என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி கல்லூரி விடுமுறை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
    • கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதேபோல் காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    • கூடலூர் தாலுகா பாடந்தொரை ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது.
    • பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது.

    நீலகிரி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் நேற்று மாலை 3 மணி முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. கூடலூர் தாலுகா பாடந்தொரை ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொதுமக்கள் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது.

    இதேபோல் ஆற்றுவாய்க்கால் கரையோரம் உள்ள கூட்டுறவு பால் சங்க அலுவலக கட்டிடத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் ஊழியர்கள் தண்ணீருக்குள் இறங்கி நடந்து சென்று பால் கேன்களை சுமந்து சென்றனர். இதேபோல் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் சேதம் அடைந்தன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மழையின் தாக்கம் குறைந்த பின்னர் ஊருக்குள் புகுந்த வெள்ளம் வடிந்தது.

    பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. இதனால் பந்தலூர் பஜாரில் உள்ள சாலை, கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே சாலையில் உள்ள குழிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. கனமழையால் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் பந்தலூர் பஜார், கோழிக்கோடு-கூடலூர் சாலை, தாலுகா அலுவலகம் செல்லும் சாலை, கூவமூலா சாலையை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பந்தலூர் பகுதி வெள்ளக்காடாக மாறியது.

    இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

    • தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • திருவாரூர் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் இன்றி இருண்ட நிலை நிலவியது.

    திருவாரூர்:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நேற்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    திருவாரூர் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் இன்றி இருண்ட நிலை நிலவியது. அவ்வப்போது தூறல் மழை பெய்து வந்தது. நேற்று மாலை முதல் அங்கு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் திருவாரூரில் பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    • பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • இன்று, நாளையும் 2 நாட்கள் மலைரெயில் ரத்து.

    ஊட்டி:

    வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல், தமிழகத்தை நெருங்கி வந்து, புதுச்சேரியில் கரையை கடந்தது.

    புயல் தாக்கம் காரணமாக மலை மாவட்டமான நீலகிரியிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    நேற்று காலை முதல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது.

    நேற்று மாலை ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இந்த மழையால் ஊட்டி நகரில் உள்ள பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய, கனமழை பெய்தது. இன்று காலையும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. தொடர்ந்து பெய்த பலத்த மழைக்கு, ஊட்டியில் ரெயில்வே போலீஸ் நிலைய வளாகத்துக்குள் மழைநீர் புகுந்தது.

    இதேபோல் ஊட்டி பஸ் நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள ரெயில்வே பாதையிலும் மழைநீர் அதிகமாக தேங்கியது. பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தார்கள்.

    ரெயில்வே பாதையில் தண்ணீர் தேங்கியதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்தபடியே சென்றன. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மழையால் காலையில் வேலைக்கு செல்வோர் குடைபிடித்தபடியும், ஜர்க்கின் அணிந்தபடியும் பயணித்தனர்.

    ஊட்டி மட்டுமின்றி மாவட்டத்தின் பிற பகுதிகளான குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் என மாவட்டம் முழுவதுமே பலத்த மழை பெய்தது. காலையிலும் மழை வெளுத்து வாங்கியது.

    மழையுடன் கடும் பனிமூட்டம் மற்றும் குளிரும் நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது முற்றிலும் பாதிக்கப்பட்டது. மலைப்பாதையில் பயணிப்போர் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்து இயற்கை காட்சிகளையும், மலர்களையும் கண்டு ரசித்தனர்.

    நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட 3 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கூடலூர் பஜார் மற்றும் கொடநாடு பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    கூடலூர் பஜார்-73, கொடநாடு-71, கிளைன்மார்கன்-59, அப்பர் கூடலூர்-52, ஊட்டி-40, தேவாலா-39, பார்வுட்-35, கீழ்கோத்தகிரி-33, கேத்தி-32, செருமுள்ளி, வுட் பெரியார் எஸ்டேட்-30, கோத்தகிரி-27.

    இதற்கிடையே நீலகிரியில் பெய்து வரும் மழை காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம், ஊட்டி-குன்னூர், குன்னூர்-ஊட்டி இடையே இன்று, நாளையும் என 2 நாட்கள் மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மறுசீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவடையாததால் நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #Gaja
    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால் நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்ற கலெக்டர் அறிவித்துள்ளார்.

    மேலும் பள்ளிகள் இருக்கும் இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடையாமல் இருந்தால், அந்தந்த பள்ளி நிர்வாகம் விடுமுறை விடலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    ×