என் மலர்
நீங்கள் தேடியது "விராட் கோலி"
- ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் எங்கள் அணியில் மாற்றம் இருக்காது.
- விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு பெரிய அங்கம்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும்.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விராட் கோலி, பட்டிதாரை அமைதியாகிவிட்டால் சிஎஸ்கே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.
இது குறித்து பிளமிங் கூறியதாவது:-
விராட் கோலி ஆர்சிபி அணியின் ஒரு பெரிய அங்கம். ஆர்சிபி அணியில் விராட் கோலியையும் ரஜத் பட்டிதாரையும் அமைதியாகிவிட்டால் சிஎஸ்கே வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இரண்டு அணிகளுமே கடந்த ஆண்டை விட தற்போது வித்தியாசமாக இருக்கிறது.
விராட் கோலியை தவிர இம்முறை அவர்கள் பல பலமான வீரர்களை சேர்த்து இருக்கிறார்கள். ஆர்சிபி மட்டுமல்ல ஒட்டு மொத்த அணிகளும் தற்போது இப்படிதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டுகளை விட இம்முறை தொடர் சரிசமமாக இருப்பதாக நான் நினைக்கின்றேன். பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் எங்கள் அணியில் மாற்றம் இருக்காது.
என்று பிளெமிங் தெரிவித்துள்ளார்.
- ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐ.பி.எல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் கடந்த 22ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக விளையாடிய ஆர்சிபி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்நிலையில், விராட் கோலி குறித்து எம்.எஸ்.தோனி மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி அணியின் வெற்றிக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். 50-60 ரன்கள் அவருக்கு போதாது.
எப்போதும் சதம் அடிக்க வேண்டும். அணியின் வெற்றிக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றே இருப்பார்.
இறுதி வரை விக்கெட் இழக்காமல் நிலைத்து ஆட வேண்டும் என்று நினைப்பார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- KKR-க்கு எதிரான போட்டியில் கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கோலி 59 அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இப்போட்டியின் 13 ஆவது ஓவரின் கோலி பேட்டிங் செய்துகொண்டிருக்கும்போது மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவர் கோலியின் கால்களில் விழுந்தார். இதனால் போட்டி சில நிமிடங்கள் தடைபட்டது.
பின்னர் மைதானத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் அத்துமீறி நுழைந்த ரசிகரை மைதானத்தை விட்டு வெளியேற்றினர்.
விராட் கோலியின் கால்களில் ரசிகர் விழுவது இது முதல் முறையல்ல. 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடிக்க முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில்174 ரன்கள் எடுத்தது.
- ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2025 சீசன் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக ஆர்சிபி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 16.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதல் ஓவரை ஆர்சிபி அணி வீரர் ஜோஷ் ஹேசல்வுட் வீசினார். ஆனால் அந்த ஓவரை விராட் கோலி வீசியதாக ஒளிபரப்பப்பட்டது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
- விராட் கோலியை கிங் ஆஃப் கிரிக்கெட், கோட் என ஷாருக்கான் பாராட்டினர்.
- ஆர்சிபி அணிக்காக 18 வருடமாக விளையாடும் விராட் கோலிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2025 சீசன் ஈடன் கார்டன் மைதானத்தில் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஷ்ரேயா கோஷல் பாடல்கள் பாடி அசத்தினார். இஷா பதானி கவர்ச்சி நடனம் ஆடினார்.
அதன்பின் ஷாருக்கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆர்சிபி அணிக்காக 18 வருடங்கள் தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலியை புகழந்து பேசினார். அப்போது கிங் ஆஃப் கிரிக்கெட், கோட் என விராட் கோலியை பாராட்டி வரவேற்றார். அதற்கு விராட் கோலியை நன்றி தெரிவித்தார்.
பின்னர் விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் உடன் சற்று உரையாடினார். விராட் கோலியை கோல்டன் தலைமுறை எனவும், ரிங்கு சிங்கை இளம் தலைமுறை எனவும் ஷாருக்கு கூறினார்.
பின்னர் இருவருடன் ஆட்டம் போட்டார். ஷாருக்கான் உடன் விராட் கோலியும், ரிங்கு சிங்கும் சேர்ந்து ஆடினர். பின்னர் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாக தலைவர்களை மேடைக்கு அழைத்தார். ஐபிஎல் கோப்பை மேடைக்கு கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கேகேஆர் அணி கேப்டன் ரகானே, ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.
பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, விராட் கோலிக்கு 18 வருடமாக ஆர்சிபி அணிக்காக விளையாடுவதை கவுரவப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 1,053 ரனகளும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 1,057 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக 1,030 ரன்களும் அடித்துள்ளார்.
- 252 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 8004 ரன்கள் குவித்துள்ளார்.
ஐ.பி.எல். 2025 சீசன் நாளை தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி மழையினால் பாதிக்க வாய்ப்புள்ளது. வானிலை மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
நாளை நடக்கும் போட்டியில் விராட் கோலி ஒரு அரிய சாதனையை படைக்க இருக்கிறார். அவர் நாளைய போட்டியில் 38 ரன் அடித்தால் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடப்பார்.
இதன்மூலம் நான்கு அணிகளுக்கு எதிராக ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். விராட் கோலி இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 1,053 ரனகளும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 1,057 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக 1,030 ரன்களும் அடித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலிக்கு இது 18 ஆவது சீசன் ஆகும் இதுவரை 252 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 8004 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ்குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.
- பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ்குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.
ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிதிஷ்குமார் ரெட்டி படைத்தார்.
இந்நிலையில், அண்மையில் நிதிஷ்குமார் கொடுத்த பாட்காஸ்டில் மெல்போர்ன் டெஸ்ட் சதம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பாட்காஸ்டில் பேசிய நிதிஷ்குமார், "ஒருமுறை விராட் கோலி சர்ஃபராஸ் கானிடம் 'உன் ஷூ சைஸ் என்ன?' என கேட்டார். அதற்கு அவர் 9 என்றார். பின் திரும்பி என்னை பார்த்து என்னுடைய அளவை கேட்டார். அவருக்கும் எனக்கும் ஒரே அளவு இல்லை என்றாலும், எனக்கு அவரின் ஷூ வேண்டும் என்ற ஆசையில் எப்படியோ யோசித்து 10 எனக் கூறினேன். அவர் ஷூவை கொடுத்தார். அதை அணிந்து மெல்போர்ன் டெஸ்டில் விளையாடி போட்டியில் சதமடித்தேன்" என்று தெரிவித்தார்.
- புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயால், லுங்கி நிகிடி, நுவன் துசாரா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் உள்னளர்.
- லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு போன்ற ஆல்-ரவுண்டர்கள் உள்ளனர்.
ஐ.பி.எல். போட்டியில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த முறையாவது அந்த அணி கோப்பையை வெல்லுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
பேட்ஸ்மேன்கள்
ரஜத் படிதார், விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஸ்வாஸ்திக் சிகாரா.

ஆல்-ரவுண்டர்கள்
லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, மனோஜ் பாண்டேஜ், ஜேக்கப் பெத்தேல்.
பந்து வீச்சாளர்கள்
ஜோஷ் ஹேசில்வுட், ரஷிக் தார், சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், நுவன் துசாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோகித் ரதீ, யாஷ் தயால்.
தொடக்க வீரர்கள்
இந்திய அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் விராட் கோலி களம் இறங்கி வருகிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுகிறார். இதனால் இந்த சீசனிலும் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். அவருடன் பில் சால்ட், தேவ்தத் படிக்கல் ஆகியோரில் ஒருவர் தொடக்க வீரராக களம் இறங்க வாய்ப்புள்ளது. இதனால் தொடக்க ஆட்டக்காரர்கள் என்பதில் அணிக்கு பெரிய அளவில் சிரமம் இல்லை எனலாம்.
மிடில் ஆர்டர்
ரஜத் படிதார், ஜித்தேஷ் சர்மா, லிவிங்ஸ்டன், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஸ்வப்னில் சிங் ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் தேவைப்பட்டால் குருணால் பாண்ட்யாவும் மிடில் வரிசையில் கைக்கொடுப்பார்.
நல்ல தொடக்கம் அமைந்தால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய ஸ்கோரை எட்ட துணைபுரிவார்கள். ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், டிம் டேவிட் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இது அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கலாம்.

சுழற்பந்து வீச்சு
குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், லிவிங்ஸ்டன், பெத்தேல் நன்றாக அறிமுகம் ஆனவர்கள். இவர்களுடன் சுயாஷ் சர்மா, மோகித் ரதீ ஆகியோர் உள்ளனர். வாய்ப்பு கொடுக்கப்பட்டால்தான் அவர்களின் திறமை வெளிப்படும். குருணால் பாண்ட்யா என்ற ஒரு நட்சத்திர ஸ்பின்னருடன் பகுதி நேரமாக ஸ்பின்னர்களாக ஆல்-ரவுண்டர் லிவிங்ஸ்டன், பெத்தேல், ஸ்வப்னில் சிங்கை பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்கள்
ஜோஷ் ஹேசில்வுட், புவனேஸ்வர் குமார், நுவான் துசாரா, யாஷ் தயால், லுங்கி நிகிடி ஆகிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களுடன் ரஷித் தார், அபிநந்தன் சிங், ஆல்ரவுண்டர் மனோஜ் பாண்டேஜ் உள்ளனர்.
ஜோஷ் ஹேசில்வுட் புதுப்பந்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். அதேபோல் புவனேஸ்வர் குமாரும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். யாஷ் தயால், லுங்கி நிகிடி, நுவான் துசாரா இவர்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆல்-ரவுண்டர் டிம் டேவிட்டும் வேகப்பந்து யூனிட்டிற்கு உதவியாக இருப்பார்.

வெளிநாட்டு வீரர்கள்
பில் சால்ட், லிவிங்ஸ்டன், ஷெப்பர்டு, பெத்தேல், ஹேசில்வுட், துசாரா, லுங்கி நிகிடி ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
சமநிலையான ஆடும் லெவன் அணிக்காக இவர்கள் எப்படி பயன்படுத்த இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
ஜித்தேஷ் சர்மா விக்கெட் கீப்பர் பணியை மேற்கொண்டால் ஹேசில்வுட், லுங்கி நிகிடி அல்லது துசாரா, லிவிங்ஸ்டன் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டு, பில் சால்ட் இம்பேக்ட் வீரராக களம் இறக்கப்படலாம்.
எப்போதுமே ஆர்சிபி ஏற்றம் இறக்கத்துடன் பிளேஆஃப் வரை முன்னேறும். ஆனால் பிளேஆஃப், இறுதிப் போட்டியில் வெற்றி என்ற தடைக்கல்லை தாண்ட முடியாமல் உள்ளது. இந்த முறையாவது சாம்பியன் பட்டத்தை வெல்லுமா? என்று பார்ப்போம்.
- 18வது ஐ.பி.எல். சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது.
- விராட் கோலி ஆர்.சி.பி. அணிக்காக விளையாடுகிறார்.
விளையாட்டுத் துறையில் எதுவும் நடக்கலாம். 2008ம் ஆண்டு ஐ.சி.சி. நடத்திய அண்டர் 19 (U19) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. அன்று தொடங்கி விராட் கோலியின் இன்று சர்வதேச கிரிக்கெட் இதுவரை கண்டிராத தலைசிறந்த வீரராக உருவெடுத்துள்ளார்.
எனினும், அண்டர் 19-இல் விராட் கோலியுடன் விளையாடிய அனைவரும் இன்று கிரிக்கெட் துறையில் சாதனையாளர் ஆகிவிடவில்லை. எனினும், விராட் கோலி தற்போது 18-வது ஐ.பி.எல். தொடரில் விளையாட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிக்காக உள்ளார். இந்த நிலையில், அண்டர் 19 இந்திய அணியில் தன்னுடன் விளையாடிய தன்மே ஸ்ரீவஸ்தவா விரைவில் தொடங்க இருக்கும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் அம்பயராக களமிறங்குகிறார்.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, தன்மே ஸ்ரீவஸ்தவா தனது 35-வது வயதில் இருந்து அம்பயரிங் செய்து வருகிறார். இவர் 2008-ம் ஆண்டு நடந்த ஐ.சி.சி. அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு அதிக ஸ்கோர் அடித்த வீரராக திகழ்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் விளையாடினார்.
அம்பயரிங் செய்வது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தன்மே ஸ்ரீவஸத்வா கூறும் போது, "நான் தலைசிறந்த வீரராக இருந்ததை புரிந்து கொள்கிறேன். ஒருகட்டத்தில் ஐ.பி.எல். விளையாட முடியுமா என்ற சூழல் உருவானது. அப்போது, தொடர்ந்து வீரராக விளையாட வேண்டுமா அல்லது வெற்றிகரமாக இரண்டாவது இன்னிங்ஸில் கவனம் செலுத்த வேண்டுமா என முடிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது," என்று தெரிவித்தார்.
- பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.
- கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும்.
ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணியை பெங்களூரு சந்திக்கிறது.
17 வருடங்களாக ஒரு கோப்பையை கூட வெல்லாததால் கிண்டலடிக்கப்பட்டு வரும் அந்த அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் முதல் சாம்பியன் பட்டத்தை முத்தமிடும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
கடந்த வருடம் விராட் கோலி 741 ரன்கள் அடித்து ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். ஆனாலும் அவர் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது ஒருபுறம் பெங்களூரு அணிக்கு பின்னடைவை கொடுத்தது. அதனால் விராட் கோலி விமர்சனங்களையும் சந்தித்தார்.
இந்நிலையில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பிரச்சினையில்லை என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். எனவே விராட் கோலி தனது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. ஐபிஎல் மற்றும் இதர தொடர்களில் பிலிப் சால்ட் மிகவும் அட்டாக் செய்யக்கூடிய ஒரு வீரராக விளையாடி வருகிறார். அவர் விராட் கோலி மீதான அழுத்தத்தை எடுத்து விடுவார் என்று நினைக்கிறேன்.
அது போன்ற சூழ்நிலையில் விராட் கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும். எப்போது ரிஸ்க் எடுக்க வேண்டும் எப்போது கூடாது என்பது அவருக்குத் தெரியும். இந்தத் தொடரில் அவர் பெங்களூரு அணியின் பேட்டிங் துறையின் கேப்டனாக செயல்பட்டு புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
ஏனெனில் இம்முறை பெங்களூரு அணி நிறைய மைதானங்களுக்கு பயணித்து விளையாட உள்ளது. அங்கே பேட்டிங் ஆர்டரில் குறைந்த ரன்களுக்குள் சரிவு ஏற்படாமல் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி அதிரடியாக விளையாடும் வீரர்கள் இருப்பதால் விராட் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
என்று டிவில்லியர்ஸ் கூறினார்.
- தொடர் தோல்வியையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது.
- இந்திய வீரர்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவர்களின் குடும்பத்தை அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமாக டெஸ்ட் தொடரை இழந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் முக்கியமான ஒன்றாக வீரர்கள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போது அவர்களின் குடும்பம் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தங்க அனுமதி இல்லை என்று கூறியது.
இதனைப் போலவே தற்போது நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் துபாய் பயணம் செய்த இந்திய அணி, வீரர்களின் குடும்பங்கள் அவர்களோடு குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தங்கவில்லை என்று தெரிகிறது. இந்த சூழ்நிலையில் விராட் கோலி அந்த விதியில் தனக்கு உடன்பாடு இல்லை என சில முக்கிய விஷயங்களை கூறினார்.
அதில், எந்த வீரையாவது உங்களின் குடும்பம் உங்களோடு இருக்க ஆசைப்படுகிறீர்களா? என்று கேட்டால் அவர்கள் ஆமாம் என்று தான் கூறுவார்கள். போட்டி முடிந்த பிறகு நான் என் ரூமுக்கு சென்ற தனியா சோகமாய் இருக்க விரும்பல. நான் சாதாரணமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்லும் வகையில் பிசிசிஐ விதிகளை தளர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீண்ட நாட்கள் குடும்பத்தினர் வீரர்களுடன் இருக்க விரும்பினால் முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- நான் ஆர்சிபியில் விளையாடிய போது 2-3 வீரர்களுக்கு மட்டுமே அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தது.
- பெரும்பாலும் பெங்களூரு அணி விராட் கோலி மற்றும் வெளிநாட்டு வீரர்களையே அதிகம் நம்புகிறது.
18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.
இதுவரை 17 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் ஒருமுறை கூட ஆர்சிபி அணி கோப்பையை வென்றது கிடையாது. இத்தனைக்கும் அந்த அணியில் முக்கிய வீரரான விராட் கோலி தொடர்ந்து 17 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் ஆர்சிபி கோப்பையை வெல்லாததற்கான காரணம் குறித்து அந்த அணியில் விளையாடிய முன்னாள் வீரர் சதாப் ஜகாதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

நான் ஆர்சிபியில் விளையாடிய போது 2-3 வீரர்களுக்கு மட்டுமே அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தது. இந்த வியூகம் இதுவரைக்கும் பெங்களூரு அணிக்கு பலம் அளிக்கவில்லை. பெரும்பாலும் பெங்களூரு அணி விராட் கோலி மற்றும் வெளிநாட்டு வீரர்களையே அதிகம் நம்புகிறது. அணி என்ற அளவில் அனைத்து வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு. நீங்கள் கோப்பைகளை வெல்ல வேண்டும் என்றால் வீரர்கள் குழுவாக விளையாட வேண்டும். இரண்டு மூன்று வீரர்களை மட்டுமே நம்பி கோப்பையை வெல்ல முடியாது.
இந்த விஷயத்தில் சென்னை அணி நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. அனைத்து வீரர்களுக்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்த சிறிய அளவிலான முயற்சி மிகப் பெரிய மாற்றத்தை கொடுக்கிறது.
சென்னை அணியை பார்த்தால் உள்ளூர் வீரர்கள் வலிமையாக உள்ளனர். மிதமாக விளையாடக்கூடிய வெளிநாட்டு வீரர்களும் அந்த அணியில் இருக்கிறார்கள். இந்த காம்பினேஷன் மிகவும் முக்கியம்.
என்று சதாப் ஜகாதி கூறினார்.
சதாப் ஜகாத் பெங்களூரு மற்றும் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.