search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரிஸ் ஒலிம்பிக்ஸ்"

    • பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் இரட்டை வெண்கல பதக்கம் வென்றார்.
    • மனு பாக்கருக்கு, Tata Curvv EV எலெக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தனிநபர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார் .

    இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதலில் இரட்டைப் பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கருக்கு, Tata Curvv EV எலெக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

    இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.
    • காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    பாரிஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கலப்பு இரட்டையர் பிரிவு இறுதியில் சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதினர்.

    போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய சீன ஜோடி கொரிய ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.

    தங்கப்பதக்கத்தை வென்ற உற்சாகத்தில் இருந்த சீன வீராங்கனை ஹியாங் யா கியாங்யிடம் எதிர்பாராத நேரத்தில் அவருடன் விளையாடும் சக வீரரான லியூ யூசேன் தனது காதலை வெளிப்படுத்தினார்.

    அப்போது, லியூ தனது கையில் வைத்திருந்த வைர மோதிரத்தை காட்டி வீராங்கனை ஹியாங் யா கியாங்க் முன்பு மண்டியிட்டு "என்னை திருமணம் செய்து கொள்வாயா?" என்று கேட்டார்.

    இதை சற்றும் எதிர்பாராத ஹியாங் ஆனந்த கண்ணீரில் தத்தளித்தார்.

    பின்னர், லியூ யூசேனின் காதலை ஏற்பதாக தலையை அசைத்த ஹியாங் யா கியாங்க் மோதிரத்தை அணிவித்து விடுமாறு தனது விரலை நீட்டினார். லியூ யூசேன் மோதிரத்தை அணிவித்தார்.

    இந்த காதல் ஜோடியை கண்ட ரசிகர்கள் அனைவரும் கைதட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரோபோஸ் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • கிறித்தவர்கள் மனதை புண்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது.
    • இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    பாரிஸ் ஓலிம்பிக்ஸ் 2024 துவக்க விழாவில் விசேஷ அணிவகுப்பு, வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் என கொண்டாட்டங்கள் நகரை அதிர வைத்தன. சய்ன் நதியில் அமைக்கப்பட்ட மேடையில் லேடி காகா, செலின் டியோன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதன் வரிசையில் பிரபல ஓவியர் லியொனார்டோ டாவின்சியின் லாஸ்ட் சப்பர் எனப்படும் இயேசுவின் இறுதி இரவு உணவு ஓவியத்தை பிரதி செய்யும் வகையில் அமைந்த டிராக் கிவீன் நிகழ்ச்சி கிறித்தவர்கள் மனதை புண்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது.

    இதற்கு பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கண்டன குரல் எழுப்பினர். அந்த வரிசையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "உண்மையில் நான் வெளிப்படையான ஒருவன், ஆனால் அவர்கள் செய்தது மிக மோசமான விஷயம். கடந்த இரவு லாஸ்ட் சப்பர் நிகழ்வை அவர்கள் வெளிப்படுத்தியதை போன்று நாங்கள் செய்ய மாட்டோம்," என்று தெரிவித்தார்.

    சர்ச்சைக்கு உள்ளான அந்த நிகழ்ச்சியில் வெள்ளிக் கிரீடத்தை அணிந்து அரை நிர்வாணமாக உடல் முழுவதும் நீல நிற சாயம் பூசி மலர்களால் அலங்கரித்துக் கொண்டு லாஸ்ட் சப்பரில் பரிமாறப்படும் உணவை குறிக்கும் வகையில் மேஜையில் படுத்திருந்தார்.

    • இந்திய வீரர் லக்ஷ்யா சென் பெற்ற வெற்றி செல்லாது என ஒலிம்பிக்ஸ் கமிட்டி நீக்கியுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
    • இது எந்த விதத்தில் நியாயம் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பேட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய இந்திய வீரர் லக்ஷ்யா சென் பெற்ற வெற்றி செல்லாது என ஒலிம்பிக்ஸ் கமிட்டி நீக்கியுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    பாட்மிட்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த சனிக்கிழமை நடந்த குரூப் L போட்டியில் கௌதமாலா வீரர் கெவின் கார்டன் [Kevin Cordon] உடன் விளையாடிய லக்ஷ்யா சென் 21-8, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால் கெவின் கார்டன் தனது இடது காலில் ஏற்பட்ட காயத்தால் ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலிருந்து தற்போது விலகியுள்ள நிலையில் அவருடன் நடந்த போட்டியில் லக்ஷ்யா சென் பெற்ற வெற்றி நீக்கப்பட்டுள்ளது.

    சர்வதேச பேட் மிட்டன் கூட்டமைப்பின் [BWF] விதிகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் கமிட்டி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவே லக்ஷ்யா சென் குருப் L போட்டிகளில் பெறும் வெற்றியைப் பொறுத்தே அவரது ராங்கிங் தரவரிசை நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது. இது எந்த விதத்தில் நியாயம் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

    • இயேசுவின் இறுதி இரவுணவு ஓவியத்தைப் பிரதி செய்யும் வகையில் டிராக் கிவீன் நிகழ்ச்சி அமைந்தது
    • அரை நிர்வாணமாக உடல் முழுவதும் நீல நிற சாயம் பூசி மேசையில் மீது படுத்திருந்தார்

    ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு தொடக்கவிழா அணிவகுப்பு, வாணவேடிக்கை கலைநிகழ்ச்சிகள் என கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்டது.

    அந்த வகையில் ஐபில் கோபுரத்தின் முன்னாள் சய்ன் நதியில் அமைக்கப்பட்ட மேடையில் லேடி காகா, செலின் டியோன் உள்ளிட்டோரின் நிகழ்ச்சிகள் நடந்தன. குறிப்பாகப் பிரபல ஓவியர் லியொனார்டோ டாவின்சியின் 'Last Supper' எனப்படும் இயேசுவின்  இறுதி இரவுணவு ஓவியத்தைப் பிரதி செய்யும் வகையில் அமைந்த டிராக் கிவீன் நிகழ்ச்சி கிறித்தவர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

     

     

     

    அந்த நிகழ்ச்சியில் வெள்ளிக் கிரீடத்தை அணிந்து அரை நிர்வாணமாக உடல் முழுவதும் நீல நிற சாயம் பூசி மலர்களால் அலங்கரித்துக்கொண்டு , லாஸ்ட் சப்பரில் பரிமாறப்படும் உணவை குறிக்கும் விதமாக மேஜையில் படுத்திருந்தார். மேஜைக்கு பின்னால் உணவருந்தும் பாணியில் டிராக் குவீங்கள் எனப்படும் பெண்கள் அமர்த்திருந்தனர்.

    LGBTQ+ சமூகம் உட்பட அனைவரையும் பாலின சமத்துவத்தோடு கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைத்துள்ளதாக முற்போக்கு சிந்தனையாளர்கள் பாராட்டி வருகின்றனர். ஆனால் இந்த நிகழ்ச்சி பாலினத்தை மையப்படுத்தி விரசமான முறையில் அமைந்துள்ளதாகச் சிலர் கருதுகின்றனர்.

    குறிப்பாக வலதுசாரி சிந்தனைகளுடைய தொழிலதிபர் எலான் மஸ்க், பாஜக எம்.பி கங்கனா ரணாவத் இந்த நிகழ்ச்சிக்குக் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். கங்கனா ரனாவத் இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஏன் பாலினத்தை அவரவர் படுக்கையறையோடு மட்டும் வைத்துக்கொள்ள கூடாது என்று கேள்வியெழுப்பி கடுமையாக விமர்சித்துள்ளார். 

     

     

    • தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக இன்று நடந்த ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாடினார்.
    • இன்று நடந்த போட்டியில் தொடக்கத்தில் பன்வார் பன்வார் முன்னிலையில் இருந்தார்

    ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கியுள்ளது. கொண்டாட்டங்களுக்கு களைகட்டிய நிலையில் தற்போது போட்டிகளில் வீரர்களும் ரசிகர்களும் மும்முரமாகியுள்ளனர்.

    மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில் முதலாவது நாளான இன்று நடைபெற்ற துடுப்புப்படகு போட்டியான ரோவிங் போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் 7:07:11 நிமிடங்களில் இலக்கை கடந்து 4 ஆவது இடம் பிடித்தார்.

    4 வது இடம் பிடித்ததால் தகுதி சுற்றுக்கான வாய்ப்பை இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இழந்துள்ள நிலையில் தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக இன்று நடந்த ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாடினார்.

    இந்த போட்டியில், 7:12.41 நிமிடங்களில் இலக்கை கடந்து 2 வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார் பல்ராஜ் பன்வார். ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து பன்வார் முன்னிலையில் இருந்தபோதிலும் இறுதிக்கட்டத்தில் மொனாக்கோ வீரர் குவென்டின் அடோஃனெல்லி [Quentin Antognelli] அவரை முந்தியதால் இரண்டாம் இடத்திற்கு பன்வார் சென்றார். இதனைத்தொடர்ந்தே மொனாக்கோ மற்றும் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பல்ராஜ் பன்வார் ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தனது மனைவியிடம் கேட்டுள்ள கவித்துவமான மன்னிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
    • இத்தாலியக் கோடியை உயரத்திப்பிடிக்கும் போது என் கையில் இருந்து மோதிரம் நழுவியது

    இத்தாலிய உயரம் தாண்டுதல் வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான ஜியான்மார்கோ தாம்பெரி [ Gianmarco Tamberi] நேற்று தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக்சில் பங்கேற்றுள்ளார். இத்தாலி நாட்டின் சார்பில் நேற்று முன் தினம் இரவு செய்ன் நதி [Seine River] மீது படகில் நடந்த தொடக்கவிழா அணிவகுப்பில் இத்தாலிய கோடியை அவர் ஏந்திச்சென்றார்.

     

    இந்நிலையில் அன்றைய இரவு தனது திருமண மோதிரத்தை செய்ன் நதியில் அவர் தொலைத்துள்ளார். அதற்கு அவர் தனது மனைவியிடம் கேட்டுள்ள கவித்துவமான மன்னிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மனுஷன் என்னமா பீல் பண்ணி எழுதியிருக்கிறார் என்று இணையவாசிகள் மனம் நெகிழ்ந்து வருகின்றனர்.

     

    மோதிரத்தை தொலைத்ததற்காக அவர் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டு எழுதியுள்ள இன்ஷ்டாகிராம் பதிவில், 'என்னை மன்னித்துவிடு அன்பே, இத்தாலியக் கோடியை உயரத்திப்பிடிக்கும் போது என் கையில் இருந்து மோதிரம் [என் கை விரலில் இருந்து] நழுய தருணத்தில் [அது படகின் உள்ளே விழுந்துவிடும் எடுத்துக்கொள்ளலாம்] என்று ஒரு சிறிய நம்பிக்கை இருந்தது.

    ஆனால் அது கீழே விழுந்து தவறான திசையில் எகிறி நதிக்குள் சென்றது. எதோ அது அங்கு தான் இருக்கவேண்டும் என்று விரும்பியதுபோல் இருந்தது. சில கணம் நான் உறைந்து நின்றேன். ஆனால் இது நடந்துதான் தீரும் என்றால் இந்த நதியை விட சிறந்த ஒரு இடத்தை என்னால் கற்பனை செய்திருக்க முடியாது. காதலின் நகரமான பாரிசில் உள்ள இந்த நதிப்படுகையில் அது [மோதிரம்] என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.

     

    நேற்று நடந்த இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தில் ஒரு கவித்துவமான தன்மையும் இணைந்தே இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். நீ விரும்பினால் உனது மோதிரத்தையும் இந்த நதியில் வீசி விடலாம். அவ்வாறாக இருவரின் மோதிரங்களும் நதியில் ஒன்று சேரும். இதில் இன்னொரு நன்மையும் உள்ளது, நீ அடிக்கடி என்னிடம் கேட்பதுபோல், நாம் உறுதிமொழி கூறி புதிதாக மீண்டும் ஒருமுறை திருமணம் செய்துகொள்ளலாம்' என்று எழுதியுள்ளார். 

    • ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஒன்றான சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு போட்டி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
    • கடைசியாக 68 வருடங்களுக்கு முன்பு 1956 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலேயே இவ்வாறு நடந்தது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று அதிகாலை ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளில் பல்வேறு பிரிவுகளில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

    மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஒன்றான சர்ஃபிங் எனப்படும் அலைச்சறுக்கு போட்டி குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

     

    ஆதவாது பிரான்ஸ் பாலினீசிய தீவுகளில் ஒன்றான தஹிட்டி[Tahiti] தீவின் கடல் பகுதியில் சர்ஃபிங் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இது மற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கும் பாரிஸ் நகரில் இருந்து சுமார் 15,715 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதே இதில் உள்ள சுவாரஸ்யம். கடைசியாக 68 வருடங்களுக்கு முன்பு 1956 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் அரங்கில் இருந்து இவ்வளவு தொலைவில் ஸ்வீடனில் வைத்து குதிரையேற்ற போட்டிகள் போட்டிகள் நடத்தப்பட்டன.

     

    அதன்பிறகு தற்போது 15,715 கிலோமீட்டர் தொலைவில் சர்ஃபிங் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிரான்ஸ் முழுவதும் ஒலிம்பிக் போட்டிகளைப் பரப்பும் முகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இந்நிலையில் தஹிட்டி தீவில் ஒலிம்பிக்ஸ் கொண்டாட்டங்கள் பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது. இந்த வருட ஒலிம்பிக்ஸ் சர்ஃபிங் போட்டிகளில் 24 வீரர்கள் மற்றும் 24 வீராங்கனைகள் என மொத்தம் 48 சர்ஃபர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • முதல நாளில் பல்வேறு பிரிவுகளில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
    • ஒலிம்பிக்ஸ் கொண்டாட்டம் பூமியோடு நின்றுவிடாமல் விண்வெளியிலும் அரங்கேறுகிள்ளது

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் இரவு நடந்த அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மற்றும் நேற்று அதிகாலை ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முதல நாளில் பல்வேறு பிரிவுகளில் நடந்த முதற்கட்ட போட்டிகளில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் தங்களின் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

    மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் பாரிஸ் விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில் போட்டிகளுடன் கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது.

    அந்த வகையில் ஒலிம்பிக்ஸ் கொண்டாட்டம் பூமியோடு நின்றுவிடாமல் விண்வெளியிலும் அரங்கேறுகிள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 6 விண்வெளி வீரர்கள் மினி ஒலிம்பிக் தீப்பந்த ஜோதி போன்ற  பொம்மையை ஏந்தியும் பளு தூக்குதல் உள்ளிட்ட விளையாட்டுகளை விலையுவது போன்றும்  அவர்கள் பாவனை செய்து மகிழும் 2 நிமிட வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.

    கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் ஸ்டார்லைனரில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் தங்கியிருந்து தங்களது ஆய்வை முடித்து பூமிக்கு திரும்புவர் என்று திட்டமிடப்பட்ட நிலையில் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக 50 நாட்களுக்கும் மேலாக பூமி திருப்ப முடியாமல் அவர்கள் விண்வெளியில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
    • அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பல்ராஜ் பன்வார் ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர் ஆவர்.

    ஒலிம்பிக் ஜோதி ஏற்றத்துடன் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. நேற்று இரவு வீரர்களின் அணிவகுப்பு , கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை என கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில் தற்போது போட்டிகளில் வீரர்களும் ரசிகர்களும் மும்முரமாகியுள்ளனர்.

    மொத்தமாக 32 விளையாட்டுகளைக் கொண்ட இந்த பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 329 போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில் 117 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் முதலாவது நாளான இன்று நடைபெற்ற துடுப்புப்படகு போட்டியான ரோவிங் போட்டியில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் 7:07:11 நிமிடங்களில் இலக்கை கடந்து 4 ஆவது இடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் தாமஸ் மகின்டோஸ் [Thomas Mackintosh] 3 வது இடமும், கிரீஸ் நாடு வீரர் ஸ்டெபானோஸ் டோஸ்க்கோ [Stefanos Ntousko] 2 வது இடமும், எகிப்து வீரர் அப்தேல்காலெக் எல்பனா[Abdelkhalek Elbanna] முதல் இடமும் பிடித்துள்ளனர்.

    4 வது இடம் பிடித்ததால் தகுதி சுற்றுக்கான வாய்ப்பை இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இழந்துள்ள நிலையில் தகுதி சுற்றுக்குத் தகுதி பெறுவதற்காக நாளை நடக்கும் ரெபகேஜ் [repechage] சுற்றில் விளையாட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதாகும் பல்ராஜ் பன்வார் ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றவர் ஆவர்.

    • இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர்.
    • பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் நேற்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதலாவதாக சீன் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடந்தது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6,800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இன்றைய ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அச்சாரமாக 1896 ஆம் ஆண்டு முதல் மாடர்ன் கேம்ஸ் தொடங்கப்பட்ட கிரீஸ் நாட்டை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு வீரர்கள் அணிவகுப்பில் முதன்மை வகித்தனர்.

    இரவு சுமார் 12.30 அளவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர். அணிவகுப்பில் இவர்கள் இருவரும் ஒலிம்பிக்கில் தேசியக் கொடியை ஏந்திச் செல்வது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் இல்லாத வகையில் இந்த முறை பிரதான மைதானத்துக்கு வெளியில் தொடக்க விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது. வாணவேடிக்கைகள் விழாவிற்கு மேலும் ஒளியைக் கூடியது.

     

    நதியில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடைகளிலிருந்து 3 லட்சம் பேர் இந்த அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.மேலும் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் பால்கனிகளில் இருந்து 2 லட்சம் பேர் விழாவை கண்டுகளித்தனர். விழாவின் போது கடும் மழை பெய்த நிலையிலும் விழா தொடர்ந்து நடைபெற்றது. லேடி காகாவின் இசை நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

    இதனைத்தொடர்ந்து தொடர்க்கவிழாவின் முக்கிய நிகழ்வான ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் சடங்கு தொடங்கியது. பிரஞ்சு கால்பந்து ஜாம்பவான் ஜினாதினே ஜின்டேன் முதலில் ஜோதியை ஏந்திய நிலையில் ஜோதியானது ரபேல் நடால், செரினா வில்லாமஸ், நாடியா கோமானேசி என பலர் கைகளுக்கு மாறி இறுதியாகப்  பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது. அவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து பாரிஸ் ஐபில் கோபுரம் அருகே ராட்சத பலூனில் அமைக்கப்பட்ட  கால்ட்ரனில் [cauldron] ஜோதியை ஏற்றினர்.

     

    • இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா.
    • இன்னும் 45 விளையாட்டுகளில் சிலவற்றிற்கான டிக்கெட்டுகள் விற்பனையில் உள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த

    இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற உள்ளது.

    7,500 விளையாட்டு வீரர்கள், 300,000 பார்வையாளர்கள் மற்றும் விஐபிகளுடன் பாரிஸ் தொடக்க விழா வண்ணமயமாக தொடங்குகிறது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

    அதன்படி, இந்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் 9.7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    பாரிஸைப் பொறுத்தவரை, ஒலிம்பிக்கிற்கு மொத்தம் 10 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    9.7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையானபோதும், இன்னும் சில போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், விற்பனை அளவு மேலும் கூடும் என எதிர்பார்கப்படுகிறது.

    முந்தைய டிக்கெட் விற்பனை சாதனையாக, 1996ம் ஆண்டில் அட்லாண்டா இடம் பிடித்தது. அப்போது 8.3 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

    இதற்கிடையே, கடந்த ஏப்ரலில் தொடங்கி, உள்ளூர் இளைஞர்கள், அமெச்சூர் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிறருக்கு விளையாட்டுப் போட்டிகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்காக சுமார் ஒரு மில்லியன் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×