என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Burial"

    • லலிதா பாய் என்ற பெண் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.
    • இந்த கொலை குற்றத்திற்காக 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    2023 ஆண்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்பட்ட பெண் ஒருவர் தற்போது உயிரோடு வீடு திரும்பிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லலிதா பாய் என்ற பெண் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை 2023 இல் குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்நிலையில், லலிதா பாய் தற்போது உயிரோடு வீடு திரும்பியுள்ளது அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    லலிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், "ஷாருக் என்ற நபர் தன்னை ஒருவரிடம் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அதன்பின்பு என்னை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிற்கு அழைத்து சென்றார்கள். செல்போன் இல்லாததால் எனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தற்போது அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன்" என்று தெரிவித்தார்.

    2023 செப்டம்பரில் லலிதா பாய் காணாமல் போன சமயத்தில் லாரி விபத்தில் உடல் நசுங்கி பெண் ஒருவர் உயிரிழந்த வீடியோ வெளியானது. இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த டாட்டூவை பார்த்து இது லலிதா தான் என்று அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர்.

    இந்த கொலை வழக்கில் இம்ரான், ஷாருக், சோனு, எஜாஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் சாலைப் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
    • வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர் :

    அங்கேரிபாளையம் மின்சார வாரியம் சாா்பில் புதைவட கேபிள் சீரமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

    இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-  திருப்பூா் மாநகராட்சிக்கு உட்பட்ட அங்கேரிபாளையம் ஜீவா காலனி நுழைவு வாயில் அருகில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் சாலைப் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

    இந்த நிலையில், மின்சார வாரியம் சாா்பில் அப்பகுதியில் பழுதடைந்துள்ள புதைவட கேபிள்களை சீரமைக்கும் பணி இன்று தொடங்கி குறுகிய காலத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகவே, பணி நடைபெறும்போது பொதுமக்கள் மாநகராட்சி நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்

    • அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது
    • கடம்பர் கோயிலில் அன்னதான உணவை உண்டு வாழ்ந்தவர்

    கரூர்,

    கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர்கோவில் முன் பகுதியில், 10க்கும் மேற்பட்ட முதியவர்கள், கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் உணவை வாங்கி உட் கொண்டுவிட்டு, கோவில் அருகில் திறந்த வெளி மண்டபத்தில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த திறந்த வெளி அரங்கத்தில், அடையாளம் தெரியாத 70 வயது முதியவர் இறந்து கிடந்தார். பொது மக்கள் கொடுத்த தகவலின் படி, கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் குளித்தலை போலீசில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, போலீசார், மற்றும் கிராம உதவியாளர்கள் குமரேசன், ரத்தினசாமி, நகராட்சி சுகாதார பணியாளர்கள் முதியவரின் உடலை மீட்டு காவிரி ஆற்று படுகையில் அடக்கம் செய்தனர்.

    • தற்கொலை செய்துகொண்ட வாலிபர் உடலை போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயற்சி நடைபெற்றது
    • சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அகலங்காநல்லூரை சேர்ந்தவர் மோகன் என்ற கந்தசாமி, விவசாயி. இவரது மகன் அஜித் (வயது 25). இவர் பொக்லைன் எந்திர டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் அரளி விதையை அரைத்து குடித்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார்.இந்நிலையில் சிறுகனூர் அருகே ரெட்டிமாங்குடியில் உள்ள தனது உறவினரான சசிகலா என்பவரது வீட்டிற்கு அஜித் நேற்று முன் தினம் வந்திருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் அஜித்தின் உடலை அடக்கம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதால், சந்தேகம் அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின்படி, சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அஜித் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? உறவினர் வீட்டிற்கு வந்து அவர் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மோப்பநாய் ராஜாவுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
    • முதுமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.

    சூலூர்:

    கோவை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 7 மோப்ப நாய்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நாய்கள் கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டுபிடிப்பு ஆகிய சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

    வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் கடந்த 3 ஆண்டுகளாக லேப்ரடார் வகையை சேர்ந்த ராஜா என்ற மோப்பநாய் பயன்படுத்தப்பட்டு வந்தது.

    இந்த மோப்ப நாய் கடந்த ஒருவார காலமாக உடல் சரியில்லாமல் இருந்து வந்தது. சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தது. உயிரிழந்த மோப்ப நாய்க்கு கோவை மாவட்ட ஆயுதப்படை டி.எஸ்.பி. தென்னரசு தலைமையில் இறுதி சடங்கு நடந்தது.

    அப்போது மோப்பநாய் ராஜாவுக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் சூலூர் போலீஸ் நிலையத்தில் உள்ள துப்பறியும் மோப்ப நாய் பிரிவு வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    உயிரிழந்த மோப்ப நாய் ராஜா சென்னையில் நடந்த சுதந்திர தின விழா, நீலகிரி மாவட்டம் முதுமலையில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.

    • பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 மாத குழந்தை உடலை பொது நல சேவகர்கள் அடக்கம் செய்தனர்
    • விபத்தில் சிக்கிய தம்பதி மருத்துவமனையில் கவலைக்கிடம்

    பெரம்பலூர்,

    சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன் (வயது 34) - பத்மா (32) தம்பதி. இவர்களின் குழந்தைகள் தஷ்வந்த் (4) தீக்சித் (85 நாள் குழந்தை) இந்நிலையில் கணேசன் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் காரில் திருப்பரங்குனறம் கோயிலிலுக்கு சென்று விட்டு கடந்த 10-ந்தேதி சென்னை திரும்பிக் கொண்டி ருந்தனர்.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட் அருகே சென்ற போது கார் சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கணேசன், பத்மா உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். உறவி னர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரம்பலூர் அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெறுகின்றனர்.கணேசன், பத்மா திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலை யில் விபத்தில் காயமடைந்த 85 நாள் குழந்தை தீக்சித் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண் செல்லும் வழியிலேயே உயிரி ழந்தது.பெற்றோர் திருச்சி அரசு மருத்துவமனையில் கவலைக்கி டமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் குழந்தை யின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் 2 நாட்களாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் குழந்தையின் உடலை பெரம்பலூரிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.இது குறித்து அறிந்த உதிரம் நண்பர்கள் குழு தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் குழந்தையின் உடலை தங்களது சொந்த செலவில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகேயுள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். மனிதநே யமிக்க இந்த செயலுக்கு குழந்தை யின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • பிலடெல்பியாவின் ரீடிங் பகுதியில் பிக்பாக்கெட் செய்து பிடிப்பட்ட நபர் 1895-ம் ஆண்டு சிறையில் சிறுநீரக செயலிழப்பால் இறந்தார்.
    • உடல் 128 ஆண்டுகளாக ரீடிங் பகுதியில் உள்ள ஆமன் தேவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பென்சில் வெனியா மாகாணத்தில் எம்பாமிங் செய்து பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டு வந்த உடல் சுமார் 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    பிலடெல்பியாவின் ரீடிங் பகுதியில் பிக்பாக்கெட் செய்து பிடிப்பட்ட நபர் 1895-ம் ஆண்டு சிறையில் சிறுநீரக செயலிழப்பால் இறந்தார்.

    அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்ட போது தனது உண்மையான பெயரை கூறாமல் ஜேம்ஸ் மர்பி என்று பதிவு செய்திருந்தார். அவரது உடலை யாரும் வாங்கி செல்ல வரவில்லை.

    இதையடுத்து அவரது உடலை உரியவர்கள் பெற்று கொள்ளும் வரை எம்பாமிங் நுட்பங்களை பயன்படுத்தி மம்மியாக மாற்றினர். அந்த உடலை பதப்படுத்தி பாதுகாத்து வந்தனர்.

    அவருக்கு ஸ்டோன்மேன் வில்லி என்று பெயரிடப்பட்டது. அவரது உடல் 128 ஆண்டுகளாக ரீடிங் பகுதியில் உள்ள ஆமன் தேவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    இந்தநிலையில் கைதியின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் படி ஸ்டோன்மேன் வில்லி உடல் அங்குள்ள பாரெஸ்ட் ஹில்ஸ் மெமோரியல் பூங்காவில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ஸ்டோன்மேன் வில்லி, ஐரிஷ் வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், அவர் நியூயார்க்கில் வசித்ததும், மதுவுக்கு அடிமையானவர் என்பதையும் கண்டு பிடித்தனர்.

    அவரது தந்தை ஒரு பணக்கார தொழில் அதிபர் ஆவார். தான் திருட்டு வழக்கில் சிக்கியதால் தந்தை பெயரை கொடுக்க விரும்பாததால் தனது உண்மையான பெயரை கூறாமல் போலி பெயரை பயன்படுத்தினார் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    • காவிரி ஆற்றில் இறந்த அடையாளம் தெரியாத பெண்
    • பிரேத பரிசோதனைக்கு பின் உடல் அடக்கம்

    வேலாயுதம் பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே புங்கோடை அருகே உள்ள காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் உடல் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கிடந்தது.

    வேலாயுதம்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுவரை அந்த பெண்ணின் பிரேதத்திற்கான உறவினர்கள் யாரும் வராததால் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர் . இதை தொடர்ந்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் தலைமையில் ஏட்டு சரவணராஜா ஆகியோர் அந்தப் பகுதியில் உள்ள சுடுகாட்டில் உடலை அடக்கம் செய்தனர்

    • ராணுவ முகாமில் வேலைபார்த்து வந்த ஜெய்ஜவான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.
    • உடலுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி மரியாதை செலுத்தினர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே சங்கராபுரத்தை சேர்ந்தவர் சின்னராஜ் மகன் ஜெய்ஜவான்(41). இவர் ராணுவத்தில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி(31) என்ற மனைவியும், ருத்ரன்(4) என்ற மகனும், பிரியதர்சினி(8) என்ற மகளும் உள்ளனர்.

    கடந்த 22 ஆண்டுகளாக காஷ்மீரில் பணிபுரிந்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் விடுமுறைமுடிந்து அருணாசலபிரதேசத்திற்கு பணிமாறுதலில் சென்றார். அங்கு உள்ள ராணுவ முகாமில் வேலைபார்த்து வந்த ஜெய்ஜவான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு திடீரென உயிரிழந்தார்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ராணுவ அதிகாரிகள் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் போடி சங்கராபுரத்திற்கு கொணடுவரப்பட்டது. இன்று காலை ஜெய்ஜவான் உடலுக்கு ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றுகூடி மரியாதை செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. 

    ×