என் மலர்
நீங்கள் தேடியது "மாளவிகா பன்சாத்"
- அமெரிக்காவின் டெக்சாசில் யு.எஸ். ஓபன் பேட்மிண்டன் தொடர் நடக்கிறது.
- இதில் பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்திய வீராங்கனை தோல்வி அடைந்தார்.
டெக்சாஸ்:
அமெரிக்காவின் டெக்சாசில் யு.எஸ். ஓபன் பேட்மிண்ட்ன் தொடர் நடைபெறுகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஜப்பான் வீராங்கனை நட்சுகி நிடைரா உடன் மோதினார்.
இதில் மாளவிகா 16-21, 13-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து வெளியேறினார். இந்தப் போட்டி சுமார் 43 நிமிடங்கள் நடந்தது.
- சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பன்சோத் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் மாளவிகா பன்சோத், இந்தோனேசிய வீராங்கனை துங்ஜங்கை எதிர்கொண்டார்.
இதில் பன்சோத் 26-24, 21-19 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் 2வது சுற்றில் பன்சோத், ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோருடன் மோத உள்ளார்.
- சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பன்சோத் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஸ்காட்லாந்து வீராங்கனை கில்மோரை எதிர்கொண்டார்.
இதில் பன்சோத் 21-17, 19-21, 21-16 என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் பன்சோத், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் மோதுகிறார்.
- சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பன்சோத் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சியுடன் மோதினார்.
இதில் பன்சோத் 10-21, 16-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய வீராங்கனை பன்சோத் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
வான்டா:
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதல் ஆட்டத்தின் இந்தியாவின் மாளவிகா பன்சோத், சீன தைபே வீராங்கனையான சங் ஷோ யுன் உடன் மோதினார்.
இதில் பன்சோத் 21-19, 24-22 என்ற புள்ளிக் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மாளவிகா பன்சோத் இந்தப் போட்டியை 57 நிமிடங்களில் விளையாடி வெற்றியைக் கைப்பற்றினார்.
சீன தைபேயின் சங் ஷோ யுன் தரவரிசையில் உலகின் 23-வது நிலை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
- டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் தோல்வி அடைந்தார்.
கோபன்ஹெகன்:
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சீனாவின் காங்சு உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 21-12 என வென்ற லக்ஷயா சென், அடுத்த இரு செட்களை 21-19, 21-14 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், வியட்நாமின் குயென் உடன் மோதினார். இதில் மாளவிகா 13-21, 12-21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான் ஆகர்ஷி காஷ்யப், தாய்லாந்து வீராங்கனையிடம் 13-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
- ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, மாளவிகா அரையிறுதிக்கு முன்னேறினர்.
சார்புரூக்கன்:
ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, பின்லாந்தின் கல்லே கோல்ஜோனென் மோதினர்.
இதில்ஆயுஷ் ஷெட்டி 21-18, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தப் போட்டி மொத்தம் 41 நிமிடம் நீடித்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், வியட்நாமின் துய் லின் குயென் மோதினர்.
இதில் அபாரமாக ஆடிய மாளவிகா 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் மாளவிகா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
சார்புரூக்கன்:
ஜெர்மனியில் ஹைலோ ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், டென்மார்க் வீராங்கனை ஜூலி டாவல் உடன் மோதினர்.
இதில் அபாரமாக ஆடிய மாளவிகா 23-21, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மாளவிகா மற்றொரு டென்மார்க் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.
நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ஷென்ஜென்:
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் இன்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, தாய்லாந்து வீராங்கனை பூசானன் உடன் மோதினார்.
இதில் பிவி சிந்து 21-17, 21-19 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், டென்மார்க் பேட்மிண்டன் வீராங்கனையுடன் மோதினார். இதில் பன்சோத் 20-22, 23-21, 21-16 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் தோல்வி அடைந்தார்.
ஷென்ஜென்:
பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்ஜென் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத், தாய்லாந்து வீராங்கனை சுபநிதா உடன் மோதினார்
இந்தப் போட்டியில் மாளவிகா 9-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.