search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் சேவைகள்"

    • ரெயில் புறப்படும் நேரம் போன்ற விவரங்களை செயலியில் சரிபார்த்துக்கொண்டு வரும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
    • காலை நேரத்தில் இந்த ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

    லண்டன்:

    உலகம் முழுவதிலும் உள்ள பொது போக்குவரத்தில் ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. போக்குவரத்து நெரிசல் இல்லாதது, குறைந்த செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரெயிலில் பயணம் செய்வதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று இங்கிலாந்து முழுவதும் ஜி.எஸ்.எம்.ஆர். எனப்படும் ரேடியோ அமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இது ஓட்டுனர்களுக்கும், ஆபரேட்டர்களுக்கும் இடையே பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு அமைப்பு ஆகும்.

    இதில் கோளாறு ஏற்பட்டதால் ரெயிலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பல வழித்தடத்தில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல ரெயில்கள் தாமதமாக சென்று சேர்ந்தன. குறிப்பாக தலைநகர் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் செல்லும் எலிசபெத் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன.

    இதனையடுத்து ரெயில் புறப்படும் நேரம் போன்ற விவரங்களை செயலியில் சரிபார்த்துக்கொண்டு வரும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர். பரபரப்பாக இயங்கும் காலை நேரத்தில் இந்த ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

    பின்னர் தொழில்நுட்ப குழுவினர் அங்கு விரைந்து ரேடியோ அமைப்பில் ஏற்படும் கோளாறை சரிசெய்தனர். அதன்பிறகே ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின.

    • முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படும்.
    • சூலூர் ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    கோவை,

    கோவை சூலூர் ரெயில் நிலைய தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை 2 சிறப்பு மெமு ரெயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சூலூர் ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (25-ந் தேதி) காலை 9.05 மணிக்கு புறப்பட இருந்த கோவை- சேலம் வண்டி எண் 06802, முன்பதிவு செய்யப்டாத மெமு சிறப்பு ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட இருந்த சேலம்- கோவை ரெயில் எண் 06803 முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

    தஞ்சாவூர்-திருச்சி இடையே முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
    சென்னை

    பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

    சென்னை எழும்பூர்-மதுரை (வண்டி எண்:12635) இடையே மதியம் 1.40 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

    இந்த ரெயில் செங்கல்பட்டிலிருந்து மதியம் 2.40 மணிக்கு இயக்கப்படும். 

    காரைக்குடி-எழும்பூர் (12606) இடையே காலை 5.05 மணிக்கு புறப்படும் 
    எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 

    இந்த ரெயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும். 

    தஞ்சாவூர்-திருச்சி (06869) இடையே காலை 6.45 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் புதன்கிழமை முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கஜா புயல் இன்று மாலை கரையை கடக்க இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில ரெயில்கள் ரத்து, ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #GajaStorm #Storm #Rain
    சென்னை:

    கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னைக்கு அருகே 370 கி.மீ., நாகைக்கு அருகே 370 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் பகுதிக்கு இடையே நாகை அருகே புயல் கரையை கடக்கும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில் திருச்சி-ராமேஸ்வரம் மற்றும் மதுரை-ராமேஸ்வரம் இடையே இயங்கக்கூடிய பயணிகள் ரெயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    ராமேஸ்வரத்திலிருந்து சென்னை புறப்படவேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேஸ்வரம்-மானாமதுரை இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதி புறப்பட வேண்டிய விரைவு ரெயில் ராமேஸ்வரம்-மானாமதுரரை இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரெயில் ராமேஸ்வரம் மானாமதுரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஒக்காவிலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் விரைவு ரெயில் மதுரை வரை மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    16ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம்-ஒக்கா விரைவு ரெயில் ராமேஸ்வரம்-மானாமதுரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    வேளாங்கண்ணி மற்றும் மன்னார்குடி ஆகிய மார்க்கத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் உழவன் ரெயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    காரைக்காலில் இருந்து திருச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் வரை இயக்கப்படும் விரைவு ரெயில் விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், பாம்பன், புதுச்சேரி, சென்னையில் 3ம் எண் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  #GajaStorm #Storm #Rain
    திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில் நிலச்சரிவு மற்றும் பாலங்கள் மூழ்கியதால் ரெயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. #KeralaFlood #KeralaTrainsCancelled
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ரெயில்வே கோட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

    இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    திருவனந்தபுரம்-எர்ணாகுளம் (கோட்டயம் வழி) வழித்தடத்தில் அனைத்து ரெயில்களும் நாளை மாலை 4 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    எர்ணாகுளம்-ஷோரனூர் மற்றும் பாலக்காடு வழித்தடத்தில் அனைத்து ரெயில்களும் நாளை மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல் ஷோரனூர்-கோழிக்கோடு வழித்தடத்தில் இன்று மாலை வரை ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 

    அடுத்த அறிவிப்பு வரும் வரை திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில் இயக்கப்படும் அனைத்து சுவிதா ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

    பல்வேறு பகுதிகளில் ரெயில்பாதைகள் மற்றும் ரெயில்வே பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால், ரெயில்வே அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளை தெரிந்துகொண்டு அதன்படி பயணம் செய்யும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

    பாலக்காடு-ஷோரன்பூர் வழித்தடத்தில் இன்று மாலை ரெயில்  சேவையை தொடங்க முடியுமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

    எனினும் திருவனந்தபுரம்-எர்ணாகுளம் (அலெப்பி வழி) மற்றும் திருவனந்தபுரம்- திருநெல்வேலி (நாகர்கோவில் வழி) ஆகிய வழித்தடங்களில் அந்த பகுதியில் உள்ள நிலவரத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக எர்ணாகுளத்தில் இருந்து அலெப்பி வழியாக திருவனந்தபுரத்திற்கு சிறப்பு பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 

    இவ்வாறு தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #KeralaFlood #KeralaTrainsCancelled
    கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் அதிக ரெயில் சேவைகள் தொடங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
    நெய்வேலி:

    நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழகத்தில் விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் சூரிய ஒளி மின்நிலையத்தை அமைத்துள்ளது.

    இந்த 300 மெகாவாட் சூரிய ஒளிமின் நிலையத்தை மத்திய மந்திரி பியூஷ் கோயல் நெய்வேலியில் நடந்த விழாவில் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

    இதை தொடர்ந்து, என்.எல்.சி. இந்தியா நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை, அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வுத்துறையுடன் இணைந்து மேற்கொள்ள இருக்கும் ஆராய்ச்சி பணிக்கான ஒப்பந்தம் மத்திய மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் கையெழுத்தானது.

    அதன்பின்னர் மத்திய மந்திரி பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என்.எல்.சி. நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வடமாநிலத்துக்கு ரெயில் மூலம் நிலக்கரி எடுத்து செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விழுப்புரம்-கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக ரெயில் சேவைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இயக்கப்படும் அந்த் தோதியா ரெயில் கடலூர் மாவட்டத்தில் நின்று செல்ல வேண்டும் என என்.எல்.சி.நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த ரெயில் கடலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் வேலை கேட்கிறார்கள். வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை என்.எல்.சி.நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனால் வேலை அவர்களுக்கு உறுதியானது அல்ல. என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் போதிய ஊதியம் வழங்கவில்லை என கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சராசரி ஊதியத்தை விட அதிகமாக வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

    ×