என் மலர்
Shivam Dube News and updates in Tamil | ஷிவம் துபே செய்திகள்
- ரச்சின் ரவீந்திரா 15 பந்தில் 37 ரன்கள் விளாசினார்.
- ஷிவம் துபே 27 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழகாமல் இருந்தார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து 173 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அனுஜ் ராவத் 25 பந்தில் 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 26 பந்தில் 38 ரன்களும் அடித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முஸ்டாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார் ருதுராஜ் கெய்க்வாட். மறுமுனையில் ரவீந்திரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அணியின் ஸ்கோர் 4 ஓவரில் 38 ரன்கள் இருக்கும்போது ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ரவீந்திரா உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். சென்னை அணி 5.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருக்கும்போது 7-வது ஓவரின் கடைசி பந்தில் ரவீந்திரா 15 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
ரகானே தனது பங்கிற்கு 19 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். டேரில் மிட்செல் 18 பந்தில் 2 சிக்சருடன் 22 ரன்கள் அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்தது.

ரச்சின் ரவீந்திரா
கடைசி ஐந்து ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்டது. துபே உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். 16-வது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. 17-வது ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 3 ஓவரில் 18 ரன்களே தேவைப்பட்டது. 18-வது ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது.
இதனால் கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 18.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.
ஷிவம் துபே 34 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- தர்மசாலாவில் நடப்பு தொடரில் நடைபெறும் முதல் ஆட்டம் இதுவாகும்.
- பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை.
தர்மசாலா:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியின் 2-வது உள்ளூர் மைதானமான தர்மசாலாவில் நடப்பு தொடரில் நடைபெறும் முதல் ஆட்டம் இதுவாகும்.
பஞ்சாப் அணி
பஞ்சாப் கணிக்க முடியாத அணியாக விளங்குகிறது. அந்த அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 6 தோல்வியுடன் 8 புள்ளி பெற்றுள்ளது. முந்தைய 2 ஆட்டங்களில் கொல்கத்தா, சென்னை அணிகளை அதன் சொந்த மண்ணில் அடுத்தடுத்து முறையே 8 விக்கெட், 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது.
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து புதிய வரலாறு படைத்தது. அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க தனது எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷசாங் சிங், பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், அஷூதோஷ் ஷர்மா நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப், சாம் கர்ரன், ரபடா, ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள்.
தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 5 ஆட்டங்களில் ஆடாத கேப்டன் ஷிகர் தவான் முழு உடல் தகுதியை இன்னும் எட்டவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்திலும் ஆடமாட்டார் என்று பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்தார்.
தவான் கடைசி 2 லீக் ஆட்டங்களில் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்த அவர் கடந்த ஆட்டத்தில் ஆடிய அணியில் மாற்றம் செய்வது குறித்து சிந்திக்கவில்லை என்றும் வெற்றி கூட்டணியை தொடரவே விரும்புகிறோம் என்றும் குறிப்பிட்டார்.
சென்னை அணி
நடப்பு சாம்பியன் சென்னை அணி இந்த சீசனில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டு 10 புள்ளி பெற்று இருக்கிறது. கடைசி 4 ஆட்டங்களில் 3-ல் தோல்வி கண்ட சென்னை அணி 3 நாட்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் பணிந்தது.
சென்னை அணியில் பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட் (ஒரு சதம், 4 அரைசதம் உள்பட 509 ரன்), ஷிவம் துபே (350) அபாரமாக செயல்பட்டு வருகிறார்கள். ரஹானே, டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி கணிசமான பங்களிப்பை அளித்தால் பேட்டிங் மேலும் வலுப்பெறும்.
சர்வதேச போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான் நாடு திரும்பி விட்டதால் எஞ்சிய ஆட்டங்களில் ஆடமாட்டார். கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது கடினம் தான். இது சென்னை அணிக்கு பின்னடைவாகும். காய்ச்சல் காரணமாக முந்தைய ஆட்டத்தில்
ஆடாத துஷர் தேஷ்பாண்டேவும், உலகக் கோப்பை விசா நடைமுறைக்காக இலங்கைக்கு சென்றதால் கடந்த ஆட்டத்தை தவறவிட்ட பதிரானாவும் இந்த ஆட்டத்துக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பழி தீர்க்குமா?
பஞ்சாப் அணியிடம் முந்தைய ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றிப்பாதைக்கு திரும்ப சென்னை அணி தீவிரம் காட்டும்.
அதேநேரத்தில் மும்பை இந்தியன்சுக்கு அடுத்தபடியாக சென்னை அணிக்கு எதிராக தொடர்ந்து 5 ஆட்டங்களில் வெற்றி கண்டு வீறுநடை போடும் பஞ்சாப் அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முழுபலத்தையும் வெளிப்படுத்தும்.
எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 15 ஆட்டங்களில் சென்னையும், 14 ஆட்டங்களில் பஞ்சாப்பும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பஞ்சாப்: பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோ, ரிலீ ரோசவ், ஷசாங் சிங், சாம் கர்ரன் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, அஷூதோஷ் ஷர்மா, ஹர்பிரீத் பிரார், ஹர்ஷல் பட்டேல், ரபடா, அர்ஷ்தீப் சிங் அல்லது ராகுல் சாஹர்.
சென்னை: ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, டோனி, ஷர்துல் தாக்குர் அல்லது முகேஷ் சவுத்ரி, துஷர் தேஷ்பாண்டே, தீக்ஷனா, பதிரானா.
மற்றொரு ஆட்டத்தில் லக்னோ-கொல்கத்தா
லக்னோவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
லக்னோ அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்றுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் லோகேஷ் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிகோலஸ் பூரன், குயின்டான் டி காக்கும், பந்து வீச்சில் யாஷ் தாக்குர், மொசின் கான், நவீன் உல்-ஹக், ரவி பிஷ்னோய், குருணல் பாண்ட்யாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கி விட்டது. அந்த அணி கடந்த 2 ஆட்டங்களில் டெல்லி, மும்பை அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்தது.
கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் பில் சால்ட், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர் நல்ல பார்மில் உள்ளனர். ரிங்கு சிங்கிடம் இருந்து எதிர்பார்த்த அதிரடி இன்னும் வெளியாகவில்லை. பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஹர்சித் ராணா, மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா மிரட்டக்கூடியவர்கள். ஆல்-ரவுண்டராக சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் அசத்துகிறார்கள்.
நேரடி ஒளிபரப்பு
லக்னோவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்ற கொல்கத்தா அணி அந்த ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்த ஆர்வம் காட்டும். இதேபோல் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த லக்னோ அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 3-ல் லக்னோவும், ஒன்றில் கொல்கத்தாவும் வென்றுள்ளன.
இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
- இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது.
- சிஎஸ்கே மற்றும் இந்தியாவில் சிக்சர் அடிப்பதை நான் தற்போது மிஸ் செய்கிறேன்.
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இந்தியா முதல் 3 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருந்தாலும் இந்திய அணியின் பேட்டிங் பெரிதாக சொல்லும் அளவில் இல்லை என்றே சொல்லலாம்.
குறிப்பாக ஷிவம் துபே தடுமாறுவது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அதிரடியாக விளையாடிய நிலையில் உலகக் கோப்பையில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிக்சர் அடிக்க மிகவும் தடுமாறி வருகிறார்.
இந்நிலையில் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது என தடுமாற்றம் குறித்து ஷிவம் துபே வெளிப்படையாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
என்னுடைய ஃபார்மில் தடுமாறும் நான் செயல் முறையில் கவனம் செலுத்துகிறேன். ஆனால் இங்கே அழுத்தமில்லை. ஏனெனில் இங்கே அடிப்பது கடினம் என்றாலும் உன்னிடம் சிக்சர் அடிக்கும் திறமை இருப்பதால் அதை பயன்படுத்து என்று பயிற்சியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சிஎஸ்கே அணியில் நான் செய்ததை இந்த சூழ்நிலையில் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்.
இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது. இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது. இங்கே முதல் பந்திலிருந்தே உங்களால் அடிக்க முடியவில்லை. நீங்கள் இங்கே நேரமெடுத்து விளையாட வேண்டியுள்ளது. எனவே கண்டிப்பாக சிஎஸ்கே மற்றும் இந்தியாவில் சிக்சர் அடிப்பதை நான் தற்போது மிஸ் செய்கிறேன். ஏனெனில் இங்கே வலைப்பயிற்சியில் கூட அதிரடியாக விளையாட முடியவில்லை. பந்து வீசுவது நன்றாக இருந்தாலும் சிக்சர் அடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவ்வாறு துபே கூறினார்.
- அதிரடியாக ஆடவேண்டும் என்ற கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறை வெற்றிக்கு முக்கிய காரணமானது.
- உலகக் கோப்பை பயணம் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என ஷிவம் துபே கூறியுள்ளார்.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அதிரடியாக ஆடவேண்டும் என்ற கேப்டன் ரோகித் சர்மாவின் அணுகுமுறை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஜஸ்ப்ரித் பும்ரா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் என அனைவரும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
இதற்கிடையே, டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட ஷிவம் துபே, ஆரம்ப கட்டத்தில் தடுமாற்றமாகவே செயல்பட்டார். இதனால் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை கொண்டு வாருங்கள் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இறுதிப்போட்டியில் களமிறங்கிய அவர் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 16 பந்தில் 27 ரன்களை குவித்தார்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை பயணம் தமக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என சிவம் துபே கூறியுள்ளார். கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொடுத்த ஆதரவினாலேயே இறுதிப்போட்டியில் அதிரடியாக ஆடியதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஷிவம் துபே தனியார் இணைய தளத்தில் பேசியதாவது:
டி20 உலகக் கோப்பை பயணம் எனக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தது. இறுதிப்போட்டி மிக முக்கிய தருணமாக அமைந்தது. அன்றைய நாளில் நானும் அணியுடன் சேர்ந்து வெற்றியில் பங்காற்றியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
உலகக் கோப்பையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் எனக்கு பாடமாகும். பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு என்னை உற்சாகப்படுத்தியது.
எனக்கு அசைக்க முடியாத, நம்பமுடியாத ஆதரவை கொடுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளர் நேர்மறையாக இருந்து கடினமாக உழைக்க ஊக்குவித்தனர். எனது திறமை மீது நம்பிக்கை வைத்த அவர்களின் வழிகாட்டுதல் என்னை நம்புவதற்கு உதவியது.
இந்த அனுபவம் வருங்காலத்தில் அணியின் வெற்றிக்காக என்னை இன்னும் வலுவாக மேம்படுத்த உதவுமென்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
- முதல் டி20 போட்டி மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் நாளை நடக்கிறது.
- முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் ஓபனிங் பேட்டர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் களமிறங்குவார்கள்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்திலும், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்தியா-வங்காளதேசம் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் ஆட்டம் மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் நாளை ( 6-ந் தேதி) நடக்கிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரிங்குசிங், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா, ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி, மயங்க் யாதவ் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக ஷிவம் துபே விலகியுள்ளார். அவருக்கு பதிலாக திலக் வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாளை நடைபெறும் முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் ஓபனிங் பேட்டர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் களமிறங்குவார்கள் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
- வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஷிவம் துபே காயம் காரணமாக விலகினார்.
- அவருக்கு பதிலாக திலக் வர்மா அணியில் இடம் பிடித்துள்ளார்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் மிகவும் பிரபல தனியார் பேட்டி நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஷிவம் துபே, அக்சர் படேல், சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அப்போது இவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த வகையில் ஷிவம் துபேவிடம் யார் சிறந்த கேப்டன் டோனியா? ரோகித் சர்மா என கேட்கப்பட்டது. உடனே அனைவரும் அருமையான கேள்வி என சிரித்தனர். இதற்கு என்ன பதில் அளிக்கப்போகிறார் என ரசிகர்களும் ஆவலுடன் இருந்தனர்.
உடனே துபே, சிஎஸ்கே அணியில் டோனி சிறந்த கேப்டன் இந்திய அணியில் ரோகித் சிறந்த கேப்டன் என கூறினார். உடனே ரோகித் சர்மா அருமையான பதில் என்பது போல சைகை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.
- மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் உமர் நாசிர் மிர் இன்று நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, ரஹானே மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
31-வயது உமர் நாசிர் ஆக்ரோஷ பந்துவீச்சு காரணமாக மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. உமர் நாசிர் பந்துவீச்சில் ரோகித் சர்மா மூன்று ரன்களுக்கும், ரஹானே 12 ரன்களுக்கும், ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமலும் அவுட் ஆகி வெளியேறினர்.
கடந்த 2013 முதல் விளையாடி வரும் மிர் இதுவரை 57 போட்டிகளில் 138 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மிர் 54 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் இதுவரை 32 விக்கெட்டுகளை கைப்ற்றியுள்ளார்.
புல்வாமாவை சேர்ந்தவரான உமர் நாசிர் மிர் கடந்த 2018-19 தியோதர் கோப்பை தொடரின் போது இந்தியா சி அணிக்காக விளையாடினார். ரஞ்சி கோப்பை தொடரில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை சார்பில் ஷர்துல் தாக்கூர் மட்டும் 51 ரன்களை எடுத்தார். ஜம்மு காஷ்மீர் தரப்பில் உமர் நாசிர் மிர் மற்றும் யுத்விர் சிங் தலா நான்கு விக்கெட்டுகளையும், ஆகிப் நபி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
- முதல் இன்னிங்ஸில் ஷிவம் துபே டக் அவுட் ஆனார்.
- மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியின் முன்னணி வீரர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதில் மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரஹானே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இதன் காரணமாக போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த மும்பை அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை சார்பில் ஷர்துல் தாக்கூர் மட்டும் 51 ரன்களை எடுத்தார். இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 206 ரன்களை சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்த நிலையில், அடுத்து மும்பை அணி இன்று இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கியது. மும்பை அணிக்கு துவக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஜோடி முறையே 26 மற்றும் 28 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் தமோர், ஸ்ரேயஸ் அய்யர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இரண்டாவது இன்னிங்ஸிலும் ஷிவம் துபே ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ரஞ்சி கோப்பை தொடரின் இரண்டு இன்னிங்ஸிலும் ஷிவம் துபே டக் அவுட் ஆகியிருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
- காயம் காரணமாக நிதிஷ் ரெட்டி டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
- ரிங்கு சிங் 2-வது மற்றும் 3-வது டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர் நிதிஷ் ரெட்டி காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும் மற்றொரு வீரரான ரிங்கு சிங் காயம் காரணமாக 2-வது மற்றும் 3-வது டி20 போட்டியில் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்று வீரராக சிவம் துபே, மற்றும் ரமண்தீப் சிங் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3-வது போட்டியில் இருந்து இருவரும் இந்திய அணியில் சேர்வார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதலில் ஆடிய இந்தியா 181 ரன்களைக் குவித்தது.
- ஷிவம் துபே, பாண்ட்யா அதிரடியில் மிரட்டினர்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஆட்டத்தின் 2-வது ஓவரில் சாகிப் மகமூது ரன் எதுவும் கொடுக்காமல் 3 விக்கெட்டை கைப்பற்றினார்.
4-வது விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மாவுடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 29 ரன்னில் அவுட்டானார். ரிங்கு சிங் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஷிவம் துபேவுடன், ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்தார். இந்த ஜோடி ஆரம்பம் முதலே வீறு கொண்டு எழுந்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
6-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில் பாண்ட்யா 53 ரன்னில் வெளியேறினார். ஷிவம் துபே 53 ரன் எடுத்துள்ளார்.
இறுதியில், இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 181 ரன்களைக் குவித்துள்ளது.
இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமூது 3 விக்கெட்டும், ஓவர்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடுகிறது.
- இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி புனேவில் நடைபெற்றது.
- 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
ராஜ்கோட்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி புனேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது.
இறுதியில், இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது.
- துபேவுக்கு பதிலாக மாற்றுவீராக ஹர்ஷித் ராணா களமிறங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- துபேவுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணிக்குள் கொண்டுவரப்பட்டது நியாயமான மாற்று கிடையாது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது.
இதனிடையே ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த சிவம் துபேவின் ஹெல்மெட்டில் பந்து வேகமாக மோதியது. இதனால் இரண்டாவது இன்னிங்சில் துபேவுக்கு பதிலாக மாற்றுவீராக ஹர்ஷித் ராணா களமிறங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்நிலையில், துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மாற்றுவீராக களமிறங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீரருக்கு மாற்றுவீராக களமிறங்குவர் அவரை போன்ற வீரராக இருக்கவேண்டும். அதாவது ஒரு பேட்ஸ்மேனுக்கு பதிலாக இன்னொரு பேட்ஸ்மேனும் ஒரு பவுலருக்கு பதிலாக இன்னொரு பவுலரும் ஒரு ஆல் ரவுண்டருக்கு பதிலாக இன்னொரு ஆல் ரவுண்டரும் தான் களமிறங்க வேண்டும்.
ஆனால் ஆல் ரவுண்டர் சிவம் துபேவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா களமிறங்கியது நியாயம் கிடையாது என்று விமர்சனம் எழுந்தது. குறிப்பாக சிவம் துபேவுக்கு பதிலாக ரமன்தீப் சிங் தான் உள்ளே வந்திருக்க வேண்டும். அவர் தான் சரியான மாற்றுவீரர் என்று போட்டியை வர்ணனை செய்து வந்த ஹர்ஷா போக்ளே தெரிவித்தார்.
இதனிடையே போட்டி முடிவடைந்த பின்பு இந்த விவகாரம் குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர், "காயம் ஏற்பட்ட ஷிவம் துபேவுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணிக்குள் கொண்டுவரப்பட்டது நியாயமான மாற்று கிடையாது. துபேவும் வேகமாக பந்து வீசியதில்லை, ராணாவும் பேட்டிங்கில் பெரியதாக முன்னேறிவிடவில்லை. நாங்கள் பேட்டிங் களமிறங்கும்போது இந்திய அணியில் ஹர்ஷித் உள்ளதை பார்த்து கேட்டதற்கு, துபேவுக்கு மாற்றாக வந்துள்ளார் எனச் சொன்னார்கள். அப்போதே அதை ஏற்க மறுத்தேன். போட்டியின் நடுவர் இந்தியாவின் முடிவை ஏற்றுக்கொண்டதாக கூறியதால், எதுவும் செய்ய முடியவில்லை. இவையெல்லாம் ஆட்டத்தின் ஒரு பகுதிதான்" விரக்தியுடன் தெரிவித்தார்.