என் மலர்
நீங்கள் தேடியது "குவைத்"
- மத்திய கிழக்கு நாடு அரசியல் நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ளது.
- பெரும்பாலான அரசு வசதிகளை அடைய ஊழல் பரவுவதை ஊக்குவித்தது.
குவைத்தின் எமிர் ஷேக் அல்-சபா, தீவிர இஸ்லாமியவாதத்தின் அதிகரித்து வரும் செல்வாக்கு காரணமாக ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக பாராளுமன்றத்தை கலைப்பதாகவும், அரசியலமைப்பின் சில பகுதிகளை 4 ஆண்டுகள் வரை இடைநிறுத்துவதாகவும் அறிவித்துள்ளார்.
குவைத் எமிர் ஷேக் மிஷால் அல் அகமது அல் சபா நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தை நான்கு ஆண்டுகள் வரை இடைநிறுத்துவதாக அறிவித்ததை அடுத்து மற்றொரு மத்திய கிழக்கு நாடு அரசியல் நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ளது.
இதுதொடர்பாக, அமிர் ஷேக் அல்- சபா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசுகையில், "அரசை அழிக்க ஜனநாயகத்தை பயன்படுத்துவதை நான் அனுமதிக்க மாட்டேன்.
முந்தைய ஆண்டுகளில் குவைத் அனுபவித்த ஆரோக்கியமற்ற சூழல், பெரும்பாலான அரசு வசதிகளை அடைய ஊழல் பரவுவதை ஊக்குவித்தது.
துரதிர்ஷ்டவசமாக அது பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிறுவனங்களை அடைந்தது. இது நீதி அமைப்பைக் கூட பாதித்துள்ளது. இது மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் சரணாலயமாகும்.
எந்த உரிமையும் இன்றி மக்கள் பணத்தை ஊழல் செய்தவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் தக்க தண்டனை வழங்கப்படும்" என்றார்.
- கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.
- இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா-குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்துடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றுக்கான 2-வது ரவுண்டு ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
இந்த போட்டி தொடரில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை எதிர்கொள்கிறது.
இதில் இந்தியா வெற்றி பெற்றால் உலகக் கோப்பை 3-வது ரவுண்டுக்கு முதல் முறையாக முன்னேறும் வாய்ப்பு உருவாகும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் ஏற்கனவே இந்தியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் உதை வாங்கியிருந்த குவைத் அணி அதற்கு பதிலடி கொடுக்க கடுமையாக முயற்சிப்பார்கள்.
இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இந்த ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரை வெற்றியுடன் வழியனுப்பும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
39 வயதான சுனில் சேத்ரி இந்திய அணிக்காக அதிக கோல்கள் (94 கோல்) அடித்தவர் ஆவார். போட்டி குறித்து அவர் கூறுகையில் 'இது என்னை பற்றியோ எனது கடைசி ஆட்டத்தை பற்றியோ கிடையாது. எனது ஓய்வு குறித்து நான் மீண்டும், மீண்டும் பேச விரும்பவில்லை. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதே எங்களது முதன்மையான நோக்கம். அது எளிதாக இருக்க போவதில்லை. ஆனால் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எங்களுக்கு ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன். நாளைய (இன்று) ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் ஏறக்குறைய 3-வது சுற்றுக்கு தகுதி பெற்று விடுவோம். நான் ஓய்வு பெற்றாலும், இந்திய அணியின் அடுத்த சுற்று ஆட்டங்கள் எங்கு நடந்தாலும் நேரில் சென்று ஊக்கப்படுத்துவேன்' என்றார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கருத்து தெரிவிக்கையில், 'எனது ஒட்டுமொத்த விளையாட்டு மற்றும் பயிற்சியாளர் வாழ்க்கையில் இது மிகப்பெரிய தருணமாகும்.
150 கோடி இந்தியர்களை மகிழ்ச்சி அடைய செய்ய எங்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். அதனை நிறைவேற்ற நாங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இதில் நாங்கள் வெற்றி பெற்றால் அது இந்திய கால்பந்தின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.
இந்திய அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், குவைத் 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வி என 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
- இந்தியா- குவைத் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.
- இந்த போட்டியுடன் இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெற்றார்.
கொல்கத்தா:
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றுக்கான 2-வது ரவுண்டு ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் உலகக் கோப்பை 3-வது ரவுண்டுக்கு முதல் முறையாக முன்னேறும் வாய்ப்பு உருவாகும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இரு அணிகள் மோதிய போட்டி விறுவிறுப்பாக சென்றது. இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தனர். ஆனால் இறுதி வரை 2 அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் இந்த ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்த போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதன்மூலம் சர்வதேச போட்டியில் இருந்து சுனில் சேத்ரி விடைபெற்றார். போட்டி முடிந்து மைதானத்தை விட்டு செல்லும் போது கண்ணீருடன் வெளியேறினார். அவருக்கு ரசிகர்கள் பிரியா விடை கொடுத்தனர்.
முன்னதாக மைதானத்தை சுற்றி சுனில் சேத்ரிக்கு நன்றி தெரிவித்து பேனர்கள், பாதகைகளை ரசிகர்கள் ஏந்தி இருந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்திய வீரர்களில் அதிக போட்டிகளில் விளையாடி வீரர் சுனில். 151 போட்டிகளில் விளையாடி 94 கோல்களை பதிவு செய்துள்ளார். மேலும் 50 சர்வதேச கோல்கள் அடித்த முதல் இந்திய வீரர் சுனில் சேத்ரி ஆவார்.
- தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குவைத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குவைத்தில் கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தீ விபத்தில் இறந்தவர்களில் 40 பேர் இந்தியர்கள் என தகல் வெளியாகியுள்ளது.
தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து 90 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே, இந்தியர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் தமிழகத்தில் உள்ள நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
கட்டத்தில் சுமார் 150 பேருக்கும் அதிகமானோர் தங்கி இருந்துள்ளனர். விபத்தின்போது பலர் உயிர் தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதித்துள்ளதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பலர் உயிரிழந்தனர்.
- ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் என்று தகவல்.
தெற்கு குவைத்தை அடுத்த மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு கேரளாவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி இந்தியாவை சேர்ந்த 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
கிட்டத்தட்ட 195 பேர் வசித்து வந்த குடியிருப்பில் தீ விபத்தின் போது உடல் கருகியும், மூச்சுத்திணறியும் பலர் உயிரிழந்தனர். இதில் உடல் கருகியதை விட, மூச்சுத்திணறி உயிரிழந்தவர்கள் அதிகம் என தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. மீட்பு பணிகளில் 90-க்கும் அதிகமானோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் போது அங்குள்ள கள நிலவரம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
- விமானப்படை விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
- அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.
7 தமிழர்கள் உள்பட 45 இந்தியர்களை பலி கொண்ட குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்தியா கொண்டுவரப்பட்டன. இந்தியர்களின் சடலங்களை கொண்டு வந்த விமானப்படை விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
கொச்சியில் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு தனி வாகனம் மூலம் எடுத்து செல்லப்பட இருக்கிறது. இந்த நிலையில், உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேரளா பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியர்களின் உடல்களை எடுத்துவரும் விமானம் கேரளா வந்தடையும் முன்பே கொச்சி விரைந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்தார். மேலும், கொச்சி விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார்.
இதைத் தொடர்ந்து கொச்சி விமான நிலையம் வந்தடைந்த தமிழர்களின் சடலங்கள் தனி வாகனங்கள் மூலம் தமிழகம் கொண்டுவரப்படுகின்றன.
- இந்திய விமானப் படை விமானம் மூலம் இன்று கொச்சி கொண்டு வரப்பட்டது.
- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அஞ்சலி செலுத்தினார்.
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 தமிழர்கள் உள்பட 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேர் உடல்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் இன்று கொச்சி கொண்டு வரப்பட்டது.
கொச்சியில் இருந்து உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு தனி வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், கொச்சி விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் உடல்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரின் உடல்களும் கொச்சி விமான நிலையத்தில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிறகு, தமிழர்களின் உடல்கள் தனி வாகனம் மூலம் கொண்டுவரப்படுகிறது.
#WATCH | Ernakulam: Kerala CM Pinarayi Vijayan, MoS MEA Kirti Vardhan Singh and other ministers pay homage to the mortal remains of the victims of the fire incident in Kuwait, at Cochin International Airport. pic.twitter.com/LvcbBEmQm8
— ANI (@ANI) June 14, 2024
- அவர்களில் பலர் நிறுவனத்தில் கடந்த 27 வருடமாக வேலை செய்து வந்தனர்.
- இந்திய தூதரகதின் மூலம் இறந்தவர்களின் குடுமபத்துக்கு ரூ.8 லட்சம் நஷ்டஈடாக அனுப்பி வைக்கப்படும்.
குவைத்தில் 45 இந்தியர்கள் உட்பட 49 தொழிலாளர்களின் உயிரைப் பறித்த அடுக்குமாடி கட்டட தீவிபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த 45 இந்தியர்களில் கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சார்ந்த 7 பேர் மற்றும் டெல்லி உள்பட மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 14 பேர் அடங்குவர். இவர்களின் உடல்கள் தாயகம் கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்கிக்கொண்ட குடுமபத்தினர் கதறி அழும் காட்சிகள் காண்போரின் நெஞ்சை உலுக்கியது.
இந்நிலையில் இந்த விபத்துக்கு அந்த கட்டிடத்தில் தங்களது ஊழியர்களை தங்கவைத்த NBTC கட்டுமான நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிறுவனரும் கேரளவைச் சேர்ந்தவருமான கே.ஜி.ஆபிரகாம் பேசுகையில், எங்களை மன்னித்து விடுங்கள், தீவிபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் துரதிஷ்ட வசமானது.
உயிரிழந்தவர்களில் பலரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும், அவர்களில் பலர் எங்கள் நிறுவனத்தில் கடந்த 27 வருடமாக வேலை செய்து வந்தனர். அவர்களின் இழப்பை எண்ணி நான் எனது வீட்டில் கதறி அழுதேன். அவர்களாலேயே இந்த நிறுவனம் உருவானது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை NBTC நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.

இந்திய தூதரகதின் மூலம் இறந்தவர்க்ளின் குடுமபத்துக்கு ரூ.8 லட்சம் நஷ்டஈடாக அனுப்பி வைக்கப்படும். 4 வருட சம்பள பணம் இன்சுரன்ஸ் தொகையாக அவர்களிடம் வழங்கப்படும். மேலும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதைத்தவிர்த்து கேரள அரசு உயிரிழந்த அம்மாநிலத்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் நஷ்டஈடு அறிவிதுள்ளது. இதற்கிடையில் சார்ட் சர்கியூட் காரணமாவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- குவைத் நாட்டில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள்.
- பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.
குவைத்சிட்டி:
குவைத் நாட்டில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 12-ந்தேதி அந்நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.
பலியான இந்தியர்களில் கேளராவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர், ஆந்திரா-உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேர், ஒடிசாவைச் சேர்ந்த இருவர், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், பஞ்சாப், அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.
தமிழ்நாட்டை சேர்ந்த வீராசாமி மாரியப்பன் (தூத்துக்குடி), சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி (கடலூர்), சிவசங்கர் கோவிந்தன் (சென்னை ராயபுரம்) முகமது ஷெரீப் (திண்டிவனம்), கருப்பணன் ராமு (ராமநாதபுரம்), ராஜூ எபநேசன் (திருச்சி) , ரிச்சர்ட் ராய் (பேராவூரணி) ஆகியோர் இறந்தனர்.
பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு குவைத் அரசாங்கம் தலா 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 12.50 லட்சம்) இழப்பீடாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அரபு டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
- மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நீராட்டுபுரம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூஸ் முலக்கல் (வயது40). இவரது மனைவி லினி ஆபிரகாம் (38). இவர்களது குழந்தைகள் இரின் (14), இசாக் (9). மேத்யூஸ் மற்றும் அவரது மனைவி குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்தனர்.
இதனால் மேத்யூஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குவைத் அம்பாசியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். மேத்யூஸ் ராய்ட்டர்சில் உள்ள நிறுவனத்திலும், அவரது மனைவி லினி அல் அஹ்மதி கவர்னரேட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நர்சாகவும் பணியாற்றினர்.
அவர்களது குழந்தைகள் குவைத்தில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். விடுமுறை கிடைக்கும் போது கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு மேத்யூஸ் தனது குடும்பத்தினருடன் வந்து செல்வது வழக்கம். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்திருக்கிறார்.
பின்பு விடுமுறை முடிந்ததையடுத்து குவைத்துக்கு திரும்பினர். மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் நேற்று மாலை 4 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தங்களது வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். பின்பு 4 பேரும் வீட்டில் உள்ள படுக்கையறையில் படுத்து தூங்கியிருக்கின்றனர்.
அப்போது இரவில் அவர்களது வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்த அவர்கள், அறை முழுவதும் புகைமூட்டமான பிறகே எழுந்துள்ளனர். ஆனால் அறை முழுவதும் புகையாக இருந்ததால் அவர்களால் வெளியே வர முடிய வில்லை.
இதனால் மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏ.சி.யில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொந்த ஊருக்கு வந்திருந்த மேத்யூஸ் மறறும் அவரது குடும்பத்தினர், நேற்று மாலை 4 மணிக்கு தான் குவைத்துக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் இரவு 8 மணிக்கு தனது வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேரும் பலியாகினர்.
சொந்த ஊரிலிருந்து குவைத்துக்கு திரும்பிய 4 மணி நேரத்திலேய அவர்கள் பலியாகி விட்டனர். இது கேரளாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சகோதரியின் 59 வயதான மாமனார் ஆஞ்சநேயலு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
- அதிகாலை தனது கிராமத்திற்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ஆஞ்சநேயலுவை அடித்துக் கொண்டார்
குவைத்தில் பணியாற்றி வரும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த தந்தை ஒருவர் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உறவினரை விமானம் ஏறி வந்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது,
ஆந்திர பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேய பிரசாத். இவர் குவைத்தில் பணியாற்றி வரும் நிலையில் இவரின் 12 வயது மகள், ஒபுலவாரிப்பள்ளி கிராமத்தில் உள்ள மனைவியின் சகோதரி வீட்டுக்கு சென்றபோது அங்கு அந்த சகோதரியின் 59 வயதான மாமனார் ஆஞ்சநேயலு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் அலைபேசியில் கூறியுள்ளார். உறவினர் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை ஒரு முடிவுடன் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு வந்துள்ளார். அதன்படி கடந்த சனிக்கிழமை அதிகாலை தனது கிராமத்திற்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ஆஞ்சநேயலுவை அடித்துக் கொன்றுவிட்டு, அதே நாளில் குவைத் திரும்பினார்.
கொலையைத் தொடர்ந்து குவைத் சென்ற பிரசாத் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் தனது மகளின் புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறியதால் தான் கொலை செய்ததாக கூறியிருக்கிறார் . இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்வதற்கு ஆவன செய்து வருகின்றனர்.
- பிரதமர் மோடியின் இப்பயணத்தின் மூலம் இரு நாட்டு நட்புறவு மேலும் வலுப்பெறும்.
- கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் குவைத் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
வளைகுடா நாடான குவைத் நாட்டின் மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வரும் 21, 22 ஆகிய தேதிகளில் அரசுமுறை பயணமாக குவைத் செல்கிறார்.
அங்கு மன்னர் ஷேக் மெஷல் அல் அஹமது அல் ஜபர், குவைத் வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பட்டத்து இளவரசர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். அங்கு குவைத் வாழ் இந்தியர்களையும் சந்திக்கிறார்.
பிரதமர் மோடியின் இப்பயணத்தின் மூலம் இந்தியா-குவைத் இடையே பரஸ்பரம் நட்புறவு மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 1981-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி குவைத் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு தற்போதுதான் பிரதமர் மோடி செல்லவிருக்கிறார்.
சமீபத்தில் குவைத் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா அலி அல்-யாஹ்யா இந்தியா வருகை தந்தார். அப்போது தங்கள் நாட்டிற்கு வருமாறு அலி அல்-யாஹ்யா கேட்டுக் கொண்டார். இதையடுத்து பிரதமர் மோடியின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்துவதுடன், புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.