search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மா.சுப்பிரமணியம்"

    • குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • 9.82 லட்சம் பேருக்கு புற்று நோய் கண்டறியும் சோதனை

    ஈரோடு:

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இன்று காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 கட்டண படுக்கையறை பிரிவை அமைச்சர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மருத்துவ கட்டமைப்பு தொடங்கப்பட்டது. 15 ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. சத்தியமங்கலத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    பவானி அரசு மருத்துவ மனையில் 1 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கட்டிடம் கட்டப்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் பல்வேறு வகையான கூடுதல் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலின் போது தன்னார்வ அமைப்பு நிறுவனங்கள் புற்றுநோய் தாக்கம் குறித்து கோரிக்கை வைத்தார்கள்.

    ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்ப தால் புற்றுநோய் கண்டறியும் சோதனை கண்டறிய அழைப்பு விடுத்தது. இந்த 4 மாவட்டங்களிலும் மொத்தம் 9.82 லட்சம் பேருக்கு புற்று நோய் கண்டறியும் சோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 4.19 லட்சம் பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.

    13 ஆயிரத்து 89 பேருக்கு சந்தேக அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 1.27 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் 3 ஆயிரத்து 39 பேர் சோதனை மேற்கொண்டதில் 50 பேருக்கு புற்று நோய் இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டத்தில் புற்றுநோய் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறியப்படி 14 இடங்களில் கட்டண படுக்கை அறை திறந்து வைக்க உள்ளோம். இதில் குளிர்சாதன வசதி, கழிவறை, டி.வி உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது.

    தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் போதைப் பொருட்கள் நடமாட்ட த்திற்கு எதிராக எடுக்க ப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 8 லட்சத்து 66 ஆயிரத்து 619 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, 32 ஆயிரத்து 404 கடைகளில் குட்கா பொருட்கள் இரு ப்பது கண்டறியப்பட்டது.

    அந்த கடைகளில் இருந்து ரூ.20 கோடியே 91 லட்சத்து 19 ஆயிரத்து 468 ரூபாய் மதிப்பிலான 2 லட்சத்து 86 ஆயிரத்து 681 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், போதை பொரு ட்களை விற்பனை செய்ததாக 17 ஆயிரத்து 481 கடை களுக்கு சீல் வைக்கப்பட்டதோடு, 33 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற வணிக கடைகள் சீல் வைக்கப்படுவது வருத்தமளிப்பத்தாக இருந்தாலும், சிறிய லாபம் தரும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதை வணிகர்கள் தவிர்த்துவிட்டு, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் முழுவதுமாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் போதை பொட்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • உயிருக்கு போராடிய 35 பேரை காப்பாற்றி உள்ளார்.
    • மா.சுப்பிரமணியன் பாராட்டி கேடயம் வழங்கினார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூரரை சேர்ந்த நர்சு சபீனா என்பவர் வயநாடு சூரல்மலை பகுதியில் கரைபுரண்டோடும் ஆற்றை கடந்து ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு சென்று அங்கு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய 35 பேரை காப்பாற்றி உள்ளார். அவர் ஜிப்லைனில் ஆற்றை கடந்து செல்லும் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவின.

    இந்தநிலையில் அரசு நிகழ்ச்சிக்காக ஊட்டிக்கு வந்திருந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீரப்பெண்மணி சபீனாவின் செயலை பாராட்டி பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கினார். மேலும் அரசு சார்பில் சபீனாவின் செயலை அங்கீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.

    வயநாடு நிலச்சரிவில் மருத்துவப்பணிகளில் ஈடுபட்டது குறித்து பெண் நர்சு சபீனா கூறியதாவது:-

    வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட போது மீட்புக்குழுவினர் ஆண் செவிலியர்களைதான் முதலில் தேடி வந்தனர். ஆனால் யாரும் கிடைக்காத சூழ்நிலையில் நானே முன்வந்து மீட்புக்குழுவினருடன் புறப்பட்டு சென்றேன்.

    மேலும் சூரல்மலை பகுதியில் படுகாயம் அடைந்தவர்களை காப்பாற்ற ஜிப்லைன் மூலம் அக்கரைக்கு செல்ல தயாராக இருப்பதாக கூறினேன். இதற்கு அக்கரையில் உள்ளவர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.

    பெண் செவிலியரை ஏன் அனுப்புகிறீர்கள் எனவும் தயக்கம் தெரிவித்தனர். ஆனால் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

    ஆற்றின் இக்கரையில் இருந்து பார்க்கும்போதே அக்கரையில் படுகாயம் அடைந்து தவிப்பவர்களின் நிலை எவ்வளவு பரிதாபமாக உள்ளது என்பது தெரிந்தது. எனவே எவ்வளவு விரைவாக அங்கு செல்ல முடியுமோ, அவ்வளவு விரைவாக சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்தான் எங்கள் கவனம் இருந்தது.

    மற்றபடி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளமோ, அங்கிருந்த சூழ்நிலையோ எனக்கு அச்சமாக தெரியவில்லை. மேலும் ஜிப்லைனில் செல்லும்போது காலுக்கு அடியில் ஓடிய வெள்ளம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கையில் வைத்திருக்கும் மருந்துப்பெட்டி கீழே விழுந்து விடுமோ என்று மட்டும்தான் எனக்கு பயமாக இருந்தது.

    முதலில் ஜிப்லைன் மூலமாக நானும், பிறகு மருத்துவ ஊழியர்கள் உட்பட 3 பேரும் சென்றோம். அங்கிருந்தவர்களில் பலருக்கு காயத்தின் வலிகூட தெரியாத அளவுக்கு அதிர்ச்சி இருந்தது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தது மகிழ்ச்சி ஏற்படுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 24 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் இந்திய அளவில் இக்கல்லூரியில் பயின்ற மாணவர் முதலிடம்.
    • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் உள்ள கிங்ஸ் மெடிக்கல் அகாடமியில் பயிற்சி பெற்று அதன் மூலமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் தாவோ மெடிக்கல் கல்லூரியில் படித்த மாணவர்கள், 2023ம் ஆண்டிற்கான எப்.எம்.ஜி தேர்வை இந்தியாவில் எழுதினர்.

    24 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில் இந்திய அளவில் இக்கல்லூரியில் பயின்ற மாணவர் கரீம் ஜாஃபர் சவுகர் முதலிடம் பிடித்து டாக்டர் ஆனார்.

    அவர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அகாடமி நிறுவனர் டேவிட் கே.பிள்ளை, ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இயக்குனர் சி.கே.சி.பால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×