என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வாதிகாரம்"

    • தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1ம் தேதி வரை ஜெக்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின்.
    • ஆத் ஆத்மி தொண்டர்கள் கெஜ்ரிவாலை கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமின் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    அமலாக்கத்துறையின் எதிர்ப்பை மீறி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கியது.

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1ம் தேதி வரை ஜெக்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், கெஜ்ரிவாலின் மானைவி சுனிதா கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவாலை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    ஆத் ஆத்மி தொண்டர்கள் கெஜ்ரிவாலை கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொண்டர்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் "சர்வாதிகாரத்தை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். சர்வாதிகார சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.

    மேலும், எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. " என பேசினார்.

    • பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது.
    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று 4 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8 முறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராகாத நிலையில் கெஜ்ரிவால் வீட்டுக்கு சோதனை வாரண்டுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. 31ம் தேதி சிறைக்கு திரும்ப வேண்டும் என கூறியது.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று 4 நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், சுப்ரீம் கோர்ட் எனக்கு 21 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. நாளை 21 நாட்கள் நிறைவடைய உள்ளது. நாளை மறுநாள் சரணடைய வேண்டும். நாளை மறுநாள் மீண்டும் திகார் சிறைக்குச் செல்வேன்.

    இந்த முறை எவ்வளவு காலம் சிறையில் அடைப்பார்கள் என தெரியவில்லை. ஆனால் என் உள்ளம் உயர்ந்தது. சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நான் சிறைக்கு செல்கிறேன். இதற்காக நான் பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • 10 வருட கால சாதனை ஆட்சியால் நாங்கள் மூன்றாவது முறையாக வென்றுள்ளோம்.
    • மோடியின் உரைக்கு இடையே மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து எதிர்க்கட்சியினர் முழக்கம்.

    மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    அந்த உரையில், "10 வருட கால சாதனை ஆட்சியால் நாங்கள் மூன்றாவது முறையாக வென்றுள்ளோம். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாக்களித்து வெற்றி பெறுவது என்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். மதச்சார்பின்மைக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.

    இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கொள்கைகளை வகுத்து வருகிறோம். தேசத்திற்கு அவசியமான சீர்திருத்தங்களை நாங்கள் நடைமுறைப் படுத்தியுள்ளோம். அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி என்பது எங்களது முதன்மையான தாரக மந்திரம்" என்று மோடி பேசி வருகிறார்.

    மோடியின் உரைக்கு இடையே மணிப்பூர், நீட் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்தும் சர்வாதிகாரத்தை நிறுத்துங்கள் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு இடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    இதற்கிடையே எதிர்க்கட்சியினர் அமைதியாக இருக்குமாறு மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கோபத்துடன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    • அதன்பின் நடந்த ரத்தக்களரியில் 500,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
    • தாரா மக்கள் நடத்திய போராட்டங்களில் போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது.

    ஆசாத் ஆட்சியின் வீழ்ச்சி 

    மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக அவரது குடும்பமே சிரியாவில் ஆட்சியில் இருந்தது.

    இதற்கிடையே அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பிரச்சனைகள், சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றை எதிர்த்து கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. ரஷியாவின் உதவியுடன் அப்போது தனது ஆட்சியை ஆசாத் காப்பற்றிக்கொண்டார்.

     

    அதிபர் பஷர் அல் ஆசாத் 

    உலக சக்தியான ரஷியாவின் உதவியுடன் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் அமைதியின்மை தொடரவே செய்தது. அதன் விளைவாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் முக்கிய நகரங்களையும் கடைசியாக டமாஸ்கஸ் உட்பட அலெப்போ, ஹமா, தாரா உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர். அதிபர் ஆசாத் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    'எஜாக் எல் டோர், யா டாக்டர்'

    2011 ஆம் ஆண்டு சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஒரு இளைஞனின் 14 வயது பள்ளிச் சிறுவனின் புரட்சிகரமான செயல் நாட்டின் தலைவிதியையே மாற்றியமைத்துள்ளது.2011 சிரியா உள்நாட்டு போரின் பிறப்பிடமாக விளங்கும் தாரா நகரத்தில் இந்த கதை தொடங்குகிறது.

    நாடு முழுவதும் மக்கள் மனதில் அடக்கி வைத்திருந்த எதிர்ப்பு சிறுவனின் கிராஃபிட்டி ஓவியமாக முதல் வடிவம் பெற்றது. தாரா நகரை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவன் மௌவியா சியாஸ்னே, அதிபர் ஆசாத் உடைய புகைப்படத்தைப் பள்ளி சுவரின் கிராஃபிட்டி ஓவியமாக வரைந்து அவரின் மருத்துவ பட்டத்தை குறிப்பிட்டும் வகையில்  ['எஜாக் எல் டோர், யா டாக்டர்'] ['இது உங்களின் முறை டாக்டர்'] என்று எழுதுகிறான். இது உள்ளூர் காவல்துறையினரின் கண்ணில் படவே, மௌவியாவும் அவனது நண்பர்களும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். 

     

     26 நாட்கள்

     ஆசாத்தின் முகபாரத் [ரகசிய போலீஸ்] அவர்களைக் காவலில் வைத்து 26 நாட்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்துகிறார்கள். தாரா மக்கள் மத்தியில் இந்த செய்தி காட்டுதீ போல் பரவி கோபத்தை ஏற்படுத்துகிறது. சிறுவர்களை விடுதலை செய்யவேண்டி அவர்களின் பெற்றோர்களும், தாரா மக்கள் பலரும் நடத்திய போராட்டங்களில் போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறது.

    26 நாட்கள் சித்திரவதைக்குப் பின்னர் விடுதலையான சிறுவர்களின் படங்கள் சிரியா முழுவதும் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது. தாராவில் மட்டுமின்றி சிரியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மார்ச் 15, 2011 சிரியா முழுவதும் "எதிர்ப்பு தினம்" அனுசரிக்கப்படுகிறது. இது பின்னர் நாடு தழுவிய இயக்கமாக மாறுகிறது. அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

     

    கிளர்ச்சி > போராட்டம்  

     எதிர்த்து பேசுவோரைச் சிறையில் அடைத்தனர் அவ்வாறு அடைக்கப்பட்ட எண்ணற்றோரைச் சித்திரவதைக்கு உட்படுத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் ஆயுதங்களை ஏந்தி கிளர்ச்சியாளர்களாக மாறுகின்றனர்.

    அதன்பின் நடந்த ரத்தக்களரியில் 500,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 13 மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தனர்.

    ரஷியாவின் உதவியால் அப்போது தப்பிய ஆசாத் ஆட்சி தற்போது கடந்த வாரம் திடீரென புத்துயிர் பெற்ற கிளர்ச்சியால் ஒரே வாரத்தில் வீழ்ந்துள்ளது. இதனால் நேற்று வரை கிளர்த்தியாளர்கள் என்று குறிப்பிடப்பட்டவர்கள் இனி ஆட்சியாளர்கள் என்று குறிப்பிடப்படுவார்கள்.

     

    • சாய், வெள்ளை மாளிகையைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தது நீதித்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
    • அமெரிக்க ஜனாதிபதியையும் மற்றவர்களையும் படுகொலை செய்ய அவர் திட்டமிட்டார்.

    அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற இந்திய இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

    மே 22, 2023 அன்று வாடகை டிரக்கை மூலம் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா [20 வயது] முயற்சி செய்தார்.

    ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அரசை கவிழ்த்து ஹிட்லரின் நாஜி சர்வாதிகாரத்தை நிறுவுவதே அவரின் நோக்கமாக இருந்துள்ளது. 

    நீதிமன்ற ஆவணங்களின்படி, சட்டப்பூர்வ அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை பெற்ற சாய், தெலுங்கானாவின் சந்தாநகரைச் சேர்ந்தவர். சம்பவத்தன்று மிசோரி நகரின் செயின்ட் லூயிஸில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு வணிக விமானத்தில் பயணித்து,  மாலை 5:20 மணிக்கு டல்லஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய சாய், மாலை 6:30 மணிக்கு ஒரு டிரக்கை வாடகைக்கு எடுத்தார்.

    இரவு 9:35 மணிக்கு, ஹெச் ஸ்ட்ரீட் சந்திப்பில் உள்ள வெள்ளை மாளிகை மற்றும் ஜனாதிபதி பூங்காவை சுற்றிய தடுப்புகளில் சாய் அந்த டிரக்கை மோதியுள்ளார்.

    டிரக் இரண்டு முறை உலோகத் தடுப்புகள் மீது மோதியதால், புகைபிடித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து, சாய், வாகனத்தை விட்டு வெளியேறி, தனது பையில் இருந்து நாஜி ஸ்வஸ்திகா கொடியை வெளியில் எடுத்து, வெள்ளை மாளிகைக்கு முன்னால் காட்டியுள்ளார். அங்கு விரைந்த போலீஸ் அவரை கைது செய்தது.

    சாய், வெள்ளை மாளிகையைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தது நீதித்துறையின் விசாரணையில் தெரியவந்தது.

    நாஜி சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ, தேவைப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதியையும் மற்றவர்களையும் படுகொலை செய்ய அவர் திட்டமிட்டார் என்றும் மே 22 சம்பவத்திற்கு பல வாரங்களுக்கு முன்னதாகவே சாய் இந்தத் தாக்குதலை திட்டமிட்டதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.

    சாய், விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். எனவே சாய்க்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி Dabney L. Friedrich 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தற்போது தீர்ப்பளித்துள்ளார்.  

    ×