search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் தோல்வி"

    • ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று தொடங்கி உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்பு தூர் பாராளுமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் சிவகங்கை, வேலூர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.

    மாலையில் திருவண்ணா மலை தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளை சந்திக்கிறார். இந்த ஆலோசனையின் போது பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டுள்ளார்.

    அப்போது பலர் காரசாரமாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகள் சிறப்பாக செயல்படாவிட்டால் பதவியில் நீடிக்க முடியாது என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:-

    எப்போதுமே நடந்து முடிந்த ஒரு விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்காமல் அடுத்து நடக்கப்போவதை பற்றியே சிந்திக்க வேண்டும்.

    இதன்படி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நமக்கெல்லாம் மிகவும் முக்கியமான தேர்தலாகும். அதில் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் இப்போதே சிறப்பாக செயல்படத் தொடங்குங்கள்.

    கூட்டணி சரியாக அமையாத காரணத்தாலேயே தோற்றுப்போய் விட்டோம் என்று இங்கு பலரும் கூறியுள்ளீர்கள். வரும் காலங்களில் நீங்கள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத வகையில் கட்சி உரிய முயற்சிகளை மேற்கொள்ளும்.

    நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சரியாக செயல்படாத நிர்வாகிகள் மீது நிச்சயமாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீழ்மட்ட நிர்வாகிகளை மேல் மட்டத்தில் இருப்பவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் கீழ்மட்ட நிர்வாகிகள் சுறுசுறுப்போடு பணியாற்றுவார்கள். மக்கள் மனதை வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

    • எடப்பாடி பழனி சாமி மீதும் எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
    • தேர்தல் தோல்வி பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட அ.தி.மு.க. தேர்தலில் பின்னடைவை சந்தித்தது. பா.ஜ.க. கூட்டணி சில தொகுதியில் இரண்டாம் இடத்தை பிடித்ததால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி மீதும் எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அனைவரையும் மீண்டும் சேர்த்து கொண்டால் மட்டுமே அ.தி.மு.க. பழைய நிலைக்கு திரும்பி வலுப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்களும் கணித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து பாராளுமன்ற தொகுதி வாரியாக கட்சியினர் மாவட்ட செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ஆலோசனை நடத்த உள்ளார்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த முக்கிய பொறுப் பாளர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

    நாளை முதல் வருகிற 19-ந் தேதி வரை தொடர்ச்சியாக 26 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.

    நாளை முதல் 19-ந் தேதி வரை காலை 9 மணிக்கு தொடங்கும் ஆலோசனை கூட்டம் மாலை வரையில் நடைபெற உள்ளது.

    ஒவ்வொரு நாளும் 3 தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதன்படி நாளை (11-ந் தேதி) காலை 9 மணிக்கு சிவகங்கை பாராளுமன்ற தொகுதியினருடனும், 11 மணிக்கு வேலூர் நிர்வாகி களுடனும், மாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்கிறார். எந்தெந்த தொகுதிகளை சேர்ந்தவர்கள் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார்கள் என்பது பற்றிய விவரம் வருமாறு:-

    12-ந்தேதி-அரக் கோணம் தஞ்சை, திருச்சி, 13-ந்தேதி-சிதம்பரம், மதுரை, பெரம்பலூர். 15-ந்தேதி- நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி. 16-ந்தேதி-ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர். 17-ந் தேதி-தென்காசி, தேனி, திண்டுக்கல். 18-ந் தேதி-பொள்ளாச்சி, நீலகிரி, கோவை. 19-ந்தேதி-விழுப்புரம், கன்னியாகுமரி, தர்மபுரி.

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் என்ன? என்பதை கண்டறிய முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் முதல் கீழ் மட்ட நிர்வாகிகள் வரையில் உள்ள அனைவரிடமும் கருத்துக்களை கேட்க உள்ளார்.

    இதைத் தொடர்ந்து தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் தலைமை கழக செயலா ளர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி, பகுதி செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு களில் உள்ளவர்கள் என அனைவரும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

    இந்த கூட்டங்கள் முடிந்த பிறகு சென்னை உள்பட மீதமுள்ள தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

    இதன் பின்னர் தேர்தல் தோல்விக்கு காரணமான வர்கள் கண்டறியப்பட்டு அவர்கள மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    • வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொகுதி வாரியாக ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.
    • ஒவ்வொரு நாளும் 2 முதல் 3 தொகுதி நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் தோல்வி குறித்து வரும் 10ம் தேதி முதல் ஈபிஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    அதன்படி, வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை தொகுதி வாரியாக ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.

    10ம் தேதி காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், 11ம் தேதி சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

    ஒவ்வொரு நாளும் 2 முதல் 3 தொகுதி நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார்.

    ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்களிடம் தோல்விக்கான காரணங்களை கேட்டறியவுள்ளார்.

    • தொகுதி வாரியாக ஆய்வு நடத்தும்படி மேலிடம் உத்தரவிட்டது.
    • அறிக்கை தயார் செய்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்குகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாதது கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் கூட 2-ம் இடத்தையே பெற்றது. ஏற்கனவே இந்த தொகுதிகளில் நடத்தி இருந்த தேர்தலுக்கு முந்தைய ஆய்வுகள், கணிப்புகள் எல்லாம் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருந்தும் அந்த தொகுதிகள் கை நழுவியது எப்படி? என்று மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

    இதையடுத்து தொகுதி வாரியாக ஆய்வு நடத்தும்படி மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் ஆய்வு நடந்தது.

    இந்த கூட்டங்களில் வேட்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் அழைக்கப்பட்டு காரணங்கள் கேட்கப்பட்டது.

    தென் சென்னையில் கனகசபாபதி முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது கட்சி தேர்தல் செலவுக்காக வழங்கிய பணத்தை முறையாக விநியோகிக்கவில்லை. கோஷ்டிகளால் தேர்தல் வேலைகளில் உள்ளடி வேலைகளும் நடந்தன என்று பல்வேறு புகார்கள் கூறப்பட்டன.

    இதனால் சில தொகுதிகளில் நிர்வாகிகளிடையே மோதல், கைகலப்பு வரை நடந்தது. மாநிலம் முழுவதும் நடத்தப்படும் இந்த ஆய்வு கூட்டம் நாளையுடன் முடிவடைகிறது. தொகுதி வாரியாக தோல்விக்கான காரணம், நிர்வாகிகள் செயல்பாடு பற்றிய விரிவான அறிக்கை தயார் செய்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்குகிறார்கள்.

    நாளை மறுநாள் (6-ந் தேதி) பா.ஜனதா மாநில செயற்குழுக் கூட்டம் மதுரவாயல் ஸ்ரீவாரி மண்டபத்தில் நடக்கிறது. இதில் மாநில நிர்வாகிகள், அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்திலும் தேர்தல் தோல்வி தொடர்பாக விவாதிக்க திட்டமிட்டு உள்ளார்கள்.

    செயற்குழு கூட்டத்துக்கு பிறகு மாவட்ட வாரியாக தேர்தல் பணியில் புகாருக்கு ஆளான நிர்வாகிகள் பதவிகளை பறிக்க திட்டமிட்டுள்ளனர். செயற்குழு முடிந்ததும் இந்த வேலைகள் தொடங்கும் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.
    • மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தமிழக எல்லையோரம் உள்ள நகரி தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ரோஜா 3-வது முறையாக போட்டியிட்டார்.

    ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த ரோஜாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது என நகரி தொகுதியில் உள்ள அவருடைய சொந்த கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையும் மீறி ஜெகன்மோகன் ரெட்டி ரோஜாவுக்கு போட்டியிட வாய்ப்பளித்தார். நகரி தொகுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ரோஜா பிரசாரம் செய்தார்.

    பிரசாரத்தின் போது சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தார்.மேலும் அவர் தனது ஆட்சி காலத்திலும் சட்டமன்றம் மற்றும் பொதுக்கூட்டங்களிலும் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை விமர்சித்து வந்தார்.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரிடம் 40 ஆயிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் ரோஜா படுதோல்வி அடைந்தார்.

    ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    நடிகை ரோஜாவுக்கு திருப்பதி மற்றும் நகரி ஆகிய இடங்களில் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் ஆந்திர மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் மோதல் காரணமாக தொடர்ந்து ஆந்திராவில் பதட்டம் நிலவுவதால் ரோஜா நகரியில் உள்ள தனது வீட்டை காலி செய்து விட்டு சென்னை சென்றார்.

    அவர் தனது கணவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் மகன், மகளுடன் சென்னையில் உள்ள வீட்டில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    தேர்தல் தோல்வியால் ரோஜா ஆந்திராவில் உள்ள வீடுகளை காலி செய்து தமிழகத்துக்கு சென்றிருப்பது ஆந்திர மாநிலத்தில் பரப்பரப்பாக பேசப்படுகிறது.

    • பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டியிட்டது.
    • பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் தொடர்ந்து இருக்கும்.

    சென்னை:

    தேர்தலுக்கு தேர்தல் பா.ம.க. போடும் கூட்டணி கணக்கு அந்த கட்சிக்கு சில நேரங்களில் சாதகமாக அமைந்தாலும் பல நேரங்களில் பாதகமாக அமைந்து முதலுக்கே மோசம்போன கதையில் கட்சிக்கே சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தர்மபுரி தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் மற்ற கட்சிகளுக்கு போட்டியாகவே பா.ம.க. இல்லை.

    வாக்கு வங்கி அதிகம் உள்ள வடமாவட்ட தொகுதி களில் கூட பா.ம.க.வால் சாதிக்க முடியவில்லை. திண்டுக்கல் தவிர 9 தொகுதி களும் பா.ம.க.வுக்கு செல் வாக்கு மிக்க தொகுதிகள். இதில் காஞ்சீபுரத்தில் பா.ம.க. வேட்பாளர் ஜோதி 1 லட்சத்து 64 ஆயிரத்து 931 வாக்குகள் பெற்று 3-வது இடத்துக்கு சென்றார்.

    அரக்கோணம், ஆரணி, கடலூர் தொகுதிகளில் 3-வது இடத்துக்கு தள்ளப் பட்டது. கள்ளக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்று 4-ம் இடத்தை பெற்றது.

    10 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க. 18 லட்சத்து 77 ஆயிரத்து 490 வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட 10 தொகுதி களில் 6 தொகுதிகளில் பா.ம.க. டெபாசிட்டையும் இழந்தது. அதே போல் வாக்கு வங்கியும் 4.33 சதவீதமாக குறைந்துள்ளது.

    1989-ம் ஆண்டு முதல் முறையாக பா.ம.க. பாராளு மன்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டது. தனித்து போட்டியிட்டு 5.82 சதவீதம் வாக்குகளை பெற்று யானை சின்னத்தையும் தக்க வைத்தது. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் வாக்கு சதவீதத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களால் யானை சின்னத்தை இழந்தது.

    2016 சட்டமன்ற தேர்த லில் தனித்து போட்டியிட்டது. 2019 பாராளுமன்ற தேர்தலி லும், 2021 சட்டமன்ற தேர்த லிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. இதில் 2019 பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும் 5.42 சதவீத வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டது.

    கடந்த சட்டமன்ற தேர்த லில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிக ளில் வென்றது. ஆனால் வாக்கு சதவீதம் 3.8 சத வீதமாக குறைந்தது. இதற்கு காரணம் தேர்தலுக்கு தேர் தல் கூட்டணி மாறுவ தால் வன்னியர் சமூக ஓட்டு களும் முழுமையாக கிடைக்கவில்லை என்கி றார்கள்.

    இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர் தலில் யாருடன் கூட்டணி என்று எதிர்பார்த்த நிலையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது.

    கூட்டணி விசயத்தில் அ.தி.மு.க.வுடன் செல்ல வேண்டும் என்ற கருத்து பா.ம.க.வினரிடம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்பட்ட வெறுப் பில்தான் சொந்த கட்சியினர் வாக்குகளே முழு அளவில் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் ஏற்க னவே மாநில கட்சி அங்கீகா ரத்தை இழந்த நிலையில் மாம்பழம் சின்னத்தையும் இழக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு கூறியதாவது:-

    பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் தொடர்ந்து இருக்கும். தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு விதி 1968-பத்தி 10-ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் தெளிவாக தெரிவித்துள்ளது.

    பதிவாகும் மொத்த வாக்குகளில் ஒரு சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளை பெற்றிருந்தால் அந்த கட்சி முன்பு பயன்படுத்திய சின்னத்தை தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியோடு தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள எந்த தடையும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்ற தலைமையின் ஒரு தலைபட்ச முடிவுதான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்று புகார் தெரிவித்து உள்ளார்கள்.
    • கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்து வருவதால் தலைமையில் மாற்றம் வருமா? என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அ.திமு.க.வுடன் கூட்டணி அமைத்து இருந்தால் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றிருக்க முடியும். இதை அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகளே உறுதிப்படுத்தியது.

    இதனால் இரு கட்சிக்குள்ளும் தொண்டர்கள் ஆதங்கப்படுகிறார்கள். கூட்டணி முறிவுக்கு கட்சி தலைமையை குற்றம் சாட்டுகிறார்கள்.

    அண்ணாமலையின் தவறான முடிவுதான் கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். அதற்கும் உடனடியாக பதிலளித்த அண்ணாமலை "அ.தி.மு.க.வை மக்கள் நிராகரித்து விட்டதாக" கூறினார்.

    அடுத்து வரும் தேர்தலிலாவது இந்த கூட்டணி அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலையில் அண்ணாமலையின் கருத்து மீண்டும் அ.தி.மு.க.வினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது" என்று அதிரடியாக அறிவித்தார்.

    தேர்தலில் பா.ஜ.க. 23 இடங்களில் போட்டியிட்டது. அதில் 11 இடங்களில் டெபாசிட்டை பறி கொடுத்தது. நாகையில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதே போல் இந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த த.மா.கா., ஐ.ஜே.கே., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் 10 இடங்களில் டெபாசிட் வாங்கவில்லை.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்ற தலைமையின் ஒரு தலைபட்ச முடிவுதான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்று புகார் தெரிவித்து உள்ளார்கள்.

    பா.ஜ.க. அறிவுசார் அணியின் பொறுப்பாளர் கல்யாணராமன், "அண்ணாமலை கட்சி மேலிடத்தை தவறாக வழி நடத்துகிறார்" என்று குற்றம் சாட்டினார்.

    தற்போதும், 2014 தேர்தலில் பா.ஜ.க. 5.56 சதவீத வாக்குகள் பெற்றிருந்த நிலையில் தற்போது தனது தலைமையில் 11.24 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக அண்ணாமலை மேலிடத்துக்கு தெரிவித்துள்ளார்.

    இதுவே தவறு. 2014 தேர்தலில் பா.ஜ.க. 9 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. அந்த கணக்குப்படி பார்த்தால் இந்த தேர்தலில் 14.25 சதவீதம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் 11 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இப்படி எல்லாமே தவறான வழிகாட்டல்தான்.

    ஒரு மனிதர் செய்த தவறுகளுக்கு சிறிதளவேணும் தார்மீக பொறுப்பை ஏற்க வேண்டும். ராஜினாமா செய்யலாம். அல்லது குறைந்தபட்சம் ராஜினாமா செய்யப்போவதாக நாடகமாவது ஆடலாமே என்றார்.

    கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்து வருவதால் தலைமையில் மாற்றம் வருமா? என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

    • 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது.
    • அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி ஆகிய 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

    மேலும் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், தேனி, ராமநாதபுரம், வேலூர், தென்சென்னை, புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் சேலம் வடக்கு தொகுதியை தவிர மற்ற 10 சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வசம் உள்ளது. அப்படி இருந்தும் சேலம் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.

    அதேபோல் கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் குறைந்த வாக்குகள் பெற்றிருந்தார்.

    இதையடுத்து முதல் கட்டமாக சேலம், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (8-ந்தேதி) ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இதில் தோல்விக்கான காரணம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இதனால் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    • தேர்தல்களில் வெல்ல கூட்டணி என்பது வியூகம் தான்.
    • தேர்தலில் வியூகம் அமைப்பதில் கோட்டை விட்டோம் என்பது உண்மை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினரிடையே கடும் அதிர்ச்சியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    இரு கட்சி கூட்டணியும் உடையாமல் இருந்திருந்தால் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்க முடியும் என்ற கருத்து இரு கட்சியினரிடமும் உள்ளது.

    அண்ணாமலையின் அணுகுமுறை சரியில்லாத தால் தான் கூட்டணி அமையவில்லை என்று அ.தி.மு.க. குற்றம்சாட்டி உள்ளது.

    இதற்கிடையில் அ.தி.மு.க.வை மக்கள் நிராகரித்து விட்டதாக அண்ணாமலை மீண்டும் தெரிவித்து இருப் பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் தென் சென்னை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களம் இறங்கி வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

    கூட்டணி பலமாக இருந்திருந்தால் வென்று இருப்போம் என்பது யதார்த்தமான உண்மை. தி.மு.க. மீது கடுமையான அதிருப்தி இருந்தும் வெற்றிபெற வழி வகுத்து விட்டோம். எதிரணி பிரியாமல் இருந்திருந்தால் அவர்களால் வென்று இருக்க முடியாது.

    தேர்தல்களில் வெல்ல கூட்டணி என்பது வியூகம் தான். அந்த வியூகத்தை உடைக்கவும் முயற்சிப்பார் கள். அதையெல்லாம் வென்று வியூகம் அமைத்தால் வெல்ல முடியும். இந்த தேர்தலில் வியூகம் அமைப்பதில் கோட்டை விட்டோம் என்பது உண்மை.

    கட்சி வளர்ந்து இருக்கலாம். சந்தோசம். அதை நினைத்து கொண்டாடுவதா? அல்லது அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. வென்றதை நினைத்து வருத்தப்படுவதா?

    என்னதான் கட்சி வளர்ந்து இருந்தாலும் தமிழகத்தில் இருந்து நமது பிரதி நிதிகள் யாரும் இல்லை என்பது வருத்தம்தானே. வென்று இருந்தால் மந்திரி பதவிகள் கிடைத்து இருக்கும். அதன் மூலம் மக்கள் பணி மேற்கொண்டிருக்கலாம். அதனால் கட்சி மேலும் வளர்ந்து இருக்கும்.

    கூட்டணி வேண்டாம் என்று மறுபடி மறுபடி எதிரணியை வெற்றி பெற வைப்பது சரியான தேர்தல் வியூகம் அல்ல. 2026 தேர்தலை பற்றி இப்போதே பேச வேண்டிய அவசியமில்லை. அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருக்கிறதா? இல்லையா? எதிர்காலத்தில் அமையுமா? என்றெல்லாம் யாரும் கருத்து சொல்ல முடியாது. ஏனெனில் கூட்டணி பற்றி முடிவெடுக்க வேண்டியது தேசிய தலைமைதான்.

    தேர்தலில் நான் தோற்றது எதிர்பாராதது. பிரசாரத்தின் போது மக்கள் காட்டிய ஆதரவையும் தி.மு.க. மற்றும் அதன் வேட்பாளர் மீது மக்கள் வெளிப்படுத்திய வெறுப்பையும் நேரடியாக பார்த்தேன்.

    தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் பெண்களுக்கான ரூ.1000 உதவித்தொகையை வங்கி கணக்கில் போட்டார்கள். மீனவர்களுக்கான ரூ.8 ஆயிரம் உதவித் தொகையையும் 17-ந்தேதி வங்கி கணக்கில் செலுத்தி இருக்கிறார்கள்.

    இன்னும் அதிகமான வாக்குகள் பெற்றிருப்பேன். ஒருவேளை வெல்ல முடியும் என்று நினைத்திருந்தேன்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • அண்ணாமலையின் தோல்வியை பா.ஜ.க.வினரால் ஜீரணிக்க முடியவில்லை.
    • பாராளுமன்ற தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு பாதகமாகவே கருதப்படுகிறது.

    கோவை:

    தென்இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை கொங்கு மண்டலத்தின் தலைநகர் போல் திகழ்கிறது. சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரான கோவை எந்தவொரு பொதுத்தேர்தல் வந்தாலும் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும் நகரமாக மாறி விடுகிறது.

    இதற்கு காரணம் நடந்து முடிந்த பல தேர்தல்களும், தற்போது நடந்துள்ள 18-வது பாராளுமன்ற தேர்தலுமே சாட்சி. கடந்த பல ஆண்டுகளாக கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல நகரங்கள் அ.தி.மு.க.வின் கோட்டையாகவே பார்க்கப்பட்டு வந்தது.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது கொங்கு மண்டலங்களில் பெற்ற வெற்றி தான் முக்கிய காரணம் ஆகும்.

    ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த 2021-ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. தமிழகம் முழுவதும் தி.மு.க. பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தாலும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க.வால் வெற்றி பெற முடியவில்லை. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 9-ல் அ.தி.மு.க.வும், 1-ல் அதன் கூட்டணி கட்சியாக இருந்த பா.ஜ.க.வும் வெற்றி பெற்றன.

    அதன்பிறகு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கவனம் முழுக்க கோவை பக்கம் திரும்பியது. ஆட்சி பொறுப்பேற்றதும் கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார். அதன்பலனாக உள்ளாட்சித் தேர்தலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.

    தமிழகத்தில் பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான கோவையை தி.மு.க. கைப்பற்றியது. மாவட்டத்தில் பெரும்பாலான உள்ளாட்சி இடங்களை தி.மு.க.வே பிடித்தது.

    அதைத்தொடர்ந்து தான் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானது. கோவை பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் தமிழக தலைவர் அண்ணாமலை களமிறக்கப்பட உள்ளதை முன்கூட்டியே அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி வியூகங்களை அமைத்தார்.

    பல ஆண்டுகளாக கோவை பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வின் கூட்டணிகளிடமே இருந்தது. இந்த முறை எதிரணியான பா.ஜ.க. கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக கோவையை கம்யூனிஸ்டு கட்சியிடம் இருந்து தி.மு.க. கேட்டுப்ெபற்றது. அதற்கு பதிலாக திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. விட்டுக் கொடுத்தது. கோவையில் பா.ஜ.க.வை எதிர்த்து களம் காண தி.மு.க. தயாரானது.

    தி.மு.க. சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவியது. மூத்த தலைவர்கள் பலர் முட்டிமோத யாரும் எதிர்பாராத வகையில் கணபதி ராஜ்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர் அறிவிக்கப் பட்டதும் தி.மு.க.வின ரிடையே திடீர் சலசலப்பு ஏற்பட்டது. காரணம் கணபதி ராஜ்குமார், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சமீபத்தில் தான் தி.மு.க.வில் சேர்ந்தவர். அண்ணாமலையை எதிர்த்து போட்டியிட இவர் வலுவான வேட்பாளர் இல்லை, சாதாரண வேட்பாளரை நிறுத்தி விட்டனர் என்றெல்லாம் பேசப்ப ட்டது.

    ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. கணபதி ராஜ்குமார் கோவை மாநகராட்சி மேயராக பணியாற்றியவர். மக்களுடன் நெருங்கி பழகியவர். அவர்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்தவர். ஏற்கனவே பழக்கப்பட்ட முகம் என்பதால் எளிதில் மக்களை அடைந்து விடுவார் என எண்ணினார். மேலும் அ.தி.மு.க.வில் இருந்து வந்த அவர் எதிரணியின் பலவீனங்களையும் நன்கு அறிந்தவர். இதுவும் வெற்றிக்கு சாதகமாக அமையும் என்று கருதினார்.

    மு.க.ஸ்டாலினின் வியூகத்தை உணர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கணபதி ராஜ்குமாருடன் கைகோர்த்தனர். கோவைக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள முத்துசாமியுடன் கூடுதலாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் களமிறக்கப்பட்டார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆலோசனைப்படி அவர் கோவையிலேயே முகாமிட்டு தேர்தல் பணியை மேற்கொண்டார். அவரது பிரசார வியூகமே புது விதமாக இருந்தது.

    ஓட்டுக்களை கொத்து, கொத்தாக அள்ளுவதே அவரது குறிக்கோளாக இருந்தது. இதற்காக தொழில்துறையினர், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்டினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தனது கடைசி கட்ட பிரசாரத்தை கோவையில் தான் அமைத்திருந்தார்.

    தி.மு.க. நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி களப்பணியாற்றச் செய்தார். இவ்வாறு அமைக்கப்பட்ட பல்வேறு வியூகங்கள் தான் இன்று கோவை தொகுதியில மாபெரும் வெற்றியை தி.மு.க.வு க்கு பெற்று தந்துள்ளது.

    ஒரு கட்டத்தில் அண்ணாமலை என்ற பெயர் கோவை முழுக்க எதிரொலிக்க அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் 3 முறை பிரசாரம் செய்தார். அப்போது தி.மு.க.வினர் சற்று தடுமாற வெற்றி நமக்கு தான், தைரியமாக பணியாற்றுங்கள் என்று கூறி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உற்சாகப்படுத்தினார்.

    தேர்தல் முடிந்த கையோடு தி.மு.க. நிர்வாகிகள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து கருத்து கேட்டார். வெற்றி உறுதி என்று நிர்வாகிகள் சொன்னதும் அனைவரையும் அவர் பாராட்டினார்.

    இவ்வாறு பல்வேறு அதிரடி வியூகங்கள் அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணாமலையை வீழ்த்தியே விட்டார். 28 ஆண்டுகளுக்கு பின் கோவை தொகுதியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது.

    இதற்கிடையே அண்ணாமலையின் தோல்வியை பா.ஜ.க.வினரால் ஜீரணிக்க முடியவில்லை. அண்ணாமலை பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது.

    கோவை தொகுதிக்கென தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அவரை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் என பலரும் பிரசாரம் மேற்கொள்ள எப்படியும் அண்ணாமலை வெற்றி பெற்று விடுவார் என்றே பா.ஜ.க.வினர் கருதி வந்தனர். ஆனால் தி.மு.க. வேட்பாளரிடம் அண்ணாமலையை தோல்வியை தழுவி விட்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

    தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை, விலையில்லா பஸ் பயண திட்டம் ஆகியவை தி.மு.க.வுக்கு கைகொடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தனியே நின்றது அண்ணாமலையின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். கோவை தொகுதியில் உள்ள சிறுபான்மையின மக்களின் மொத்த வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு சென்று விட்டன. ஊரகப்பகுதியில் தி.மு.க.வுக்கு நல்ல வாக்குகள் கிடைத்துள்ளது.

    2026 சட்டசபை தேர்தல் களம் இளைஞர்களின் காலமாக இருக்கும். அந்த தேர்தலில் அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய் என பலரும் தேர்தல் களத்தில் நிற்பார்கள். அண்ணாமலைக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனை ஏற்க மறுக்கும் பா.ஜ.க.வினர், தங்களுக்கு அதிக வாக்கு கிடைக்கும் தொகுதியான கவுண்டம்பாளையத்தில் பா.ஜ.க. ஆதரவு வாக்காளர்களின் பெரும்பாலானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தங்களுக்கு பின்னடைவாக அமைந்ததாக தெரிவிக்கின்றனர்.

    இதுஒருபுறம் இருக்க பாராளுமன்ற தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கு பாதகமாகவே கருதப்படுகிறது. மாவட்டத்தில் 9 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் அ.தி.மு.க. வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரனால் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

    இதுவரை கோட்டை என வர்ணிக்கப்பட்ட இடத்தில் ஓட்டை விழுந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் அ.தி.மு.க.வை வசைபாடு கிறார்கள்.

    இதேபோல நீலகிரி தொகுதியிலும் அ.தி.மு.க. 3-வது இடத்தையே பெற்றுள்ளது. இந்த தோல்வி அ.தி.மு.க. தொண்டர்களிடை யே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×