOT A GIRL என்று எழுதியுள்ளார். அதாவது பாம்பை கூட நம்பலாம் ஆனால் பெண்ணை நம்பாதே என்று பொருள் கொள்ளும் இந்த வாசகத்தை ஸ்டிக்கராக ஒட்டியுள்ளார்.

    காரில் ஒட்டப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கரை யதார்த்தமாக பார்த்த போலீஸார் கார் உரிமையாளரை கண்டறிந்து அவரிடம் பக்குவமாக பேசி ஸ்டிக்கரை அகற்ற வைத்துள்ளனர்.

    பொதுவெளியில் இதுபோன்ற வாசகத்தை வெளிப்படையாக பதிவிடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என எக்ஸ் பக்கத்தில் கொல்கத்தா போலீசார் பதிவிட்டுள்ளனர். கொல்கத்தா போலீசின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    நம் ஊர்களில் ஆட்டோக்களுக்கு பின்பு சீரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளதை நாம் அவ்வப்போது பார்த்திருப்போம். கொல்கத்தா போலீசாரை போல தமிழ்நாடு போலீசாரும் பெண்களை அவமதிக்கும் இத்தகைய ஸ்டிக்கரை பார்த்தால் அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஸ்டிக்கர் விலையுடனோ, தரத்துடனோ தொடர்புடையது அல்ல.
    • பழங்களை வாங்கும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது.

    சந்தையில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் பழங்களில் பெரும்பாலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். அப்படி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள் தரமானது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதனால் அதன் விலை சற்று அதிகமாக இருக்கும் அதில் ஊட்டச்சத்துக்களும் கூடுதலாக இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது.

    அதனால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பளபளப்பான ஆப்பிளை தேர்ந்தெடுத்து வாங்குவதற்கும் சிலர் ஆர்வம் காட்டுவார்கள். உண்மையில் அந்த ஸ்டிக்கர் விலையுடனோ, தரத்துடனோ தொடர்புடையது அல்ல. ஆரோக்கியத்துடன்தான் நேரடி தொடர்புடையது.

    சில ஆப்பிள் பழங்களின் மீது ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரில் 4 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும். உதாரணமாக 4026, 4987, 4139 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

    அந்த ஆப்பிள்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்களை பயன்படுத்தி விளைவிக்கப்பட்டவை என்பதை விளக்கும் குறியீடுதான் அது.


    அந்த ஆப்பிள் பழங்கள் விளையும்போது பூச்சிகள், நோய் தாக்குதலுக்கு உள்ளாகாமல் தடுக்க பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்தி இருப்பார்கள். அதனால் அந்த ஆப்பிள் பழங்களில் அவற்றின் வீரியம் இருக்கக்கூடும். அதனை நன்கு கழுவி சாப்பிடுவது அவசியமானது.

    சில பழங்களின் ஸ்டிக்கரில் 5 இலக்க எண்கள் இருக்கும். அவை 84139, 86532 போன்ற எண் வரிசையை கொண்டிருக்கும். அந்த பழங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை. அதனால் அவற்றை இயற்கையான பழ இனங்களாக கருத முடியாது.

    மரபணு மாற்றம் மூலம் ஏராளமான காய்கறி, பழ இனங்கள் உருவாக்கப்படுவதால் அவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும் முடியாது. என்றாலும் இந்த ஆப்பிள் பழங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து விளைவிக்கப்பட்ட மற்ற பழங்களை விட சற்று விலை அதிகமாக இருக்கும்.


    9 என்ற எண்ணில் தொடங்கும் 5 இலக்க எண்களுடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள்களும் இருக்கின்றன. அதாவது, 94750.

    இந்த பழங்கள் இயற்கை முறையில் விளைந்தவை. அதாவது இந்த பழங்களின் விளைச்சலுக்கு பூச்சிக்கொல்லிகளோ, ரசாயன உரங்களோ பயன்படுத்தப்படவில்லை என்று அர்த்தம். அதனால் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்.


    ஆப்பிள் பழங்கள் மட்டுமல்ல ஆரஞ்சு போன்ற பழங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. சிலர் போலி ஸ்டிக்கர்களை தயாரித்து பழங்களின் மீது ஒட்டுவதும் நடக்கிறது.

    அந்த பழங்கள் உயர்ந்த தரம் கொண்டவை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையாகின்றன என்பது போன்ற மாய தோற்றத்தை உருவாக்கவும் செய்வார்கள்.

    எனவே ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்களை வாங்கும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது.

    • ராஜ் குமார் மீனா (23), சுபாஷ் குர்ஜார் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.11.45 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அமேசான் நிறுவனத்தில் பொருட்களை ஆர்டர் செய்து ரூ.1.29 கோடி மோசடி செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட ராஜ் குமார் மீனா (23), சுபாஷ் குர்ஜார் (27) ஆகியோர் மீது அசாம், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சுபாஷ் மற்றும் ராஜ் குமார் ஆகியோர் அமேசானில் அதிக மதிப்புள்ள கேமராக்கள், ஐபோன்கள் மற்றும் மடிக்கணினிகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள வேறு சில பொருட்களையும் போலியான அடையாளங்களைப் பயன்படுத்தி ஆர்டர் செய்வார்கள். டெலிவரி நேரத்தில், அவர்கள் டெலிவரி முகவர்களின் கவனத்தை திசை திரும்புவார்கள். பின்னர் அதிக மதிப்புடைய பொருட்களின் ஸ்டிக்கரை குறைவான மதிப்புடைய பொருட்களுக்கு ஒட்டுவார்கள். குறைவான மதிப்புடைய பொருட்களின் ஸ்டிக்கரை அதிக மதிப்புடைய பொருட்களுக்கு ஓட்டுவார்கள்

    ஸ்டிக்கர்களை மாற்றிய பிறகு அதிக மதிப்புமிக்க பொருளை குறைவான மதிப்புடைய ஸ்டிக்கரை பயன்படுத்தி வாங்கி விடுவார்கள். அதிக மதிப்புமிக்க பொருளின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குறைவான மதிப்புடைய பொருளுக்கு தவறான OTP சொல்லி இறுதியில் ஆர்டரை ரத்து செய்து விடுவார்கள்.

    அமேசானின் டெலிவரி பார்ட்னரான மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் இவர்களின் தந்திரத்தை கண்டுபிடித்து அமேசான் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து ராஜ் குமார், சுபாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.11.45 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

    ×