என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்"

    • வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும்.
    • அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

    இதனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 370 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

    இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பம், தூத்துக்குடியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு சுமார் 750 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
    • தற்போது மழை காரணமாக வழக்கத்தை விட சற்று குறைவாக காணப்பட்டு வருகின்றது.

    கடலூர்:

    அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது அந்தமான் தீவுகளுக்கு சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு சுமார் 750 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இது மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து புயலாக வலுவடைந்து வங்காளதேசம் அல்லது மேற்கு வங்க கரையோரம் 25-ந தேதி காலை கரை கடக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காரணத்தினால் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 1000 த்திற்க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது‌.

    இந்த நிலையில் நேற்று கடலூர் பண்ருட்டி விருத்தாச்சலம் நெய்வேலி சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து இன்று மதியம் வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் நாளை(24-ந் தேதி) தமிழகம் முழுவதும் மிக பிரமாண்டமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் துணிக்கடைகள், பட்டாசு கடைகள் பல்வேறு கடைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் திரண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். தற்போது மழை காரணமாக வழக்கத்தை விட சற்று குறைவாக காணப்பட்டு வருகின்றது. மேலும் சாலை யோர வியாபாரிகள் தொடர் மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 2 குடிசை வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டும் இன்றி ஆறுகளில் செல்லக்கூடிய தண்ணீரின் வரத்து குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கடலூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தொடர் மழை காரணமாக தண்ணீர் தேங்காத வகையில் தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருவதையும் காணமுடிகிறது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு- பெல்லாந்துறை - 30.4, பண்ருட்டி - 26.0, குறிஞ்சிப்பாடி - 20.0, லக்கூர் - 19.2, தொழுதூர் - 18.0, சேத்தியாத்தோப்பு - 13.0, அண்ணாமலைநகர் - 12.8, வடக்குத்து - 12.0, பரங்கிப்பேட்டை - 11.0, வானமாதேவி - 10.6, விருத்தாசலம் - 9.3 எஸ்ஆர்சி குடிதாங்கி - 9.25, கீழ்செருவாய் - 8.0 மீ-மாத்தூர் - 6.0 ஸ்ரீமுஷ்ணம் - 5.2 16,. வேப்பூர் - 5.0. சிதம்பரம் - 5.0.

    • காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
    • கடலூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது.

    புதுச்சேரி:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் ஓரளவு நிரம்பி வருகிறது.

    இந்த நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன்காரணமாக காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
    • மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காரைக்கால்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் ஓரளவு நிரம்பி வருகிறது.

    இந்த நிலையில் தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன்காரணமாக காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • ஒடிசா மாநிலம் பாலசூருக்கு அருகே நிலை கொண்டுள்ளது.
    • மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு.

    வடக்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இது ஒடிசா மாநிலம் பாலசூருக்கு அருகே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

    இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதன் காரணமாக சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
    • 8 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லததால் ரூ.8 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரம் பாம்பன் துறைமுகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சூறாவளி காற்று வீசி வருவதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது புயல் சின்னமும் உருவாகி உள்ளதால் கடல் சீற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

    இதனால் ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுபடகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. அந்த தடை ஒரு வாரத்தை தாண்டி இன்றும் நீடிக்கிறது.

    இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் 8-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.

    இதனால் 1,200 விசைப்படகுகள் துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லததால் நாள் ஒன்றுக்கு ரூ.1 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்படுகிறது. 8 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லததால் ரூ.8 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


    • வங்கக்கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையோரம் சில நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றுழுத்த தாழ்வு நிலை உருவானது.
    • 1-ம் எண் கூண்டு தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.

    கடலூர்:

    வங்கக்கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கரையோரம் சில நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றுழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேலும் வலுவடைந்து நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.

    இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (புதன்கிழமை) சத்தீஸ்கர் மாநிலம் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக கடலூர், நாகை மற்றும் பாம்பன் துறைமுக அலுவலகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 1-ம் எண் கூண்டு தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.

    புயல் எச்சரிக்கை, தடைகாலம் காரணமாக மீன்கள் வரத்து குறைந்ததால், மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    கிழக்கு கடற்கரை பகுதியில் தற்போது மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் குமரி மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களது விசைப்படகுகள் சின்னமுட்டம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    கட்டுமரம், வள்ளம் போன்றவை மூலம் கடலுக்கு செல்லும் மீனவர்கள் மட்டும் மீன்பிடித்து வந்ததால் மீன்களின் வரத்து குறைந்தது. இந்த நிலையில் பானி புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் காரணமாக வள்ளம், கட்டுமரம் மீனவர்களும் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    முற்றிலுமாக மீன்பிடி தடைபட்டதால் குமரி மாவட்டத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு மீன் வரத்து மிகவும் குறைந்துவிட்டது. நாகர்கோவிலில் வடசேரி, கணேசபுரம், பார்வதிபுரம் உள்பட பல இடங்களில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மார்க்கெட்டுகளுக்கு குறைந்த அளவே மீன் விற்பனைக்கு வருகிறது.

    அதேசமயம் மீன்களின் தேவை அதிகமாக இருப்பதால் மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. குறிப்பாக நெய் மீன் கிலோ ரூ.800-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்ந்து உள்ளது. அதே சமயம் நெய்மீன் போதுமான அளவும் கிடைப்பது இல்லை.

    ரூ.400-க்கு விற்பனையான பாறை வகை மீன் தற்போது ரூ.700-க்கு விற்பனையாகிறது. ரூ.10-க்கு 5 சாளை மீன்கள் விற்கப்பட்டது. தற்போது ரூ.20-ஆக உயர்ந்து உள்ளது. ஒரு கூறு நெத்திலி மீன் ரூ.20-ல் இருந்து 50 ஆகி விட்டது. விளமீன் கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனையானது. தற்போது கிலோ ரூ.300-ஆக உள்ளது.

    விலை உயர்வு ஒருபக்கம் இருந்தாலும் போதுமான மீன்கள் கிடைக்காததால் மீன் வாங்க வரும் பலரும் ஏமாற்றமடைந்து செல்கின்றனர்.

    கஜா புயல் காரணமாக மழை சார்ந்த பல்வேறு விபத்துகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். #GajaCyclone #Gajastorm #GajaCycloneAlert
    தஞ்சாவூர்:

    கஜா புயல் நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தை 111 கி.மீ வேகத்தில் தாக்கி, தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் தனது ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. புயல் காரணமாக உள்மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 

    நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கஜா புயல் தாக்கியதில் பல இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்துவிழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆனந்தன் (40) என்பவர் உயிரிழந்தார்.

    விருத்தாச்சலம் அருகே தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள் (45) என்பர் உயிரிந்தார். அய்யம்மாளின் கணவர் ராமச்சந்திரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர்.



    அதிராம்பட்டிணத்தில் வீடு இடிந்து 3 வயது பெண் குழந்தையும், திருவண்ணாமலை நகராட்சி செய்யாறு அருகே பிரியாமணி என்ற சிறுமியும், சிவகங்கையில் வீடு இடிந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

    கஜா புயல் காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டிணம், கடலூர் மாவட்டங்களில் புயல் தாக்கிய பகுதிகளை சேர்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #GajaCyclone #Gajastorm #GajaCycloneAlert

    தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் பதம்பார்த்த நிலையில், தொடர் மழை காரணமாக 18 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gajastorm #GajaCycloneAlert
    கஜா புயல் நாகப்பட்டிணம் மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் 111 கி.மீ வேகத்தில் தமிழகத்தை தாக்கி, கரையை கடந்து வரும் நிலையில் உள்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை  மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    நாகப்பட்டிணம், கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, தஞ்சாவூர், திருப்பூர், சிவகங்கை, அரியலூர், விழுப்புரம், கரூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



    விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். #GajaCyclone #Gajastorm #GajaCycloneAlert 

    கஜா புயல் முன்னேற்பாடுகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரிடம் முதல்-அமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார். #gajacyclone #rain #ministerudayakumar #edappadipalanisamy
    சென்னை:

    வங்க கடலில் உருவான கஜா புயலானது நாகை கடற்கரையில் இருந்து 138 கி.மீ. தொலைவில் உள்ளது. கஜா புயல் கரையை கடக்கும்போது 80 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும்.  

    சில நேரத்தில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மணிக்கு 16.8 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டு இருந்த நிலையில் அதன் வேகம் 10 கி.மீட்டராக குறைந்துள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கஜா புயல் முனேற்பாடுகள் குறித்து வருவாய்துறை அமைச்சர் உதயகுமாரிடம்  முதல்-அமைச்சர் பழனிசாமி கேட்டறிந்தார். கஜா புயல் முன்னேற்பாடுகளை குறித்து முதல்-அமைச்சரிடம்  வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் விளக்கினார். 

    ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை முதல்-அமைச்சர் அலுவலகத்திடம் வருவாய்துறையினர் தகவல் தெரிவித்து வருகின்றனர். #gajacyclone #rain #ministerudayakumar #edappadipalanisamy
    வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயலால் திருவாரூர், காரைக்கால் மற்றும் நாகையில் மழை பெய்து வருகிறது. #gajacyclone #rain
    சென்னை:

    கஜா புயல் நாகையின் வடகிழக்கே 155 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கரையை கடக்கும்போது 80 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும் சிலநேரத்தில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில், வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயலால் திருவாரூர், காரைக்கால் மற்றும் நாகையில் மழை பெய்து வருகிறது.

    திருவாரூரின் ஆண்டிபந்தல், சன்னாநல்லூர், நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதேபோன்று காரைக்காலில் கோட்டிச்சேரிமேடு, கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், நாகையில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, மங்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

    இதனால் வேதாரண்யம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளன. நாகையில் குடிசை, ஆஸ்பெஸ்டாஸ் வீடுகளில் வசிக்கும் மக்கள் முகாம்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். #gajacyclone #rain 
    ×