என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநெல்வேலி மாவட்டம்"

    • நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
    • தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

    இதன் எதிரொலியால், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது.

    தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, திருநெல்வேலி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1077, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1070, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி- 101 & 112, மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம்- 9498794987, மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு- 104, அவசர மருத்துவ உதவிக்கு- 108.

    • தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் இருக்கும்படி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • கனமழை காரணமாக தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானங்கள் மதுரையில் தரையிறங்கின.

    நெல்லை:

    தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது.

    இதற்கிடையே, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழையால் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அத்தியாவசிய தேவையான குடிநீர், ஓரிரு நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மெழுகுவர்த்தி, டார்ச் லைட், செல்போன் பவர் பேங்க், கொசுவர்த்தி உள்ளிட்டவை கையிருப்பு இருக்க வேண்டும். ஒரு சில இடங்களில் மின் சப்ளை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குடிநீர் சப்ளை மற்றும் போர் மோட்டார் இயக்கத்தில் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே எங்கெங்கு வாய்ப்புள்ளதோ அந்த ஊர்களில் எல்லாம் குடிநீர் டேங்க், சின்டெக்ஸ் டேங்க் உள்ளிட்டவற்றை இன்றே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 25 பேர் கொண்ட 4 தேசிய பேரிடர் மீட்புப்படை குழு வருகை தர உள்ளது.

    இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் தொடரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முன்னெச்சரிக்கையாக குத்தாரபஞ்சன் அருவி, கன்னியாமாரன், ஓடைக்கு செல்ல வனத்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் மாலையில் 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளது.

    கனமழை காரணமாக தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானங்கள் மதுரையில் தரையிறங்கின.

    • தொடர் மழையால் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • தூத்துக்குடி செல்ல வேண்டிய 2 விமானங்கள் மதுரையில் தரையிறங்கியது.

    நெல்லை:

    தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியது.

    இதற்கிடையே, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழையால் அணைகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடி செல்ல வேண்டிய 2 விமானங்கள் மதுரையில் தரையிறங்கியது. அதேபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 3.45 மணிக்கு செல்லும் விமானம் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.

    • கன்னியாகுமரி, நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • கனமழை எச்சரிக்கையால் 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    நெல்லை:

    தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

    தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

    • தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் வேறு மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
    • ரெயில் நிலையத்தில் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நேற்று முதல் பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் ரெயில்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் காலை 2.40 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வரும். அந்த ரெயில் இன்று காலை 3 மணிக்கு திண்டுக்கல் வந்தடைந்தது. ஆனால் 2 மணி நேரம் தாமதமாக 4.58 மணிக்குதான் திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது.

    இதே போல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 2.17 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வரும் அந்த ரெயில் 5.55 மணிக்கு வந்தது. சுமார் 3 மணி நேரம் தாமதமாக 9 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு சென்றது.

    மதுரை வழித்தடத்தில் ரெயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளதால் பெரும்பாலான ரெயில்கள் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சிக்னல் கோளாறு மற்றும் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் வேறு மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி திண்டுக்கல்லில் இருந்து மதுரை வழியாக நெல்லை, நாகர்கோவில் செல்லும் ரெயில்கள் திண்டுக்கல்லில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்டது. இதே போல் மும்பையில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயிலும் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக சென்றது. இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

    • பெங்களூர் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • வானிலை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும்.

    தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாததால் விமான சேவை இன்று 3-வது நாளாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை,பெங்களூரில் இருந்து தூத்துக்குடி வரும் விமானங்களும், இதேபோல் தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூர் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வானிலை சீரானதும் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • சில இடங்களில் ஆய்வு செய்து அதனை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
    • தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் திரளானோர் உடன் இருந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெருமழை தொடங்கி நேற்று வரை பெய்தது. வரலாறு காணாத இந்த மழையினால் மாவட்டத்தில் உள்ள மக்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பேய்மழை தொடங்கியதில் இருந்தே மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழக நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு நெல்லையில் முகாமிட்டு வெள்ளத்தின் நிலவரத்தை கண்காணித்து வந்தார். அவருடன் நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் ஆவுடையப்பன், மைதீன்கான் ஆகியோரும், நிர்வாகிகளும் இருந்து வெள்ளத்தை பார்வையிட்டனர்.

    மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக சென்று பார்வையிட்டு வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை மீட்டு பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


    தற்போதும் இன்று காலை முதலே வெள்ளம் வடியாமல் உள்ள சில இடங்களில் ஆய்வு செய்து அதனை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில் அவர் பாளை வ.உ.சி. மைதானத்தில் தங்கி உள்ள மீனவ பெருமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். மாநகர பகுதியில் வெள்ளத்தில் தத்தளித்த மக்களை படகு மூலமாக தான் மீட்க முடியும் என்ற நிலை வந்ததும், மக்களை மீட்பதற்காக உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்புளி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சின்னமுட்டம், தூத்தூர் ஆகிய மீனவ கிராமங்களில் இருந்து 72 பைபர் படகுகளுடன் சுமார் 400 மீனவர்கள் அங்கு வந்ததற்கு நன்றி கூறினார்.

    மேலும் தங்களது உயிரினை துச்சமாக கருதி மீட்பு பணியில் ஈடுபட்டு சந்திப்பு, கொக்கி ரகுளம், சிந்துபூந்துறை, சி.என்.கிராமம், குறுக்குத்துறை, நொச்சிக்குளம், முன்னீர்பள்ளம், சேரன்மகா தேவி, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் வெளியேற முடியாமல் வீடுகளில் மேல் தளங்களில் தஞ்சம் அடைந்திருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்டதற்கு நன்றி கூறினார். அப்போது நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் திரளானோர் உடன் இருந்தனர்.

    • வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.
    • சுவர் மற்றும் தரை கற்களும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

    தென்காசி:

    கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்திருக்கும் குற்றால அருவிகளில் நேற்று முன்தினம் முதல் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று முழுவதும் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு முதல் மழையின் தாக்கம் குறைந்ததால் தற்போது குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.

    மெயின் அருவி பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கினால் மெயின் அருவி மேல் பகுதியில் இருந்து மரத்துண்டுகள், பாறைகள் மற்றும் மண் அடித்து வரப்பட்டுள்ளது. மேலும் அருவி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சுவர் மற்றும் தரை கற்களும் சேதம் அடைந்து காணப்படுகிறது.

    வெள்ளப்பெருக்கு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளதால் முற்றிலும் குறைந்த பின்னர் அருவிப்பகுதி சுத்தம் செய்யப்பட்டு பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

    • தேவையான உதவிகளையும் அரசு செய்து தரவேண்டும்.
    • போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென்மாவட்ட வரலாற்றில் பதிவு செய்யப்படாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவாக காட்சியளிப்பதோடு எங்கும் போய்வர முடியாத அளவிற்கு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆற்று போக்கு இல்லாத இடங்களில் உள்ள சத்துணவு மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், பள்ளிகளில் பொதுமக்களை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, உடை, போர்வைகள் போன்றவைகளை வழங்குவதோடு அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு செய்து தரவேண்டும்.

    மேலும் வீடுகளிலிருந்து வெளியே வரமுடியாமல் துண்டிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான பால், குடித்தண்ணீர், ரொட்டி, பெட்ஷீட், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் அரசு போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். வெள்ளப்பகுதிகளில் அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு என்.ஆர்.தனபாலன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    • நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும்.
    • மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா செயல்படுவார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

    கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கும், திருநெல்வேலி மாவட்டத்திற்கும் உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக சிறப்பு அலுவலர்களை நியமிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி தூத்துக்குடி மாவட்டத்திற்கு செந்தில்ராஜ் ஒருங்கிணைப்பு அலுவலராக தூத்துக்குடியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண். 7397770020. பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் மையமாக தூத்துக்குடியில் உள்ள உள் விளையாட்டரங்கம் செயல்படும்.

    தூத்துக்குடியில் உள்ள இந்தக் கட்டுப்பாட்டு அறை பொறுப்பு அலுவலர்கள் பின்வருமாறு:-

    1. ஐஸ்வர்யா இஆப கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தூத்துக்குடி, தொலைபேசி எண். 8973743830.

    2. ராஜாராம், துணை ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி தொலைபேசி எண். 9943744803 3. அமுதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக தூத்துக்குடி, தொலைபேசி எண். 9445008155 உதவியாளர் (பொது).

    இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை திருநெல்வேலி மாவட்ட நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைக்க அவரது பெயர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், இ.ஆ.ப தொலைபேசி எண். 9442218000.

    அங்கு கூடுதலாக பின்வரும் அலுவலர்கள் இப்பணியினை ஒருங்கிணைப்பார்கள்.

    1. கிஷன் குமார். இஆப உதவி ஆட்சியர் (பயிற்சி), திருநெல்வேலி தொலைபேசி எண் 9123575120 2. ரேவதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி. தொலைபேசி எண் 9940440659. இப்பணிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா செயல்படுவார்.

    • கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.
    • சென்னைக்கு ஆம்பி பஸ் சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    தென் மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு கடந்த 2 நாட்களாக ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.

    சென்னையில் இருந்து கடந்த 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்ற ஆம்னி பஸ்கள் இன்னும் சென்றடையவில்லை.

    தென்திருப்பேரியில் 24 பஸ்கள் சிக்கி கொண்டதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து அதில் உள்ள பயணிகளை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம், நாசரேத், திருச்செந்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஆம்னி பஸ்கள் இயக்க முடியவில்லை.

    மேலும் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட 50 ஆம்னி பஸ்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. கடந்த 17-ந்தேதி புறப்பட்ட பஸ்கள் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன.

    அந்த பஸ்களை இதுவரையில் வெளியே எடுக்க முடியவில்லை. பஸ்சின் பாதி அளவிற்கு வெள்ளம் புகுந்ததால் சேதம் அடைந்துள்ளன.

    இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. தண்ணீர் வடியாததால் 2 நாட்களாக மீட்க முடியவில்லை. இன்று தான் அவற்றை வெளியே எடுக்க வேண்டும். தற்போது மழை நின்று வெள்ளம் வடிந்து வருவதால் சிக்கிய பஸ்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியில் இருந்து 3 நாட்களாக சென்னைக்கு ஆம்பி பஸ் சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

    சென்னையில் இருந்து புறப்படடு செல்லக்கூடிய ஆம்னி பஸ்கள் தூத்துக்குடி சுங்கசாவடி வரை தற்போது இயக்கப்படுகிறது. திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கு சேவை சீராகி விட்டது. வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    வரலாறு காணாத மழை வெள்ளத்தால் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டு உள்ளது. மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, திருச்செந்தூரில் இருந்து இன்னும் ஆம்னி பஸ் சேவை முழுமையாக தொடங்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல கிராமங்கள் மீட்பு குழுவினரின் கவனத்திற்கு வரவில்லை.
    • நெல்லை கலெக்டருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டும், நன்றியும் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார்.

    பெரு மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவுகளாக மாறி உள்ளன. இன்னும் பல கிராமங்கள் மீட்பு குழுவினரின் கவனத்திற்கு வரவில்லை. இந்த நிலையில் உமரி காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் மூன்று நாட்களாக தங்கள் கிராமத்தினர் வெளியேற முடியாமலும் யாரும் உதவிக்கு வராமலும் தவித்துக் கொண்டிருப்பதாக தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    அதை பார்த்ததும் நேற்று நள்ளிரவில் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு தகவல் அனுப்பியுள்ளார். கலெக்டரும் அதை பார்த்துவிட்டு உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக பதில் தெரிவித்துள்ளார். நள்ளிரவிலும் தூங்காமல் பணியாற்றிய நெல்லை கலெக்டருக்கு கவர்னர் தமிழிசை பாராட்டும், நன்றியும் தெரிவித்து தகவல் அனுப்பியுள்ளார்.

    ×