என் மலர்
நீங்கள் தேடியது "மோர்னே மோர்கல்"
- பாகிஸ்தான் அணி 4 வெற்றியுடன் 5-வது இடத்தை பிடித்தது.
- இந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் அணியில் ஆறு மாத ஒப்பந்தத்தில் பயிற்சியாளராக மோர்கல் இணைந்தார்.
இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான் லீக் போட்டியுடனே வெளியேறியது. இங்கிலாந்து அணி 9 போட்டிகள் முடிவில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்றது. பாகிஸ்தான் அணி 4 வெற்றியுடன் 5-வது இடத்தை பிடித்தது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறாத நிலையில் அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்கல், இந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் அணியில் ஆறு மாத ஒப்பந்தத்தில் பயிற்சியாளராக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.
- பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கான், எல் பாலாஜி ஆகியோரை பிசிசிஐ பரீசிலனை செய்து வந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவரது உதவியாளர்களாக பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர் யார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிடவில்லை.
ஆனால் பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயரும் பீல்டிங் பயிற்சியாளராக ரியான் டென் டோஸ்கேட் ஆகியோரை நியமிக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு கம்பீர் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியது.
மேலும் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கான், எல் பாலாஜி ஆகியோரை பிசிசிஐ பரீசிலனை செய்து வந்தனர். ஆனால் கம்பீர் வினய் குமாரை நியமிக்க கோரிக்கை வைத்ததாக தெரிய வந்தது.
இப்படி பிசிசிஐ ஒரு முடிவு செய்ய புதிய பயிற்சியாளர் கம்பீர் ஒரு முடிவு செய்து வருவதாக தகவல் வெளியாகி வருவது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த குழப்பத்திற்கு மத்தியில் மீண்டும் ஒரு குழப்பம் அரங்கேறி உள்ளது. பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்கா வீரரான மோர்னே மோர்கல் நியமிக்க கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பிசிசிஐ-யிடம் இருந்து எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை. இவர் பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து அதன்பின் அதிலிருந்து விலகினார்.
மேலும் ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த போது அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் மோர்னே மோர்கல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கம்பீர் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய உதவியாளர்களை பிசிசிஐ-யிடம் பரிந்துரைத்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவரது உதவியாளர்களாக பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர் யார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிடவில்லை.
அவர் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய உதவியாளர்களை பிசிசிஐ-யிடம் பரிந்துரைத்தார். ஆனால் அவருடைய ஐந்து பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்காக கம்பீர் பரிந்துரைத்தார்.

இவருக்கு முன் முன்னாள் இந்திய வீரர் ஆர் வினய் குமார் மற்றும் பாலாஜி இருவரும் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து பீல்டிங் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் மற்றும் ஜான்டி ரோட்ஸ் ஆகியோரை கம்பீர் பரிந்துரைத்தார். இந்த ஐந்து பரிந்துரைகளும் பிசிசிஐ-யால் நிகராகரிக்கப்பட்டது.

கம்பீரின் பரிந்துரைகளில், முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டரான அபிஷேக் நாயர் மட்டுமே கம்பீரின் துணைப் பணியாளர்களில் ஒரே ஒருவராகத் இடம் பெறுகிறார்.
- மோர்னே மோர்கல் பவுலிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- லக்னோ அணி வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.
புதுடெல்லி:
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.
கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பந்துவீச்சு பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங் பயிற்சியாளர் போன்றவர்களையும் தேர்வு செய்யாமல் இருந்தது.
இதற்கிடையே, பவுலிங் பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கலை நியமிக்குமாறு கம்பீர் கேட்டிருந்தார். அதற்கு பி.சி.சி.ஐ. எந்த பதிலும் கூறாமல் இருந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்த தகவலை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
கவுதம் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் இருவரும் நீண்ட நாட்களாக நல்ல உறவில் இருந்து வருகின்றனர். கம்பீர் ஒரு வீரராக கொல்கத்தா அணிக்கு விளையாடிய போது மோர்கல் விளையாடியுள்ளார்.
லக்னோ அணியின் வழிகாட்டியாக கம்பீர் இருந்தபோது மோர்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- லக்னோ அணிக்கு புதிய ஆலோசகராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர்ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர் பொறுப்பேற்றார். இப்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் உயர்ந்துள்ளா
கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்த நிலையில் ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லக்னோ அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் லக்னோ அணிக்கு அடுத்த பந்து வீச்சு பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு லக்னோ அணியின் புதிய ஆலோசகரான நியமிக்கப்பட்ட ஜாகீர் கான் பதில் அளித்துள்ளார். நான் இருக்கும் போது உங்களுக்கு ஒரு பந்து வீச்சு பயிற்சியாளர் தேவையா? அணிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வேன் என அவர் கூறினார்.
- தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மோர்னே மோர்கல் பந்து வீச்சு பயிற்சியாளராக இணைந்துள்ளார்.
- முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று சென்னை வந்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி 27-ந்தேதி கான்பூரில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று சென்னை வந்துள்ளது.
இந்நிலையில் இன்று இந்திய அணி வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பயிற்சியின் போது இந்திய அணியுடன் புதிய பந்து வீச்சு மற்றும் பேட்டிங் பயிற்சியாளர்கள் இணைந்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான அபிஷேக் நாயரும் இணைந்துள்ளார். இருவரும் முதல் தொடரில் பங்கேற்க உள்ளனர்.
- நினைத்ததை விட பந்துகளை மிகவும் வேகமாக அடிக்கும் பேட்ஸ்மேன்.
- விக்கெட்டுகளுக்கு இடையில் துல்லியமாக பந்து வீசுகிறார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை பெர்த்தில் தொடங்குகிறது. பொதுவாக ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். சிட்னி ஆடுகளம் மட்டும் சுழற்பந்து வீச்சுக்கு கைக்கொடுக்கும்.
இதனால் பெரும்பாலும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் அல்லது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டருடன் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க இந்தியா விரும்பும். அந்த வகையில் இந்தியா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டியுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் "இந்திய அணியில் இடம் பிடித்துள்ள நிதிஷ் ரெட்டி மிகவும் துல்லியமாக பந்து வீசுவது மட்டுமல்லாமல், நாம் நினைப்பதை விட பந்துகளை மிகவும் வேகமாக அடிக்கும் பேட்ஸ்மேனாக திகழ்கிறார். ஆல்-ரவுண்டர் இடத்தை நிரப்ப அவருக்கு இது நல்ல வாய்ப்பாகும். ஆஸ்திரேலிய தொடரில் கவனிக்கப்படும் வீரராக திகழ்வார்" எனத் தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தார். தற்போது அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இதனால் ஆல்ரவுண்டர் இடம் பூர்த்தி செய்ய முடியாமல் உள்ளது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
- இந்திய அணி முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகிற 20-ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக இந்திய வீரர் கள் துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்திய அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் இருக்கிறார். இந்த நிலையில் மோர்னே மோர்கலின் தந்தை உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து மோர்கல் உடனடியாக துபாயில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு திரும்பினார். அவர் மீண்டும் எப்போது அணியுடன் இணைவார் என்ற தகவல் வெளியாகவில்லை. முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் இந்தப் போட்டி தொடரில் இருந்து ஏற்கனவே விலகியுள்ளார். தற்போது மார்னே மார்கலும் இல்லாதது இந்திய அணிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
- வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளை இந்தியா வென்றுள்ளது.
- மார்ச் 2-ந்தேதி கடைசி லீக்கில் நியூசிலாந்துடன் மோத உள்ளது.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக துபாய் சென்றுள்ளது. இந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கலும் அணியுடன் சென்றிருந்தார்.
இந்திய அணி தனது முதல் போட்டியில் கடந்த 20-ந்தேதி வங்கதேசத்தை எதிர்கொண்டது. இந்த போட்டி தொடங்குவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னதாக அவசரமாக மோர்னே மோர்கல் சொந்த நாடு திரும்பினார்.
இதனால் இந்தியா வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக பந்து வீச்சு பயிற்சியாளர் இல்லாமல் விளையாடியது. இந்த நிலையில் இன்று மோர்னோ மோர்கல் இந்த அணியுடன் இணைந்துள்ளார்.
ஐசிசி அகாடமியில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று பயிற்சி மேற்கொண்டிருக்கும்போது மோர்னே மோர்கலா் கவுதம் கம்பீர் உடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மார்ச் 2-ந்தேதி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.