என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் ஆணையம்."

    • தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இதுகுறித்து விவாதிக்க விரும்புகிறார்.
    • இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 28-ம் தேதி ஒத்திவைத்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் வாக்குப்பதிவு முடிந்த 48 மணி நேரத்திற்குள் வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவுத் தரவுகளை அதன் இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன.

    இந்த மனுக்களை திரிணாமுல் காஙகிரஸ் எம்.பி.யான மஹூவா மொய்த்ரா மற்றும் என்ஜிஓ அமைப்பும் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சந்தித்து இந்தக் குறையை விவாதிக்க விரும்புவதாக தெரிவித்தார். புதிய தலைமை தேர்தல் ஆணையர் இப்போது இருக்கிறார். மனுதாரர்கள் அவரைச் சந்தித்து இது குறித்து விவாதிக்கலாம் என்றார்.

    இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி, மனுதாரர்கள் தேர்தல் ஆணையத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தை தாக்கல் செய்யலாம். தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஒரு விசாரணையை நடத்தி அதைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கும்

    வாக்குச்சாவடி வாரியான வாக்காளர் வாக்குப்பதிவுத் தரவை அதன் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆலோசிக்கத் தயாராக இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் சமர்ப்பித்ததை சுப்ரீம் கோர்ட் கவனத்தில் கொண்டு, மனுதாரர்கள் 10 நாட்களுக்குள் தேர்தல் குழு முன் பிரதிநிதித்துவங்களைச் செய்யும்படி கேட்டுக் கொண்டது.

    இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 28-ம் தேதி ஒத்திவைத்தது.

    • மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?.
    • மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் பல வருடங்கள் வேலை பார்த்து வரும் அதிகாரிகள் தேர்தலையொட்டி மாற்றப்படுவார்கள்.

    இந்திய தேர்தல் ஆணையம் நேற்று ஆறு மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மேற்கு வங்காள மாநில டிஜிபி ராஜீவ் குமாரையும் மாற்ற உத்தரவிட்டுள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ'பிரைன் கூறுகையில் "பா.ஜனதாவின் இழிவான யுக்திகள் தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களை அழிக்கின்றன. மக்களை சந்திக்க பா.ஜனதாவுக்கு பதற்றமாக உள்ளதா?. எதிர்க்கட்சிகளை குறிவைக்க தற்போது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பியுள்ளனரா?. தேர்தல் ஆணையமா?. அல்லது எச்.எம்.வி.யா? (ECI or HMV?)

    மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கேட்டால் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்கிறார்கள். நாங்கள் 2024 தேர்தல் உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.

    • இந்தக் கவனக்குறைவான தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம் என மெட்டா நிறுவனம் கூறியது.
    • மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான நாடு என தெரிவித்தார்.

    நியூயார்க்:

    மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், ஜோ ரோகனின் போட்காஸ்டில் சமீபத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 2024-ல் உலகம் முழுவதும் மிகப்பெரிய தேர்தல் ஆண்டாக இருந்தது. இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தேர்தலைச் சந்தித்தன. ஆனால், ஆட்சியில் இருந்த கட்சிகள் பணவீக்கம், பொருளாதார பிரச்சனை, கோவிட்டை கையாண்டது உள்ளிட்ட ஏதாவது ஒரு விஷயம் காரணமாக ஆட்சியை பறிகொடுத்தன என தெரிவித்திருந்தார்.

    இதுதொடர்பாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகம் என்ற அடிப்படையில் 2024 ல் இந்தியாவில் நடந்த தேர்தலில் 64 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீதான தங்களின் நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

    கோவிட்டிற்கு பிறகு 2024 ல் நடந்த தேர்தலில் இந்தியா உள்ளிட்ட அனைத்து அரசுகளும் தோல்வியடைந்தன என்பது தவறான தகவல்.

    80 கோடி பேருக்கு இலவச உணவு, 220 கோடி பேருக்கு இலவச தடுப்பூசி, கோவிட் காலத்தில் உலக நாடுகளுக்கு உதவி என வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா முன்னணியில் உள்ளது. பிரதமர் மோடியின் 3-வது வெற்றி என்பது சிறந்த நிர்வாகம் மற்றும் பொது மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த சான்று.

    மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் இருந்து தவறான தகவல்களைப் பார்ப்பது ஏமாற்றம் அளிக்கிறது. உண்மைகளையும், நம்பகத்தன்மையயும் நிலைநிறுத்துவோம் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், இந்திய தேர்தல் குறித்து தவறான தகவல் வெளியிட்டதற்காக மெட்டா நிறுவனம் மன்னிப்பு கோரியது.

    இதுதொடர்பாக, மெட்டா நிறுவனத்தின் இந்திய துணைத்தலைவர் ஷிவ்நாத் துக்ரால் வெளியிட்டுள்ள அறிக்கையில், மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, 2024-ல் நடந்த தேர்தல்களில் ஆட்சியில் இருந்த கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்ற மார்க் ஜூக்கர்பெர்க்கின் கருத்து பல நாடுகளில் நடந்துள்ளது. இந்தியாவிற்கு இது பொருந்தாது. இந்தக் கவனக்குறைவான தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம். மெட்டா நிறுவனத்திற்கு இந்தியா முக்கியமான நாடு. அதன் புதுமையான எதிர்காலத்தின் மையத்தில் இருப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம் என தெரிவித்துள்ளார்.

    ×