search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்ஸோ"

    • சேதன் என்ற 24 வயது இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.
    • சிறுமிக்கு 18 வயதுக்கு பூர்த்தியான பின்பு அப்பெண்ணை சேதன் திருமணம் செய்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் பூந்தி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு சேதன் என்ற 24 வயது இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

    சிறுமியை காணவில்லை அவரது அப்பா கொடுத்த பேரில் வழக்கு பதிந்த காவல்துறை ஒரு மாதத்திற்கு பிறகு சிறுமியை மீட்டு, சேதனை கைது செய்தது.

    பின்னர் ஜாமினில் வெளியே வந்த சேதன் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியான பின்பு 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு பூந்தி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட சேதனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 80,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக அவருக்கு 4 லட்சம் ரூபாயை குற்றவாளி கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    • இந்த பாலியல் உறவினால் அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது
    • நீதிபதியின் இந்த முடிவு தவறான உதாரணமாக அமையும் என்ற கருத்துக்கள் எழத்தொடங்கியுள்ளன.

    சமீப காலமாக கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கி வரும் தீர்ப்புகள் கவனம் பெற்று வருகிறது. குழந்தை ஆபாசப் படங்கள் பார்ப்பது குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கி அது  சர்ச்சையான பின்னர்  தீர்ப்பை உடனே திரும்பப்பெற்ற நிலையில் தற்போது போக்ஸோ வழக்கு ஒன்றில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பேசுபொருளாகியுள்ளது.

    தனது 16 வயது மகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக தாய் ஒருவர் கடநத 2023 ஆம் ஆண்டு நபர் ஒருவரின் புகார் அளித்திருந்தார். இந்த பாலியல் உறவினால் அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் தாயின் புகாரை அடுத்து அந்த நபர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்ட நிலையில் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தற்போது 18 வயதை எட்டிய நிலையில் பாலியல் வன்கொடுமை  அந்த நபரே பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். எனவே இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகப்பிரசன்னா, பாதிக்கப்பட்ட பெண்ணின் நலத்தையும் அவளது குழந்தையின் நலத்தையும் கருத்தில் கொண்டு அந்த நபர் மீதான போக்ஸோ வழக்கை முடித்து வைத்துள்ளார். தற்போது சிறையில் உள்ள நபர் விவரில் விடுவிக்கப்பட உள்ளார். நீதிபதியின் இந்த முடிவு தவறான உதாரணமாக அமையும் என்ற கருத்துக்கள் எழத்தொடங்கியுள்ளன.

     

    • மாற்றுத் திறனாளி நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
    • பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அந்த தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்

    ராஜஸ்தானில் போக்ஸோ வழக்கில் போலீஸ் கஸ்டடியில் இருந்த நபர் தனது பிறப்பு உறுப்பை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 35 வயதான அப்துல் வாசித் என்னும் மாற்றுத் திறனாளி நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு, தான் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் இருந்த அப்துல் வாசித், காவல் நிலைய கழிவறைக்குச் சென்று தனது பையில் வைத்திருத்த கூர்மையான பொருளை வைத்து தனது பிறப்பு உறுப்பை அறுத்துத் துண்டித்துக் கொண்டுள்ளார்.

    போலீஸ் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அவர் உயிர்பிழைத்தார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அந்த தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    ×