search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூரோ கோப்பை கால்பந்து"

    • நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.
    • நாக் அவுட்டான 2-வது சுற்று 29-ந் தேதி தொடங்குகிறது.

    ஹம்பர்க்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. குரூப் எப் பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    ஒரு ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 0-2 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. அந்த அணிக்காக குவரட்ஸ் கெலியா (2-வது நிமிடம்), மிகுடாட்ஸ் (57-வது நிமிடம், பெனால்டி) கோல் அடித்தார். இந்த வெற்றி மூலம் ஜார்ஜியா 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது. போர்ச்சுக்கல் ஏற்கனவே தகுதி சுற்று இருந்தது. அந்த அணி 6 புள்ளியுடன் எப் பிரிவில் முதல் இடத்தை பிடித்தது.

    இதே பிரிவில் ஹம்பர்க்கில் நடந்த மற்றொரு போட்டியில் துருக்கி 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசுவை வீழ்த்தியது. துருக்கி அணிக்காக சல்ஹா னோக்லு (51-வது நிமிடம்) டாசுன் (94-வது நிமிடம்) ஆகியோரும், செக் குடியரசு அணியில் தாமஸ் சவுசக்கும் (66-வது நிமிடம்) கோல் அடித்தனர். இந்த வெற்றி மூலம் துருக்கி 6 புள்ளிகளு டன் 2-வது இடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. செக் குடியரசு 1 புள்ளியுடன் வெளியேறியது.

    முன்னதாக இ பிரிவில் ருமேனியா- சுலோவாக்கியா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. பெல்ஜியம்- உக்ரைன் அணிகள் மோதிய போட்டியும் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

    'இ' பிரிவில் 4 அணிகளும் 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வியுடன் தலா 4 புள்ளிகள் பெற்றன. கோல்கள் அடிப்படையில் ருமேனியா, பெல்ஜியம், சுலோவாக்கியா முறையே முதல் 3 இடங்களை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறின. உக்ரைன் வெளியேற்றப்பட்டது.

    நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. நாக் அவுட்டான 2-வது சுற்று 29-ந் தேதி தொடங்குகிறது.

    • டென்மார்க்-செர்பியா அணிகள் மோதிய போட்டியும் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
    • பிரான்ஸ்-போலந்து அணிகள் மோதிய மற்றொரு போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    முனிச்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

    குரூப் 'சி' பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இங்கிலாந்து-சுலொவேனியா அணிகள் மோதிய ஆட்டமும், டென்மார்க்-செர்பியா அணிகள் மோதிய போட்டியும் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.

    இங்கிலாந்து அணி 1 வெற்றி, 2 டிராவுடன் 5 புள்ளிகள் பெற்று சி பிரிவில் முதல் இடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது. டென்மார்க் 3 டிராவுடன் 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    மற்ற பிரிவுகளில் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகளின் நிலையை பொறுத்து சுலோவெனியா இருக்கிறது. அந்த அணிக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. செர்பியா வெளியேற்றப்பட்டது.

    முன்னதாக 'டி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஆஸ்திரியா 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதே பிரிவில் பிரான்ஸ்-போலந்து அணிகள் மோதிய மற்றொரு போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

    ஆஸ்திரியா 6 புள்ளியும், பிரான்ஸ் 5 புள்ளியும், நெதர்லாந்து 4 புள்ளியும் பெற்று முதல் 3 இடங்களை பிடித்து 2-வது சுற்றில் நுழைந்தன.

    இன்று நடைபெறும் ஆட்டங்களில் இ பிரிவில் உள்ள ருமேனியா- சுலோவாக்கியா, பெல்ஜியம்- உக்ரைன் (இரவு 9.30) , எப் பிரிவில் இருக்கும் போர்ச்சுக்கல்-ஜார்ஜியா, துருக்கி- செக் குடியரசு (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.

    • குரூப் டி-ல் ஆஸ்திரியா அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
    • குரூப் டி-ல் பிரான்ஸ் அணி 2-வது இடத்தையும், போலந்து அணி 4-வது இடத்தையும் பிடித்தன.

    24 அணிகள் இடையிலான 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் - போலந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    இதன் மூலம் குரூப் டி-ல் பிரான்ஸ் அணி 2-வது இடத்தையும், போலந்து அணி 4-வது இடத்தையும் பிடித்தன.

    மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து - ஆஸ்திரியா அணிகள் மோதியது. 6-வது நிமிடத்தில் ஆஸ்திரியா தனது முதல் கோலை அடித்தது. அதனை தொடர்ந்து நெதர்லாந்து 47-வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து அசத்தியது. அதனை தொடர்ந்து 59-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவும் 75-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியிம் கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பானது.

    அடுத்த சிறிது நேரத்தில் (80-வது நிமிடம்) ஆஸ்திரியா ஒரு கோல் போட்டு அசத்தியது. இறுதி வரை நெதர்லாந்து அணியால் அடுத்த கோலை அடிக்க முடியவில்லை. இதனால் 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியா வெற்றி பெற்றது. மேலும் குரூப் டி-ல் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

    • லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • இரு போட்டிகளில் ஹங்கேரி தோல்வியை தழுவி இருந்தது.

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

    லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பிடிக்கும் நான்கு அணிகள் என மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதன்படி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் ஹங்கேரி அணிகள் இடையிலான போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

    நடப்பு யூரோ கோப்பையின் முதல் இரு போட்டிகளில் தோல்வியை தழுவிய ஹங்கேரி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்று வாய்ப்பை எதிர்பார்க்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. ஸ்காட்லாந்து அணியும் இதேபோன்ற சூழலில் போட்டியில் களமிறங்கியது.

    அந்த வகையில், இரு அணிகளும் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. எனினும், போட்டி முடிய பத்து நிமிடங்கள் இருந்த சமயத்தில் ஹங்கேரி வீரர் கெவின் சோபோத் கோல் அடிக்க அந்த அணி முன்னேற்றம் கண்டது.

    போட்டி முடிவில் ஸ்காட்லாந்து அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஹங்கேரி அணி 1-0 என்ற வகையில் வெற்றி பெற்றது. 

    • துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.
    • பெல்ஜியம் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    யூரோ 2024 கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று போட்டிகளில் பெல்ஜியம் மற்றும் ரோமானியா அணிகள் மோதின. இந்த தொடரின் முதல் போட்டியில் ஸ்லோவேகியா அணியிடம் தோல்வியை தழுவி இருந்த பெல்ஜியம் அணி இந்த போட்டியில் துவக்கம் முதலே அதிரடியாக விளையாட ஆரம்பித்தது.

    இந்த போட்டியில் பெல்ஜியம் வீரர் 73 நொடியில் அடித்த கோல் அந்த அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெல்ஜியம் அணி துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது.

    மறுமுனையில், பெல்ஜியம் அடித்த கோலுக்கு பதில் கோல் அடிக்க ரோமானிய வீரர்கள் முனைப்பு காட்டினர். எனினும், இவர்களின் முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து பெல்ஜியம் அணி அதிரடியாக ஆடியது.

    போட்டி முடிய பத்து நிமிடங்கள் இருந்த சூழலில் பெல்ஜியம் அணியின் டெ ப்ரூன் மற்றொரு கோல் அடித்தார். இதன் மூலம் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலையை தொடர்ந்தது. போட்டி முடிவில் ரோமானியா அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இதன் காரணமாக பெல்ஜியம் அணி 2-0 என வெற்றி பெற்றது.

    • ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் ஆதிக்கம் செலுத்தின.

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்த தொடரில் நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் ஆதிக்கம் செலுத்தின. இருப்பினும் இரு அணி வீரர்களாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 0-0 என ஆட்டம் டிராவில் முடிந்தது.

    • இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
    • ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் குரூப் 'சி' பிரிவில் உள்ள டென்மார்க் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் டென்மார்க் அணி வீரர் மோர்டன் ஹூல்மண்ட் ஒரு கோல் அடித்தார்.

    இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கடைசி வரை போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக ஒரு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.

    • ஸ்பெயிண் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
    • இத்தாலி அணி அடுத்த போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் குரூப் "பி"-யில் இடம் பிடித்துள்ள இத்தாலி- ஸ்பெயின் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் ஸ்பெயின் அணி வீரர் ரிக்கார்டோ கலாஃபியோரி ஒரு கோல் அடித்தார்.

    இதன்பின் இத்தாலி அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஸ்பெயிண் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இத்தாலி அணி அடுத்த போட்டியில் குரோஷியாவை எதிர்கொள்கிறது.

    • குரூப் ‘சி’ பிரிவில் நடைபெற்ற போட்டியில் டென்மார்க்- ஸ்லோவேனியா அணிகள் மோதின.
    • ஆட்டத்தின் முதல் பாதியில், 17-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சென் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் நேற்று குரூப் 'சி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் டென்மார்க்- ஸ்லோவேனியா அணிகள் மோதின.


    ஆட்டத்தின் முதல் பாதியில், 17-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சென் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். இதற்கு ஸ்லோவேனியா அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் டென்மார்க் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

    ஆட்டத்தின் 2-வது பாதியில் ஸ்லோவேனியா வீரர் எரிக் ஜான்சா 77-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, ஆட்டத்தை சமனுக்கு கொண்டுவந்தார். அதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் டிரா ஆனது.

    • போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது.
    • ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ருடிகர் செய்த தவறால் ஸ்காட்லாந்துக்கு ஒரு கோல் கிடைத்தது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெர்மனியும் ஸ்காட்லாந்தும் மோதின.

    இந்தப் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜெர்மனியில் ஃப்ளேரியன், முசைலா 10 மற்றும் 19-வது நிமிடங்களில் கோல் அடித்தனர். இதனால் ஸ்காட்லாந்து அணி வீரர் ரியான் போர்டியஸ் ஆக்ரோஷமாக விளையாடியதால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதனால், ஜெர்மனிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் ஹவர்ட்ஸ், நிக்லஸ், கேன் தலா ஒரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ருடிகர் செய்த தவறால் ஸ்காட்லாந்துக்கு ஒரு கோல் கிடைத்தது.

    அதன் பின் போட்டி நேரமான 90 நிமிடங்கள் முடிவடைந்து கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. அதில் ஜெர்மனி தனது ஐந்தாவது கோலை அடித்தது. அந்த அணியின் எம்ரே கேன் ஐந்தாவது கோலை அடித்தார். இதன் மூலம் 5 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி ஜெர்மனி அபார வெற்றியை பெற்றது.

    ×