என் மலர்
நீங்கள் தேடியது "வாஷிங் மெஷின்"
- மொத்தம் 6 வாஷிங் மெஷின்களில் ரூ.1.30 கோடி இருந்தது.
- பணத்தை விஜயவாடாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்ய அனுப்பி வைத்ததாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.
இந்த கடையில் இருந்து விஜயவாடாவுக்கு லோடு ஆட்டோவில் 6 வாஷிங் மெஷின்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு ஹவாலா பணம் கடத்தி செல்வதாக விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த வாஷிங் மெஷின்கள் சீல் பிரிக்காமல் இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாஷிங் மெஷின்களை திறந்தனர். அதில் கட்டு கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 6 வாஷிங் மெஷின்களில் ரூ.1.30 கோடி இருந்தது.
பணம் மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தசரா பண்டிகைக்கு எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட பணத்தை விஜயவாடாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்ய அனுப்பி வைத்ததாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இருப்பினும் பணத்திற்கு உண்டான உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் கண்டுபிடிப்பு.
- சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நாற்பத்தேழு வங்கிக் கணக்குகளும் முடக்கம்.
அந்நிய செலாவணி விதிமீறல் வழக்கு தொடர்பாக பல நகரங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
டெல்லி, ஐதராபாத், மும்பை, குருக்ஷேத்ரா மற்றும் கொல்கத்தா முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, கேப்ரிகார்னியன் ஷிப்பிங் & லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குநர்கள் விஜய் குமார் சுக்லா மற்றும் சஞ்சய் கோஸ்வாமி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களிலும் வருமான வரித்துறை சோதனை செய்தது.
இதில், ஒரு சோதனையின்போது வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.54 கோடி ரூபாய் பணத்தை அமலாக்க இயக்குனரகம் பறிமுதல் செய்தது.
மேலும், பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நாற்பத்தேழு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக விசாரணை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்க இயக்குநரகம் கூறுகையில்," கேலக்ஸி ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரைவெட் லிமிடெட் மற்றும் ஹாரிசான் ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரைவெட் லிமிடட் ஆகிய இந்த இரண்டு நிறுவனங்களும் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட இரண்டு நிறுவனங்களுக்கு ரூ. 1,800 கோடி ரூபாய் சந்தேகத்திற்கு இடமான முறையில் பணம் அனுப்பியுள்ளன.
போலியான சரக்கு சேவைகள், இறக்குமதிகள் மற்றும் ஷெல் நிறுவனங்களின் உதவியுடன் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளின் வலை மூலம் அமலாக்க இயக்குனரகம் கண்டறிந்துள்ளது.
- கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது.
- பாம்பு வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம்.
கண்ணூர்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தளிபரம்பு பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 28). டெக்னீஷியனான இவர் கடம்பேரி பகுதியில் உள்ள பாபு என்பவரது வீட்டில் சலவை எந்திரத்தை பழுதுபார்க்க சென்றார். அங்கு எந்திரத்தை இயக்க முயன்றபோது, உள்ளே ஏதோ ஒன்று சுழல்வதை கண்டார். அது துணி என நினைத்து எந்திரத்திற்குள் கையை நீட்டி எடுக்க முயன்றார். அப்போது அது பாம்பு என்பது தெரியவந்தது. உடனே ஜனார்த்தனன் கையை மேலே தூக்கினார். இதை பார்த்த அவர், பாபு ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த 2 வாரமாக சலவை எந்திரம் பழுதடைந்து இருந்ததால், பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டு இருந்தது. அதற்குள் பாம்பு எப்படி புகுந்தது என்பது தெரியவில்லை என்று பாபு கூறினார்.
தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது பிடிபட்டது நாகப்பாம்பு ஆகும். வடிகால் குழாய் வழியாக சலவை எந்திரத்துக்குள் புகுந்து இருக்கலாம் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
- ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.
- சரி, இது உடலை மட்டும்தான் சுத்தம் செய்கிறதா என்றால், இல்லை.
இன்றைய காலகட்டத்தில் குளிப்பதே பெரும்பாடாக உள்ளதாக ஜென் Z தலைமுறையினர் நொந்துகொள்கின்றனர். அனைத்து பிரச்சனைக்கும் தீர்வை வைத்திருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன ஹியூமன் வாஷிங் மெஷின்.
ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் கோ. நிறுவனம் இந்த நவீன வாஷிங் மெஷினை கண்டுபிடித்து 'மிராய் நிங்கன் சென்டகுகி' என்று பெயர்வைத்துள்ளது. இதற்கு எதிர்காலத்தின் மனித வாஷிங் மெஷின் என்பது பொருளாகும்.

இந்த சலவை எந்திரம் ஒரு மனிதனைக் கழுவ 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. நீங்கள் அதன் பிளாசிக் நாற்காலி மீது ஏறியதும் மெஷினில் பாதியளவு வெதுவெதுப்பான நீர் நிரம்பும். பின்னர் மெஷினில் இருந்து நீர் குமிழிகளாக வெடிக்கிறது.
இது உங்கள் தோலில் இருந்து அழுக்குகளை நீக்குகிறது. நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியில் உள்ள மின் உணரிகள், உங்களின் உடலின் உயிரியல் தகவல்களைச் சேகரித்து நீங்கள் பொருத்தமான வெப்பநிலையில் கழுவப்படுவதை உறுதிசெய்யும்.
இதில் பிளாஸ்டிக் 'மசாஜ் பந்துகள்' அடங்கும். சரி, இது உடலை மட்டும்தான் சுத்தம் செய்கிறதா என்றால் இல்லை. இது உங்கள் மனதையும் அமைதிப்படுத்துகிறது.

மெஷினில் உள்ள செயற்கை நுண்ணறிவு ஏஐ [AI] சென்சார் உங்களின் சேகரிக்கப்பட்ட உடலின் உயிரியல் தகவல்களை ஆராய்ந்து உங்கள் மனதை அமைதிப்படுத்தும் காட்சி மற்றும் ஒலி அடங்கிய வீடியோவை நாற்காலி முன் ஒளிபரப்புகிறது. விளைவு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விரைவான குளியல்.
இந்த அதிநவீன மனித வாஷிங் மெஷின் ஒசாகா கன்சாய் எக்ஸ்போவில் விரைவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அங்கு 1,000 விருந்தினர்கள் இந்த குளியலை முயற்சிக்க உள்ளனர்.