என் மலர்
நீங்கள் தேடியது "எடை குறைப்பு"
- இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம்.
- முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் முதல் எடைக்குறைப்பு மருந்து குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பின் எடைக்குறைப்பு மருந்தான மவுஞ்சாரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முறையான மருத்துவ ஆலோசனைக்கு பிறகே எடைக்குறைப்பு மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று Eli Lilly நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த எடை குறைப்பு மருந்தை வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் மருந்தை தயாரித்துள்ள Eli Lilly நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
உடல் பருமன், நீரிழிவு நோயின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளதால் அதற்கு தீர்வு காணும் வகையில் மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து, ஐரோப்பாவில் மவுஞ்சாரோ மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- குருத்துகளை பறித்து பதப்படுத்தாமல் தயாரிக்கப்படுவதே ஒயிட் டீ.
- ஒயிட் டீ பல்வேறு மருத்துவ பண்புகள் கொண்டதாகும்.
தேயிலை செடியில் உள்ள இலைகளின் இளம் குருத்துகளை பறித்து, அதிகமாக பதப்படுத்தாமல் தயாரிக்கப்படுவதே ஒயிட் டீ. தேயிலை செடியின் இலைகள் குருத்துகளாக இருக்கும்போது, முடிகள் போன்ற வெள்ளை நிற இழைகளால் மூடப்பட்டிருக்கும். அந்த பருவத்திலேயே, இந்த இலைகள் பறிக்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் இதற்கு 'ஒயிட் டீ' என்ற பெயர் உண்டானது.
ஒயிட் டீ பல்வேறு மருத்துவ பண்புகள் கொண்டதாகும். இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். சருமம். இதயம் மற்றும் மூளை போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செரிமானத்தை சீராக்கும். புற்றுநோயை தடுக்கும். உடல் எடையை குறைக்க உதவும். ஒயிட் டீ தரக்கூடிய பல்வேறு நன்மைகள் இங்கே...
சரும பாதுகாப்பு:
ஒயிட் டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் உடலில் உள்ள ஃபிரீரேடிக்கல்களை அகற்ற உதவுகிறது. சருமத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு காரணமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற புரதங்களை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள பாலிபீனால்கள் சருமத்தின் இளமை மற்றும் மிருதுவான தன்மையை பாதுகாக்கிறது.
ஒயிட் டீயில் உள்ள ஆக்சிஜனேற்ற பண்புகள், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்க வயதான தோற்றம் உண்டாவதை தாமதப்படுத்தும். தோல் நோய்களால் சருமம் சிவப்பதையும், வீங்குவதையும் குறைக்கும். தினமும் 2 கப் ஒயிட் டீ குடுப்பதால் சருமம் சுத்தமாகும்.
எடை குறைப்பு:
ஒயிட் டீ, உடலில் தேங்கி இருக்கும் கெட்டக் கொழுப்பை எரிக்க உதவும். புதிய கொழுப்பு செல்கள் உருவாகுவதைத் தடுக்கும். இதில் காணப்படும் கேட்சின்கள் செரிமான செயல்முறைகளை துரிதப்படுத்தும்.
தலைமுடியின் ஆரோக்கியம்:
ஒயிட் டீயில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்டுகள் முடி உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கும். பாக்டீரியாவால் ஏற்படும் உச்சந்தலை தோல் நோய்களை குணப்படுத்தும். முடி வறட்சியை தடுத்து கூந்தலுக்கு இயற்கையான பொலிவை அளிக்கும். ஒயிட் டீயில் காணப்படும் எல்-தியானைன் எனும் ரசாயனம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
பற்கள் பாதுகாப்பு:
ஒயிட் டீயில் பிளேவனாய்டுகள், டானின்கள் மற்றும் புளோரைடுகள் உள்ளன. இவை பற்கள் ஆரோக்கியமாகவும். வலுவாகவும் இருக்க உதவுகின்றன. பல் சிதைவு மற்றும் பிளேக் உருவாகுவதை தடுக்கின்றன. ஒயிட் டீயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றன.
சர்க்கரை நோய் கட்டுப்பாடு:
ஒயிட் டீயில் உள்ள கேடசின்கள் மற்றும் பிற ஆக்சிஜனேற்றிகள், டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஒயிட் டீ ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைத்து இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதய பாதுகாப்பு:
ஒயிட் டீ இதயத்தில் ஏற்படும் ரத்த உறைவு, பக்க வாதம் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட நோய்களைத் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தைக்குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
ஒயிட் டீ தயாரிப்பு:
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து அந்த தண்ணீரில் 2 டீஸ்பூன் ஒயிட் தேயிலை இலைகளை சேர்க்கவும். 5 நிமிடங்கள் கழித்து அந்த இலைகளை வடிகட்டி ஒரு கோப்பையில் தேநீரை ஊற்றி குடிக்கவும். இனிப்பு சேர்க்காமல் குடிப்பது நல்லது.
- உடல் எடை குறைப்பு இன்ஃப்ளுயன்சராக பெரும் புகழ் அடைந்தார், மிலா
- மிலா, எடை குறைப்புக்கு முன்னரும் பின்னரும் இருந்த நிலையை படங்களாக பதிவிட்டார்
சமூக வலைதளங்களின் வழியாக பல்வேறு விஷயங்களை குறித்து தங்கள் கருத்துகளை கூறி, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் "இன்ஃப்ளுயன்சர்கள்".
முக அழகு மற்றும் உடல் தோற்றத்தை மேம்படுத்தும் குறிப்புகளுடன் வெற்றிகரமான இன்ஃப்ளுயன்சராக திகழ்ந்தவர், அமெரிக்காவை சேர்ந்த 35 வயதான மிலா டி ஜெசுஸ் (Mila de Jesus).
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் பிறந்த மிலா, அமெரிக்க மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநில பாஸ்டன் நகரில் வசித்து வந்தார்.
அதிக உடல் எடையால் அவதிப்பட்டு வந்த மிலா, சுமார் 6 வருடங்களுக்கு முன் எடை குறைப்பிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து, அவரது உடல் மெலிவடைந்து அவர் விரும்பிய உடல் அமைப்பை பெற்றார்.
மிலா, உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்கு முன்னரும் பின்னரும் தனது உடல் இருந்த நிலையை புகைப்படங்களாக வெளியிட்டார்.
தனது சமூக வலைதள பக்கங்களில் இது குறித்து விரிவாக பதிவிட்ட மிலாவை பல்லாயிரக்கணக்கான பயனர்கள் பின் தொடர்ந்தனர்.
இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் சுமார் 60 ஆயிரம் பேரும், யூடியூப் வலைதளத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களும் மிலாவை பின் தொடர்ந்தனர்.
மேலும், மிலா பல அழகு குறிப்புகளை தொடர்ந்து பதிவுகளாக வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று மிலா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.
தனது முந்தைய திருமண வாழ்க்கையின் மூலம் 4 குழந்தைகளுக்கு தாய் ஆன மிலா, 4 மாதங்களுக்கு முன் மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிலாவின் திடீர் மாரடைப்புக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.
- தவிர்க்க முடியாத உணவுப்பொருளாக இருக்கிறது மைதா.
- மைதா மாவு உயர் கிளைசெமிக் குறியீடு கொண்டது.
ஊட்டச்சத்துமிக்க பொருட்களை உட்கொண்டால்தான் உடல்நலனை பாதுகாக்கலாம் என்பது தெரிந்திருந்தும் பலராலும் தவிர்க்க முடியாத உணவுப்பொருளாக இருக்கிறது மைதா. இந்த சுத்திகரிக்கப்பட்ட மாவு உடலுக்கு தீங்குவிளைவிக்கக்கூடியது என்று தெரிந்திருந்தும் அதன் சுவைக்கு அடிமையாகி பலரும் விரும்பி உட்கொள்கிறார்கள்.
அவர்களின் ருசிக்கு தீனிபோடும் விதமாக மென்மையான பரோட்டா முதல் பலதரப்பட்ட பேக்கரி பலகாரங்கள் வரை மைதாவில் தயாராகின்றன. இந்த மாவை ஒரு மாதம் தவிர்த்தால் உடலில் என்னென்ன நல்ல மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
எடை குறையும்
சுத்திகரிக்கப்பட்ட இந்த மாவு உயர் கிளைசெமிக் குறியீடு கொண்டது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க செய்துவிடும். குறுகிய காலத்திற்குள் உடலுக்கு அதிக அளவு ஆற்றலையும் வழங்கிவிடும். அதனால் சில மணி நேரத்துக்குள் பசி உணர்வை தூண்டிவிடும். அதிக அளவு சாப்பிடுவதற்கும் வழிவகுத்துவிடும்.
மைதாவை விலக்கி வைப்பதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பேணலாம். அதிகம் பசி எடுப்பதை குறைத்து உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும். மைதாவுக்கு மாற்றாக முழு தானிய உணவுகளை தேர்ந்தெடுத்தால் அதிலிருக்கும் அதிக நார்ச்சத்து செரிமானம் சுமூகமாக நடப்பதற்கு வழிவகுக்கும்.
பசியை தூண்டாமல் வயிறு நிறைந்த உணர்வை நீண்ட நேரம் தக்கவைக்கும். உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் துணை புரியும்.

செரிமான ஆரோக்கியம்
முழு தானியங்களுடன் ஒப்பிடும்போது மைதாவில் நார்ச்சத்தோ, ஊட்டச்சத்துக்களோ இல்லை. செரிமான அமைப்பை பராமரிக்க அவை அவசியம். மைதாவை தவிர்ப்பதன் மூலம் குடல் நலனை பேணலாம். அவை சிறப்பாக செயல்படவும் ஊக்குவிக்கலாம். உணவு உட்கொண்ட பிறகு வயிறு வீக்கம், அசவுகரியம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
நாள்பட்ட நோய்களை குறைக்கலாம்
மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுகள் டைப்- 2 நீரிழிவு, இதய நோய், புற்றுநோய்கள் போன்ற நாள்பட்ட நோய் அபாயங்களுடன் தொடர்புடையவை. உணவுப்பட்டியலில் இருந்து மைதாவை நீக்குவதன் மூலம் நாள்பட்ட நோய் அபாயத்தைக் குறைக்கலாம். முழு தானியங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பேணி நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கின்றன.
சருமம் பொலிவாகும்
மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்வது தோல் அழற்சிக்கு வழிவகுக்கும். முகப்பரு போன்ற பிரச்சினைகளுக்கும் வித்திடும். மைதாவை தவிர்ப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். அதற்கு மாற்றாக முழுதானியங்களை உட்கொள்ளும்போது அதிலிருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள் தோல் மீளுருவாக்கம் பெறுவதற்கு உதவி புரியும். தோலின் நிறமும் மேம்படும்.
மனநிலை மேம்படும்
மன ஆரோக்கியத்திற்கும் உண்ணும் உணவிற்கும் கூட தொடர்பு இருக்கிறது. இந்த சுத்திகரிக்கப்பட்ட மாவு மனநிலையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்திவிடும். அறிவாற்றல் செயல்பாட்டையும் பாதிக்கும். மூளைக்கு சீரான ஊட்டச்சத்துக்களை வழங்கும் முழு தானியங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம், மனநிலை மேம்படும். மனத்தெளிவும் கிடைக்கும்.
மந்த உணர்வு
சுத்திகரிக்கப்பட்ட மாவை உட்கொள்வது மந்தமாக உணர வைக்கும். ஆற்றலை மெதுவாகவும், சீராகவும் வெளியிடும் முழு தானியங்களை உட்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை பெறலாம்.
மேம்படுத்தப்பட்ட சுவை
சுத்திகரிக்கப்பட்ட மாவில் முழு தானியங்கள் தரும் சுவையை உணர முடியாது. முழு கோதுமை, ஓட்ஸ், பழுப்பு அரிசி போன்றவைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் அவற்றின் மேம்பட்ட சுவையை முழுமையாக உணரலாம்.
நோய் எதிர்ப்பு செயல்பாடு
முழு தானியங்களில் காணப்படும் வைட்டமின்கள் பி, ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உணவில் அதிக முழு தானியங்களை சேர்ப்பதன் மூலமும், மைதாவை தவிர்ப்பதன் மூலமும், நோய்த்தொற்றுகளை தடுக்கலாம். ஆண்டு முழுவதும் ஆரோக்கியமாக இருக்க தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உடலுக்கு கிடைக்க செய்யலாம்.
- உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த நேரம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடலாம்.
- கல்லீரல் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகளை சுற்றியுள்ள வயிற்றுப்பகுதி கொழுப்புகள் ஆபத்தானது என்பதால் இது மிகவும் முக்கியமானது.
எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் அது நல்லதுதான். ஆனால், உடற்பயிற்சியால் உண்டாகும் சிறந்த பலனை அடைவதற்கு நேரம் முக்கியம். அதிலும் உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த நேரம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடலாம்.
பெண்கள் காலையில் உடற்பயிற்சி செய்யும்போது உடலில் உள்ள அதிக கொழுப்பு கரைவதாகவும், இதுவே ஆண்கள் மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது நிகழ்வதாக தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு பாலினத்திற்கும் வேறுபடும் ஹார்மோன்கள் மற்றும் உறங்கும் நேரம், விழித்திருக்கும் நேரம், உணவு உண்ணும் நேரம் என அனைத்து உடல் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் நம் 'உடல் கடிகாரம்' ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கலாம்.
நல்ல ஆரோக்கியமான, சுறுசுறுப்பான 30 ஆண்கள் மற்றும் 26 பெண்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் 25 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். 12 வாரங்கள் அவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்ட்ரெச்சிங், ஓட்டம், ரெசிஸ்டன்ட் எனப்படும் எதிர்ப்பு பயிற்சி, தசையை வலுவாக்கும் பயிற்சிகள் என, பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் கண்காணிக்கப்பட்டன.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுள் ஒரு குழுவினர் காலை 8:30 மணிக்கு முன்னதாக உடற்பயிற்சி செய்தனர். மற்றொரு குழுவினர் அதே உடற்பயிற்சிகளை மாலை 6 மணி முதல் 8 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மேற்கொண்டனர். அனைத்து பங்கேற்பாளர்களும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட உணவுமுறையைக் கடைபிடித்தனர்.
பங்கேற்பாளர்களின் ரத்த அழுத்தம் மற்றும் உடல் கொழுப்பின் அளவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகாலத்தில் பரிசோதித்து வந்தனர். மேலும், இந்த காலகட்டத்தில் அவர்களின் உடல் நெகிழ்வு தன்மை, பலம், ஏரோபிக் ஆற்றல் ஆகியவையும் பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவரும் எந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தாலும் அவர்களுடைய ஒட்டுமொத்த உடல்நலனும் மேம்பட்டுள்ளது.

"ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு நேரம் சிறந்தது"
"உங்களால் எந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியுமோ, அந்த நேரம்தான் உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரமாகும். உங்களின் நேரத்திற்கு ஏற்ப உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்பும் மற்றும் தங்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முயலும் பெண்கள் காலையில் உடற்பயிற்சி செய்வதை இலக்காக வைக்க வேண்டும்.
கல்லீரல் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகளை சுற்றியுள்ள வயிற்றுப்பகுதி கொழுப்புகள் ஆபத்தானது என்பதால் இது மிகவும் முக்கியமானது.
எனினும், உடலின் மேல்பகுதியில் தசை பலத்தை அதிகரிக்க முயற்சிக்கும் பெண்கள் மற்றும் தங்களின் மனநிலை, உட்கொள்ளும் உணவை மேம்படுத்த விரும்பும் பெண்களும் மாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

ஆண்கள் காலை, மாலை என எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் அவர்களின் உடல்பலம் அதிகரிக்கும்.
ஆனால், "தங்களின் இதயநலன், வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) மற்றும் மனநலனை மேம்படுத்த விரும்பும் ஆண்களுக்கு மாலை நேர உடற்பயிற்சி சிறந்ததாக உள்ளது.
மாலை நேர உடற்பயிற்சி வளர்சிதை மாற்ற நலனை மேம்படுத்துவதுடன், உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்துகளையும் குறைக்கிறது.
பெண்களுக்கு அதிகளவில் வயிற்றுப்பகுதியில் கொழுப்புகள் இருப்பதால், அவர்கள் காலையில் அதிகளவிலான கொழுப்பை எரிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே கூறப்பட்டதுபோல உடல் கடிகாரமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
- ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது.
- ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே கெஜ்ரிவாலின் எடை 8.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. மார்ச் 21 அன்று அமலாக்கத் துறை கைது செய்த போது கெஜ்ரிவாலின் எடை 70 கிலோவாக இருந்தது என்றும், தற்போது அவரது எடை 61.5 கிலோவாக குறைந்துள்ளது என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கெஜ்ரிவாலின் எடை 2½ கிலோ மட்டுமே குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு 10 நாட்களுக்கும் புகைப்படங்களுடன் எடுத்து முன்னேற்றத்தை கண்காணிக்கலாம்.
- பதிவு வைரலாகி வருகிறது.
உடல் பருமன் பிரச்சனையால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக உடற்பயிற்சி, நடை பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை கடைபிடித்து எடையை குறைக்க முயற்சி செய்கின்றனர்.
இந்நிலையில் 11 மாதங்களில் 18 கிலோ உடல் எடையை குறைத்த மேடி டிசோ என்ற இளம்பெண் தனது எடை குறைப்பு தொடர்பான அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஊட்டச்சத்து, உடற்பயிற்சி மற்றும் மன ஆரோக்கியம் பற்றிய பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி இருப்பது இணைய பயனர்களை ஈர்த்துள்ளது. பயனர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் 4 தலைப்புகளில் அவர் எடை குறைப்பு வழிமுறைகளை பகிர்ந்துள்ளார்.
முதலாவதாக ஒருங்கிணைந்த வலிமை பயிற்சி மற்றும் கார்டியோ பயிற்சிகளை மேற்கொண்டதாகவும், இதனால் தேவையற்ற கலோரிகளை எரிக்க உதவியதாகவும் கூறியிருந்தார். மேலும் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும். இது பசியை அடக்கி ஆற்றலை அதிகரிக்க செய்யும். நச்சுக்களை வெளியேற்றும், செரிமானத்தை ஆதரிக்கும் என கூறியிருந்தார்.
இதே போல ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும் கூறியிருந்த அவர், ஒவ்வொரு 10 நாட்களுக்கும் புகைப்படங்களுடன் எடுத்து முன்னேற்றத்தை கண்காணிக்கலாம் என்பது உள்ளிட்ட வழிமுறைகளை கூறியிருந்தார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.
- உணவுக் கட்டுப்பாடு [டயட்டிங்] துறை எவ்வாறு இயங்குகிறது என்ற தனது பார்வைகளை போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றிலே அவர் பகிர்ந்துகொண்டார்.
- ஆறு மாதங்களுக்கு பிறகு எடை குறைப்பு முயற்சிகளை மீண்டும் தொடங்கினேன்.
பிரபல இந்தி சீரியல் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் ராம் கபூர். சமீபத்தில் தனது எடையில் 55 கிலோவை குறைத்துள்ளார். தனது எடை குறைப்பு அனுபவம் குறித்தும் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் உணவுக் கட்டுப்பாடு [டயட்டிங்] துறை எவ்வாறு இயங்குகிறது என்ற தனது பார்வைகளை போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றிலே அவர் பகிர்ந்துகொண்டார்.
நான் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எடை குறைப்பை ஆரம்பித்தேன், இதுவரை 55 கிலோ எடையைக் குறைத்துள்ளேன். முதல் ஆறு மாதங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, ஆனால் பின்னர் நான் ஒரு விபத்தில் மற்றும் என் தோள்பட்டையில் காயம் அடைந்தேன். இதற்கு அறுவை சிகிச்சை மற்றும் எட்டு மாதங்கள் பிசியோதெரபி தேவைப்பட்டது, இது எனது எடை குறிப்பு பயணத்தை இடைநிறுத்தியது.
இறுதியில், மேலும் ஆறு மாதங்களுக்கு பிறகு எடை குறைப்பு முயற்சிகளை மீண்டும் தொடங்கினேன், இது எனது மாற்றத்திற்கு வழிவகுத்தது. நான் ஓசெம்பிக், பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை அல்லது எடை இழப்பு மருந்துகளை பயன்படுத்தவில்லை.
நான் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்தேன் என்று மக்கள் கருதினர், ஆனால் நான் ஏன் அதை மறைக்க வேண்டும்? இதற்கு முன், நான் ஐந்து ஆண்டுகளாக எடை இழப்பு பயணத்தில் இருந்தேன் மற்றும் 30 கிலோகிராம் இழந்தேன். ஆனால் அந்த எடை மீண்டும் கூடியது.

என்ன செய்யக்கூடாது என்று அந்த அனுபவம் எனக்குக் கற்றுக் கொடுத்தது. நான் எண்ணற்ற இரவுகளை நிபுணர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்து பாட்காஸ்ட்களைப் பார்த்தும் தெரிந்துகொண்டேன் என்று தெரிவித்தார்.
மேலும் டயட்டிங்கை சுற்றி இயங்கும் தொழில்துறையை விமர்சித்த அவர்,20 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள சந்தை கொண்ட டயட்டிங் தொழில், அதை பயன்படுத்தும் மக்கள் அடையும் தோல்வியில் செழிக்கிறது.
அவை உங்களை தோல்வியடையச் செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. எடை குறைந்து நீங்கள் அவர்களிடம் திரும்பிச் செல்லவில்லை என்றால் அவர்கள் எப்படி தொழில் செய்வார்கள்?
அவர்கள் எடை குறையும் என்று உறுதியளிக்கிறார்கள். ஆனால் அதை எவ்வாறு குறைந்த எடையை பராமரிப்பது என்பதை மக்களுக்கு கற்பிக்கத் தவறுகிறார்கள்.
எடை குறைந்ததும் நீங்கள் மீண்டும் தவறான பாதையை தேர்ந்தெடுக்கிறீர்கள். அது மீண்டும் உங்கள் எடையை அதிகரிக்க செய்கிறது. எனவே நிலையான மாற்றத்திற்கு தனிப்பட்ட [மன] மாற்றம் தேவை. அதை அவர்கள் கூறுவதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தினசரி வாழ்க்கை முறை குறித்து தெரிவித்த அவர்., நான் இப்போது தினமும் இரண்டு முறை சாப்பிடுகிறேன்- காலை 10:30 மற்றும் மாலை 6:30 மணி க்கு சாப்பிடுகிறேன். எனது வொர்க்அவுட்டில் 45 நிமிடங்கள் கார்டியோ மற்றும் வலிமை பயிற்சி அடங்கும். நீரேற்றமாக இருப்பதும், தரமான தூக்கத்தை உறுதி செய்வதும் மிக முக்கியம் என்று தெரிவித்தார்.