search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஐடி பல்கலைக்கழகம்"

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது.
    • ராணுவ மீட்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள அனைவரையும் கவலையடைய செய்திருக்கிறது. அங்கு மீட்பு பணி இன்று 8-வது நாளாக தொடர்ந்து வருகிறது.

    பலி எண்ணிக்கை 400-ஐ நெருங்கியயுள்ளது. மேலும், 200-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

    மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து வருகிறார்கள்.

    இதற்கிடையே நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உதவும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயனைச் சந்தித்து வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் வேந்தர் ஜி.விசுவநாதன் ரூ.1 கோடிக்கான வரைவோலை வழங்கினார்.

    அப்போது வி.ஐ.டி. துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், டாக்டர்.ஜி.வி.செல்வம், உதவி துணைத்தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • உயர்கல்விக்கு அரசு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும்.
    • உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியா, 3-வது இடத்தை நோக்கி முன்னேறுகிறது.

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 39-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், இளநிலை, முதுநிலை மாணவர்கள் 8,205 பேர் பட்டமும், 357 பேர் முனைவர் பட்டமும், சிறப்பிடம் பிடித்த 65 பேர் தங்கப் பதக்கமும் பெற்றனர்.

    விழாவுக்கு தலைமை தாங்கி பல்கலைகழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:-

    நாட்டில் 10 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வி பெறுகின்றனர். தேசிய கல்விக் கொள்கை உயர்கல்வி விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தெரிவிக்கிறது. இது சாத்தியமாக வேண்டுமெனில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்டும். ஆனால், அதிகபட்சம் 3 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதனால், கல்விச் சுமையை பெற்றோரே ஏற்க வேண்டியுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.


    கவுரவ விருந்தினராக பங்கேற்ற டொயோட்டோ இந்தியா நிறுவனத்தின் முதுநிலை செயல் அதிகாரி டி.ஆர்.பரசுராமன் பேசுகையில்:-

    உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியா, 3-வது இடத்தை நோக்கி முன்னேறுகிறது. மேலும், இளம் தலைமுறையினர் அதிகமுள்ள நாடாகவும் இந்தியா திகழ்கிறது. ஏற்றுமதி வாய்ப்புகள் அடுத்த 10 ஆண்டுகளில் 29 முதல் 30 சதவீதமாக உயரும்.

    சிறு, குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 6.8 கோடியிலிருந்து 14 கோடியாக மாற வாய்ப்பு உள்ளது. சைபர் செக்யூரிட்டி, ரோபாடிக்ஸ், ஆட்டோமேஷன், டிரோன்கள், 3-டி பிரிண்டிங், சாட் ஜி.பி.டி., ப்ளாக் செயின் உள்ளிட்ட 15 துறைகளில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்றார்.


    தேசியக் கல்வித் தொழில்நுட்பமன்றம் மற்றும் தேசிய அங்கீகார வாரியத் தலைவர் அனில் டி.சஹஸ்ரபுதே மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி பேசியதாவது:-

    உயர்கல்விக்கு அரசு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும். அதேநேரத்தில், தனியார் நிறுவனங்களும் பங்களிக்க வேண்டும். உயர் கல்வி விகிதத்தை அதிகரிக்க, அரசுடன் தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் கல்வியுடன், தனித்திறன்கள் மற்றும் நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    உயர்கல்வி படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் மீதே ஆர்வம் கொண்டுள்ளனர். சிவில், ஆட்டோ மொபைல், மெக்கானிக்கல் துறை களிலும் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

    நாட்டில் 2014-ல் 400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1.50 லட்சமாக உயர்ந்துள்ளது. சுய தொழில் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதுடன், பலருக்கும் வேலை வாய்ப்பு அளிக்க முடியும். எனவே, மாணவர்கள் சுயதொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவ நாதன், துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • பி.டெக்கில் சேருவதற்கான சேர்க்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
    • ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஊக்குவிக்கிறது.

    வேலூர்:

    விஐடி பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பி.டெக் பட்டப் படிப்பில் சேருவதற்கான சேர்க்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    இந்தியாவில் 125 நகரங்களிலும் மற்றும் துபாய், மஸ்கட், கத்தார், குவைத், சிங்கப்பூர், கோலாலம்பூரிலும். இந்த நுழைவுத் தேர்வு கணினி முறையில் நடைப்பெற்றது.

    மாணவர்கள் சேர்க்கை முடிவுகளை https://ugresults.vit.ac.in/viteee" , "www.vit.ac.in."என்ற இணையதளம் வழியாக தெரிந்துகொள்ளலாம். விஐடி மாணவர்களை ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்க ஊக்குவிக்கிறது மற்றும் சேர்க்கை உறுதி செய்ய அதிகபட்ச வாய்ப்புகளை வழங்குகிறது.

    விஐடியின் நுழைவுத் தேர்வில் முதல் இடத்தை அரியானாவை சேர்ந்த ரூபிந்தர் சிங், 2-ம் இடத்தை ராஜஸ்தானை சேர்ந்த் பானு மகேஷ் செக்குரி, 3-ம் இடத்தை ஆந்திராவை சேர்ந்த வேதாந்த் , 4-ம் இடத்தை அசாமை சேர்ந்த ஆயுசி பெய்த், 5-ம் இடத்தை உத்திரபிரதேசத்தை சேர்ந்த சன்வி சிங்க், 6-ம் இடத்தை மகாராஷ்ட்டிராவை சேர்ந்த அபிராஜ் ராம்காந்த் யாதவ், 7-ம் இடத்தை உத்திரகாண்டை சேர்ந்த சைதன்யா ரமேஷ் போஷ்ரே, 8-ம் இடத்தை உத்திரபிரதேசத்தை சேர்ந்த விக்கி குமார் சிங், 9-ம் இடத்தை இமாச்சல பிரதேசத்ததை சேர்ந்த சோகன் ஹஸ்ரா, 10-ம் இடத்தை பீகாரை சேர்ந்த சாகில் பிடித்தார்.

    விஐடியின் நுழைவுத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ரேங்க் 1 லட்சம் வரை எடுத்த மாணவ, மாணவிகள் விஐடி வேலூர், சென்னை, ஆந்திர பிரதேசம், போபால் ஆகிய 4 வளாங்களில் மாணவ, மாணவிகள் தங்களுக்கான பாடப் பிரிவுகளை தேர்வு (ரேங்க் அடிப்படையில்) செய்து கொள்ளலாம்.

    முதல் கட்ட கலந்தாய்வு (07-5-2024- 10-05-2024) ரேங்க் 1 முதல் 20,000 வரை , இரண்டாம் கட்ட கலந்தாய்வு ( 18-5-2024-21-5-2024 ) ரேங்க் 20,001 முதல் 45,000, மூன்றாம் கட்ட கலந்தாய்வு (29-5-2024-01-6-2024) ரேங்க் 45,001 முதல் 70,000, நான்காம் கட்ட கலந்தாய்வு ( 09-6-2024-12-6- 2024 ) ரேங்க் 70,001 முதல் 1,00,000 நடைபெறும்.

    ரேங்க் 1 லட்சத்துக்கு மேல் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு விஐடி ஆந்திரபிரதேசம் மற்றும் விஐடி போபாலில் மட்டுமே இடம் கிடைக்கும் . இவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு (20-06-2024 மற்றும் 23-06-2024) ஆகியஇரண்டு நாட்கள் நடைபெறும். மாணவ, மாணவியர்களுக்கான வகுப்புகள் ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்கும்.

    ஜிவி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு கல்வி உதவி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் ஜிவி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விஐடி நுழைவுத்தேர்வில் 1 முதல் 10 ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு பி.டெக் படிப்பு பயிலும் 4 ஆண்டுகள் முழுவதும் 100 சதவீத படிப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    அத்துடன் விஐடி நுழைவுத்தேர்வில் 11 முதல் 50 ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு75 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 51 முதல் 100 ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 50 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 101 முதல் 500 ரேங்குக்குள் தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 25 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 4 ஆண்டுகள் முழுவதும் வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமபுற பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய குடும்பத்தின் மாணவ, மாணவியரும் விஐடி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளியில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு 100 சதவீத படிப்பு கட்டண சலுகையுடன் அவர்களுக்கு உணவு மற்றும் விடுதி வசதியுடன் விஐடி பல்கலைக்கழகத்தில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

    3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகள், 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகள் பி.எஸ்.சி., அக்ரி, பி.ஆர்ச்., பி.டி.இ.எஸ்., மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வி.ஐ.டி. இணையதளம் www.vit.ac.in வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    • டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.
    • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 900-க்கும் அதிகமான சமூகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

    வேலூர்:

    வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான சமூகவியல் மாநாடு தொடங்கியது. மாநாட்டுக்கு வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளாக மிகை உலகமயமாக்கலின் விளைவுகளாக அதிக துருவ முனைப்பு, அரசியலின் சீரழிவு போன்றவை பார்க்கப்படுகிறது. இந்த சீரழிவு, பிளவு சில அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் வெற்றி பெற உதவியிருக்கலாம்.

    உக்ரைன், காசா போன்ற ஆயுத மோதல்களால் தொலைந்து கொண்டிருக்கும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதில் ஐ.நா. போன்ற பெரியநிறுவனங்கள் சிதைவதற்கும் அரசியல்வாதிகளால் வழி வகுத்துள்ளது.

    இத்தகைய சூழ்நிலையில், புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், அதிகரித்து வரும் சமத்துவமின்மை, துருவ முனைப்பு போன்ற சவால்களுக்கு சமத்துவமான சமுதாயத்தை உறுதி செய்வதற்கு சமூகவியலாளர்கள் தீர்வு காண வேண்டும்.

    அதிக உலகமயமாக்கல் ஒரு நாட்டில் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே செல்வத்தின் தீவிர ஏற்றத் தாழ்வுக்கு வழிவகுத்துள்ளது. இத்தகைய ஏற்றத் தாழ்வை அரசின் நலத் திட்டங்கள், முன் முயற்சிகளால் மட்டுமே குறைக்க முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:-

    உலகளவில் இந்தியா 5-வது பெரிய பொருளாதார நாடாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிப்பாக இருந்தாலும், தனி நபர் வருமானத்தில் 139-வது இடத்தில் இருக்கிறது. நாம் விவசாயநிலங்களை இழந்து வருகிறோம். அதை தவிர்க்க வேண்டும்.

    அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். சமத்துவமின்மையால் இந்தியா மோசமான நாடாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 900-க்கும் அதிகமான சமூகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் இந்திய சமூகவியல் சங்கத் தலைவர் ஆபா சவுஹான், செயலர் மணீஷ் வர்மா, வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த் தசாரதி மல்லிக், பதிவாளர் டி.ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×