என் மலர்
நீங்கள் தேடியது "பாபா சித்திக்"
- பாபா சித்திக் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சராக பதவி வகித்தார்.
- அவரது விலகல் அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சராக பதவி வகித்தவர் பாபா சித்திக். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான பாபா சித்திக் காங்கிரசில் இருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக, பாபா சித்திக் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 48 வருடங்களாக பயணித்துள்ளேன். நிறைய விஷயங்களைச் சொல்ல நினைத்தாலும் அவற்றை சொல்லாமல் விடுவதுதான் நல்லது என பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து விலகி வருவது அக்கட்சிக்கு கடும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
- 40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார் பாபா சித்திக்.
- கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசில் இணைந்தார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக்.
40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த பாபா சித்திக், கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அஜித் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரசில் இணைந்தார். இவர் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மும்பையில் பாபா சித்திக் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சித்திக் மீது சுடப்பட்ட 6 குண்டுகளில் 4 அவரது மார்பில் பாய்ந்தது.
- ஷாருக்- சல்மான் இடையே சண்டை ஏற்பட்டு பாலிவுட் திரைத்துறை இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடந்தது
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் மும்பையில் படுகொலை செய்யப்பட்டார். நேற்றைய தினம் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். சித்திக் மீது சுடப்பட்ட 6 குண்டுகளில் 4 அவரது மார்பில் பாய்ந்தது.
66 வயதான பாபா சித்திக் மகாராஷ்டிர அரசியலில் அனைவருக்கும் பரிட்சயமான முகமாக இருந்து வந்தவர். தனது இளமைக் காலம் முதல் 48 ஆண்டுகாலமாக காங்கிரசில் இருந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு மாறினார். 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர் உணவுத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி களிலும் இருந்துள்ளார்.
காங்கிரசில் தன்னை சாப்பாட்டில் வாசனைக்காக போடும் இலையைப் போல அலட்சியமாக நடத்தியத்தாக அப்போது அவர் தெரிவித்திருந்தார். இவரது மகன் ஜீஸ்ஹான் பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவரது அலுவலகத்துக்கு வெளியில் வைத்தே சித்திக் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஜீஸ்ஹான் எம்.எல்.ஏ வாக இருக்கும் பாந்த்ரா தொகுதியில் சித்திக் பலகாலமாக எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் ஆவார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் இடையே ஏற்பட்ட மோதலை தீர்த்துவைத்ததால் சித்திக் பெரிதும் பேசப்பட்ட தலைவராக உள்ளார். அந்த சமயத்தில் ஷாருக் சல்மான் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பாலிவுட் திரைத்துறை இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடந்தது. எனவே வருடந்தோறும் பிரம்மாண்டமாக இஃப்தார் விருந்து நடந்தும் சித்திக் அந்த வருடம் ஷாருக் சல்மான் இருவரையும் விருதுக்கு அழைத்தார்.

ஷாருக்கை சல்மான் கானின் தந்தை சலீம் கான் அருகே அமரவைத்தார். அதன்பின் சல்மான் கானை அவர்களருகில் அனுப்பி மனஸ்தாபத்தைத் தீர்த்து வைத்தார். இவ்வாறு மும்பையில் முக்கிய புள்ளியாக வளம் வந்த சித்திக் மகாராஷ்டிர தேர்தல் நெருக்கும் சமயத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறனர்.
- 48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கட்சி மாறினார்
- பாபா சித்திக்கின் மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.
பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் இந்த கொலைக்கு மகாராஷ்டிர ஆளும் பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாபா சித்திக் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாபா சித்திக்கின் மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாராஷ்டிராவில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதை இந்த கொடூர சம்பவம் அம்பலப்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர அரசாங்கம்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். நீதி வெல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
- கொலை வழக்கை விசாரிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
- மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட 2 பேரை கைது செய்துள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் கூறியதாவது:-
எங்களது நண்பரான பாபா சித்திக்கை இழந்ததில் நாங்கள் மிகவும் வருத்தத்துடன் இருக்கின்றோம். இந்த விஷயத்தை எதிர்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம். இந்த கொலை வழக்கை விசாரிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மற்ற மாநிலங்களுக்கு இந்த குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
பாரதிய ஜனதா எம்.பி. பிரவீன் கண்டேல்வால் கூறும்போது, 'இந்த கொலை சம்பவம் வருத்தம் அளிக்கிறது'. மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றம் சாட்டப்பட்ட 2 பேரை கைது செய்துள்ளது. இதை விட வேறு யாரும் வேகமாக செயல்பட முடியாது. ராகுல் காந்தியும், வேறு சிலரும் இது போன்ற சம்பவங்களில் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது என்றார்.
- பாபா சித்திக் மும்பையில் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்று சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.
பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இடமில்லை. இவை கடும் கண்டனத்துக்குரியவை ஆகும்.
பாபா சித்திக் அவர்களின் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- பாபா சித்திக்கின் மரணம் அவரது நெருங்கிய நண்பரான சல்மான் கானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.
பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
பாபா சித்திக்கின் மரண செய்தியை கேட்ட அவரது நெருங்கிய நண்பர் சல்மான் கான் பிக்பாஸ் படப்பிடிப்பை பாதியிலேயே உடனடியாக ரத்து செய்து விட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
அவரது நெருங்கிய நண்பரான சல்மான் கானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. பாபா சித்திக்கின் மரண செய்தியை கேட்டதில் இருந்தே சல்மான் கானால் தூங்க முடியவில்லை.
பாபா சித்திக் மரணத்தால் சல்மானின் குடும்ப உறுப்பினர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாபா சித்திக் சல்மான் கானின் குடும்பத்தில் ஒருவராகவே இருந்து வந்துள்ளார்.
பாபா சித்திக்கின் இறுதி சடங்குகள் குறித்த விவரங்களை அவரது குடும்பத்தினரிடம் சல்மான் கான் கேட்டறிந்தார். சல்மான் கான் அடுத்த சில நாட்களுக்கு தனது தனிப்பட்ட சந்திப்புகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
- பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
- பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.
பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் பாபா சித்திக் கொலை வழக்கில் தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19), குர்மாயில் பல்ஜித் சிங் (23) ஆகிய 2 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இருவருடன் இணைந்து குற்றத்தில் ஈடுபட்ட 3 ஆவது நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இருவரும் இன்று உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ராஜேஷ் காஷ்யப் தனக்கு வயது 17 என்று தெரிவித்தார். இதனையடுத்து காஷ்யப்பின் உண்மையான வயதை அறிய அவருக்கு எலும்பியல் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் பல்ஜித் சிங்கிற்கு அக்டோபர் 21 ஆம் தேதி போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல ரவுடிகளுடன் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு உள்ளது.
இருப்பினும், இந்த கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
- முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- பாபா சித்திக்கின் இழப்பை அவரது நெருங்கிய நண்பரான சல்மான் கானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.
பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
பாபா சித்திக்கின் மரண செய்தியை கேட்ட அவரது நெருங்கிய நண்பர் சல்மான் கான் பிக்பாஸ் படப்பிடிப்பை பாதியிலேயே உடனடியாக ரத்து செய்து விட்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.
அவரது நெருங்கிய நண்பரான சல்மான் கானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. பாபா சித்திக்கின் மரண செய்தியை கேட்டதில் இருந்தே சல்மான் கானால் தூங்க முடியவில்லை.
இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் பாபா சித்திக் வீட்டிற்கு சென்ற சல்மான் கான் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்களில் கண்ணீருடன் மிகவும் சோகமான முகத்தோடு சல்மான் கான் காணப்பட்டார்.
- முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
- பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.
பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
இந்நிலையில் பாபா சித்திக் கொலை வழக்கில் தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19), குர்மாயில் பல்ஜித் சிங் (23) ஆகிய 2 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இருவருடன் இணைந்து குற்றத்தில் ஈடுபட்ட 3 ஆவது நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல ரவுடிகளுடன் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு உள்ளது.
இருப்பினும், இந்த கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், சட்டம் அனுமதித்தால், லாரன்ஸ் பிஷ்னோயின் ஒட்டுமொத்த கும்பலையும் 24 மணி நேரத்தில் அழித்துவிடுவேன் என்று பீகார் எம்பி பப்பு யாதவ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பப்பு யாதவ், "சிறையில் இருக்கும் ஒரு குற்றவாளி (லாரன்ஸ் பிஷ்னோய்) அரசாங்கத்திற்கு சவால் விடுகிறான். மக்களைக் கொன்று கொண்டிருக்கிறான், எல்லோரும் அமைதியாக இதை பார்த்து கொண்டிருக்கிறோம்.
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா மற்றும் கர்னி சேனா தலைவரின் கொலையில் பிஷ்னோய் முக்கியப் பங்கு வகித்துள்ளார். தற்போது பாபா சித்திக் கொலை வழக்கில் அவன் சம்பந்தப்பட்டுள்ளான்" என்று தெரிவித்துள்ளார்.
- படுகொலை சம்பவத்திற்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.
- உண்மைத்தன்மையை சரிபார்த்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பாபா சித்திக் கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது மட்டுமல்லாமல், நடிகர் சல்மான் கானுக்கு உதவி செய்பவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், மகாராஷ்டிர மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் சித்திக், கடந்த சனிக்கிழமை இரவு பாந்த்ரா கிழக்கில் உள்ள அவரது மகனும், எம்.எல்.ஏ.-வுமான ஜீஷன் சித்திக் அலுவலகத்தின் அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது படுகொலை சம்பவத்திற்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.
இது தொடர்பாக பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்புடைய ஷுபு லோங்கர் என்ற நபர் முகநூலில் பகிரங்க அறிவிப்பை வெளியிட்டார். லோங்கர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள நிலையில், அவரது சகோதரர் பிரவின் லோங்கர் இந்தப் பதிவை வெளியிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவரையும், காவல் துறையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கைது செய்தனர்.
லோங்கரின் முகநூல் பதிவில், "இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு கொண்டிருந்தது, சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் தான் சித்திக் கொல்லப்பட்டார்" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான பதிவில், "எங்களுக்கு யாருடனும் பகை இல்லை, ஆனால் சல்மான் கான் மற்றும் தாவூத் கும்பலுக்கு யார் உதவினாலும், உங்கள் கணக்குகளை ஒழுங்காக வைத்திருங்கள்," என்று லோங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் உண்மைத்தன்மையை சரிபார்த்து வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நடிகர் சல்மான் கான் மற்றும் ஷாருக் கான் இடையே நிலவி வந்த பிரச்சினையை தீர்த்து வைத்ததில் சித்திக் மிகப்பெரிய பங்காற்றினார். இது தொடர்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு சித்திக் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் விருந்தில் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் கலந்து கொண்டனர். இதில் வைத்தே இருவர் இடையே நிலவி வந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது.
கடந்த ஆண்டு முதல் சல்மான் கானுடன் நெருக்கமாக இருந்ததற்காக குறைந்தது இரண்டு பிரபலங்கள் பிஷ்னோய் கும்பலால் தாக்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பாபா சித்திக் மறைவை அடுத்து நடிகர் சல்மான் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
தற்போதைய துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை தெற்கில் உள்ள மலபார் ஹில் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
- பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.
மும்பையில் மராட்டிய மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் நேற்று முன்தினம் இரவு 3 பேரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கொரானா காலத்தில் இவர் செய்த மருத்துவ உதவிகள் காரணமாக இவர் மிகவும் புகழ் பெற்றிருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அஜித்பவார் தலைமையிலான தேசிய வாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பாபா சித்திக்கை அரசியல் முன்விரோதம் காரணமாக சுட்டுக் கொன்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவரை சுட்டுக் கொன்றதாக பிரபல தாதா கும்பல் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பு ஏற்று இருக்கிறது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுடன் பாபா சித்திக் தொடர்பு வைத்தி ருந்ததால் அவரை சுட்டுக் கொன்றதாக அந்த கும்பல் தெரிவித்துள்ளது.
மும்பை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் பாபா சித்திக்கை சுட்டுக் கொன்ற 2 பேர் பிடிபட்டனர். அவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்த குர்மெயில் பல்ஜித்சிங், தர்மராஜ் ராஜேஷ் காஸ்யாப் என்று தெரிய வந்தது.
இவர்களில் குர்மெயில் பல்ஜித்சிங்கை போலீசார் 7 நாட்கள் காவலில் எடுத்து இன்று காலை முதல் விசாரித்து வருகிறார்கள்.
மற்றொரு குற்றவாளியான தர்மராஜ் ராஜேஷ் காஸ்யாப் சிறுவன் என்று அவரது வக்கீல் கோர்ட்டில் வாதிட்டார். இதையடுத்து தர்மராஜ் ராஜேஷ் காஸ்யாப் உடல் எலும்பு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தர்மராஜ் சிறுவன் அல்ல என்பது உறுதியாகி இருக்கிறது.
இந்த நிலையில் மராட்டிய மாநிலம் புனேயில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான பிரவீண் கைது செய்யப்பட்டுள்ளான். அவனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முக்கிய குற்றவாளிகளில் மற்றொருவரான சிவக்குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.