என் மலர்
நீங்கள் தேடியது "டிஜிட்டல் கைது"
- முதியவர் அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி உள்ளார்.
- புகாரின்பேரில் போலீசார் பணம் பறித்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
நவிமும்பை:
நவிமும்பை கோபர்கைரானே பகுதியை சேர்ந்த 70 வயது முதியவருக்கு, அண்மையில் வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்தது. இதில் எதிர்முனையில் தோன்றிய நபர், தன்னை சி.பி.ஐ. அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார்.
பின்னர் அவர், உங்கள் பெயரில் விமானத்தில் வந்த பார்சல் ஒன்று எங்களிடம் சிக்கியுள்ளது. அதில், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள், 8 பாஸ்போர்ட்டுகள், மடிக்கணினி ஆகியவை உள்ளது. இதனால் உங்களை டிஜிட்டல் கைது செய்யப் போகிறோம் என மிரட்டினார்.
மேலும் இதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் உடனடியாக ரூ.12½ லட்சத்தை அனுப்பி வைக்கவேண்டும் என கூறி ஒரு வங்கிக்கணக்கு எண்ணை தெரிவித்தார்.
இதனால் பயந்து போன முதியவர் அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் பணம் பறித்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
- போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மும்பை:
மும்பையில் வசித்து வரும் 86 வயது மூதாட்டியை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீஸ் அதிகாரி எனக்கூறி ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் மூதாட்டியின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் அதிகளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறினார். மேலும் அதற்காக மூதாட்டி மற்றும் அவரது மகள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக மிரட்டினார். இதேபோல மூதாட்டியை டிஜிட்டல் கைது செய்து இருப்பதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டியிடம் மேலும் சிலர் அதிகாரிகள் எனக்கூறி பேசினர்.
அந்த கும்பல் வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாக கூறி மூதாட்டியிடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த 5-ந்தேதி வரை ரூ.20 கோடி வரை பறித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் ஏமாற்றப்படுவது குறித்து அறிந்த மூதாட்டி இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மோசடியில் மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த ஷயான் ஜமீல் சேக்(20), மிரா ரோட்டை சேர்ந்த ரஜிக் அசாம் பட்டிற்கு(20) தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- வங்கிக்கணக்கு விவரங்களை கூறுங்கள் என மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.
- மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
சென்னை:
சர்வதேச செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் மாமனார் ஆனந்த் 81 வயதான இவர் கோட்டூர்புரம் வெள்ளையன் தெருவில் வசித்து வருகிறார். இவரது செல்போனில் கடந்த 18-ந் தேதி வாட்ஸ் அப் அழைப்பு வந்து உள்ளது.
அதில் பேசிய நபர் தன்னை கர்நாடக மாநில போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசி உள்ளார். அப்போது அவர் உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி கர்நாடகாவில் வாடகை கார் எடுக்கப்பட்டு உள்ளது. அந்த கார் பெரிய அளவில் விபத்தில் சிக்கி உள்ளது. பலர் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உங்க வங்கிக்கணக்கு விவரங்களை கூறுங்கள் என மிரட்டும் தொனியில் பேசி உள்ளார்.
இருப்பினும் உஷாரான ஆனந்தின் மாமனார் போலியான நபர் யாரோ நம்மிடம் பேசுகிறார் என்பதை உணர்ந்து இணைப்பை துண்டித்து உள்ளார். இதனால் அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணம் தப்பியது.
இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பை உள்ளிட்ட வெளிமாநில போலீசார் பேசுவது போல மிரட்டி செஸ் சாம்பியன் ஆனந்தின் மாமனாரை மர்மநபர் டிஜிட்டல் முறையில் கைது செய்ய திட்டமிட்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
- உங்கள் பெயரில் சீனாவிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் 400 கிராம் போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளோம்
- வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறி ரூ.1,78,000 களவாடியுள்ளனர்.
டிஜிட்டல் கைது மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது மத்திய புலனாய்வு அதிகாரிகள் போல் நடித்து ஆடியோ/வீடியோ அழைப்புகள் மூலம் மக்களை குறிவைக்கின்றனர். அவர்களின் வலையில் விழுந்த பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். சமீபத்தில் இந்த மோசடி கும்பலிடம் குஜராத்தை சேர்ந்த 90 வயது முதியவர் 1 கோடி ரூபாயை பறிகொடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த அந்த முதியவரின் மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம், தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசியபோது, மறுமுனையில் பேசிய நபர் தன்னை ஒரு சி.பி.ஐ. அதிகாரி என்று என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

முதியவரின் பெயரில் மும்பையில் இருந்து சீனாவிற்கு அனுப்பப்பட்ட பார்சலில் 400 கிராம் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் முதியவரின் வங்கி கணக்கு மூலம் பணமோசடி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மிரட்டியுள்ளார்.
மேலும் முதியவரை 'டிஜிட்டல் கைது' செய்திருப்பதாக கூறி, 15 நாட்களுக்கு அவர் யாரையும் தொடர்பு கொள்ள விடாமல் செய்துள்ளனர். முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ஒரு கோடியே 15 லட்சம் ரூபாயை அவர்கள் எடுத்துள்ளனர். முதியவரின் குடும்பத்தினர் விஷயம் அறிந்து போலீசில் புகார் அழித்ததை அடுத்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
46 டெபிட் கார்டுகள், 23 வங்கி கணக்கு புத்தகங்கள், ரப்பர் ஸ்டாம்புகள், 28 சிம் கார்டுகள் ஆகியவை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. சீனாவில் செயல்பட்டு வரும் ஒரு கும்பலுடன் சேர்ந்து இத்தகைய மோசடிகளை அரங்கேற்றி வந்துள்ளது. இதுபோல பல்வேறு டிஜிட்டல் கைது மோசடி கும்பல்கள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.

மும்பையைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவரிடம் டிஜிட்டல் கைது செய்துள்ளதாகக் கூறி வீடியோ காலில் ஆடைகளை கழற்ற கட்டப்படுத்திய சம்பவமும் அரங்கேறி உள்ளது. மும்பையில் போரிவலி கிழக்கு பகுதியில் வசிக்கும் அந்த பெண்ணை கடந்த நவம்பர் 19 ஆம் தேதி வீடியோ காலில் தொடர்புகொண்ட மோசடி நபர்கள் தங்களை டெல்லி காவல்துறையினரைப் போல் காட்டிக்கொண்டு அந்த பெண் மீது பண மோசடி வழக்கு போடப்போவதாக மிரட்டியுள்ளனர்.

வங்கி கணக்கை சரிபார்க்க வேண்டும் என கூறி ரூ.1,78,000 களவாடியுள்ளனர். மேலும் உடலை சோதனை செய்யவேண்டும் என்று கூறி வீடியோ காலிலேயே ஆடைகளை கழற்ற வற்புறுத்தியுள்ளனர். மோசடியை உணர்ந்த பெண் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஐடி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
- இதுவரை 9.94 லட்சத்திற்கும் அதிகமான புகார்களில் ரூ. 3,431 கோடி மீட்கப்பட்டுள்ளது.
- இதுவரை 9.94 லட்சத்திற்கும் அதிகமான புகார்களில் ரூ. 3,431 கோடி மீட்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் சமீப காலமாக டிஜிட்டல் மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதைத்தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் முடக்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை இணை மந்திரி பாண்டி சஞ்சய்குமார் மக்களவையில் கூறியதாவது:-
டிஜிட்டல் கைது மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 1,700 ஸ்கைப் ஐ.டி.கள் மற்றும் 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 9.94 லட்சத்திற்கும் அதிகமான புகார்களில் ரூ. 3,431 கோடி மீட்கப்பட்டுள்ளது. 6.69 லட்சத்திற்கும் அதிகமான சிம்கார்டுகள், 1.32 லட்சம் ஐ.எம்.இ.ஐ.கள் முடக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிகாரிகள் பேசுவதைப் போன்று பேசி இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளனர்.
- மறுமுனையில் மும்பை போலீஸ் உடை அணிந்து வீடியோ காலில் பேசிய நபரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் "டிஜிட்டல் கைது" மோசடியால் ரூ.11.8 கோடியை இழந்துள்ளார். பண மோசடி செய்வதற்காக வங்கிக் கணக்குகளைத் திறக்க அவரது ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்ட்டிருப்பதாகவும், இதற்காக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் பேசுவதைப் போன்று பேசி இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளனர். நவம்பர் 25 முதல் டிசம்பர் 12 வரை இந்த மோசடி நடந்துள்ளது.
முதலில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) அதிகாரி பேசுவதாக கூறி ஒருவர் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட சிம் கார்டு, சட்டவிரோத விளம்பரங்களுக்கும், துன்புறுத்தும் செய்திகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதற்காக மும்பை கோலாபா சைபர் போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
அதன்பின்னர் போலீஸ் அதிகாரி என்று கூறி ஒருவர் பேசியிருக்கிறார். 'பண மோசடிக்காக உங்களின் ஆதார் தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் வாயிலாக நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைக்கவேண்டும், இல்லாவிட்டால் நேரடியாக வந்து கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அந்த நபர் மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன சாப்ட்வேர் என்ஜினீயர், அந்த நபர் சொன்னபடி ஸ்கைப் ஆப் டவுன்லோடு செய்து, மறுமுனையில் மும்பை போலீஸ் உடை அணிந்து வீடியோ காலில் பேசிய நபரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.
அப்போது, அந்த நபர் ரிசர்வ் வங்கி கூறியிருப்பதாக கூறி போலியான வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி, அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை சரிபார்ப்பு நோக்கங்களுக்காக, சில வங்கிக் கணக்குகளுக்கு டிரான்ஸ்பர் செய்யும்படி கூறி உள்ளார். கைது நடவடிக்கைக்கு பயந்த சாப்ட்வேர் என்ஜினீயர், அந்த நபர் சொன்ன வங்கி கணக்குகளுக்கு ரூ.11.8 கோடி அனுப்பியிருக்கிறார்.
இருப்பினும், அந்த நபர்கள் மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்டத் தொடங்கியபோது, சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி அளவுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
கொல்கத்தா:
தமிழ்நாட்டில் டிஜிட்டல் கைது உள்பட சைபர் கிரைம் குற்றங்கள் கடந்த ஆண்டு அதிகளவில் நடந்துள்ளன. இந்த மோசடிகள் மூலம் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ரூ.1000 கோடி வரை இழந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஏராளமானவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் நடந்த விசாரணயில் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் ரூ.1000 கோடி அளவுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கு வங்காளத்தில் 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். கொல்கத்தாவில் 5 இடங்களிலும், மாநிலத்தின் மற்ற 3 பகுதிகளிலும் இந்த சோதனை நடந்தது.
வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் கிடைக்கும் ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் யார் யாரிடம் எத்தனை லட்சம் ஏமாற்றி மோசடி செய்தனர்? என்பது தெரிய வரும்.
- வழியிலேயே அவர் இறந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- இதனால் பீதியடைந்த ரேஷ்மா விஷம் குடித்து இறந்ததாக என்று தெரிவித்தார்.
டிஜிட்டல் கைது மோசடியால் பள்ளி ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் மௌகஞ்சில் சேர்ந்த அரசு கெஸ்ட் ஆசிரியர் ரேஷ்மா பாண்டே [35 வயது] கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை விஷம் அருந்தி உயிரிழந்தார்.
ஆசிரியை அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாக கூறி இணைய மோசடி செய்பவர்கள் டிஜிட்டல் கைது செய்யபோவதாக அவருக்கு அழுத்தம் கொடுத்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் ரஸ்னா தாக்கூர் தெரிவித்தார்.
மோசடிக்காரர்கள் அவரிடம் பணம் கேட்டனர். அவர் விஷத்தை உட்கொண்ட பிறகு, அவரது உறவினர்கள் அவரை ரேவாவில் உள்ள சஞ்சய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் வழியிலேயே அவர் இறந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் மைத்துனர் வினோத் பாண்டே கூறுகையில், சைபர் மோசடி செய்பவர்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளுக்கு ரூ. 22,000 மற்றும் ரூ. 5,500 தொகையை ஆசிரியை பரிமாற்றம் செய்ததாகக் கூறினார். மேலும் பணத்தை செலுத்தாவிட்டால் டிஜிட்டல் கைது செய்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர், இதனால் பீதியடைந்த ரேஷ்மா விஷம் குடித்து இறந்ததாக தெரிவித்தார்.
சைபர் மோசடி, டிஜிட்டல் கைது மற்றும் பிற வகையான இணைய மோசடிகள் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆசிரியை தற்கொலை சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது
- ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம் மும்பை போலீஸ் துறையில் இருந்து பேசுவதாக கூறி டிஜிட்டல் கைது மூலம் ரூ.88 லட்சம் பறிக்கப்பட்டது.
- அமலாக்கத்துறையும், பண முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சென்னை:
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரிடம் மும்பை போலீஸ் துறையில் இருந்து பேசுவதாக கூறி டிஜிட்டல் கைது மூலம் ரூ.88 லட்சம் பறிக்கப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரதீம் போரா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் இணைந்து டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபட்ட துருபா ஜோதி மஜிம்தார், ஸ்வராஜ்பிரதான், பிரசாந்த் கிரி, பிரஞ்ரல் ஹசாரிகா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இந்த கும்பல் டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், தமிழ்நாடு, மும்பை, கோவா உள்ளிட்ட பல இடங்களில் ஏஜெண்டுகள் மூலம் பொதுமக்களின் செல்போன் எண்கள், அவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து பொதுமக்களை ஏமாற்றியும், மிரட்டியும் பணத்தை பறித்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக அமலாக்கத்துறையும், பண முறைகேடு தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஏராளமான செல்போன்கள், லேப்-டாப்கள், ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதை ஆய்வு செய்ததில் டிஜிட்டல் கைது மூலம் கிடைக்கும் பணத்தை மோசடி கும்பல் பணம் டெபாசிட் செய்யும் எந்திரங்கள் வாயிலாக பணப்பரிமாற்றம் செய்யும் தனியார் நிறுவனங்களின் கணக்குக்கு கொண்டு சென்று இருப்பதும், பின்னர் தங்களது வங்கி கணக்கில் பணத்தை பெற்றிருப்பதும் தெரிய வந்தது.
இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு செல்போன் எண்கள் மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றிருப்பதையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட ஒருவர் கொல்கத்தாவிலும், மற்றொருவர் டெல்லியிலும் பிடிபட்டு உள்ளனர். அவர்களை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- ஆசிரியை போலீசில் புகார் அளித்தார்.
மும்பை:
மும்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற 67 வயது ஆசிரியை ஒருவருக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி செல்போனில் வீடியோ அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பை ஆசிரியை ஏற்று பேசினார். அப்போது, எதிர்முனையில் போலீஸ் சீருடையில் தோன்றிய 2 பேர் தங்களை மும்பை சைபர் பிரிவு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டனர்.
பின்னர் அவர்கள் ஆசிரியையிடம் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து சட்டவிரோதமாக அதிகளவில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே உங்களை டிஜிட்டல் கைது செய்யப்போகிறோம் என மிரட்டி உள்ளனர்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பணத்தை உடனடியாக தங்களுக்கு அனுப்புமாறு கட்டாயப்படுத்தினர். இதனால் செய்வதறியாது திகைத்த ஆசிரியை தனது நிரந்தர வைப்பு தொகையில் இருந்த ரூ.5 கோடியே 26 லட்சம் மற்றும் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.21 லட்சத்தை எடுத்து அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியை போலீசில் புகார் அளித்தார். இதில், டிஜிட்டல் கைது என்ற பெயரில் ஆசிரியையை மிரட்டி பணம் பறித்தது மும்பையை சேர்ந்த சபீர் அன்சாரி(வயது39) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.