search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தையின்மை"

    • ஆண் கருவுறாமை அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம்.
    • பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற தொற்றுகள் விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் இயக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    கருவுறாமை என்பது ஒரு ஜோடி பாதுகாப்பின்றி ஒரு வருடத்திற்குப் பிறகு கருத்தரிக்க இயலாமை என வரையறுக்கப்படுகிறது. ஆண் மலட்டுத்தன்மை என்பது ஒரு ஆண், ஒரு பெண் துணையுடன் கருத்தரிக்கும் வாய்ப்பைக் குறைக்கும் உடல் ரீதியான பிரச்சினையால் அவதிப்படுவதைக் குறிக்கிறது. எவ்வாறாயினும், பரம்பரை கோளாறுகள், விரையைச் சுற்றியுள்ள விரிந்த நரம்புகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அல்லது விந்தணுக்களில் இருந்து விந்தணுக்கள் செல்வதைத் தடுக்கும் நிலை போன்ற அடிப்படைப் பிரச்சனைகள் கருவுறாமைக்கு பங்களிக்கும் சில சந்தர்ப்பங்கள் உள்ளன.

    ஆண் கருவுறாமை அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் கவனிக்க வேண்டிய சில எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன

    ஹார்மோன் சமநிலையின்மை: டெஸ்டோஸ்டிரோன் மற்றும் பிற ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் சமநிலையின்மை விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம்.

    சில மருந்துகள் விந்தணு உற்பத்தியைக் குறைக்கலாம்.

    மது, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு: இவை அனைத்தும் விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கலாம்.

    பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற தொற்றுகள் விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் இயக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

    சில மரபணு குறைபாடுகள் விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம்.

    வயிறு அல்லது இடுப்பு பகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் விந்து வழிப்பாதையில் அடைப்பை ஏற்படுத்தலாம்.

    விந்து வழிப்பாதையில் உள்ள சில பிறவி குறைபாடுகள் விந்தணுக்கள் வெளியேறுவதைத் தடுக்கலாம்.

    ஆண்கள் வயதாகும்போது, விந்தணு எண்ணிக்கை மற்றும் தரம் குறையலாம்.

    வெப்பம், கதிர்வீச்சு மற்றும் சில வேதிப்பொருட்களுக்கு வெளிப்படுவது விந்தணு உற்பத்தி மற்றும் விந்தணுக்களின் தரத்தை பாதிக்கலாம்.

    நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சில உடல்நலப் பிரச்சினைகள் ஆண் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.

    உங்களுக்கு மலட்டுத்தன்மை இருப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது அதைப் பற்றிய கேள்விகள் இருந்தாலோ தனியாக உணர வேண்டாம். மருத்துவ தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருவதால், உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்கள் மூலம் பெற்றோரின் மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிக்க வாய்ப்புகள் உள்ளன, எனவே உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால் ஒரு நிபுணரை அணுக பயப்பட வேண்டாம்.

    • வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயன பெருமாள் காட்சியளிக்கின்றார்.
    • பன்னிரண்டு ஆழ்வார்கள் இக்கோயிலில் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

    108 திவ்ய தேசங்களில் 63வது தேசமாக விளங்கும் மாமல்லபுரம் தல சயன பெருமாள் கோயில். காஞ்சிபுரம் மாவட்டம் உலக வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா ஸ்தலமான மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது 108 திவ்ய தேசங்களில் 63 வது தேசமாக விளங்கும் தலசயன பெருமாள் கோவில்.

    சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் கிபி 14ஆம் நூற்றாண்டில் விஜய நகர மன்னர்களில் ஒருவரான பரங்குசண் என்கிற மன்னன் ஆகம விதிப்படி இக்கோயிலைக் கட்டி பெருமாளை வழிபட்டு வந்ததாகத் தல வரலாறு கூறுகிறது.

    இவ்வாலயத்தின் மூலவராகத் தலசயனப் பெருமாள் படுத்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். தாயாராக நிலமங்கை தாயாரும் காட்சி அளித்து வருகிறார். இந்த பெருமாள் தன் வலது கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இதனால் தலத்தில் உள்ள பெருமாளைத் தரிசித்தால் திருப்பாற்கடல் வைகுண்ட நாதனைத் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இத்தலம் 12 ஆழ்வார்களில் பூதத்தாழ்வார் ஆதரித்த தலமாகக் கூறப்படுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க புண்டரீக மகரிஷி பாதம் பட்ட இந்த புஷ்கரணி தெப்பக்குளத்தில் மாசி மகத்தன்று தல சயன பெருமாளுக்குத் தெப்ப உற்சவம் நடைபெற்று வருகிறது.

    மூலஸ்தானத்தில் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீதேவி பூதேவி இல்லாமல் படுத்த நிலையில் வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் தல சயன பெருமாள் காட்சியளிக்கின்றார். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும், சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும், திருமணத் தடைகள் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும், குழந்தையின்மை நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


    பன்னிரண்டு ஆழ்வார்கள் இக்கோயிலில் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இந்த கோயிலில் தல விருட்சமாகப் புன்னை மரமும், தல தீர்த்தமாகப் புண்டரீக புஷ்கரணி தீர்த்தமும் அமைந்துள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்களால் மங்களா சாசனம் பாடப்பட்ட ஸ்தலமாக கூறப்படுகிறது.

    • நீர்க்கட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்றோஜென் அதிகம் சுரக்கும்.
    • மாதவிடாயும், நீர்க்கட்டியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை.

    பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் கருப்பை நீர்கட்டி பிரச்சனையும் ஒன்று. பல சிறிய நீர் நிரம்பிய கட்டிகள் கருப்பையில் உருவாவதையே நீர்க்கட்டி என்கிறோம். இதை பாலி சிஸ்டிக் ஓவரியன் சின்றோம் என்று அழைக்கிறார்கள். பெரும்பாலும் ஏற்படும் குழந்தையின்மை பிரச்சினைக்கு இந்த நீர்க்கட்டிகளும் ஒரு காரணம் ஆகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயும் இந்த நீர்க்கட்டியும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை. இந்த கர்பப்பை நீர்க்கட்டிகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்தால் இது குழந்தையின்மைக்கு வழி வகுக்கும்.

    கர்பப்பை நீர்க்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள்:

    கர்பப்பை நீர்க்கட்டிகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஒவ்வொரு பெண்களுக்கும் வேறுபடும். பெரும்பாலானோருக்கு ஏற்படும் அறிகுறி சரியாக மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது தான். அதாவது முறையற்ற பீரியட்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கலாம். கர்பப்பை நீர்க்கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண் ஹார்மோன் என்று அழைக்கப்படும் ஆன்றோஜென் அதிகம் சுரக்கும்.

    ஆன்றோஜென் அதிகம் சுரப்பதால் பெண்களுக்கு முகத்தில் ரோமம் வளரும். பெண்களுக்கு மார்பகத்தின் அளவு குறையும். முடிகொட்டும் பிரச்சினை ஏற்படும். குரலில் வேறுபாடு ஏற்படுகின்றது. முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுகின்றது. உடல் எடை அதிகரிக்கின்றது. மனஅழுத்தம் ஏற்படும், மலட்டுத் தன்மை ஏற்படுகின்றது.

    இந்த கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினையை சரி செய்வதற்கு இந்த பதிவில் பெண்கள் என்னென்ன உணவுப் பொருள்களை சாப்பிட வேண்டும் என்று இனி பார்க்கலாம்.

    வெந்தயம்:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் வெந்தயத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது கர்பப்பை நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு இன்சுலின் அளவு அதிகமாக சுரக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கக் கூடும். இதை தடுக்க வெந்தயத்தை பயன்படுத்தலாம். அதாவது வெந்தயத்தை ஒரு நாள் முன்பு இரவு ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடவேண்டும். மேலும் மதியம் உணவு சாப்பிடுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பும், இரவு உணவு சாப்பிடுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பும் சாப்பிட வேண்டும். வெந்தயத்தை சாப்பிடும் பொழுது இன்சுலின் சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது.

    துளசி:

    கர்பப்பை நீர்க்கட்டி உள்ள பெண்கள் துளசி இலையை சாப்பிட வேண்டும். நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு ஆன்றோஜென் என்று அழைக்கப்படும் ஆண் ஹார்மோன் அதிகம் சுரக்கும். எட்டு துளசி இலைகளை வெறும் வயிற்றில் தினமும் சாப்பிடுவதால் இந்த துளசி ஆன்றோஜென் ஹார்மோன் அளவையும் இன்சுலின் அளவையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்.

    ஆளி விதைகள்:

    ஆளி விதைகளையும் இந்த கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினைக்கு தீர்வாக சாப்பிடலாம். ஆளி விதைகளில் ஒமேகா சத்துக்கள் உள்ளது. மேலும் புரதச்சத்துக்களும் நிரம்பி உள்ளது. இதனால் இந்த ஆளி விதைகள் உடலில் உள்ள குளுக்கோஸ் பயன்பாட்டிற்கு உதவுகின்றது. ஆளி விதைகளை பொடி செய்து நீரில் கலந்தோ இல்லது பழச்சாறில் கழந்தோ குடிக்கலாம். இதனால் உடல் பருமனும் குறைகின்றது.

    லவங்கப் பட்டை:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் லவங்கப் பட்டையையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். லவங்கப் பட்டையை பொடி செய்து காலையில் குடிக்கும் டீ அல்லது காபியில் சிறிது கலந்து குடிக்கலாம். அல்லது தயிர் அல்லது மோரில் கலந்தும் குடிக்கலாம். லவங்கப் பட்டையும் இன்சுலின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றது. லவங்கப் பட்டையையும் கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினைக்கு தீர்வாக சாப்பிடலாம்.

    பாகற்காய்:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் கசப்பு மிகுந்த பாகற்காயையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பாகற்காயை வாரத்தில் ஐந்து முறை சமைத்து உண்ண வேண்டும். பாகற்காயை சாப்பிடுவதால் இன்சுலின் அளவு கட்டுக்குள் வருகின்றது. இன்சுலின் கட்டுக்குள் இருப்பதால் ஆன்றோஜென் ஹார்மோன் அளவும் கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

    நெல்லிக்காய்:

    கர்பப்பை நீர்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் நெல்லிக்காயை சாப்பிடலாம். நெல்லிக்காய் உடலில் இன்சுலின் அளவு சுர்ப்பதை கட்டுக்குள் வைத்து உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. நெல்லிக்காய் சாற்றை இளஞ்சூடான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் இன்சுலின் அளவு குறைவதோடு உடல் எடையும் குறைகின்றது.

    தேன்:

    கர்பப்பை நீர்ககட்டி பிரச்சினை உள்ள பெண்கள் தேனை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைக்கலாம். உடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைத்தால் கர்பப்பை நீர்க்கட்டிகள் தானாக கரைந்து விடுகின்றது. காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் தேனையும் சிறிதளவு எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து தினமும் குடிக்க வேண்டும். இதனால் உடல் எடை குறையும். உடல் எடை குறைந்தால் கர்பப்பை நீர்க்கட்டி கரைந்து விடும்.

    உளுந்து:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் உளுந்தை தினசரி உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருப்பு உளுந்து சாதத்தை சாப்பிடுவது ஹார்மோன்களை சீராக்கி பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி பிரச்சினையை சரிசெய்ய உதவுகின்றது. மேலும் பூண்டு குழம்பு, எள்ளுத் துவையல் போன்றவற்றை சாப்பிடுவதால் ஹார்மோன்கள் சீராக்கப்பட்டு பிசிஓடி பிரச்சினை சரி செய்யப்படுகின்றது. சூடான சாதத்தில் வெந்தயப் பொடி ஒரு ஸ்பூன் அளவு போட்டு சாப்பிடுவது நல்லது.

    கற்றாழை:

    மாதவிடாய் காலத்தில் வயிறு வலி அதிகம் உள்ள பெண்கள் கற்றாழையில் இருக்கும் ஜெல்லை தொடர்ந்து இரண்டு மாதம் சாப்பிட்டு வந்தால் வயிறு வலி குறைவதோடு கர்பப்பை நீர்கட்டிகள் உருவாமல் தடுக்கப்படுகின்றது.

    சின்ன வெங்காயம்:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் சிறிய வெங்காயத்தை உணவில் அதிகம் சேரத்துக் கொள்ள வேண்டும். தினசரி உணவில் 50 கிராம் அளவு சிறிய வெங்காயத்தை சேரத்துக் கொள்வதால் பிசிஓடி பிரச்சினை சரியாகின்றது.

    கீரை வகைகள்:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் தினமும் ஏதாவதொரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக முருங்கை கீரை, பசலைக் கீரை, அரைக் கீரை இவைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் சமைத்து சாப்பிட வேண்டும். மகப்பேறுக்கு ஏங்கும் பெண்களாக நீங்கள் இருந்தால் மேற்சொன்ன கிரைகளை பசு நெய் மற்றும் பாசிப்பயிறு கலந்து சாப்பிட வேண்டும்.

    முருங்கை :

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினையை குறைக்க முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, முருங்கை விதைகள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முருங்கை பிசின், சாரைப் பருப்பு இவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த உணவுகள்:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் ஓட்ஸ், திணை, முளைக்கீரை போன்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தவிர்க்க வேண்டிய உணவுகள்:

    கர்பப்பை நீர்க்கட்டி பிரச்சினை உள்ள பெண்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகளை சாப்பிடக்கூடாது. உருளைக்கிழங்கு, வெள்ளை சர்க்கரை, அரிசி, பாஸ்தா போன்ற கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது.

    ×