என் மலர்
நீங்கள் தேடியது "சத்ரபதி சிவாஜி"
- நாட்டை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல சிவாஜி மறு அவதாரம் எடுத்துள்ளார்
- பாஜக எம்.பி. பிரதீப் புரோகித்தின் இந்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி முந்தைய பிறவியில் புகழ்பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார் என்று என்று பாஜக எம்.பி. பிரதீப் புரோகித் மக்களவையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மக்களவையில் பேசிய பிரதீப் புரோகித், "பிரதமர் மோடி அவரது முந்தைய பிறவியில் சத்ரபதி சிவாஜியாக பிறந்தார் என்று ஒரு துறவி என்னிடம் கூறினார். பிரதமர் மோடி உண்மையிலேயே சத்ரபதி சிவாஜி தான் என்றும், மகாராஷ்டிராவையும் நாட்டையும் வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்ல அவர் மறு அவதாரம் எடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.
பாஜக எம்.பி. பிரதீப் புரோகித்தின் இந்த கருத்து மகாராஷ்டிராவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்ரபதி சிவாஜியை அவமதித்து விட்டார் என்று பாஜக எம்.பி.க்கு எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
- சத்ரபதி சிவாஜி மகாராஜின் 394-வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- சிவாஜி சிலைக்கு இன்று காலையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மகாராஷ்டிரா மாநில புகழ்பெற்ற போர் வீரரும் மாமன்னருமான சத்ரபதி சிவாஜி மகாராஜ் 1630-ம் ஆண்டு புனே மாவட்டம் ஜுன்னார் தாலுகாவில் உள்ள சிவனேரியில் பிறந்தார்.
மறைந்த சத்ரபதி சிவாஜி மகாராஜின் 394-வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செம்பூரில் உள்ள சிவாஜி சிலைக்கு இன்று காலையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து சிவனேரி கோட்டைக்கு சென்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அஞ்சலி செலுத்தினார். அங்கு நடந்த தொட்டில் விழாவில் துணை முதல்வர்கள் அஜித் பவார், பட்னாவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சிவாஜிக்கு மரியாதை செலுத்தினார்கள்.
சிவாஜி மகாராஜின் பிறந்தநாளையொட்டி துணை முதல்வர் பட்னாவிஸ் 'எக்ஸ்' இணைய தளத்தில் "வெற்றிகரமான, புகழ்பெற்ற, சக்திவாய்ந்த, திறமையான, நல்லொழுக்கமுள்ள, அறிவுள்ள அரசன் வீர சிவாஜி. அவருக்கு இன்று புகழ் அஞ்சலி, மரியாதை செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
- சத்ரபதி சிவாஜியின் சிலை பலத்து காற்று வீசியதில் முழுமையாக சேதம் அடைந்தது.
- தேசிய கடற்படை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜி சிலை திறந்து வைக்கப்பட்டது.
மஹாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்த நிலையில், 35 உயரமுள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை பலத்து காற்று வீசியதில் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது.
கடந்த மூன்று நாட்களாக சிந்துதுர்க்கில் கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசி வரும் நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் 35 அடி உயரமுள்ள சிலை முழுமையாக உடைந்து தலை, கை, கால்கள் என ஒவ்வொரு பாகமும் தரையில் வீழுந்தது.

சத்ரபதி சிவாஜி சிலை சேதமுற்று கீழே விழுந்த நிலையில், கள சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக காவல் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேதம் பற்றிய ஆய்வுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தேசிய கடற்படை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜியின் சிலையை திறந்து வைத்தார். மேலும், அங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டிருந்தார்.
- பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது.
- ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள்கூட தப்பவில்லை.
மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்தார்.
கடந்த மூன்று நாட்களாக சிந்துதுர்க்கில் கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசி வரும் நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் 35 அடி உயரமுள்ள சத்ரபதி சிவாஜி சிலை முழுமையாக உடைந்து தலை, கை, கால்கள் என ஒவ்வொரு பாகமும் தரையில் வீழுந்தது.
சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளது
அந்த பதிவில், "பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது. பிரதமர் மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்துள்ளது. ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள்கூட தப்பவில்லை" என்று பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், சிவாஜி சிலையை மோடி திறந்து வைத்தது மற்றும் சிலை உடைந்து விழுந்தது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது.
- சிலர் வீர் சாவர்க்கரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
- சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக சிவாஜி மகாராஜிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை இடிந்து விழுந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
"சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்பது வெறும் பெயரோ அரசரோ இல்லை. நமக்கு அவர் தெய்வம். இன்று, நான் அவரது காலடியில் தலை வணங்குகிறேன், என் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் மதிப்புகள் வேறுபட்டவை. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் தெய்வத்தை விட பெரியது எதுவுமில்லை."
"சிலர் வீர் சாவர்க்கரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர், ஆனால் அவரை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க அவர்கள் தயாராக இல்லை. நான் இங்கு இறங்கியதும், சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக சிவாஜி மகாராஜிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன், இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்."
"கடந்த பத்து ஆண்டுகளில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். மகாராஷ்டிரா திறன் மூலம் கிடைக்கும் பலன்களை இந்த மாநிலமும், முழு நாடும் பெறுவதை உறுதிசெய்வதற்காகவே வத்வான் துறைமுகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது," என பிரதமர் மோடி தெரிவித்தார்.
- நாடு அனைவருக்கும் சொந்தமானது என்பதே சத்ரபதி சிவாஜி உலகிற்கு கூறிய செய்தி.
- சத்ரபதி சிவாஜி மகராஜ், ஷாஹு மகராஜ் போன்றவர்கள் இல்லை என்றால், அரசியலமைப்புச் சட்டமும் இருந்திருக்காது.
கோலாப்பூர்:
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இன்று மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைத்தார்.
இந்த விழாவுக்கு முன்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-
மக்களைப் பயமுறுத்தி, அரசியலமைப்பையும், நாட்டில் உள்ள அமைப்புகளையும் அழித்த பிறகு சத்ரபதி சிவாஜி முன் தலைகுனிந்து வணங்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று பா.ஜனதாவை விமர்சனம் செய்தார். மேலும் அவர் கூறும்போது, நாடு அனைவருக்கும் சொந்தமானது என்பதே சத்ரபதி சிவாஜி உலகிற்கு கூறிய செய்தி. சத்ரபதி சிவாஜி மகராஜ், ஷாஹு மகராஜ் போன்றவர்கள் இல்லை என்றால், அரசியலமைப்புச் சட்டமும் இருந்திருக்காது என்றார்.
- சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
- மகாராஷ்டிராவின் பாரம்பரிய இசைக்கருவியான "லெசிம்" உடன் விக்கி கௌஷல் நடனமாடுகிறார்.
லூக்கா சுப்பி, மிமி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் லக்ஷ்மண் உதேக்கர், 'சாவா' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லரில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விக்கி கௌஷலின் நடிப்பை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். பிப்ரவரி 14 ஆம் தேதி இப்படம் வெளியாகி உள்ளது.

ஆனால் டிரெய்லரில் , மகாராஷ்டிராவின் பாரம்பரிய இசைக்கருவியான "லெசிம்" உடன் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனமாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது அரசியல் ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரா அமைச்சர் உதய் சமந்த், ' சாவா ' படத்தில் நடனக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். படத்தில் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நடனம் ஆடுவதைக் காட்டுகிறது. இயக்குநர் இந்தப் பகுதியை நீக்க வேண்டும்.

படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, வெளியிடுவதற்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காட்ட வேண்டும், முழு படத்தையும் பார்த்த பின்பே படத்தை வெளியிட அனுமதிக்கப்படும்.

இல்லாவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து சர்ச்சைக்குரிய நடன காட்சிகளை நீக்குவதாகப் படக்குழு உறுதி அளித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.
- புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
லூக்கா சுப்பி, மிமி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் லக்ஷ்மண் உதேக்கர், 'சாவா' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே டிரெய்லரில் , மகாராஷ்டிராவின் பாரம்பரிய இசைக்கருவியான "லெசிம்" உடன் விக்கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடனமாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது அரசியல் ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரா அமைச்சர் உதய் சமந்த், ' சாவா ' படத்தில் நடனக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். படத்தில் சத்ரபதி சாம்பாஜி மகராஜ் நடனம் ஆடுவதைக் காட்டுகிறது. இயக்குநர் இந்தப் பகுதியை நீக்க வேண்டும்.

படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய, வெளியிடுவதற்கு முன்பு வரலாற்று ஆய்வாளர்களுக்குக் காட்ட வேண்டும், முழு படத்தையும் பார்த்த பின்பே படத்தை வெளியிட அனுமதிக்கப்படும்.
இல்லாவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார். இதனையடுத்து சர்ச்சைக்குரிய நடன காட்சிகளை நீக்குவதாகப் படக்குழு உறுதி அளித்தது. இதனை தொடர்ந்து இப்படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

இந்த நிலையில் 'சாவா' படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் நடிகர் விக்கி கௌஷல், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் வழிபாடு செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படம் நாளை வெளியாக உள்ளது.
- புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
லூக்கா சுப்பி, மிமி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் லக்ஷ்மண் உதேக்கர், 'சாவா' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார். மராத்திய அரசர் சத்ரபதி சிவாஜி மகராஜ் - சாயிபாய் தம்பதியரின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.
சத்ரபதி சாம்பாஜி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். சாம்பாஜியின் மனைவி யேசுபாய் போஸ்லே கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து இப்படம் நாளை வெளியாக உள்ளது.
இந்த நிலையில் 'சாவா' படம் வெளியாவதையொட்டி ஷீரடி சாய்பாபா கோவிலில் படக்குழுவினருடன் ராஷ்மிகா மந்தனா, விக்கி கௌஷல் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் நடிகர் விக்கி கௌஷல், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் வழிபாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி.
- சத்ரபதி சிவாஜியின் தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகள் தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது.
முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின் ஆட்சிகாலம் தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என கருதப்படுகிறது.
இவரது ஆட்சிக் காலத்தில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார். அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு இவர் சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார்.
மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி. இத்தகைய சிறப்புகளை பெற்ற மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சத்ரபதி சிவாஜி மகாராஜின் ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அவரது வீரம் மற்றும் தொலைநோக்கு தலைமை சுயராஜ்ஜியத்திற்கு அடித்தளம் அமைத்தது, தைரியம் மற்றும் நீதியின் மதிப்புகள் தலைமுறைகளை ஊக்கப்படுத்தியது.
வலுவான, தன்னம்பிக்கை மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க அவர் நம்மை ஊக்குவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.