search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க.ஸ்டாலின்"

    • மாவட்டங்கள் தோறும் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
    • நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற சொற்கள் இடம்பெற்றுள்ளன.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் என தொண்டர்களுக்கு எழுதிய பெருமித கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    நூற்றாண்டு நாயகராம் நம் உயிர்நிகர் தலைவர்-முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை என்றென்றும் நம் உள்ளத்தில் வைத்துக் கொண்டாடுகிறோம். 5 முறை முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று அரிய பல திட்டங்களால் நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த சிற்பிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்டங்கள் தோறும் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

    இன்னும் கலையுலகினர், படைப்பாளர்கள், இலக்கிய அமைப்புகள், வெளிநாடுவாழ் தமிழர்கள் என எங்கெல்லாம் தமிழ் ஒலிக்கிறதோ, எவ்விடமெல்லாம் தமிழர்களும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் கலைஞரின் நூற்றாண்டை உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடி வருகிறார்கள்.

     பல ஜனாதிபதியையும், பிரதமரையும் தேர்வு செய்வதில் முக்கியப் பங்காற்றியநம் கலைஞரை அவரது நூற்றாண்டில் போற்றுகிற வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் ஆகஸ்டு 18 ஞாயிறு மாலை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சீர்மிகு விழாவில், ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கலைஞரின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தினை வெளியிட இருக்கிறார்.

    பேரறிஞர் அண்ணா ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் கண்ணீரில் தவிக்கவிட்டு மறைந்த பின், ஓராண்டு கடந்த நிலையில், அண்ணாவின் அஞ்சல் தலை வெளியிடப்பட்டபோது, அதனைப் பார்த்த அத்தனை பேருக்கும் ஆச்சரியம்.

    அஞ்சல் தலைக்கேற்ற பொருத்தமான முறையில் பேரறிஞர் அண்ணாவின் படத்தைத் தேர்வு செய்து தந்திருந்தவர் தலைவர் கலைஞர்.

    அத்துடன், அந்தப் படத்தின் கீழே 'அண்ணாதுரை' என்று அண்ணாவின் கையெழுத்தையும் இடம்பெறச் செய்துவிட்டார் அண்ணாவின் தம்பியான நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர்.

    இந்திய அஞ்சல் தலை ஒன்றில் தமிழ் எழுத்துகள் இடம்பெற்ற முதல் அஞ்சல்தலை என்பது அண்ணா நினைவு அஞ்சல் தலைதான்.

    அண்ணாவின் நூற்றாண்டு நிறைவின்போதும் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக 5-வது முறை பொறுப்பு வகித்தவர் கலைஞர்.

    2009-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அண்ணாவின் பிறந்தநாளன்று சென்னையில் நம் உயிர்நிகர் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்போயை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒன்றிய அரசின் நிதித்துறை அமைச்சராக இருந்தவரும், பின்னாளில் கலைஞரின் ஆதரவுடன் இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றவருமான பிரணாப் முகர்ஜி 'அண்ணாவின் உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

    வரலாற்று சிறப்பு மிகுந்த அந்த விழாவில், அப்போதைய துணை முதல்-அமைச்சராக இருந்த உங்களில் ஒருவனான நான், அண்ணா நூற்றாண்டு இணையதளத்தைத் தொடங்கி வைத்து, அண்ணாவின் பொன்மொழிகள் நூலினை வெளியிட்டு உரையாற்றுகின்ற நல்வாய்ப்பினைப் பெற்றிருந்தேன்.

    அண்ணாவின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் தலை போலவே, அவரது நினைவாக வெளியிடப்பட்ட நாணயத்திலும் 'அண்ணாதுரை' என்ற அண்ணாவின் கையெழுத்தை இடம்பெறச் செய்தவர், அவரது தம்பியான தலைவர் கலைஞர்தான். இந்திய அரசின் நாணயத்தில் தமிழ் எழுத்துகள் முதன்முதலில் இடம்பெற்றதும் அப்போதுதான்.

    தமிழாகவே வாழ்ந்த தமிழினத் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் நினைவாக வெளியிடப்படும் 100 ரூபாய் நாணயத்தில் முத்தமிழறிஞரின் உருவத்துடன் அவர் கையெழுத்திலான, 'தமிழ் வெல்லும்' என்ற சொற்களும் இடம்பெற்றுள்ளன.

    தமிழ்நாட்டின் அரசியலை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேல் இயக்கிய ஆற்றல் மிக்கவராகவும், இந்திய அரசியல் வரலாற்றில் தனித்துவம் மிக்க ஆளுமையாவும் திகழ்ந்தவர் கலைஞர்.

    எதிர்கால தலைமுறையினரின் கலங்கரை விளக்கமான நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிடுகின்ற இந்திய ஒன்றிய அரசுக்குத் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகவும், தி.மு.க.வின் தலைவராகவும், கலைஞரின் மகனாகவும் என் நன்றியையும், கலைஞரின் கோடானு கோடி உடன்பிறப்புகளின் நன்றியையும் உங்களில் ஒருவனாக உரித்தாக்குகிறேன்.

    இனிமை மிகுந்த தமிழைத் தன் நா நயத்தால், கேட்போர் செவிகளுக்கெல்லாம் விருந்தளித்த தலைவர் கலைஞர், நாணயத்திலும் 'தமிழ் வெல்லும்' என்பதை நிறுவியிருக்கிறார்.

    இமயம் போல உயர்ந்து நிற்கும் கலைஞரின் புகழுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் இந்திய ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்படும் நாணய வெளியீட்டு விழாவில் உடன்பிறப்புகளைக் காண ஆவலாக இருக்கிறேன்.

    இனிய விழா எனினும் எளிய விழா என்பதால் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சார்ந்த உடன்பிறப்புகள் நேரில் காணவும், தமிழ்நாட்டிலும், தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் நேரலையில் காணவும் அன்புடன் அழைத்து அகம் மகிழ்கிறேன்.

    இவ்வாறு அவர் அந்த கடித்தில் கூறியுள்ளார்.

    • இயற்கை சீற்றங்களால் பெரும் பாதிப்புகள் உண்டாகின்றன.
    • இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்படும்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    சமீப காலமாக, நாம் பெரிதும் எதிர் கொள்ளும் பிரச்சனையாக காலநிலை மாற்றம் உருவாகியுள்ளது. இதனால் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் பெரும் பாதிப்புகள் உண்டாகின்றன. அண்மையில் கேரளாவில் பெய்த பெருமழை காரணமாக வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

    இந்த பாதிப்புகளில் இருந்து கேரளம் மீள்வதற்கான அனைத்து உதவிகளையும் நாம் வழங்கி உள்ளோம். தமிழ்நாட்டிலும், நீலகிரி மற்றும் வால்பாறை மலைப்பகுதி, கொடைக்கானல் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், ஏற்காடு மற்றும் ஏலகிரியை உள்ளடக்கிய மலைப்பகுதிகள் என மலை நிலப்பகுதிகள் அதிகம் உள்ளன.

    அங்கு பெருமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய இயற்கை இடர்பாடுகள் குறித்து முறையாக ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    வனத் துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை உள்ளிட்ட பல்துறை வல்லுனர்களைக் கொண்ட குழுவினால், அறிவியல் அடிப்படையிலான ஒரு விரிவான ஆய்வு, மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலமாக இந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும்.

    மேலும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இடர்பாடுகளை முன்னதாக அறிவதற்கும், தவிர்ப்பதற்கும், தணிப்பதற்கும், நீண்டகாால அடிப்படையில் ஆபத்துகளைக் குறைப்பதற்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்து, தனது பரிந்துரைகளை வழங்கும். அந்த பரிந்துரைகளின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்கா வாழ் தமிழர்களை சந்திக்க திட்டம்.
    • இன்று காலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.

    உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ந்தேதி அமெரிக்கா செல்ல உள்ளார்.

    அமெரிக்கா செல்லும் முதல்-அமைச்சர் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உட்பட பல்வேறு தொழில் அதிபர்களை சந்திப்பதோடு அமெரிக்கா வாழ் தமிழர்களையும் சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.

    இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில் முதல் அமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கபட்டதாக தெரிகிறது.

    மேலும், பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள், திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    முதலமைச்சரின் வெளிநாடு பயணம் சுமார் 15 நாட்கள் வரை இருக்கலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில் மாநிலத்தில் முதல் அமைச்சர் இல்லாத சூழலில், எத்தகைய பணிகளை அமைச்சா்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அத்துடன், தமிழகத்தில் புதிதாக தொடங்க உள்ள தொழில் திட்டங்களுக்கும் அனுமதிகள் பெறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • துர்கா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்க உள்ளார்.
    • கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது.

    திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த துர்கா குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று நகராட்சி ஆணையராக பதவியேற்க உள்ளார்.

    என் தாத்தாவும், அப்பாவும் தூய்மைப்பணியாளர்கள், அந்த அடையாளத்தை மாற்ற வேண்டும் என நினைத்தேன்,இன்றிலிருந்து எங்க வாழ்க்கை மாறியுள்ளது என்று துர்கா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், "நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் திருமிகு துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன். கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் திருமிகு துர்கா அவர்களே எடுத்துக்காட்டு. நான் மீண்டும் சொல்கிறேன்…கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து" என்று தெரிவித்துள்ளார்.

    • போதைப் பொருள் விற்பவர்களுக்கு அதிக தண்டனை வழங்கவேண்டும்.
    • போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது உடனடித் தேவை ஆகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ந்தேதி போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்திலும், ஆகஸ்ட் 11-ந் தேதி நடைபெற்ற 30 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியிலும் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்துவிட்டேன் என்று ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளரும் உறுதி எடுத்துக்கொண்டாலே போதும், அதுவே முதல் வெற்றி.

    போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்துவிட முடியும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் போன்ற இடங்களில் போதைப் பொருள் விற்பவர்களுக்கு அதிக தண்டனை வழங்கவேண்டும்" என்று ஆணையிட்டார்.

    முதலமைச்சரின் இந்த ஆணையை செயல்படுத்தி இருந்தாலே தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப்பொருள்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதை தமிழக காவல்துறை செய்யவில்லை.

    தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது உடனடித் தேவை ஆகும். அதை உணராமல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களிடையே போதை மருந்து தடுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்வதை வெறும் சடங்காக செய்வதால் எந்த பயனும் இல்லை.

    எனவே, இனியாவது தமிழக அரசு விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    போதைப்பொருட்கள் நடமாட்டத்தை வேருடன் ஒழிப்போம் என்று கூறி, அதற்காக 'போதைப்பொ ருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற புதிய இயக்கத்தை திமுக அரசு தொடங்கி இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டம் குறைவதற்கு மாறாக அதிகரித்திருக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது ஆண்டாக இன்றும் சென்னையில் மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி செய்து வைத்ததுடன் தமது கடமையை முடித்துக் கொண்டார். போதைப்பொருட்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காமல் கடமைக்காக தமிழக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

    • ராமநாதரபுரத்தை சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது
    • கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "ராமநாதரபுரத்தை சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட சம்பவம் கவலை அளிப்பதாக தெரிவிப்பு 4 மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், நேற்று (19.8.2024) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆழ்ந்த வேதனையும் கவலை அளிப்பதாகவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    அண்மையில் 2 மீனவர்கள் உயிரிழந்த நிலையில் மீனவர் பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாட்டிலிருந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர், அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க நிவாரணமோ தீர்வோ ஏற்படவில்லை என்று வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

    அனைத்து மிவைர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து தாயகத்திற்கு அழைத்து வருவதை உறுதி செய்திட வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வளியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    நமது மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்களால் மீனவக் குடும்பங்கள் மிகுந்த துயரங்களுக்கு ஆளாவதோடு, கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வும், அவர்களது வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவ குடும்பங்களின் மன நம்பிக்கையை குலைத்து, பெருத்த நிதி சுமையை ஏற்படுத்தி, அவர்களது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை கடினமாக்கி உள்ளதாகவும் நமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திடவும் இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நிரந்தர தீர்வை ஏற்படுத்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும் எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், கடலோர மீனவ சமுதாயத்தினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து தாயகத்திற்கு அழைத்து வருவதை உறுதி செய்திட வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.


    • 3 விழாக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
    • 6 அடி உயரத்தில் கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    சூலூர்:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 9-ந் தேதி கோவைக்கு வருகிறார். அன்றைய தினம் கோவையில் நடைபெறும் 3 விழாக்களில் அவர் பங்கேற்கிறார்.

    கோவை அரசு கலைக்கல்லூரி மைதா னத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து காணொலி வாயிலாக பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.

    பின்னர் உக்கடம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடக்கும் விழாவில் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

    அதன்பின் கோவை கருமத்தம்பட்டிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.

    கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 6 அடி உயரத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    அங்குள்ள கட்டிட வளாகத்தில் கலைஞர் அறிவுசார் நூலகம், அதன் எதிரே 106 அடி உயர பிரமாண்ட கொடிக்கம்பமும் அமைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதி சிலை, நூலகம், கொடிக்கம்பம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையால் கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு தயாராகி வருகிறார்கள்.

    • தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா பயணம்.
    • 15 நாட்கள் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இந்த மாதம் அமெரிக்கா செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்கப் பட்டிருந்தது.

    மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அவர் அமெரிக்கா செல்வதற்கு முறைப்படி அனுமதி வழங்கி விட்டது. 15 நாட்கள் அமெரிக்கா சென்று வரும் வகையில் முதலமைச்சரின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    அமெரிக்காவில் கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மற்றும் பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ளார். அத்துடன் அமெரிக்கா வாழ் தமிழர்களை சந்திப்பதுடன் அவர்களையும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுக்க உள்ளார். அவருடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளும் உடன் செல்ல உள்ளனர்.

    அமெரிக்காவில் பயணத்திட்டம் என்னென்ன என்பது பற்றியும் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்க தூதரகத்தில் விசா அனுமதியும் கிடைத்து விட்டது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22- ந் தேதி அமெரிக்கா செல்வார் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் இப்போது அவர் 27-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) அமெரிக்கா புறப்படுவார் என்று தகவல் தெரிய வந்துள்ளது.

    • கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம்.
    • தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது.

    இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சித்தலைவர்கள், பொது மக்கள் வருகை தருவார்கள் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப் பேரணி செல்கின்றனர். அன்றைய தினம் காலை 7 மணிக்கு அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலை அருகில் இருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடம் சென்றடைகிறது.

    அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட தி.மு.க. முன்னணியினர், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.

    இதில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள், இன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமைக் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக பகுதி கழக, வட்டக்கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, மகளிர் தொண்டர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்பட அனைத்து அணியினரும் கருணாநிதியின் நினைவை போற்றி அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என சென்னை கிழக்கு, சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு ஆகிய மாவட்ட கழகங்களின் சார்பில் மாவட்டக் கழக செயலா ளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
    • வருகிற 9-ந்தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

    கோவை:

    உயர்கல்வியில் பெண்கள் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    இதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு தமிழ்ப்புதல்வன் என பெயரும் வைக்கப்பட்டது.

    இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு உதவிதொகை வழங்கப்பட உள்ளது.

    இளநிலை கலை அறிவியல் கல்லூரி, தொழில்முறை படிப்புகள், துணை மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படித்து வரும் மாணவர்களும் பயன்பெற உள்ளனர்.

    இந்த நிலையில், தமிழ்ப்புதல்வன் திட்டம் வருகிற 9-ந் தேதி கோவையில் தொடங்கி வைக்கப்படுகிறது. கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    இதற்கிடையே தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு கல்லூரிகளில் சிறப்பு முகாம் அமைத்து புதிய வங்கி கணக்கு தொடங்கும் பணிகள் நேற்று முதல் நடந்து வருகிறது.

    கோவை அரசு கலைக்கல்லூரியில் மட்டும் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு மாணவர்கள் 1,200 பேர் பயன் அடைய உள்ளனர்.

    முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இன்னும் முழுமை அடையாததால் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.

    மாணவர் சேர்க்கை முடிந்ததும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் கலைச்செல்வி கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் கலைக்கல்லூரிகள், என்ஜினியரிங் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், பார்மசி, சட்ட கல்லூரி என 412 கல்லூரிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த தகுதியான மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சில மாணவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. இதனால் அவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. இதற்காக கல்லூரிகளில் வங்கி அதிகாரிகள் நேரடியாக சென்று சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கல்வி தான் திருட முடியாத சொத்து.
    • தமிழ்நாட்டில் 234 தொகுதியும் என்னுடைய தொகுதிதான்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    அங்குள்ள கபாலீசுவரர் கலை-அறிவியல் கல்லூரியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாணவ-மாணவிகள் 748 பேருக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 10 மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அத்துடன் இக்கல்லூரிக்கு 3 உதவி பேராசிரியர், 1 உடற்கல்வி இயக்குனர், 1 கண்காணிப்பாளர் ஆகியோ ருக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றி வந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வருகிறபோது என்னையே அறியாமல் ஒரு உற்சாகம், ஒரு ஊக்கம் ஒரு எழுச்சி ஏற்படுகிறது. கொளத்தூருக்கு வந்தாலே ஒரு புது எனர்ஜி ஏற்படுகிறது.

    எனக்காக கொளத்தூரை பாதுகாக்க கூடியவராக என் சார்பில் அமைச்சர் சேகர்பாபு இருந்து வருகிறார். கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை முன் மாதிரி தொகுதியாக மாற்றி கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதியும் என்னுடைய தொகுதிதான்.

    அது ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, கூட்டணி கட்சியாக இருந்தாலும் எல்லா தொகுதியையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன்.

    அந்த அடிப்படை யில்தான் கொளத்தூர் தொகுதியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம், புதிய காவல் நிலையம், புதிய தீயணைப்பு நிலையம், புதிய சார்பதி வாளர் அலுவலகம் ஆகியவை விரைவில் அமைய இருக்கிறது.

    இது கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல தொகுதி களுக்கு வர இருக்கிறது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தொகுதிக்கு அவசரமாக நிறைவேற்ற தேவையான 10 திட்டங்களை கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன்.

    அது ஆளும் கட்சி மட்டு மல்ல 234 தொகுதியிலும் உள்ள சட்டமன்ற உறுப்பி னர்களும் இதை தருமாறு கேட்டுக் கொண்டேன். அதில் எதை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றி தர முடியுமோ அதை நிறைவேற்றி தருகிறோம் என்று சொல்லி அந்த பணியை செய்து கொண்டிருக்கிறோம்.

    எந்த விருப்பு வெறுப்பின்றி எதிர்க்கட்சி தொகுதிகளுக்கும் முக்கியத் துவம் தந்து, திட்டங்களை எல்லாம் நாம் வரிசைப் படுத்தி செயல்படுத்தி வரும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. சட்டமன்ற தேர்தல் முடிந்து ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன போது, இந்த ஆட்சி ஏதோ எங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்காக மட்டுமல்ல. ஓட்டு போட தவறியவர்களுக்கும் சேர்த்து எங்கள் ஆட்சி இருக்கும் என்று அன்றே சொன்னேன். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

    பல்வேறு திட்டங்கள் அதில் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் சேர்ந்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

    இதுவரை 1400-க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்திய ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்டுள்ளோம்.

    கோவில்கள் சார்பில் 10 கல்லூரிகளை உருவாக்கி இருக்கிறோம். இறைப்பணி யோடு சேர்த்து கல்விப் பணியையும் அறநிலையத் துறை செய்து வருகிறது.

    அறநிலையத் துறையாக மட்டுமல்லாமல் இது அறிவு துறையாகவும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் 748 மாணவர்-மாணவிகளுக்கு கல்வி கட்டணமும், கல்விக்கு தேவையான கருவிகளையும் வழங்கி இருக்கிறோம்.

    உங்களுக்கு மட்டுமல்ல கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் நாள் இந்த கல்லூரியை திறந்து வைத்ததில் இருந்து கடந்த 3 வருடத்தில் 1405 மாணவ-மாணவி களுக்கு இதேபோல் கல்வி கட்டணம் மற்றும் கருவிகளை வழங்கி இருக்கிறோம்.

    சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயச் சூழல் ஆகிய இது எதுவுமே ஒருவரின் கல்விக்கு தடையாக இருக்க கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.

    கல்விதான் உங்களிடம் இருந்து யாரும் திருட முடியாத சொத்து. இதைத் தான் நான் மாணவர்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். படிப்பு, படிப்பு, படிப்பு இது மட்டும்தான் உங்கள் கவனத்தில் இருக்க வேண்டும். அதற்காகத்தான் எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படுத்தி கொண்டு வருகிறது.

    முக்கியமாக அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு வரும் மாணவி களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கக் கூடிய புதுமைப் பெண் திட்டம். இத்திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர்.

    அடுத்து இதே போல் மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்க கூடிய தமிழ்ப் புதல்வன் திட்டம். அது வருகிற 9-ந்தேதி கோவையில் நான்தான் சென்று தொடங்கி வைக்க இருக்கிறேன்.

    நமது திராவிட மாடல் அரசு ஏற்படுத்தி தரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும். பேச்சுத் திறமை, எழுத்து திறமை, படைப்பு திறமை, நிர்வாக ஆற்றல், அறிவியல் பூர்வமான சிந்தனை புதிய கண்டு பிடிப்பு என மாணவ சமுதாயம் வளர வேண்டும். பட்டங்களோடு சேர்த்து அனைத்து திறமைகளையும் கொண்டவர்களாக நீங்கள் வளர வேண்டும்.

    அண்மையில் டாக்டர் குழும தலைவர் சந்திரசேகர் ஒரு பேட்டியில் குறிப்பிட்ட போது, உடல் நலத்தை பற்றி அக்கரையோடு அவர் பேசியிருக்கிறார். மாணவர்கள், இளைஞர்களுடைய ஒபிசிடி எனப்படும் உடல் எடை கூடி வருவதாக சொல்லி உள்ளார்.

    சாப்பாட்டு பழக்க வழக்கங்கள் துரித உணவுகள்தான் இதற்கு காரணம் என்று அவர் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

    சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். எனவே உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் படிக்க முடியும். திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில்தான் மாணவர்களும் இளைஞர்களும் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழ்நாட்டு இளைய சமுதாயமானது கல்வியிலும், தனித்திறமைகளிலும், விளையாட்டிலும், உடல் நலத்திலும், சிறந்தவர்களாக வளர்ந்து மாபெரும் சக்தியாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வயநாட்டிற்கு தமிழகம் சார்பாக உதவி.
    • முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    கொளத்தூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு சார்பாக அனைத்து உதவிகளையும் செய்வதாக சொல்லி உள்ளோம். இதற்காக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி உள்ளோம். அது மட்டுமின்றி தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடியை அனுப்பி வைத்துள்ளோம். இன்னும் தேவைப்பட்டால் உதவி செய்வதாக கூறி உள்ளோம்.

    கேள்வி:- பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி மீது ஜாதி ரீதியான தாக்குதல்கள் செய்யப்பட்டுள்ளது?

    பதில்:- இது கேட்க வேண்டிய கேள்வியே இல்லை.

    கேள்வி:- கவர்னர் ஆர்.என்.ரவி பதவி காலம் முடிகிறதே. அவரது பதவி நீட்டிக்கப்படும் என தெரிகிறதே?

    பதில்:- நான் ஜனாதிபதியும் அல்ல, பிரதமரும் அல்ல இவ்வாறு கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

    ×