search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹேமா கமிட்டி"

    • குஜராத்தில் பில்கிஸ் பானு பலாத்கார குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு அவர்களுக்கு வலது சாரிகளால் பலத்த வரவேற்பும் அளிக்கப்பட்டது.
    • கேரள திரைத்துறைக்குச் சமமான அல்லது அதைவிட பெரிய திரைத்துறை கொண்ட மாநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை இல்லை

    மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்டவைகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டியை அரசு அமைத்தது. அதன் விசாரணை அறிக்கையில் பட வாய்ப்புக்காக பல நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

    இதையடுத்து நடிகைகளின் பாலியல் புகார்களின் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த 10 பேர் உள்பட மொத்தம் 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். நடிகைகள் புகாரின் பேரில் நடிகர்கள் உள்ளிட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக கேரள ஐகோர்ட் சிறப்பு இருக்கை அமைத்தது. இந்த சிறப்பு இருக்கையை சேர்ந்த நீதிபதிகள் முன் ஹேமா கமிட்டியின் அறிக்கை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேமா கமிட்டி அறிக்கை 5 வருடங்களுக்கு முன்னரே கேரள அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதன்மீது இதுநாள் வரை எந்த நடவைடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி தங்களது கண்டனங்களை நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது கல்கத்தா பெண் டாகடர் கொலை போல நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குஜராத்தில் பில்கிஸ் பானு பலாத்கார குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு அவர்களுக்கு வலது சாரிகளால் பலத்த வரவேற்பும் அளிக்கப்பட்டது.

    எனவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து அவரும் நிலையில் பெண்களை பாதுகாக்க கேரள அரசு தொலைநோக்கு திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது. ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது போல் நாட்டில் இதுவரை உள்ள எந்த மாநில அரசாங்கமும் திரைத்துறையில் தலையிட்டதில்லை. கேரள திரைத்துறைக்குச் சமமான அல்லது அதைவிட பெரிய திரைத்துறை கொண்ட மாநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை இல்லை. ஆனால் கேரளாவில் இது சாத்தியமானதற்குக் காரணம் இங்கு இடதுசாரி அரசு ஆட்சி அதிகாரத்தில் உள்ளதே ஆகும். ஹேமா கமிட்டியில் தங்களது புகார்களை தெரிவித்தவர்களும், இன்னும் தெரிவிக்காதவர்களும் போலீசில் முன்வந்து புகார் அளிக்கலாம்.அந்த புகார்கள் மீது முழுமையான கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.

     

    • நாசர் தலைமையிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • கேரளாவின் ஹேமா கமிட்டி பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்.

    தென்னிந்திய நடிகர் சங்க 68வது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தொடங்கியுள்ளது.

    நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நடிகர் விஷால் சைக்கிளில் வந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கேரளாவின் ஹேமா கமிட்டி போன்று தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைப்பது குறித்தும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடனான மோதல் போக்கு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு முன்னதாக வெளியிட்டது.
    • விடுபட்ட பக்கங்கள் உள்பட முழுமையான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில், கேரள அரசு சமர்ப்பிக்க உள்ளது.

    மலையாள சினிமாவை தற்பொழுது இந்த ஹேமா அறிக்கை புரட்டிப் போட்டுள்ளது. மலையாள சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

    முன்னதாக, கேரள நடிகைகள் மற்றும் சினிமா பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன் ஒன்றை கேரள அரசு நியமித்தது.

    இந்த கமிட்டி, கடந்த சில நாட்களாக கேரள திரையுலகில் வெளிவந்த பாலியல் புகார்களை அடுத்து 233 பக்கங்கள் கொண்ட ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு வெளியிட்டது.

    இந்நிலையில், ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் கேரள அரசு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    விடுபட்ட பக்கங்கள் உள்பட முழுமையான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில், கேரள அரசு சமர்ப்பிக்க உள்ளது.

    ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை, டிஜிட்டல் ஆதாரங்கள் உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்குமாறு, முன்னதாக அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    மேலும், ஹேமா கமிட்டி அறிக்கை மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.

    • அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
    • இதனை தற்பொழுது மறுத்து நிவின் பாலி மறுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அந்தப் பெண் அணுகிய நிலையில், இந்த சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசாருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தற்பொழுது மறுத்து நிவின் பாலி மறுத்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் " நான் என் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை கேள்விப் பட்டேன். இது முற்றிலும் பொய்யானது. நான் என் மீது உள்ள நியாயத்தை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன். உண்மையான குற்றவாளியை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன். மத்ததெல்லாம் சட்ட ரீதியாக கையாளப்படும்" என தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

    இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

    பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மலையாள நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நிவின் பாலி சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எர்ணாகுளத்தில் உள்ள ஊன்னுக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடிகர் மற்றும் பிற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அந்தப் பெண் அணுகிய நிலையில், இந்த சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசாருக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மலையாள பிரபல நடிகர்களுக்கு அடுத்தடுத்து விழும் பாலியல் குற்றச்சாட்டால். மலையாள திரையுலகமும், ரசிகர்கள் மற்றும் மக்களிடையே மிகப் பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 6 வழக்குகள் கொச்சியிலும், ஒரு வழக்கு திருவனந்தபுரத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • ஹோ கமிஷனின் அறிக்கை தொடர்பாக கேரள அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

    கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து விசாரணை நடத்த மாநில அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷனின் விசாரணை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நடிகர்கள் ஜெயசூர்யா, இடவேள பாபு, முகேஷ் எம்.எல்.ஏ., மணியன் பிள்ளை ராஜு உள்பட 7 பேர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தார். இதில் 6 வழக்குகள் கொச்சியிலும், ஒரு வழக்கு திருவனந்தபுரத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மலையாள திரையுலகில் நடிகைகளுக்குபாலியல் தொல்லை தரப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஹேமா கமிட்டி அறிக்கையை கடந்த 5 ஆண்டுகளாக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மனுதாரர்களான வழக்கறிஞர்கள் இருவர், அந்த அறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பது மற்றும் தனியுரிமை என்ற போர்வையில் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காதது என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் மற்றும் ஹேமா கமிட்டி அறிக்கையின் திருத்தப்பட்ட பக்கங்களில் ஏதேனும் இருந்தால் வெளிப்படுத்தப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

    ஏற்கனவே ஹோ கமிஷனின் அறிக்கை தொடர்பாக கேரள அரசு சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சி.பி.ஐ. விசாரணை கோரி மனுத்தாகக்ல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஹேமா கமிஷனின் அறிக்கை மலையாள திரையுலகில் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரையுலகில் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நடிகைகள் தங்களது ஆதங்களை தெரிவித்து வருகின்றனர். 

    • நடிகர் சங்கத்தின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு நடிகை ராதிகா பதிலளித்தார்.
    • பெரிய நடிகர்கள் எங்களுக்கு ஆதரவாக கருத்து கூறினால் நன்றாக இருக்கும்.

    தமிழ் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று வடபழனியில் நடைப்பெற்றது. அதில் நடிகர் சங்கத்தின் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு நடிகை ராதிகா பதிலளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது " தயாரிப்பாளர்கள் ஹீரோக்களுக்கு நிறைய சம்பளத்தை கொடுக்கின்றனர். ஆங்கில திரையுலகில் பிளான் செய்கிற விஷயங்களில் 10 பர்சண்ட் இங்கு செய்தால் நம்மளால் பல பணங்களை நாம் சேமிக்க முடியும்.

    பெரிய நடிகர்கள் எங்களுக்கு ஆதரவாக கருத்து கூறினால் நன்றாக இருக்கும். கேரவன் விவகாரம் குறித்து விளக்கம் தான் கூறினேன், புகார் ஏதும் அளிக்கவில்லை. நான் புகார் அளித்திருந்தால் தான், என்னிடம் விசாரணை நடத்துவார்கள்.

    இதுபோன்ற ஒரு சமயத்தில் பெரிய பிரச்சினை வந்தபோது நடிகை ஒருவரை காப்பாற்றினேன். 4 நாட்களுக்கு முன்பு எனக்கு எஸ்.ஐ.டியில் இருந்து தொடர்பு கொண்டார்கள்.

    படித்த இளைஞர்கள் நிறைய பேர் வந்துவிட்டார்கள், அதனால் நிறைய மாற்றங்கள் வந்துவிட்டது.

    என்னுடைய வாழ்க்கையில் எந்த பிரச்சினைகள் வந்தாலும் நான் தனியாகதான் எதிர்கொண்டுள்ளேன். இப்போது வரை பெண்கள் போராடிதான் வருகிறேன்.

    80களில் இருந்து நான் பார்க்கிறேன், எனக்கு தெரியும் தமிழ் திரையுலகிலும் இருக்கிறது. ஆனால், யாருடைய பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் பெரிய ஆட்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

    நடிகர் சங்கத்தில் ஒரு வலிமையான சங்கம் அமைக்க நான் வலியுறுத்தி உள்ளேன். முன்னணி நடிகர்களின் மவுனம் தவறாக தான் தெரியும்" என்றார்.

    • சிமி இந்த கருத்தை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
    • தலைவர் VD சதீசன் உட்பட ஆண் நிர்வாகிகளுக்கு ஏற்ற விதமாக நடந்த்து கொண்டால் மட்டும்தான் பெண்களுக்கு பதவி கிடைக்கிறது

    கேரள திரைத்துறையில் நடந்த பாலியல் குற்றங்கள் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை வெளியீடு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கேரள காங்கிரசிலும் "காஸ்டிங் கவுச்"[casting couch] எனப்படும் படுக்கைக்கு அழைக்கும் கீழ்த்தரமான நடைமுறை இருந்து வருவதாகக் கட்சியின் பெண் THALIAVR சிமி ரோஸெபெல் ஜான் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிமி இந்த கருத்தை வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    எர்ணாகுளத்தில் வைத்து செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், கேரள காங்கிரசில் பெண் உறுப்பினர்கள் உயர் பதவிக்குச் செல்ல வேண்டும் என்றால் கட்சிக்குள் தங்களிடம் நடக்கும் அத்துமீறல்களைப் போர்த்துக்கொண்டிருந்தாக வேண்டி உள்ளது என்று தெரிவித்தார். மேலும் கேரள காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் VD சதீசன் உட்பட ஆண் நிர்வாகிகளுக்கு ஏற்ற விதமாக நடந்த்து கொண்டால் மட்டும்தான் பெண்களுக்கு பதவி கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

     

    காங்கிரசில் உள்ள பெண் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை கொச்சைப்படுத்தும் வகையில் சிமி பேசியுள்ளதால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குதவதாக கேரள காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் காங்கிரசில் உள்ள லட்சக்கணக்கான பெண்களை மன ரீதியாக பாதிப்பதாகவும், அவர்களின் கண்ணியத்தை குலைப்பதாகவும் சிமி பேசியுள்ளார் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

    மேலும் சிமியின் குற்றச்சாட்டுகளைக் கேரளா காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் VD சதீசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நாங்கள் அவரையும்[சிமி] ஆதரிக்கவே செய்தோம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் கூட பல்வேறு பொறுப்புகளில் சிமி இருந்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.   

    • நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, எடவேல பாபு மற்றும் டைரக்டர் ரஞ்சித் உள்பட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
    • நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியிருக்கும் நடிகைகளிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நடிகை பலாத்காரம் தொடர்பான வழக்கில் பிரபல நடிகர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாகவும், மலையாள பட உலகில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவும் அரசு முடிவு செய்தது.

    இதற்காக கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் 3 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தீவிர விசாரணை நடத்தி 2019-ம் ஆண்டு தனது அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. 233 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது.

    இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்வியின் பயனாக அறிக்கையின் சில தகவல்கள் வெளியானது. அதில் மலையாள பட உலகில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பது உறுதியானது. இந்த அறிக்கை வெளியானதையடுத்து, மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து கருத்துக்களை வெளியிட்டனர். கேரள திரைப்பட அகாடமி இயக்குநர் ரஞ்சித் மீது மேற்கு வங்காள நடிகை ஸ்ரீலேகா பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தார். தொடர்ந்து நடிகர்கள் சித்திக், முகேஷ், எடவேல பாபு, சுதீஷ், டைரக்டர் ஸ்ரீகுமார் மேனன் ஆகியோர் மீதும் பாலியல் புகார்கள் கூறப்பட்டன.

    இந்த புகார்கள் தொடர்பாக விசாரிக்க கேரள அரசு சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. இந்த குழு தங்கள் விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த சூழலில் பாலியல் புகாரில் சிக்கிய சித்திக், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும், டைரக்டர் ரஞ்சித் கேரள திரைப்பட அகாடமி இயக்குநர் பதவியில் இருந்தும் விலகினர்.

    இதற்கிடையில் பாலியல் புகார்கள் தொடர்பாக டைரக்டர்கள், நடிகர்கள் மீது போலீஸ் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா, எடவேல பாபு மற்றும் டைரக்டர் ரஞ்சித் உள்பட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறியிருக்கும் நடிகைகளிடம் வாக்குமூலமும் பெறப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நடிகர்களை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்து பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர்கள் தங்களின் மீது கூறப்பட்டிருக்கும் பாலியல் புகார்களை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

    இதற்காக அவர்கள் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். அதே நேரத்தில் வழக்கில் தொடர்புடைய நடிகர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நடிகர் முகேஷ் கொச்சி மாரட் பகுதியில் உள்ள வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்றனர். பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அவரது வீட்டில் சோதனை செய்து சாட்சியங்களை சேகரிக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஏற்கனவே வீட்டு சாவியை ஒப்படைக்க நடிகர் முகேசுக்கு தகவல் கொடுத்ததாகவும் ஆனால் அவர் சாவியை கொடுத்துச் செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர் எங்கு உள்ளார்? என்ற விவரமும் தெரியவில்லை. இதனால் போலீசார் வீட்டில் சோதனை நடத்த முடியவில்லை.

    இதற்கிடையில் நடிகர் முகேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. ஆனால் அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யவில்லை. இருப்பினும் விசாரணையின் போது முகேஷ் எம்.எல்.ஏ. எந்த பலனும் பெறக்கூடாது என அவர் தெரிவித்து உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கில் வேற லெவலில் இதுபோன்ற பாலியல் பிரச்சனைகள் உள்ளது.
    • யாரும் பேசாவிட்டால் எந்த தீர்வும் கிடைக்காது. பூனைக்கு யாராவது மணிக்கட்டியே தீர வேண்டும்.

    மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தால் திரை உலகமே நிலை குலைந்து போய் உள்ளது. இந்த சம்பவத்தால் மலையாள திரை உலக அமைப்பான அம்மா அமைப்பு தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.

    கேரளாவில் திடீரென வெடித்துள்ள இந்த சம்பவம் அங்கு மட்டுமின்றி அனைத்து திரை உலகிலும் பேசும் பொருளாக மாறி உள்ளது. சில தினங்களாக ஒவ்வொரு நாளும் பல நடிகைகள் புதிய பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகை ஷகிலா தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    மலையாள திரை உலகில் இருப்பது போன்று தமிழ் திரையுலகிலும் இந்த பிரச்சனை உள்ளது. குறிப்பாக தெலுங்கு திரை உலகில் இதைவிட அதிகமாகவே இருக்கிறது.

    இந்தியை பொறுத்தவரை அப்படி அல்ல. அவர்கள் உடனே நண்பர்களாக மாறி விடுவார்கள். எனவே அங்கு பெரிதாக காஸ்டிங் கோச் பிரச்சனை இருக்காது. ஆனால் அங்கு நெபாடிசம் பிரச்சனை உள்ளது.

    அதாவது புதிய நடிகர்கள் யாரையும் வளரவிடாமல் தங்களின் வாரிசுகளையே முன்னணி நடிகர்களாக்க முயற்சிப்பது போன்ற பிரச்சனை உள்ளது.

    தெலுங்கில் வேற லெவலில் இதுபோன்ற பாலியல் பிரச்சனைகள் உள்ளது. இவை எல்லாம் பேசி வைத்துக் கொண்டுதான் செய்யப்படுகிறது. ஆரம்பத்திலேயே தயாரிப்பாளருக்கும் தனக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண வேண்டும் என நடிகையின் மேனேஜரிடம் பேசி விடுவார்கள். இதற்கு சம்மதித்துதான் அந்த நடிகை படத்தில் நடிப்பார். முக்கால்வாசி படம் முடிந்த பின்னர் அவர்களால் தன்னை படத்தில் இருந்து வெளியேற்ற முடியாது என்பதால் நடிகைகள் ஒத்துழைக்க மறுப்பார்கள். இதன் காரணமாக பல பிரச்சனைகள் வருகிறது.

    குடும்ப சூழலால் பாலியல் தொல்லைகளை சிலர் வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். யாரும் பேசாவிட்டால் எந்த தீர்வும் கிடைக்காது. பூனைக்கு யாராவது மணிக்கட்டியே தீர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×