என் மலர்
நீங்கள் தேடியது "நாடாளுமன்றம்"
- இன்று பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார்.
- சிம்பொனி குறித்து இளையராஜாவிடம் உரையாற்றியதாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இசைஞானி இளையராஜா தனது நீண்ட இசைப்பயணத்தில் சுமார் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கத்திய இசை மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான இளையராஜா மொசார்ட் உள்ளிட்ட மேற்கத்திய இசை ஜாம்பவான்களின் சிம்பொனி இசைக் கூறுகளை தனது பாடல்களில் பயன்படுத்தி பாமர மக்களும் அவற்றை ரசிக்கும் வகையில் மெட்டுகளை அமைத்தார். அவரது இசையால் பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அவரது பாடல்கள் அனைத்தும் இன்றைய தலைமுறையையும் கவரும் வகையில் அமைந்துள்ளன.
சமீபத்தில் லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இளையராஜா மற்றொரு சாதனையைப் படைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை சந்தித்து இசைஞானி இளையராஜா வாழ்த்துப் பெற்றார். சிம்பொனி குறித்து இளையராஜாவிடம் உரையாற்றியதாக மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து மாநிலங்களைவை எம்.பி.யான இளையராஜா மாநிலங்களவையில் பங்கேற்றார்.
அப்போது, சிம்பொனி அரங்கேற்றம் செய்த இளையராஜாவை பாராட்டிய மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், "சிம்பொனியை இசையமைத்து, பதிவு செய்து, அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். அவரால் ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது" என்று தெரிவித்தார்.
- காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில் 2,50,000 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பு.
பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினரின் கேள்விக்கு, எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்தியப் பணியாளர் நலத்துறை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங், 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை மத்திய அரசுப் பணிகளில் 27% மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி்னர் நேரடியாக பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அளித்த தகவலின்படி இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் விமானப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறையில், பைலட், விமான ஊழியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், விமான நிலைய ஊழியர்கள், சரக்குப் பிரிவு, சில்லறை விற்பனை, பாதுகாப்பு, நிர்வாகம் உள்பட சுமார் 2,50,000 பேர் நேரடி வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக விமானப் போக்குவரத்துறை இணை மந்திரி வி.கே சிங் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று எழுத்துபூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், விமானப் போக்குவரத்துத் துறை, 2021-22-ம் ஆண்டில் 58.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
- உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கூலியை அதிகப்படுத்த வேண்டும்.
திருப்பூர் :
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுக்கூட்டம் திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜான்சிராணி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத்தில் நடைபெறுகிற அனைத்து உரைகளும், நிகழ்வுகளும் செய்கை மொழியுடன் ஒளிபரப்பப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பிற்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறோம். 500 ரூபாய் உதவித்தொகை என்பதை போராடி பெற்றுள்ள நிலையில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வேலை கேட்டு விண்ணப்பம் 6 என்ற படிவத்தை கொடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதத்திலேயே வேலை கேட்டு அந்தந்த மாவட்டங்களில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு வருகிற மே மாதம் 9-ந் தேதி மனு கொடுக்க உள்ளோம்.
100 நாள் வேலை திட்டத்தை அதிகப்படுத்த வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கூலியை அதிகப்படுத்த வேண்டும். மாற்று திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 10-ந் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பாராட்டு
- உலகில் வாழும் தமிழர்கள் எல்லாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் பொன்னாளாகும்.
நாகர்கோவில் :
முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை (28-ந்தேதி) திறந்து வைக்கிறார். இக்கட்டிடத்தில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செங்கோல்இடம் பெறுகிறது.
தமிழர்களின் பெருமை பேசும் செங்கோலுக்கு பல சிறப்புகள் உண்டு. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் தருணத்தை எப்படி அடையாளப்படுத்து வது என்பது குறித்து ஜவகர்லால் நேரு, ராஜாஜி யிடம் கருத்து கேட்டார்.
அப்போது தமிழகத்தில் மன்னர் ஆட்சி மாற்றம் நிகழும் போது ராஜகுருவிடம் இருந்து செங்கோல் பெறும் மரபு இருப்பதை ராஜாஜி எடுத்து கூறினார். அதன்படி மவுன்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து ஆட்சி அதிகாரம் மாற்றத்தை ஒரு செங்கோல் வழியாக செய்யலாம் என்பதை ஜவகர்லால் நேரு ஒப்பு கொண்டார். ராஜாஜி நேரடியாக தமிழகத்தில் முக்கிய ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு செங்கோல் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார்.அதன்படி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஆட்சி அதிகாரம் மாறியதற்கான அடையாளமாக அளிக்கப்பட்ட செங்கோலை தயாரித்து அளித்த பெருமை திருவாவடுதுறை ஆதீ னத்துக்கு உண்டு. தற்போது பல ஆண்டுகளுக்கு பிறகு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டிருக்கும் நிலையில் அன்றைக்கு அளிக்கப்பட்ட செங்கோலும் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. இந்த செங்கோல் நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கை அருகே காட்சியளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த செங்கோல் நீதிக்கும், நேர்மைக்கும் அடையாளமாக விளங்கும். இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. நாடாளு மன்றத்தில் செங்கோல் அலங்கரிக்கும் நாள் உலகில் வாழும் தமிழர்கள் எல்லாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடையும் பொன்னாளாகும்.
இதற்காக பிரதமர் மோடிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும்
- பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து அமலில் இருக்கும் 3 குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் இந்த 3 மசோதாக்களை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார். இந்த 3 சட்ட மசோதாக்களுக்கும் கடந்த வருடம் டிசம்பர் 25-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
அதே சமயம், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் 106 (2) ஆவது விதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஒட்டி விபத்து நடந்து யாரேனும் மரணமடைந்தால், உடனடியாக ஓட்டுநர் காவல்துறைக்கோ அல்லது நீதிபதியையோ சந்தித்து புகார் அளிக்க வேண்டும். இல்லையெனில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இச்சட்டப் பிரிவு வழிவகுக்கிறது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தைவானில் பிரதான எதிர்க்கட்சியான KMT கட்சி மற்றோரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் DPP கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.
தைவான் நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த வாக்கெடுப்பின்போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பு சண்டையாக மாறி தைவான் பாராளுமன்றமே போர்க்கலாமாக காட்சியளித்தது. அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்ற பிரதிநிதிகள் மேசை மீது ஏறி நின்று கூச்சலிட்டும் ஒருவரை ஒருவர் இருக்கையில் இருந்து கீழே இழுத்தும் தாக்கிக்கொண்டனர். தைவானில் பிரதான எதிர்க்கட்சியான KMT கட்சி மற்றோரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் DPP கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.
இன்னும் சில நாட்களில் ஜனாதிபதியாக தேர்ந்துடுக்கப்பட்டுள்ள லாய் சிங் தே அரசை பதவி ஏற்க உள்ள நிலையில் இதைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்குதல், அரசின் முக்கிய பிரமுகர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை எந்த விவாதமும் முன்னறிவிப்பும் இன்றி நிறைவேற்ற பெரும்பாண்மை வாக்குகள் கொண்ட KMT கட்சி முயன்றதே இந்த கைகலப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தைவான் நானடாளுமன்றத்தில் கைகலப்பு நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து பன்றிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு KMT கட்சியினர் ஆளுங்கட்சியினர் மீது பன்றியின் குடலை எரிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
.

- 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
- நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் அமைய வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிவாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிதாக நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "கால அவகாசம் அளிக்காமல், உரிய ஆலோசனைகளை பெறாமல் அவசர கதியில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வரப்பட்டுள்ளன. 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அனைத்து துறைகளுடன் ஆலோசித்து நடைமுறைப்படுத்த போதுமான கால அவகாசம் தேவை.
3 குற்றவியல் சட்டங்களிலும் தவறுகள் உள்ளன. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் அமைய வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- பாரபட்சமான பட்ஜெட் என்ற பதாகையுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம்
- இப்போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு ரூ.15,000 கோடியையும் பீகார் மாநிலத்திற்கு ரூ.26,000 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.
ஆந்திரா, பீகார் மாநிலங்களை தவிர தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர் கூட இந்த பட்ஜெட்டில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை விமர்சித்தன.
இதனையடுத்து மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், மத்திய பட்ஜெட் பாரபட்சமாக போடப்பட்டுள்ளது என்பதைக் கண்டித்து பாராளுமன்றத்தில் நாளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தது.

இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து, பாராளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாரபட்சமான பட்ஜெட் என்ற பதாகையுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
- இந்த சர்வாதிகார செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்- மம்தா
- கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் ராகுல் காந்தி சபாநாயகரிடம் வேண்டுகோள் வைத்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் நுழையும்போதும், வெளியேறும்போதும் எம்.பி.க்களை மீடியாக்கள் கேமரா மூலம் படம் பிடிப்பதுடன் பேட்டி எடுப்பதும் உண்டு. இந்த நிலையில் எம்.பி.க்களிடம் பேட்டி எடுக்கக் கூடாது என மீடியாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது எதேச்சதிகார செயல் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். அத்துடன். இந்த சர்வாதிகார செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ராகுல் காந்தி மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்த கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
அப்போது நாடாளுமன்ற விதிகள் பற்றி ராகுல் காந்திக்கு நினைவூட்டிய ஓம் பிர்லா, இதுபோன்ற பிரச்சனைகளை தன்னுடன் நேரில் விவாதிக்க வேண்டும் என்றும், அவையில் எழுப்பக்கூடாது என்றும் கூறினார்.
இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தப் போராட்டத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ'பிரைன் மீடியா நபர்களை சந்தித்து கூறினார்.
லோக்சபா சபாநாயகர் பத்திரிகையாளர்கள் குழுவை சந்தித்து, அவர்களின் அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்றும், அவர்களின் கடமைகளை நிறைவேற்ற சிறந்த வசதிகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
- நாட்டில் கல்வியை பாதுகாக்க வேண்டும். முகலாயர்களின் பெயர்களை மட்டும் நீக்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது.
- முஸ்லிம், தலித், ஏழை, மாணவ, மாணவியருக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி அரசு ஆட்சி செய்கிறது.
நாடாளுமன்ற மக்களவையில் கல்வி துறைக்கான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பீகார் மாநில கிஷன்கஞ்ச் தொகுதி காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத் பேசும்போது கூறியதாவது:-
நாட்டில் கல்வியை பாதுகாக்க வேண்டும். முகலாயர்களின் பெயர்களை மட்டும் நீக்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. முகலாயர்கள் இங்கே 300 வருடங்களாக இருந்தனர். வெறும் பெயரை மட்டுமே நீக்குவதால் அவர்கள் நீக்கப்பட்டதாகிவிடாது.
முஸ்லிம்கள் மற்றவர்களை விட புத்திசாலிகள். மற்றவர்களை போல் நமக்கு அவர்கள் பங்களிக்க முடியும். நீங்கள் பாகுபாடு பார்க்கக்கூடாது என வேண்டுகோள் வைக்கிறேன்.
முஸ்லிம், தலித், ஏழை, மாணவ, மாணவியருக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி அரசு ஆட்சி செய்கிறது. நாட்டில் முஸ்லிம்கள் இல்லை என்றால், பாஜக கணக்கை (நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்) தொடங்கியிருக்காது. மைனாரிட்டிகளுக்கான திட்டங்களை மீண்டும் தொடங்க வேண்டும். உதவித்தொகை திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.
பட்ஜெட்டில் காங்கிரஸ் ஆட்சியில் ஜிடிபி-யில் 3.36 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது 2.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முகமது ஜாவத் தெரிவித்தார்.
- தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வக்பு வாரியத்தின் சுயாட்சியை பறிக்க விரும்புகிறது- ஒவைசி.
- முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்க பாஜக முயற்சிக்கிறது- அகிலேஷ் யாதவ்.
மத்திய அரசு வக்பு வாரியங்களை நிர்வகிக்கும் சட்டத்தில் (1995) திருத்தம் கொண்டு வர இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அப்படி திருத்தம் கொண்டு வந்தால் இந்த சட்டத்திற்காக திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்ப்போம் என பல எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வக்பு வாரியங்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருடத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சொத்து மதிப்புகளை வைத்து பார்க்கும்போது இந்த தொகை குறைவு எனக் கூறப்படுகிறது.
அதிக பொறுப்பு மற்றும் வெளிப்படத்தன்மை, பெண்களுக்கு வாரியத்தில் இடத்தை உறுதி செய்வது உள்ளிட்ட திருத்தங்களை சட்ட திருத்த மசோதாவில் மத்திய அரசு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தில் இருந்து வரும் கோரிக்கைகளின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் "மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் சட்ட திருத்த மசோதாவை நாங்கள் எதிர்ப்போம். முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்க பாஜக முயற்சிக்கிறது. இந்துக்கள், முஸ்லிம்கள் என பிரிக்கும் வேலையை மட்டுமே பாஜக செய்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை தவறான நோக்கம் கொண்டது என ஐயுஎம்எல்-ன் இ.டி. முகமது பாஷீர் தெரிவித்துள்ளார். மேலும் "இது தொடர்பாக சட்டம் கொண்டு வரப்பட்டால் நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிப்போம். எதிர்க்கும் மனநிலை கொண்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்றார்.
சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி "பாஜக தலைமையிலான அரசு பட்ஜெட் மீதான விவாதத்தில் இருந்து தப்பிக்க விரும்புகிறது, எனவே அவர்கள் வக்ஃப் பிரச்சனையை கொண்டு வந்துள்ளனர். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரை நான் இது குறித்து கருத்து தெரிவிக்கமாட்டேன்" என்றார்
சிபிஐ (எம்) எம்.பி. அம்ரா ராம் "வக்பு வாரியங்களை வலிமைப்படுத்துவதற்குப் பதிலாக பிரித்தாளும் அரசியலை பாஜக நம்புகிறது. அதில் தலையிட முயற்சி செய்து வருகிறார்கள்" என்றார்.
"தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வக்பு வாரியத்தின் சுயாட்சியை பறிக்க விரும்புகிறது" என ஒவைசி அசாதுதீன் விமர்சித்துள்ளார்.
- மாநிலங்களவை தலைவர் அதிகார தொனியில் பேசியதால் ஜெயா பச்சன் கடுங்கோபம்.
- மாநிலங்களவை தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
இந்த கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் சில பாஜக எம்.பி.க்கள் ஜெய பச்சன் என்பதற்கு பதிலாக ஜெயா அமிதாப் பச்சன் என்று அழைத்தனர். இவ்வாறு தன்னை அழைப்பதற்கு ஜெயா பச்சனுக்கு உடன்பாடு இல்லை.
தன்னை ஜெயா பச்சன் என்று அழைத்தால் போதும், ஜெயா அமிதாப் பச்சன் என்று அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், சொந்த சாதனைகள் படைக்காத பெண்களுக்குதான் கணவர் பெயரால் அங்கீகாரம் தேவை. அதனால் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
இருந்தபோதிலும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டவர்கள் ஜெயா அமிதாப் பச்சன் என்றே அழைத்து வந்தனர். இன்றும் அதுபோல் அழைக்கப்பட்டதால் ஜெயா பச்சன் அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால், ஜெக்தீப் தன்கர் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் என்ற தொனியில் பதில் அளித்தார்.
இதனால் ஜெகதீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெய பச்சன் கடும் வாக்குவாதம் செய்தார். மாநிலங்களவை தலைவரிடம் இருந்து எனக்கு மன்னிப்பு தேவை என்றார். ஜெயா பச்சனுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். பின்னர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த ஜெயாபச்சன் கூறுகையில் "ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. தொல்லை கொடுப்பது போன்ற வார்தைகள். நீங்கள் பிரபலங்களாக (celebrity) இருக்கலாம். ஆனால் எனக்கு கவலை இல்லை போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களை கவலைப்பட வேண்டும் என நான் கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் இப்போது பேசுவதுபோல் யாரும் பேசியதில்லை. இது பெண்களுக்கு மிகவும் அவமரியாதை" இவ்வாறு ஜெயா பச்சன் தெரிவித்தார்.