search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபா சித்திக்"

    • 40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார் பாபா சித்திக்.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசில் இணைந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக்.

    40 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த பாபா சித்திக், கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது அஜித் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரசில் இணைந்தார். இவர் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மும்பையில் பாபா சித்திக் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பாபா சித்திக் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சராக பதவி வகித்தார்.
    • அவரது விலகல் அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சராக பதவி வகித்தவர் பாபா சித்திக். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான பாபா சித்திக் காங்கிரசில் இருந்து விலகியுள்ளார்.

    இதுதொடர்பாக, பாபா சித்திக் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இளம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 48 வருடங்களாக பயணித்துள்ளேன். நிறைய விஷயங்களைச் சொல்ல நினைத்தாலும் அவற்றை சொல்லாமல் விடுவதுதான் நல்லது என பதிவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து விலகி வருவது அக்கட்சிக்கு கடும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    ×