என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் கவிழ்ந்து விபத்து"

    • தனியார் கல்லூரியில் டிரைவராக சங்ககிரி அருகே மரவம்பா ளையத்தான் காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 64) என்பவர் பணியாற்றி வருகிறார்.
    • நிலை தடுமாறி, முனியப்பன் கோவில் அருகே செல்லும் போது சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள டிவைடரில் மோதி பஸ் கவிழ்ந்தது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பல்லக்கா பாளையம் அருகே மங்கரங்கம்பாளையம் தனியார் கல்லூரியில் டிரைவராக சங்ககிரி அருகே மரவம்பா ளையத்தான் காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 64) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கல்லூரி யில் பணி யாற்றும் 19 பணி யாளர்களுடன் பேருந்தில் குமாரபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நிலை தடுமாறி, முனியப்பன் கோவில் அருகே செல்லும் போது சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள டிவைடரில் மோதி பஸ் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 19 பேரும் காயமடைந்தனர்.

    இவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பேருந்தில் பயணித்த 24 ஆண்கள், 15 பெண்கள் காயமடைந்தனர்.
    • காயமடைந்த பயணிகள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கீழக்கரை நோக்கி அரசு நகர் பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 28 ஆண்கள், 18 பெண்கள் உள்பட மொத்தம் 46 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தை ஆர்.எஸ்.மடை கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் ஆத்திமுத்து(வயது 50) என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து தாறுமாறாக ஓடியதை கண்டு பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.

    ஓட்டுநர் அலட்சியமாக செல்போனில் பேசியபடியே பேருந்தை ஓட்டி சென்றதாக பயணிகள் தெரிவித்தனர். ஆனால் இதை கவனத்தில் கொள்ளாத ஓட்டுநர் தொடர்ந்து அலட்சியமாக செல்போனில் பேசியபடி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார்.

    இந்த சூழலில் திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிராக்டருக்கு வழி கொடுப்பதற்காக பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை சாலையின் ஓரமாக இறக்கினார்.

    அப்போது திடீரென பஸ் நிலைத்தடுமாறி சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 24 ஆண்கள், 15 பெண்கள் காயமடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். மேலும் மீட்புபடையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசாரும், மீட்புப்படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சுக்குள் சிக்கியிருந்த அனைவரையும் விரைவாக உயிருடன் விரைவாக மீட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் காயமடைந்த சிலரை தனது வாகனத்தில் ஏற்றி உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த விபத்து குறித்து திருப்புலாணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.செல்போனில் பேசியபடியே டிரைவர் பேருந்தை அலட்சியமாக ஓட்டி சென்றதே விபத்துக்கு காரணம் என பயணிகள் தெரிவித்தனர். பொதுமக்களை ஏற்றி செல்லும் போக்குவரத்து

    துறை ஊழியர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பேருந்துகளை இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • தடுப்பு சுவரில் மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
    • விபத்தில் பஸ்சின் சக்கரங்கள் கழன்று நொறுங்கி பலத்த சேதமடைந்தது.

    விருதுநகர்:

    கோவையில் இருந்து கோவில்பட்டி நோக்கி இன்று அதிகாலை அரசு விரைவு பேருந்து ஒன்று 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பழனியை சேர்ந்த டிரைவர் முருகபூபதி (வயது 36) என்பவர் ஓட்டி சென்றார். பேருந்தில் பேரையூரை சேர்ந்த பிரதீப் நடத்துனராக பணியில் இருந்தார்.

    இந்நிலையில் விருதுநகர் அருகே விருதுநகர்-சாத்தூர் சாலையில் காலை 5.30 மணியளவில் சென்றபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

    வச்சகாரப்பட்டி அருகே சாலையோர தடுப்பு சுவரின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் பேருந்து நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இருபுறமும் சக்கரங்கள் கழன்று நொறுங்கி பேருந்து பலத்த சேதமடைந்தது.

    இதில் பிரபு(31), கோவையை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி புவனேஸ்வரி (33) ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    மேலும் பேருந்தில் பயணம் செய்த 37 பயணிகளும் காய மடைந்தனர். தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் உயிருக்கு போராடிய பிரபு மற்றும் புவனேஸ்வரியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே புவனேஸ்வரி உயிரிழந்தார். பிரபு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • அரசு பஸ் கவிழ்ந்து வாலிபர் பலி.
    • கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது.

    குன்னம்:

    குமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சை கன்னியாகுமரி எஸ்.டி.மந்தாரு வாவரை பகுதியை சேர்ந்த அமர்நாத்(வயது36) என்பவர் ஓட்டினார்.

    பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். திருச்சியை அடுத்து பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் தனியார் பள்ளி அருகே பாலம் கட்டுமான பணி நடக்கிறது.

    இந்த பகுதியில் போக்குவரத்து சர்வீஸ் ரோட்டில் திருப்பி விடப்பட்டது. இன்று அதிகாலை இந்த பகுதியில் பஸ் வந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பஸ்சில் வந்த குமரி மாவட்டம் விளவங்கோடு அருகே உள்ள மருதங்கோடு பால்குளத்து விளை வீட்டை சேர்ந்த ரெத்தினன் மகன் அஜின்மோன்(25) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் பயணிகள் சுமார் 8 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    பலியான அஜின்மோன் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அஜின்மோன் பலியான தகவல் அவர்களது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் பெரம்பலூருக்கு விரைந்துள்ளனர்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்துக்குள்ளான பஸ்சை மீட்டு போக்குவரத்தை சரிசெய்தனர். தொடர்ந்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    • 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

    ராசிபுரம்:

    புதுச்சத்திரம் அருகே உள்ள நவனி தோட்டக்கூர்பட்டி ஊராட்சியிலுள்ள பள்ளிப்பட்டி மற்றும் ஓலப்பாளையம் கிராமங்களை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு தனியார் டிராவல்ஸ் பஸ் மூலம் சென்றனர். அவர்களுடன் ராசிபுரத்தை சேர்ந்த 10 பேரும் மேல்மருவத்தூர் சென்றுள்ளனர்.

    பின்னர் வழிபாடு செய்துவிட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். ராசிபுரத்தை சேர்ந்தவர்களை இறக்கிவிட்டு விட்டு, அதிகாலை 4 மணியளவில் நவனி தோட்டக்கூர்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள லக்கியம்பட்டி பகுதியில் உள்ள வளைவில் சென்றபோது தனியார் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சுமார் 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

    இதில் ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகனாம்பாள் (37), சுவேதா(15), விசாகா (8), ஜெகதீஸ்வரி (40), பாப்பாத்தி (70), தமிழ்ச்செல்வி (31) ஆகியோர் உட்பட 25-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.

    பின்னர் காயமடைந்தவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் மற்றும் நாமக்கல்லில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.


    மேலும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். வளைவு பகுதியில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இருப்பினும் சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்தவர்களுக்கு ராசிபுரம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    • பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
    • சில பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம்.

    திருப்பூர்:

    திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டிற்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

    காலை 8-30 மணியளவில் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி பல்லகவுண்டன்பாளையம் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி, சாலையோரம் கவிழ்ந்தது.


    இதில் பஸ்சில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 5 கல்லூரி மாணவர்களின் கை-கால்கள் துண்டாகியது. அவர்கள் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் சுய நினைவு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். சில பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.


    இது குறித்த தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து காரணமாக செங்கப்பள்ளி கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

    இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.


    டிரைவர் அதிவேகமாக பஸ்சை இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் விபத்தில் பலியான 2 பேரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும், அதில் ஒருவர் விருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் பெரியசாமி (வயது 20), மற்றொருவர் ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

    பெரியசாமி செங்கப்பள்ளியில் இருந்து பஸ்சில் ஏறியுள்ளார். அடுத்த 5 நிமிடத்தில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தென் ஆப்பிரிக்காவில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
    • இதில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்க நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் இன்று பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஜோகன்னஸ்பர்க் கிழக்கே உள்ள டவுன்ஷிப் அல்லது கேட்லெஹாங்கிலிருந்து மக்களை ஏற்றிச் சென்றது. அப்போது திடீரென பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இதில் 12 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 45 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு அவசர சேவை தெரிவித்துள்ளது.

    இந்த விபத்து ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள டாம்போ சர்வதேச விமானநிலையம் அருகிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.

    இந்த விபத்தில் 9 ஆண்களும், 3 பெண்களும் இறந்தனர். இன்னும் 2 உடல்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×