search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புஸ்சி ஆனந்த்"

    • விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.
    • விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர்.

    சென்னை:

    விஜய்யின் தமிழக வெற்றிக்கழக முதல் அரசியல் மாநாடு வருகிற 23-ந் தேதி விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    மாநாட்டுக்காக பிரமாண்ட மேடை, உணவுக்கூடம், ஆம்புலன்ஸ் வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதிகள், 40 ஏக்கரில் ஒரு வாகன நிறுத்தமும் 27 ஏக்கரில் இன்னொரு வாகன நிறுத்தமும் என 2 வாகன நிறுத்தம் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் மாநாட்டுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது.

    மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதி கேட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 28-ந்தேதி கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மனு கொடுத்தார்.

    இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.

    தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு தற்போது கடிதம் அனுப்பியுள்ளனர்.

    இந்நிலையில் செப்டம்பர் 23-ந்தேதி திட்டமிட்டபடி தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெறும் என்று பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக்கழகம் மாநாடு குறித்து 21 கேள்விகளை விக்கிரவாண்டி காவல்துறை கேட்டிருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் சட்டப்பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாக உள்ளது.
    • தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய விஜய் கட்சியின் புதிய கொடியை கடந்த 22-ந்தேதி சென்னையில் அறிமுகப்படுத்தினார்.

    சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நடுவில் 2 யானைகளுக்கு மத்தியில் வாகைப்பூ கொடியில் பொறிக்கப்பட்டு உள்ளது. கட்சி கொடி பற்றிய விளக்கத்தை அடுத்த மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் பேசுவதாக விஜய் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் எங்களுக்கு சொந்தமானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தேர்தல் கமிஷனில் புகார் தெரிவித்துள்ளது. அந்த மனுவில், அங்கீகாரம் பெற்ற எங்கள் கட்சியின் தேர்தல் சின்னமான யானை சின்னத்தை இந்தியா முழுவதும் கொடியிலும் பயன்படுத்தி வருகிறோம். யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளமாக உள்ளது.

    இந்த நிலையில் தற்போது புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் விஜய் தனது கட்சி கொடியில் யானை உருவத்தை பயன்படுத்தி உள்ளார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் எந்த பதிலையும் விஜய் எங்களுக்கு தராமலும் நீக்குவதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருக்கிறார்.

    எனவே சட்டவிரோதமாக விஜய் கட்சி கொடியில் உள்ள யானை உருவத்தை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதையடுத்து எடுக்கப்பட்ட முடிவில், பகுஜன் சமாஜ் கட்சி புகாருக்கு தேர்தல் கமிஷனிடம் இருந்து விளக்கம் கேட்டு முறைப்படி கடிதம் வந்தால் அதற்கு தகுந்த விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஒருவர் கூறும்போது, "கட்சி சின்னத்தை தான் வேறொருவர் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் விதி இருக்கிறது. எங்கள் கட்சி கொடியில் யானைகள் பயன்படுத்தப்பட்டிருப்பது எந்த கட்சி சின்னத்துடனோ கொடியுடனோ பொருந்தாது. தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினால் தகுந்த விளக்கத்தை அளிப்போம்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி.சாலை கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.
    • விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.

    விழுப்புரம்:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.

    இதையடுத்து கட்சி கொள்கை மற்றும் வளர்ச்சி திட்டங்களை அறிக்கை வாயிலாக வெளியிட்டார். வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என அறிவித்த விஜய் அடுத்தடுத்து கட்சி வளர்ச்சிக்கான திட்டங்களில் களம் இறங்கினார்.

    முதற்கட்டமாக கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு செயலி மூலம் சேர்க்கப்பட்டு வருகிறது. இதுவரை கட்சியில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கி உள்ளது.

    அடுத்ததாக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டார். அதற்காக தமிழகத்தில் பல்வேறு இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. முடிவில் விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 22-ந்தேதி மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    மாநாட்டுக்கு முன்னதாக கட்சி கொடி அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதிய கொடியை விஜய் அறிமுகம் செய்து அலுவலகத்தில் உள்ள 40 அடி கொடி கம்பத்தில் கொடி ஏற்றி வைத்தார்.

    சிவப்பு, மஞ்சள் நிறத்தில் நடுவில் இரண்டு யானைகள், வாகைப் பூவுடன் வடிவமைக்கப்பட்ட கொடி பற்றிய விளக்கத்தை மாநாட்டில் அறிவிப்பதாக விஜய் அறிவித்தார்.

    இதைத் தொடர்ந்து கட்சி மாநாடு பணிகளில் விஜய் தீவிரம் காட்ட தொடங்கினார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வி.சாலை கிராமத்தில் உள்ள 150 ஏக்கர் மைதானத்தில் பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது.

    அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற இருந்த மாநாடு 23-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    இதையொட்டி மாநாட்டுக்கு அனுமதி கேட்டு கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விண்ணப்ப மனு கொடுத்தார்.

    தொடர்ந்து மாநாட்டுக்கு பாதுகாப்பு தரக்கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலிடம் புஸ்சி ஆனந்த் மனு அளித்தார்.

    இதையடுத்து விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற இருப்பது உறுதியாகி உள்ளது.

    • படம் திரைக்கு வந்ததும் மாநாடு பற்றிய தகவல்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள வசதியாக இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிர களப் பணியில் இறங்கி வருகிறார்.

    அந்த வகையில் மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டங்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் போன்றவை கட்சி சார்பில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் விஜய் வழி காட்டுதலின் பேரில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரடியாக சந்தித்து கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.

    மேலும் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு எதிராக தமிழக அரசின் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என அறிக்கை விட்டு விஜய் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    மேலும் சமீபத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய் பேசும்போது, நீட்டுக்கு எதிராக பேசியதோடு தமிழகத்துக்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை எனவும் பேசி அதிரடி காட்டினார்.

    சமீபகாலமாக விஜய் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் கூட்டத்தை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நடத்தி கட்சி சார்பில் விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டுக்கான பணிகள் பற்றியும், பதவிகள் வழங்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் புஸ்சி ஆனந்த் பங்கேற்றார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் பற்றி அறிவிக்க வேண்டும் என்பதால் பலரிடம் நடிகர் விஜய் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். விஜய் ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசியல் விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினாரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதைத் தொடர்ந்து கட்சியின் கொள்கைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு திருச்சியில் நடைபெறுவதாக இருந்த நிலையில் சேலத்தில் நடத்தலாமா? என நினைத்து அங்கு சில இடங்களை புஸ்சி ஆனந்த் பார்வையிட்டார்.

    மாநாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் மற்றும் எவ்வளவு தொண்டர்கள் பங்கேற்கலாம் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு கட்சி தலைவர் விஜயிடம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தை விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்.

    விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் மாதம் 5-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.

    படம் திரைக்கு வந்ததும் மாநாடு பற்றிய தகவல்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா என பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள வசதியாக இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    இந்த நிலையில் விரைவில் 'தி கோட்' படத்தின் பாடல் வெளியீடு விழா நடைபெற இருக்கிறது. விழாவில் விஜயின் அரசியல் கலந்த அனல் பறக்கும் பேச்சை கேட்க தொண்டர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

    மாநாடு நடத்துவது பற்றி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துக்களை கேட்டதில் எல்லோருக்கும் மையப் பகுதியாக திருச்சி இருப்பதால் அங்கு மாநாடு நடத்தினால் சரியாக இருக்கும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    வரலாற்று சிறப்புமிக்க அரசியல் மாநாடாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் தொண்டர்களின் கருத்துக்களையும் கேட்டு பரிசீலனை செய்து வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார் புஸ்சி ஆனந்த்.
    • விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    சென்னை:

    விஜய் ரசிகர் மன்றத்தில் 24 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் புஸ்சி ஆனந்த். இவர் புதுச்சேரியில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

    விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய பொதுச்செயலாளராக விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்கள் இயக்க பணிகளை தீவிரப்படுத்தினார். மக்கள் இயக்கத்தின் மூலம் நடைபெற்ற அன்னதானம், பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் இயக்கத்தின் மூலம் செய்து வந்தார்.

    தற்போது 'தமிழக வெற்றிக் கழகம்' என விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் கட்சியின் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். விஜய் அடிக்கடி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதையொட்டி புதுச்சேரியில் தனது வாக்காளர் அட்டை முகவரியை வைத்திருந்த புஸ்சி ஆனந்த் கட்சி பணிகளுக்காக தற்போது தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூர் முகவரிக்கு மாற்றியுள்ளார்.

    • கட்சி கொடி, சின்னம், தேர்வு செய்யும் பணிகளிலும் விஜய் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
    • கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    சென்னை:

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த 2-ந் தேதி அரசியல் கட்சி தொடங்கினார்.

    இதையடுத்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி கொடி, சின்னம், தேர்வு செய்யும் பணிகளிலும் விஜய் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

    இதற்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு அடுத்த வாரம் முதல் செயல்பட உள்ளது. தற்போது அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் மாவட்ட, மாநகர், நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி வார்டு வாரியாக நடைபெற உள்ளது.

    கட்சியின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் கட்சி பதவிகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. முதலில் மகளிர் அணிக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு கட்சி பதவிகளில் முன்னுரிமை வழங்கப்பட இருக்கிறது. புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக மாவட்ட சட்டமன்ற வாரியாக புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    இந்த பணிகள் தொடர்பாக தமிழகம், புதுச்சேரி நிர்வாகிகளை விஜய் உத்தரவின் பேரில் புஸ்சி ஆனந்த் அடிக்கடி தொடர்பு கொண்டு உறுப்பினர் சேர்க்கை பணியை வேகப்படுத்தி வருகிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படும் நிலையில் உறுப்பினர்கள் சேர்க்கைகளில் கட்சி தொண்டர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்களாக சேர விரும்புபவர்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், செல்போன் நம்பர் ஆகியவை இணைக்கப்பட உள்ளது.

    • இலவச சட்ட மையத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார்.
    • பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு உதவி செய்ய வேண்டும்.

    சென்னை:

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்

    அந்த வகையில் அன்னதானம், இரவு நேர பாட சாலை போன்ற புதிய திட்டங்களை அறிவித்து தமிழகம் முழுவதும் அந்த திட்டங்கள் சிறப்பான முறையில் நடந்து வருகிறது.

    ஏழை மக்கள் நலனை கருத்தில் கொண்டு விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள வழக்கறிஞர்களை கொண்ட இலவச சட்ட மையம் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.

    இதையொட்டி முதல் கட்டமாக விஜய் மக்கள் இயக்கத்தினர் வடசென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் தலைவர் தன்ராஜ் ஏற்பாட்டில் இலவச சட்ட ஆலோசனை மையம் நேற்று மாலை தொடங்கப்பட்டது.

    இலவச சட்ட மையத்தை விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் திறந்து வைத்தார். தொடர்ந்து விழாவில் புஸ்சி ஆனந்த் பேசியதாவது:-

    நமது தளபதி விஜய் ஆலோசனையின்படி மக்கள் திட்டங்களை தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் மக்கள் இயக்கம் மூலம் செய்து வருகிறோம். இப்போது ஏழை பொது மக்கள் வசதிக்காக இலவச சட்ட மையத்தை தொடங்கி உள்ளோம். இந்த சட்ட மையத்தின் மூலம் குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான சட்ட ஆலோசனை வழங்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்வதும், கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி உதவி செய்ய வேண்டும். கந்து வட்டி கொடுமயை முற்றிலும் ஒழிக்க பாடுபட வேண்டும்.

    சிறுவர்-சிறுமிகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய வேண்டும் தனியார் நிறுவனத்தால் வங்கி கடன் வீட்டுக் கடன் வாங்கி பாதிக்கப்படுவோருக்கு சட்ட உதவியும், வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கு உதவி செய்ய வேண்டும். சட்டப் படிப்பு படிக்க வரும்புவோருக்கு வழிகாட்ட வேண்டும். பொது பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியில் தீர்வு காண வழி வகைகள் போன்ற மக்களுக்கு பயனுள்ள விடியங்களை நம் இயக்கத்தினர் இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் சிறப்பாக நல்ல முறையில் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இரவு நேர பாட சாலை அமைத்து ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.

    சென்னை:

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை செய்து வருகிறார்.

    அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்வது மாணவ-மாணவிகளின் கல்வியை மேம்படுத்த அவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்குவது, தளபதி பயிலகம் என்ற பெயரில் இரவு நேர பாட சாலை அமைத்து ஏழை மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது மட்டுமின்றி தலைவர்கள் பிறந்த நாளையொட்டி அவர்களது சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழகம் முழுவதும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாளை (2-ந்தேதி) மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நமது மக்கள் இயக்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.

    இது மட்டுமின்றி அந்தந்த மாவட்டங்களில் நம் தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்த வேண்டும்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றிய, நகர தலைவர்கள், பகுதி தலைவர்கள், நிர்வாகிகளுடன் இயக்க கொடிகளுடன் சென்று சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

    காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதையும், தியாகிகளை கவுரவப்படுத்தும் புகைப்படங்களில் 2 புகைப்படங்களையும் 90039 33964 என்ற வாட்ஸ்அப் நம்பரில் அனுப்ப கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×