என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீனவர் பிரச்சனை"

    • பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வில்லை.
    • தமிழ்நாடு பிரச்சினை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வேளாண்மைக்கு என நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தமிழ்நாடு அரசின் சிறப்புக்குரிய ஒரு திட்டமாகும்.

    கரும்பு விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படக் கூடிய ஒன்று தான். இந்த நிதிநிலை அறிக்கையில் அது தொடா்பான அறிவிப்பு இல்லை என்பது உண்மை தான். ஆனால் மானியக் கோரிக்கையின் போது, கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழக முதலமைச்சரும், துறைச் சாா்ந்த அமைச்சரும் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்.

    விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனும் கோரிக்கையில் நியாயம் உள்ளது. அதை அரசு பரிசீலனை செய்து தள்ளுபடி செய்யும் என நம்புகிறேன்.

    வேளாண் துறைக்கு மட்டு மல்ல கூட்டுறவுத்துறை, ஆவின் துறை உள்ளிட்ட 9 துறை இருக்கிறது. எல்லா வற்றிற்கும் சேர்த்து தான் 45 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வேளாண் பட்ஜெட் என்றாலும் கூட பல நிதி வரவு செலவு அறிக்கை, நிதி பற்றாக்குறை இருக்கதான் செய்கிறது. இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு மானிய கோரிக்கையின் போது பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், அரியலூர் மாவட்டத்தில் முந்திரி வளர்ச்சிக்காக அதிக நிதி ஒதுக்க நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடித்து வருவது தொடர் கதையாக நீடிக்கிறது. தமிழ்நாடு அரசும் தொடர்ந்து பல தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது.

    மத்திய அரசு இந்த பிரச்சினையை முடித்து வைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்ட வில்லை. இது என்னவோ தமிழ்நாடு பிரச்சினை என்பது போல கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.

    மத்திய அரசு நினைத்தால் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைக்க முடியும். அந்த அளவிற்கு வலிமையுள்ள அரசாக இருக்கிறது. இலங்கை அரசோடும் இணக்கமான அரசாகவும் இருக்கிறது.

    தமிழ்நாட்டு மக்கள் மற்றும் மீனவா்களின் பிரச்சனைகளில் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக அணுகுவதே பிரச்சனைகள் தொடா்வதற்கு காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்.
    • சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க வேண்டும்.

    சென்னை:

    கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இலங்கை கடற்பகுதிக்குள் தவறுதலாக சென்றாலும் உடனடியாக கைது செய்து சிறையில் தள்ளுகிறார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மீனவரின் படகில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர் ஒருவர் பலியானார்.

    இப்போதும் தமிழக மீனவர்கள் 70 பேர் இலங்கை சிறையில் இருக்கிறார்கள். இலங்கை ராணுவம் பறிமுதல் செய்த 170 படகுகளையும் இதுவரை திருப்பி தரவில்லை.

    எனவே சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க வேண்டும். இலங்கை கட்டுப்பாட்டில் இருக்கும் 170 படகுகளையும் மீட்க வேண்டும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று மீனவர்கள் வலி யுறுத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மீனவர் பிரிவு தலைவர் நீலாங்கரை முனுசாமி மற்றும் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளுடன் இன்று டெல்லி சென்றனர்.

    இன்று மாலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசுகிறார்கள்.

    அப்போது மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகள் பற்றியும் மந்திரியிடம் வலியுறுத்துகிறார்கள்.

    • இந்திய அரசும், இலங்கை அரசும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு எங்களுடையது.
    • மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுக போகிறேன்.

    இலங்கையில் அதிபர் தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் அதிபர் ரனில் விக்கிரமசிங்கே 'தந்தி' டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டி விவரம் வருமாறு:-

    கேள்வி:- இந்தியா-இலங்கை இடையே கச்சத்தீவு ஒரு தொடர் பிரச்சனையாக இருக்கிறது. இது பற்றிய பேச்சுவார்த்தைக்கு நீங்கள் தயாரா?

    பதில்:- கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது? நீங்கள் எப்படி காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தானுடன் பேச மாட்டீர்களோ, அதே மாதிரிதான் நாங்களும்.

    கேள்வி:- கச்சத்தீவை இந்தியாவிடம் திருப்பி கொடுக்க வாய்ப்பே இல்லையா?

    பதில்:- நாம இரண்டு பேரும் ஒரே கொள்கையை தானே வைத்திருக்கோம். நம்ம நாட்டு எல்லைகளை பற்றி மற்றவர்களோடு பேசுவதில்லை. நீங்க காஷ்மீர் பற்றி பேச மாட்டீர்கள். நான் கச்சத்தீவை பற்றி பேசமாட்டேன்.

    கேள்வி:- இந்திய அரசு, கச்சத்தீவை ஒரு முடிந்து போன பிரச்சனையாக நினைக்கவில்லையே?

    பதில்:- இந்தியா அதை முடிந்து போன பிரச்சனையாகத்தான் பார்க்கிறது. அது எங்களுடைய எல்லைக்குட்பட்டது. அது அவங்களுக்கு தெரியும். இந்திரா காந்தியும், பண்டாரநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். எல்லாம் தெளிவாக இருக்கிறது. ஊடகங்கள்தான் அப்படி பார்ப்பதில்லை.

    கேள்வி:- சமீபத்தில் இந்தியா இதுபற்றி உங்களிடம் பேசவில்லையா?

    பதில்:- இல்லை. அவர்கள் மீனவர் பிரச்சனை பற்றி மட்டும்தான் பேசினார்கள். நாங்களும் மீனவர் பிரச்சனையை அவர்களிடம் எழுப்பினோம்.

    கேள்வி:- கச்சத்தீவை பற்றி உங்களிடம் பேசவே இல்லையா?

    பதில்:- அது ஒரு பிரச்சனையே இல்லையே...

    கேள்வி:- வரலாற்று குறிப்புகளின்படி, கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தம் என்றுதான் இந்தியாவில் பலர் நினைக்கிறார்களே...

    பதில்:- வரலாற்று குறிப்பெல்லாம் எதுவும் இல்லை. இந்திய அரசும், இலங்கை அரசும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு எங்களுடையது. எங்களுக்கு இந்தியாவுடன் இதில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழ்நாட்டில் கூட பெரும்பாலான மக்கள் இதை பற்றி கவலைப்படவில்லை. அந்த பகுதியில் இருக்கும் மீனவர்கள் மட்டும்தான் எழுப்புவார்கள். அதுவும் ஒரு அரசியல் பிரச்சனையாகத்தான் இருக்கிறது. மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள சில அரசியல்வாதிகள் அவர்களுக்கு பின்னால் இருக்கிறார்கள். அந்த கதை எல்லாம் எங்களுக்கு தெரியும்.

    கேள்வி:- இது வெறும் தமிழ்நாட்டின் பிரச்சனை என்கிறீர்களா?

    பதில்:- தமிழ்நாட்டிலும் ஒரு சின்ன பகுதியில்தான் இருக்கிறது. சென்னை, மதுரை, கோவையிலோ இந்த பிரச்சனை இல்லையே. நாங்கள் இந்தியா முழுவதும் செல்கிறோம். இது ஒரு பிரச்சனையே இல்லை என்று எங்களுக்கு தெரியும்.

    கேள்வி:- இந்திய வெளியுறவு மந்திரி கச்சத்தீவு இந்தியாவுடையது என்று வெளிப்படையாக பேசியிருக்கிறாரே?

    பதில்:- அவர் எங்களிடம் எதுவும் பேசவில்லை. ஊடகத்தில்தான் அவரிடம் பேட்டி எடுத்து போட்டிருக்கிறீர்கள். அவ்வளவுதான்.

    இவ்வாறு இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே பதில் அளித்தார்.

    மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:-

    மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுக போகிறேன். முதலில், யாழ்ப்பாணத்தில் உள்ள மீனவர்களுக்கு உரிய பங்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் பங்கை வேறு மீனவர்கள் எடுத்து செல்லாமல் இருக்க வேண்டும். நீங்களும் (தமிழகம்) அதை மனிதாபிமானத்தோடு அணுகுவீர்கள் என்று நினைக்கிறேன். இது இலங்கையின் கடல் பகுதி. உட்கார்ந்து பேசினால் உங்களுக்குள் எல்லாவற்றையும் தீர்த்துக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது.
    • ஆட்சி நிர்வாகம் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே யுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை தொடர்பான வெளியுறவுக்கொள்கையை சூழலுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் கூட்டணியில் அனுராக் திசநாயக் அதிபராக தேர்வு செய்யபட்டுள்ளார்.

    இவர் சிங்களர்களையும், தமிழர்களையும் இணைத்து செயல்படுவேன் என கூறினாலும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை.

    ஜனதாமுக்தி சிங்கள பேரினத்தின் தலைவராக தற்போதைய அதிபர் இருந்துள்ளார். அவர் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஊக்குவித்தவர்.

    இடது சாரி இயக்கம் என்று கூறிகொண்டாலும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்பதால் தமிழர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட திசநாயக் அரசு 1½ லட்சம் தமிழர்களுக்கு நீதி பெற்று எதுவும் செய்ய மாட்டார் என கூறினார்.

    இந்தியா-இலங்கை உறவை வலுபடுத்த திசநாயக் இருப்பார் என்பது ஐயமாக தான் உள்ளது. சீன அரசுக்கு சாதகமாக திசநாயக் செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.

    தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பை நிலைநிறுத்துதல், ஈழத்தமி ழர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், போர் குற்றங்களுக்கு தண்டித்தல் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்திய அரசு வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்.

    தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது. மதுவிலக்கு என்பது மாநில பட்டியலில் உள்ளது. மதுகடை திறப்பது, மூடுவது போன்ற அதிகாரம் மாநில அரசுக்கு உள்ள போது மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என கூறுவது ஏமாற்று வேலை.

    மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர் முத்துசாமி மத்திய அரசு தேசிய அளவில் கொள்கை உருவாக்க கூறுவது அபத்தமானது.

    மது ஆலைகளை வைத்துள்ள தி.மு.க. மதுவிலக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபடாது. 2 ஆட்சி பணிகள் அதிகாரிகள் வீட்டில் 42 மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தியதற்கு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை அதிகாரிகள் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சி நிர்வாகம் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.

    பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்கள் போராட்டம் செய்வதாக அறிவித்தனர்.

    அதன் பின்னர் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கைவிட்ட ஆசிரியர்களின் நியாமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    லோக் ஆயுக்தா வலுபடுத்தபட வேண்டும். ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக் ஆயுக்தா வலிமையானதாக இருக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ளது போன்று தமிழகத்தில் வலிமையாக இல்லை.

    முதல்வரை விசாரிக்கும் அதிகார லோக் ஆயுக்தாவிற்கு இல்லை என்பதால் லோக் ஆயுக்தா விசாரணை வரம்புக்குள் முதல்-அமைச்சரை விசாரிக்கும் அதிகாரத்தினை கொண்டு வர வேண்டும்.

    செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறித்து கூறுவதற்கு எதுவுமில்லை. மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பசும்பொன் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்திருக்கிறது.
    • பசும்பொன் முத்துராமலிங்க தேவரை போற்றக்கூடிய செயல்களையும், திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம்.

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் தேவர் திருமகனார் பற்றி சொன்னதை பெருமைப்படுத்தி குறிப்பிட்டதை நான் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

    அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் மாதிரி கம்பீரமாக காட்சியளித்தார், தேவர் திருமகனார் என அண்ணா புகழ்ந்துரைத்துள்ளார்.

    அதேபோல் கலைஞர் சொன்னது, வீரராக பிறந்தார். வீரராக வாழ்ந்தார். வீரராக மறைந்தார். அவர் மறைந்ததற்கு பிறகும் இன்றைக்கும் வீரராக அவர் போற்றப்படுகிறார் என்று கலைஞர் அவரைப்பற்றி புகழ்ந்து பேசிஇருக்கிறார்.

    அத்தகைய தியாகியை போற்றக்கூடிய அரசாக திராவிட முன்னேற்ற கழக அரசு செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் ஒன்றாக தெரியும்.

    பசும்பொன் தேவரை பற்றி கழக அரசு செய்திருக்க கூடிய பல்வேறு செயல்பாடுகளில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.

    மதுரை மாநகரில் மாபெரும் வெண்கலசிலை, பசும்பொன் மண்ணில் நினைவில்லம், மேல்நீலித நல்லூர் கமுதி, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் 3 அரசு கலைக்கல்லூரிகள், மதுரை ஆண்டாள்புரத்தில் முத்துராமலிங்க தேவர் பாலம் என்று பெயரிட்டோம்.

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்வி அறக்கட்டளை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர்மரபினர்க்கு கல்வி வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு, கடந்த 2007-ம் ஆண்டு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மிக எழுச்சியோடு நாம் கொண்டாடி இருக்கிறோம்.

    அப்போது திருமகனார் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டு இருக்கிறது. விழாவை அடையாளம் காட்டக்கூடிய வகையில், வளைவு அமைக்கப்பட்டிருக்கிறது. அணையா விளக்கும் நாம் அமைத்துள்ளோம்.

    நூலக கட்டிடம், பால்குடம் வைப்பதற்கு மண்டபம் முளைப்பாறி மண்டபம் என்று பசும்பொன் தேவர் திருமகனாருக்கு புகழ்சேர்க்க கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றி இருக்கிறோம்.

    இப்போது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு குருபூஜை நடத்தி இருக்கிறோம்.

    பசும்பொன் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்திருக்கிறது.

    நேற்று முன்தினம் கூட பசும்பொன் திருமகனார் பிறந்த நாள் விழாவின் போது ஏற்படுகிற கூட்ட நெரிசல்களை தவிர்ப்பதற்காகவும், மழை வெயிலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் ரூ.1 கோடியே 51 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட தெய்வீக திருமகனார் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை திறந்து வைத்துள்ளோம்.

    இது மாதிரி பசும்பொன் முத்துராமலிங்க தேவரை போற்றக்கூடிய செயல்களையும், திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம். எனவே அவரது புகழும் வாழ்க.

    கேள்வி: பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது. மீனவர்களின் கைது அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே.

    பதில்: தொடர்ந்து நாங்கள் கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறோம். நான் டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பிரதமரிடம் பேசியிருக்கிறேன். வெளியுறவுத்துறை அமைச்சரிடத்திலும் இதை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறோம். அவர்களும் அவ்வப்போது, நாங்கள் எழுதக்கூடிய கடிதத்திற்கு நடவடிக்கை எடுத்து, மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும், இது தொடர்ந்து இருந்துவருகிறது. இதற்கு முடிவு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு இருக்கிறோம். அதில் எந்தவிதமான கருத்து மாறுபாடும் கிடையாது.

    கேள்வி: கலைஞரால் தொடங்கப்பட்ட தேவர் கல்லூரியில் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?

    பதில்: அதற்கு தொடர்ந்து நாங்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறோம். இப்போது கூட 12 பேருக்கு பணி நியமனம் வழங்கியிருக்கிறோம். உரிய நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும்.

    கேள்வி காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் கடந்த 60 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கிறதே?

    பதில்: 2008-ம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தான் காவிரி குண்டாறு திட்டத்தின் முதற்கட்டப் பணி கதவனையில் இருந்து துவக்கப்பட்டது. அதன் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் 9 ஆண்டு காலம் அதை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். கடைசி வருடத்தில் தான் அதை செய்யப்போகிறோம் எனும் அறிவிப்பை வெளியிட்டு தொடர்ந்தார்கள். அதையும் கோவிட் பெருந்தொற்று வந்த காரணத்தினால் கிடப்பில் போடப்பட்டது. இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு அந்தப் பணிகளை துரிதப்படுத்தி தற்போது 40 சதவீதம் வரை நிலஎடுப்பு பணிகள் முடிந்திருக்கிறது. தொடர்ந்து அந்தப் பணிகளை விரைந்து முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் பிரச்சனைகளுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு தளங்களில் போராடுவது அவசியமானது.
    • இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது.

    சென்னை:

    தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும், இலங்கை கடற்படையை கண்டித்தும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக வெற்றிக்கழகம் திட்டமிட்டுள்ளது எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் நேரடியாக கலந்து கொள்ள திட்டுமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

    இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனிடம், மீனவர்கள் பிரச்சனையை விஜய் கையிலெடுத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு திருமாவளவன், தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனையை தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கையில் எடுத்திருப்பது மகிழ்ச்சி. மக்கள் பிரச்சனைகளுக்காக அரசியல் கட்சிகள் பல்வேறு தளங்களில் போராடுவது அவசியமானது என்று கூறினார்.

    முன்னதாக சென்னையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் திருமாவளவன் பேசுகையில், தற்போது, கட்சி துவங்கினாலே, யூகங்கள் எல்லாம் செய்தியாகின்றன. இப்போதே 20 சதவீதம், 24 சதவீதம் என்று எல்லாம் எழுதுகிறார்கள். அடுத்த முதலமைச்சர் இவர் தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக்கொண்டு வலிந்து செய்தியை பூதாகரப்படுத்துகின்றன. இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. வாக்குகள் எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த சமூகமும் இந்த ஊடகமும் எத்தகைய அணுகுமுறைகளை கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். 

    ×