என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக மாநாடு"

    • மாவட்ட செயலாளர் சு.ரவி.எம்.எல்.ஏ. பேச்சு
    • வருகிற 20-ந்தேதி மாநாடு நடக்கிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் அ.தி.மு.க வின் நகர, ஒன்றிய, பேரூர் செயலாள ர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பத், சீனிவாசன் ஆகியோர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்றார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    வருகிற 20ம் தேதி மதுரையில் நடைபெறும் பொன்விழா எழுச்சி மாநா ட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 2ஆயிரத்து500 பேர் என மொத்தம் 10ஆயிரம் பேர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம். சுகுமார் உள்பட மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அன்வர்ராஜா பா.ஜ.க.வுக்கு எதிராக பேசியதால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்.
    • மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க.வின் பிரமாண்ட எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.

    மதுரை:

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பிறகு நடைபெறும் முதல் மாநில மாநாடு என்பதால் தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் வியூகம், பாரதிய ஜனதா கட்சியுடனான உறவு, கூட்டணி கட்சிகளின் அணுகுமுறை மற்றும் கட்சி வளர்ச்சி தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

    மேலும் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மற்றும் சசிகலா, டி.டி.வி.தினகரன் தொடர்பாகவும் முக்கிய தீர்மானங்கள் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக அண்ணாமலை வந்தது முதல் தொடர்ந்து அ.தி.மு.க. குறித்தும், முன்னாள் அமைச்சர்கள் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.

    கடந்த வாரம் பேட்டி அளித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பிரதமர் மோடி எங்களை பற்றி புரிந்துகொண்ட அளவுக்கு கூட அண்ணாமலை புரிந்து கொள்ளவில்லை என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமீபத்தில் நடைபயணம் தொடங்கி மதுரை வந்த அண்ணாமலை, அரசியல் விஞ்ஞானிகளுக்கெல்லாம் பதில் கூறி என்னை தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று செல்லூர் ராஜூவை விமர்சனம் செய்தார். இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே உச்சக்கட்ட வார்த்தைபோர் ஏற்பட்டு தற்போது அமைதி நிலவுகிறது.

    இதையடுத்து அண்ணாமலை திடீரென தனது பாதயாத்திரையை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் விருதுநகரில் நடைபயணத்தை தொடங்கிய அவர் அ.தி.மு.க. குறித்து எதுவும் பேசாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.

    ஆனால் அவரது நெருங்கிய ஆதரவாளரும் மதுரை பா.ஜ.க. தலைவருமான மகா சுசீந்திரன், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேலும் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 66 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. அதன் பிறகு நடந்த, உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜனதா கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்டபோது தோல்வியடைந்தது என்று கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.முக.வை மிரட்டும் வகையில் கடிதம் எழுதியிருந்தார்.

    இந்த கடிதம் பகிரங்கமாக வெளியான பிறகும் மகா சுசீந்திரனின் இந்த கடித விவகாரத்தில் அண்ணாமலை எதுவும் கூறாததால், பா.ஜ.க. மாவட்டத் தலைவருக்கு அவர் ஆதரவாகவே இருப்பதாக அ.தி.மு.க.வினர் கருதுகிறார்கள்.

    இதனிடையே கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருந்தபோது, பா.ஜ.க. 19 சதவீத வாக்குகளை பெற்றது என்றும், அதேபோல் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் மூன்றாவது அணி அமைத்து போட்டியிட அண்ணாமலை ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்து வருவதாகவும், கூறப்படுகிறது.

    இந்த அணியில் அ.ம.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் பிற கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைத்து போட்டியிட்டால் மீண்டும் பிரதமராக நரேந்திர மோடிக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கும். இதனால் தமிழகத்தில் அ.தி.மு.க.வை விட அதிக வாக்குகளை பெறமுடியும். அதே கூட்டணி 2026-ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளை வெல்லலாம் என்றும் பா.ஜ.க. கணக்கு போட்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அ.தி.மு.க. தன் பங்கிற்கு, அக்கட்சியின் சிறுபான்மை பிரிவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜாவை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளது. அன்வர்ராஜா பா.ஜ.க.வுக்கு எதிராக பேசியதால் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்.

    தற்போது அவர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கப்பட்டது பா.ஜனதாவுக்கு எதிராக விமர்சனத்தை தொடர்வதற்காகவே என்று பா.ஜனதா மாநில தலைமை நினைக்கிறது.

    இதற்கிடையே மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க.வின் பிரமாண்ட எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பாராளுமன்ற தேர்தல் குறித்து, முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் அ.தி.மு.க. தலைவர்களின் பேச்சுக்கள் பாராளுமன்ற தேர்தல் வியூகத்தைக் குறிக்கும் வகையில் அமையும் என்றும் கூறப்படுகிறது. எனவே தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தொடருமா என்ற கேள்விக்கு அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டில் விடை கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இருந்து மதுரைக்கு ஜோதி தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படுகிறது.
    • ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் ஜோதி வழியில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய இடங்களில் ஊர்களுக்குள் எடுத்து செல்லப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. வீரவரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி (ஞாயிறு) நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கில் தொண்டர்களையும், பொது மக்களையும் திரட்ட அ.தி.மு.க.வினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இருந்து மதுரைக்கு ஜோதி தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படுகிறது. தலைமை கழகத்தில் இன்று காலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து ஜோதியை தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக்கிடம் வழங்கினார்.

    சீருடை அணிந்த 50 தொண்டர்கள் ஜோதியை ஏந்தியபடி ஓடினார்கள். இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், டி.ஜெயக்குமார், பொன்னையன் மற்றும் சென்னை மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    ராயப்பேட்டையில் இருந்து புறப்பட்டு, மந்தைவெளி, அடையாறு, எஸ்.ஆர்.பி.டூல்ஸ், விஜயநகர் வழியாக சென்னை புறநகர் மாவட்டத்தை அடைந்ததும் புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் தலைமையில் ஜோதிக்கு வரவேற்பளித்து அங்கிருந்து ஜோதியை ஏந்தியபடி காமாட்சி மருத்துவமனை வழியாக மேடவாக்கம் சென்றனர். அங்கிருந்து செங்கல்பட்டு மாவட்டத்தை அடைந்ததும் அந்த மாவட்டம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜி.எஸ்.டி. சாலை வழியாக செல்லும் ஜோதி வழியில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம் ஆகிய இடங்களில் ஊர்களுக்குள் எடுத்து செல்லப்படுகிறது.

    20-ந்தேதி காலையில் மதுரையை சென்றடைகிறது. அங்கு வளையங்குளத்தில் மாநாட்டு திடலில் ஜோதியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்குகிறார்கள்.

    • மேடையின் பின்பகுதி டிஜிட்டல் மையமாக மாற்றப்பட்டுள்ளது.
    • நவீன தொழில்நுட்பத்துடன் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மதுரை:

    மதுரையில் அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விறுவிறுப்பாக இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவு தயாரிப்புக்கூடம், உணவு பரிமாறும் அரங்குகள் என்று சுமார் 300 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மாநாட்டின் முகப்பில் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு என்ற வாசகங்களுடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எடப்பாடி பழனிசாமி ஆகியோரது உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளன. முகப்பு பகுதியில் சுமார் 51 அடி உயர அதிமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கம்பத்தில் தான் வருகிற 20-ந்தேதி காலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி வைத்து மாநாட்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.

    இதை தொடர்ந்து மாநாட்டில் இன்னிசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்த கவியரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 4 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

    இந்த மாநாட்டில் இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் தமிழக முழுவதும் இருந்து சுமார் பத்து லட்சம் தொண்டர்கள் பங்கேற்க செய்யும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

    மாநாட்டு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்டோர் இரவு பகலாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் அவ்வப்போது பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள். மாநாட்டு பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இப்போதே வந்து ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.

    தற்போது வரை 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது மேடை வடிவமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேடையின் பின்பகுதி டிஜிட்டல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் நவீன தொழில்நுட்பத்துடன் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேலும் மாநாட்டு அரங்கில் அமைய உள்ள புகைப்பட கண்காட்சி பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதில் அதிமுக அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படங்களும் இடம்பெற உள்ளன. இந்த பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் சுட சுட உணவு வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி உணவு தயாரிப்பதற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கியுள்ளன. இதற்காக பத்தாயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இரவு, பகலாக மேடை அலங்காரம் மற்றும் பந்தல் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • மைதானத்தில் சுமார் 1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டு வருகின்றன.

    மதுரை:

    மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர்கள் 12 பேர் மதுரையில் முகாமிட்டு இறுதி கட்டப்பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதன்முறையாக மதுரையில் பிரமாண்டமாக அ.தி.மு.க. வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு வருகிற 20-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மதுரை ரிங் ரோடு வலையன்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் சமையல் கூடங்கள், உணவு பரிமாறும் இடங்கள், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இரவு, பகலாக மேடை அலங்காரம் மற்றும் பந்தல் அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதனை முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், டாக்டர் விஜயபாஸ்கர், வளர்மதி, காமராஜ், கே.டி. ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ராஜ் சத்யன் உள்ளிட்டோர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் மதுரையில் முகாமிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகிறார்கள். மாநாட்டு மைதானத்தில் இன்று காலை அதிமுக மாநாடு தொடர்பான பிரசார வாகனத்தையும் அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் அங்கு விழா மேடை டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் புகைப்பட கண்காட்சி அரங்கும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அரங்கின் முகப்பு தோற்றத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா செங்கோலுடன் இருப்பது போன்றும், எடப்பாடி பழனிசாமி படங்களும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் புகைப்பட கண்காட்சியில் இதுவரை பார்த்திராத அரிய புகைப்படங்களும் இடம்பெறுகிறது. மேலும் கடந்த அதிமுக ஆட்சியின் முக்கிய திட்டங்கள் மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது புகைப்படங்களும் நவீன தொழில்நுட்பத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    இந்த புகைப்பட கண்காட்சி அ.தி.மு.க. தொண்டர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்தனர். மாநாட்டு மேடை மற்றும் பந்தல் மேற்பகுதிகள் அலங்கரிக்கப்பட்டு மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் மைதானத்தில் சுமார் 1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டு வருகின்றன. இது தவிர பந்தலின் இருபுறங்களிலும் தொண்டர்கள் திரளாக குவிந்து நிகழ்ச்சிகளை காணும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
    • எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. மாநாட்டை இதுவரையில் நடைபெறாத அளவிற்கு மிக பிரமாண்டமான முறையில் நடத்த கட்சி நிர்வாகிகள் அனைத்து அளவிலும் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெற்று தொண்டர்கள் பாதுகாப்பாக வீடு செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக காலை 8 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. மாநாட்டு பந்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    10 நிமிடங்கள் வானத்தில் இருந்து பூ மழையாக பொழிய சென்னை மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, வெங்கடேஷ் பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்துள்ளனர்.

    பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தங்கி இருக்கும் ஓட்டலில் இருந்து அவர் வெளியே புறப்பட்டு மாநாட்டு பந்தலுக்கு வரும் வரையில் அவரது காருக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்தவாறு மலர்களை தூவியவாறு வந்து கொண்டே இருக்கும்.

    இது போன்ற வரவேற்பு ஏற்பாடுகள் முதன் முதலாக அ.தி.மு.க.வினர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    காலையில் 10 நிமிடமும் மாலையில் 10 நிமிடமும் ஹெலிகாப்டரில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களை தூவி வரவேற்க பல லட்சங்கள் செலவும் செய்துள்ளனர்.

    • இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெற்று தொண்டர்கள் பாதுகாப்பாக வீடு செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
    • இது போன்ற வரவேற்பு ஏற்பாடுகள் முதன் முதலாக அ.தி.மு.க.வினர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    அ.தி.மு.க. மாநாட்டை இதுவரையில் நடைபெறாத அளவிற்கு மிக பிரமாண்டமான முறையில் நடத்த கட்சி நிர்வாகிகள் அனைத்து அளவிலும் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    மாநாடு தொடங்கும் ஞாயிற்றுக்கிழமை 8 மணி முதல் ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெற்று தொண்டர் கள் பாதுகாப்பாக வீடு செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக காலை 8 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. மாநாட்டு பந்தலில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    10 நிமிடங்கள் வானத்தில் இருந்து பூ மழையாக பொழிய சென்னை மாவட்ட செயலாளர்கள் பால கங்கா, வெங்கடேஷ் பாபு, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்துள்ளனர்.

    பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் போது ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவி வரவேற்க திட்டமிடப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தங்கி இருக்கும் ஓட்டலில் இருந்து அவர் வெளியே புறப்பட்டு மாநாட்டு பந்தலுக்கு வரும் வரையில் அவரது காருக்கு மேலே ஹெலிகாப்டர் பறந்தவாறு மலர்களை தூவியவாறு வந்து கொண்டே இருக்கும்.

    இது போன்ற வரவேற்பு ஏற்பாடுகள் முதன் முதலாக அ.தி.மு.க.வினர் செய்தி ருப்பது குறிப்பிடத்தக்கது.

    காலையில் 10 நிமிடமும் மாலையில் 10 நிமிடமும் ஹெலிகாப்ட ரில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு மலர்களை தூவி வரவேற்க பல லட்சங்கள் செலவும் செய்துள்ளனர்.

    • சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் செல்வதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
    • சிறப்பு ரெயில் தவிர பிற ரெயில்களிலும் அ.தி.மு.க.வினர் மதுரை செல்ல ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எழுச்சிமிகு மாநாடு 20-ந்தேதி நடைபெறுகிறது. இதற்காக இந்த மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.

    அதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டு இரவு-பகலாக நடந்து வருகிறது.

    மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் வாகனங்களை ஒழுங்கு செய்துள்ளனர். பஸ், வேன், கார்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் செல்வதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ். ராஜேஷ், தி.நகர் சத்யா, வி.என்.ரவி, அசோக் ஆகியோர் சென்னையில் இருந்து தொண்டர்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தி.நகர் சத்யா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தனியாக சிறப்பு ரெயில் ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ரெயில் குளுகுளு வசதியுடன் 3-ம் வகுப்பு படுக்கை பெட்டிகளாக விடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி பெற்று ஐ.ஆர்.டி.சி. மூலம் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

    1,200 பேர் இதில் பயணம் செய்கிறார்கள். 14 ஏ.சி. பெட்டிகளும், ஒரே ஒரு சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியுடன் நாளை (19-ந் தேதி) இரவு 10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படுகிறது.

    இந்த சிறப்பு ரெயிலுக்கான முழு தொகையும் 2 மாவட்ட செயலாளர்கள் செலுத்தியுள்ளனர். இதேபோல மாநாடு முடிந்து இரவு 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் எழும்பூர் வந்து சேருகிறது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் அணிவகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தெரிவித்தார்.

    மேலும் சிறப்பு ரெயில் தவிர பிற ரெயில்களிலும் அ.தி.மு.க.வினர் மதுரை செல்ல ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்துள்ளனர்.

    தென் சென்னை, வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஏற்பாட்டில் 4 பஸ்கள், 30 வேன்கள், 98 கார்களில் பயணம் செய்கிறார்கள்.

    மாவட்ட செயலாளர் பாலகங்கா தலைமையில் 8 பஸ்கள், 20 வேன்கள் மற்றும் ரெயில்களில் தொண்டர்கள் செல்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
    • 4 மாதத்திற்கு முன்பே மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர்.

    மதுரை:

    மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த ஜூலை மாதம்முதலே முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மதுரை வளையங்குளம் பகுதியில் மாநாட்டு மேடை மற்றும் பந்தல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், மாநாட்டிற்கு விமான நிலைய அதிகாரிகளிடம் உரிய தடையில்லா சான்று பெறவில்லை. ஏராளமானோர் மாநாட்டிற்கு வருவர் என கூறப்பட்டுள்ளதால் விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்படும். மாநாட்டிற்கு வருவோரால் அதிக அளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும் என்பதால் அனுமதிக்க கூடாது என கூறப்பட்டது.

    இதையடுத்து இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி, 4 மாதத்திற்கு முன்பே மாநாட்டிற்கு அறிவிப்பு செய்து விட்டனர். கடைசி நேரத்தில் தடை கோரினால் எவ்வாறு முடியும்? மாநாட்டில் எவ்வித வெடிகுண்டுகளும், பட்டாசுகளும் வெடிக்க மாட்டோம் என உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளதால்  மாநாட்டிற்கு தடை விதிக்க முடியாது கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    • சிறு சிறு தங்குமிடங்கள் உள்பட சுமார் 600 லாட்ஜு கள் உள்ளன. லாட்ஜுகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
    • அதிக பட்சமாக ரூ.16 ஆயிரத்து 514 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    மதுரையில் நாளை மறுநாள் (ஞாயிறு) அ.தி.மு.க. வீரவரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் செல்கிறார்கள்.

    வெளியூர்களில் இருந்து செல்பர்கள் நாளை மதுரை செல்லும்படி பயணத் திட்டத்தை வகுத்துள்ளார்கள்.

    இதனால் அங்குள்ள லாட்ஜுகளில் அறைகளை முன்பதிவு செய்துள்ளார் கள். சிறு சிறு தங்குமிடங்கள் உள்பட சுமார் 600 லாட்ஜு கள் உள்ளன. இந்த லாட்ஜுகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

    இதே போல் திருமண மண்டபங்களையும் முன் பதிவு செய்துள்ளார்கள். 21-ந்தேதி ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதால் திருமண வீட்டாரும் மண்டபங்களை முன்பதிவு செய்துள்ளார்கள். எனவே கட்சியினரை ஞாயிறு மாலையில் காலி செய்து விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே பல திருமண மண்டபங்களை வாடகைக்கு விட்டுள்ளார்கள்.

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் கட்சி பிரமுகர்கள் பலர் விமானங்களில் முன்பதிவு செய்துள்ளார்கள்.

    வழக்கமாக மதுரைக்கு விமான கட்டணம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை இருக்கும். ஆனால் 19-ந்தேதி குறைந்த பட்ச கட்டணம் ரூ.12 ஆயிரம் என்று நிர்ணயித்துள்ளார்கள். அதிக பட்சமாக ரூ.16 ஆயிரத்து 514 வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை 5.55 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமான கட்டணம் ரூ.8,564, 10.30 மணிக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமான கட்டணம் ரூ.10,297, 11.15 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் ரூ.11,906.

    இதே போல் மாலை 4.55 மணி முதல் 7.40 மணி வரை செல்லும் 6 விமானங்களில் குறைந்தபட்சம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.16,702 வரை டிக்கெட் கட்டணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இன்றும், நாளையும் மொத்தம் 18 விமானங்கள் இயக்கப்படுகிறது. சிறிய விமானங்களில் 71 சீட்டும், பெரிய விமானங்களில் 210 இருக்கைகளும் இருக்கின்றன. ஒரு விமானத்தில் கூட இருக்கை காலி இல்லை. அனைத்து விமானங்களும் 'புல்' ஆகிவிட்டன.

    மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, செங்கோட்டை செல்லும் அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன.

    இதே போல் ஆம்னி பஸ்கள், அரசு பஸ்களிலும் இருக்கைகள் இல்லை.

    சென்னையில் இருந்து மதுரை செல்லும் பலர் கார், வேன்களை வாடகைக்கு அமர்த்தியும் செல்கிறார்கள். வேன்களுக்கு மதுரை சென்று வர ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆகஸ்டு 19ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி வழக்கு.
    • அதிமுக தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று வாதாடப்பட்டது.

    அதிமுக மாநாடு வரும் 20ம் தேதி அன்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக, அதிமுகவினர்

    இந்நிலையில், காரைக்குடி பகுதியை சேர்ந்த கணேச தேவர் என்பவர் அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆகஸ்டு 19ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று மதுரை கிளை நீதிபதி நாகார்ஜூனா முன் வந்தது. அப்போது, அதிமுக தரப்பில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று வாதாடப்பட்டது.

    மேலும், 19ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனையில் உள்ளதாக அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இந்நிலையில், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி " 20ம் தேதிதான் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை" என்று கேள்வி எழுப்பினார்.

    மேலும், மனுதாரர் காவல் துறையை அணுகி உரிய அனுமதி பெற்று 19ம் தேதி போராட்டம் நடத்தலாம் என நீதிபதி தெரிவித்தார்.

    • சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் வருவதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் மாநாடு நடைபெறும் வலையங்குளம் பகுதிக்கு சென்றனர்.

    மதுரை:

    அ.தி.மு.க. சார்பில் மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. இதற்காக இந்த மாநாட்டை வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டார்.

    அதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகள் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களிடம் பிரித்து கொடுக்கப்பட்டு இரவு-பகலாக நடந்து வருகிறது. மாநாட்டில் தொண்டர்களை பங்கேற்க செய்வது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டன.

    அதன்படி மாநாட்டில் 15 லட்சம் தொண்டர்கள் பங்குபெற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் வாகனங்களை ஒழுங்கு செய்துள்ளனர். பஸ், வேன், கார்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 50 ஆயிரம் பேர் வருவதற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், தி.நகர் சத்யா, வி.என்.ரவி, அசோக் ஆகியோர் சென்னையில் இருந்து தொண்டர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தி.நகர் சத்யா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் தனியாக சிறப்பு ரெயில் ஒன்று ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ரெயில் குளுகுளு வசதியுடன் 3-ம் வகுப்பு படுக்கை பெட்டிகளாக விடப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனுமதி பெற்று ஐ.ஆர்.டி.சி. மூலம் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு ரெயில் நேற்று இரவு 10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு இன்று காலை மதுரை கூடல்நகர் ரெயில் நிலையத்திற்கு காலை 9.10 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரெயிலில் 1,300 பேர் பயணம் செய்தனர். 14 ஏ.சி. பெட்டிகளும், ஒரே ஒரு சாதாரண 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டியுடன் மதுரைக்கு வந்தது.

    ரெயிலில் வந்திறங்கியவர்களை மாநாட்டு பந்தலுக்கு அழைத்து செல்வதற்காக தயார் நிலையில் 40-க்கும் மேற்பட்ட வேன்கள் கூடல் நகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஏறி அ.தி.மு.க. தொண்டர்கள் மாநாடு நடைபெறும் வலையங்குளம் பகுதிக்கு சென்றனர்.

    இந்த சிறப்பு ரெயிலுக்கான முழு தொகையும் 2 மாவட்டச் செயலாளர்கள் செலுத்தியுள்ளனர். இதே போல மாநாடு முடிந்து நாளை இரவு 10 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் சென்னை எழும்பூர் சென்று சேருகிறது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் அணி வகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த சிறப்பு ரெயில் தவிர பிற ரெயில்களிலும் அ.தி.மு.க.வினர் மதுரை செல்ல ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்தவர்களும் மதுரைக்கு பல்வேறு ரெயில்களில் வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் மதுரையில் திரும்பிய திசையெல்லாம் அ.தி.மு.க. தொண்டர்கள் மயமாகவே காட்சி அளிக்கிறது.

    ×