என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய் ஹசாரே டிராபி"

    • முதலில் ஆடிய அரியானா அணி 50 ஓவரில் 293 ரன்கள் எடுத்தது.
    • தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ராஜ்கோட்:

    விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    இந்நிலையில், இன்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் மோதின. டாஸ் வென்ற அரியானா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியின் ஹிமான்ஷு ராணா சதமடித்து அசத்தினார்.

    தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடாமல் அவுட்டாகினர்.

    பாபா இந்திரஜித் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார். தினேஷ கார்த்திக் 31 ரன்னும், ஜெகதீசன் 30 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், தமிழக அணி ரன்களுக்கு 230 ஆல் அவுட்டானது. இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    அரியானா சார்பில் அன்ஷுல் கம்போஜ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    நாளை நடைபெறும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் மோத உள்ளன.

    • முதல் அரையிறுதியில் தமிழக அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ராஜ்கோட்:

    விஜய் ஹசாரே டிராபிக்கான கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டிகளின் முடிவில் தமிழ்நாடு, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

    முதலாவது அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு, அரியானா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் அடித்தது. தமிழக அணி சார்பில் நடராஜன் 3 விக்கெட்டும், சாய் கிஷோர், வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய தமிழக அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் அரியானா வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்த போட்டியில் பாபா இந்திரஜித் மட்டும் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 64 ரன்னில் வெளியேறினார். இவர் இந்த போட்டியில் காயத்துடன் விளையாடியுள்ளார். கழிவறையில் தவறி விழுந்ததால் அவரது உதட்டில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வாயில் பிளாஸ்திரி போட்டு விளையாடினார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • இந்த அணியில் சாய் சுதர்சன் இடம் பெறவில்லை.

    இந்தியாவில் தற்போது உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து 2024 - 25-க்கான விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 21-ம் தேதி முதல் அடுத்த மாதம் 18ம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த தொடருக்கான தமிழக அணி குரூப் டி-யில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சாய் கிஷோர் கேப்டனாகவும், ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த அணியில் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சாய் சுதர்சன் இடம் பெறவில்லை. இந்த அணியில் ஷாரூக் கான், பாபா இந்திரஜித், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    தமிழக அணி விவரம்; சாய் கிஷோர் (கேப்டன்), ஜெகதீசன் என் (துணை கேப்டன்), பாபா இந்திரஜித், ஆண்ட்ரே சித்தார்த், பூபதி வைஷ்ணா குமார், துஷார் ரஹேஜா, ஷாரூக் கான், முகமது அலி, சந்தீப் வாரியர், தீபேஷ், அச்யுத், பிரணவ் ராகவேந்திரா, அஜித் ராம், வருண் சக்கரவர்த்தி, விஜய் ஷங்கர், பிரதோஷ் ரஞ்சன் பால்.

    • விஜய் ஹசாரே கோப்பைக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டது.
    • இந்த அணியில் இந்திய வீரர் ரகானே, ப்ரித்விஷா ஆகியோர் இடம் பெறவில்லை.

    விஜய் ஹசாரே கோப்பை வரும் 21-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 37 அணிகள் பங்கேற்கின்றனர். இந்த தொடருக்கான தமிழக அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் இந்த தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் 3 போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட அணியில் இந்திய வீரர் ரகானே, ப்ரித்விஷா ஆகியோர் இடம் பெறவில்லை.

    இந்நிலையில் அணியில் இடம் கிடைக்காதது குறித்து பிரித்வி ஷா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     அதில், நான் இன்னும் என்ன எல்லாம் பார்க்க வேண்டும். நீங்களே சொல்லுங்கள் கடவுளே. 65 போட்டிகளில் விளையாடி 3399 ரன்கள் எடுத்துள்ளேன். ஸ்ட்ரைக் ரேட் 126, சராசரி 55.7 வைத்துள்ளேன். இது போதுமானதாக இல்லை. ஆனாலும் என் மேல் நம்பிக்கையை வைத்திருப்பேன். மக்கள் இன்னும் என்னை நம்புவார்கள் என்று நம்புகிறேன். காரணம் நான் நிச்சயமாக திரும்பி வருவேன்.. ஓம் சாய் ராம் என கூறியுள்ளார்.

    • உத்தர பிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • உ.பி. அணி தனது முதல் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் மோதுகிறது.

    லக்னோ:

    கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிக்கட்டத்தில் ரிங்கு சிங் 5 சிக்சர்கள் அடித்ததன் மூலம் உலக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். அந்த அதிரடி ஆட்டமே அவருக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க சிறந்த வழியாக அமைந்தது.

    இந்நிலையில், உத்தர பிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, ரிங்கு சிங் கூறியதாவது:

    புதிய ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி கேப்டன் பதவி குறித்து அதிகம் சிந்திக்கவில்லை.

    2015 மற்றும் 16ஆம் ஆண்டில் கோப்பையை வென்ற தமது உத்தரப்பிரதேச அணி மீண்டும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே நோக்கம்.

    நான் யூபி டி20 லீக்கில் பந்து வீச முயற்சித்தேன். இன்றைய கிரிக்கெட் தொடர் ஒரு முழு பேக்கேஜை தான் விரும்புகிறது. பேட்டிங் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் செய்யக்கூடிய வீரராக இருப்பது முக்கியம்.

    எனவே நான் தற்போது பந்துவீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். கேப்டனாக எனக்கு இப்போது ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. இதற்கு நான் தயாராக இருப்பது அவசியம்.

    நான் கடவுளை எப்போதும் நம்புகிறேன். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 5 சிக்சர்கள் அடித்த பிறகு இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. அதுவே என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமாக அமைந்தது.

    இப்போதும் கடவுள் எனக்காக ஏதாவது செய்வார் என்று உணர்கிறேன். ஆனால் அதற்காக நான் கடினமாக உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச அணி இன்று தனது முதல் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணியுடன் மோதுகிறது.

    • லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த இந்தியர் ஆனார் பஞ்சாப்பின் அன்மோல்பிரீத் சிங்.
    • பரோடா அணிக்காக 40 பந்தில் சதமடித்த யூசுப் பதான் சாதனையை முறியடித்தார்.

    அகமதாபாத்:

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூர், மும்பை, அகமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெறும்.

    இந்நிலையில், அகமதாபாத்தில் நேற்று நடந்த போட்டியில் சி பிரிவில் இடம்பெற்ற பஞ்சாப், அருணாச்சல பிரதேசம் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி 48.4 ஓவரில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் அன்மோல்பிரீத் சிங் அதிரடியாக ஆடினார். சிக்சர், பவுண்டரி மழை பொழிந்தார். இவர் 35 பந்தில் சதமடித்து, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்தியர் ஆனார்.

    இறுதியில், பஞ்சாப் அணி 12.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்து 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. பிரப்சிம்ரன் (35), அன்மோல்பிரீத் (115 ரன்) அவுட்டாகாமல் இருந்தனர்.

    இதன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார் அன்மோல்பிரீத். பரோடா அணிக்காக 40 பந்தில் சதமடித்த யூசுப் பதான் சாதனையை முறியடித்தார்.

    சர்வதேச அளவில் அன்மோல்பீரீத் சிங் மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடத்தில் தெற்கு ஆஸ்திரேலியாவின் மெக்குர்க் (29 பந்து), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (31 பந்து) உள்ளனர்.

    ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ள அன்மோல்பிரீத் சிங், நடப்பு ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக அணி 383 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
    • அந்த அணியின் கிருஷ்ணன் ஸ்ரீஜித் 150 ரன்கள் குவித்தார்.

    அகமதாபாத்:

    விஜய் ஹசாரா கோப்பை ஒருநாள் தொடர் (50 ஓவர்) நேற்று தொடங்கியது. ஜெய்ப்பூர், மும்பை, அகமதாபாத், ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டி ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெறும்.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான கர்நாடகாவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற கர்நாடகா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் சதத்தின் உதவியுடன் 382 ரன்கள் குவித்தது. ஆயுஷ் மத்ரே (78 ரன்), ஹர்திக் தாமோர் (84 ரன்), ஷிவம் துபே (63 ரன்) ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.

    இதையடுத்து, 383 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி கர்நாடக அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களான நிகின் ஜோஸ் 21 ரன்னும், மயங்க் அகர்வால் 47 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    அதன்பின், கர்நாடக அணி வீரர்கள் அதிரடியில் மிரட்டினர். அனீஷ் 82 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், கர்நாடக அணி 46.2 ஒவரில் 3 விக்கெட்டுக்கு 383 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கிருஷ்ணன் ஸ்ரீஜித் 150 ரன்களுடனும், பிரவீன் துபே 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • விஜய் ஹசாரே தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை மற்றும் நாகலாந்து அணிகள் மோதின.
    • இதில் மும்பை அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    விஜய் ஹசாரே தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சி பிரிவில் மும்பை மற்றும் நாகலாந்து அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற நாகலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி 50 ஓவர் முடிவில் 403 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மத்ரே 117 பந்தில் 181 ரன்கள் குவித்தார். நாகலாந்து தரப்பில் டிப் போரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய நாகலாந்து அணி 50 ஓவரில் 214 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜெகதீஷா சுசித் 104 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் மும்பை அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த போட்டியில் 117 பந்தில் 181 ரன்கள் குவித்த மும்பை அணி வீரர் ஆயுஷ் மத்ரே புதிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி லிஸ்ட் ஏ தொடரில் இளம் வயதில் 150 ரன்கள் மேல் குவித்த வீரரான ஜெய்ஸ்வாலின் உலக சாதனையை ஆயுஷ் மத்ரே முறியடித்துள்ளார்.

    ஜெய்ஸ்வால் 17 ஆண்டு 291 நாட்களில் இந்த சாதனையை படைத்தார். மத்ரே 17 ஆண்டுகள் 168 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். 2019-ம் ஆண்டில் இந்த சாதனையை ஜெய்ஸ்வால் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விதர்பா அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • விதர்பா சார்பில் அதிகபட்சமாக கருண் நாயர் 111 ரன்கள் எடுத்தார்.

    விசாகப்பட்டினம்:

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழகம், விதர்பா அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 48.4 ஓவரில் 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. துஷார் ரஹேஷா 75 ரன்கள் எடுத்தார். முகமது அலி 48 ரன்னும், சித்தார்த் 40 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா சார்பில் தர்ஷன் நல்கண்டே 6 விக்கெட்டும், ஹர்ஷ் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. அந்த அணியின் கருண் நாயர் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    இறுதியில், விதர்பா அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கருண் நாயர் 111 ரன்னும், ஷுபம் துபே ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • இந்த ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் 3-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
    • இந்த தொடரில் கடைசி நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

    விசாகப்பட்டினம்:

    இந்தியாவில் லிஸ்ட் ஏ தொடரான விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கருண் நாயர் தலைமையிலான விதர்பா அணியும் ரிங்கு சிங் தலைமையிலான உத்தர பிரதேசம் அணியும் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த உத்தர பிரதேசம் அணி 50 ஓவர் முடிவில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஸ்வி 105 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து விளையாடிய விதர்பா அணி 47.2 ஓவரில் 313 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விதர்பா அணியில் அதிக பட்சமாக யாஷ் ரத்தோட் 138 ரன்களும் கருண் நாயர் 112 ரன்களும் எடுத்தனர்.

    கருண் நாயர் இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்த தொடரில் இது அவரது 3-வது சதம் ஆகும். இதன் மூலம் இந்த ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் மயங்க் யாதவ் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரோடு மூன்று சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இவர் இணைந்துள்ளார்.

    ஆனால், அவர் இந்த தொடரில் கடைசி நான்கு போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். 5-வது போட்டியில் தான் ஆட்டமிழந்து இருக்கிறார். இந்த தொடரில் முதல் முறையாக விக்கெட் இழக்கும் வரை அவர் மொத்தமாக 542 ரன்கள் சேர்த்து இருக்கிறார்.

    லிஸ்ட் ஏ போட்டிகளில் தொடர்ந்து ஆட்டம் இழக்காமல் இருந்து அதிக ரன்களை குவித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை கருண் நாயர் படைத்துள்ளார்.

    லிஸ்ட் ஏ வரலாற்றில் இதற்கு முன் ஆட்டம் இழக்காமல் 527 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. நியூசிலாந்தின் ஜேம்ஸ் ஃபிராங்கிளின் 2010-ம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். 14 ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை கருண் நாயர் முறியடித்து இருக்கிறார். அவர் அடுத்து ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மிசோரம் அணி 21.2 ஓவரில் 71 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • தமிழ்நாட்டின் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    விஜயநகரம்:

    விஜய் ஹசாரே தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் விஜயநகரத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழகம், மிசோரம் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த மிசோரம் வீரர்கள் தமிழகத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

    இதனால் மிசோரம் 21.2 ஓவரில் 71 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தமிழகம் சார்பில் அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 9 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். விஜய் சங்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 72 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெகதீசன் மற்றும் துஷார் ரஹாஜே ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், தமிழகம் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெகதீசன் 46 ரன்னும், துஷார் ரஹாஜே 27 ரன்னும் எடுத்தனர்.

    தமிழகம் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 5ம் தேதி சத்தீஸ்கர் அணியுடன் மோதுகிறது.

    • முதலில் பேட் செய்த தமிழகம் 50 ஓவரில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தமிழகம் சார்பில் இந்திரஜித் 75 ரன்னும், விஜய் சங்கர் 71 ரன்னும் எடுத்தனர்.

    விஜயநகரம்:

    விஜய் ஹசாரே டிராபி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் விஜயநகரத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழகம், சத்தீஸ்கர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சத்தீஸ்கர் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 50 ஓவரில் 301 ரன்கள் குவித்தது. இந்திரஜித் 75 ரன்னும், விஜய் சங்கர் 71 ரன்னும் எடுத்தனர்.

    சத்தீஸ்கர் சார்பில் ஹர்ஷ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 302 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சத்தீஸ்கர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் பொறுமையுடன் ஆடினர்.

    முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்திருந்தபோது அசுதோஷ் சிங் 71 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சன்சஞ்சீத் தேசாய் 2 ரன்னும், அமந்தீப் கரே 4 ரன்னும், பிரதீக் யாதவ் ரன் எடுக்காமலும் அவுட்டாகினர். நிதானமாக ஆடிய பூபன் லால்வானி அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட் ஆனார்.

    இறுதியில், சத்தீஸ்கர் அணி 46 ஓவரில் 228 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் தமிழகம் 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தமிழகம் சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் தமிழகம் 6 லீக் ஆட்டங்களில் (4 வெற்றி, 1 தோல்வி, 1 முடிவில்லை) 18 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2வது அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

    ×