என் மலர்
நீங்கள் தேடியது "பிஎஸ்எல்வி சி60"
- ராக்கெட் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு முதலாவது ஏவுதளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- ஒரே குறிக்கோளை கொண்டு விண்ணில் செலுத்தப்படும் பல ராக்கெட் திட்டங்களை ஒருங்கிணைக்க இது உதவும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சிநிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியது. வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியதன் மூலம், உலக சந்தையில் முன்னணி அமைப்பாக திகழ்கிறது. தனது கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது.
அதன்படி வருகிற 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ஸ்பேஸ்-எக்ஸ் எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பி.எஸ்.எல்.வி.- சி-60 ராக்கெட்டை வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு உள்ளது. 'ஸ்பேட் எக்ஸ்' என்ற இந்த பணியில் எஸ்.டி.எக்ஸ்-01 மற்றும் எஸ்.டி.எக்ஸ்-02 என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இவை ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது.
ராக்கெட் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு முதலாவது ஏவுதளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்பின் அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் மொத்தம் 66 நாட்கள் நடைபெறும்.
நிலவில் இருந்து மாதிரி எடுத்து திரும்புதல், இந்தியாவின் விண்வெளி மையம் உருவாக்குதல் மற்றும் இயக்கம் போன்ற இந்தியாவின் விண்வெளி லட்சியங்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் அவசியம். ஒரே குறிக்கோளை கொண்டு விண்ணில் செலுத்தப்படும் பல ராக்கெட் திட்டங்களை ஒருங்கிணைக்க இது உதவும்.
திட்ட ஆய்வுக் குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஏவுதலுக்கான செயல்பாடுகள் தொடங்கும். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதன் மூலம், ஸ்பேஸ் டாக்கிங் தொழில்நுட்பத்தைக் கொண்ட 4-வது நாடாக இந்தியா முன்னேறும்.
- 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று இரவு 8.58 மணிக்கு தொடங்க இருக்கிறது.
- இரு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நாளை இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்டப் பணி 25 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று இரவு 8.58 மணிக்கு தொடங்க இருக்கிறது.
இந்த ராக்கெட் 'ஸ்பேடெக்ஸ்-ஏ', 'ஸ்பேடெக்ஸ்-பி' என இரண்டு சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் இந்த இரு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில், பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜய் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
- வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- விண்வெளிக்கு வீரர்களை அனுப்பவும் இந்த திட்டம் பேருதவியாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கிபட்டது.
இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. 25 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது.இந்நிலையில் விண்வெளியில் டிராபிக் ஜாம் ஆகியுள்ளதால் ராக்கெட் 2 நிமிடம் தாமதாக 10.00 மணிக்கு ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்தது.
ஒரே சுற்றுப்பாதையில் உள்ள மற்ற செயற்கைக்கோள்களுடன் சிக்கும் [conjunctions] என்பதால் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் எஸ் சோமநாத் தெரிவித்தார்.
ராக்கெட்டின் சுற்றுப்பாதை மற்றும் பறக்கும் பாதையில் உள்ள நெரிசல் காரணமாக இஸ்ரோ இதற்கு முன்னரும் ஏவுதலை தள்ளி வைத்தது என்பதால் இது சகஜமான ஒன்றே என்று கூறப்பட்டது.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று (டிச.,30) இரவு 10 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
தற்போது ஏவப்பட்ட ராக்கெட் , ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்று வட்டப்பாதைகளில் 2 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படுகிறது.
வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கவும், விண்வெளிக்கு வீரர்களை அனுப்பவும் இந்த திட்டம் பேருதவியாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
- ராக்கெட் செயற்கைக்கோள்களைச் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.
- மிகவும் புதுமையான, செலவு குறைந்த செயல் விளக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு (டிச.30) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஏவப்பட்ட ராக்கெட், ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் கூறும்போது, "ஸ்பேடெக்ஸ் பணிக்காக பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ராக்கெட் செயற்கைக்கோள்களைச் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. செயற்கைக்கோள்களை சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பி.எஸ்.எல்.வி. திட்டத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
மேலும், ஸ்பேடெக்ஸ் குழு இரண்டு சிறிய செயற்கைக்கோள் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மிகவும் புதுமையான, செலவு குறைந்த செயல் விளக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
- 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.
- மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் தள பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு (டிச.30) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஏவப்பட்ட ராக்கெட், ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.
இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் பெருமிதம் தெரிவித்துள்ளார். பதிவில், "சர்வதேச அதிசயங்களை ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் நேரத்தில் விண்வெளித் துறையுடன் இணைந்து இருப்பது பெருமை அளிக்கிறது."
"ஸ்பேஸ் டாக்கிங் தேடும் நாடுகள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் நான்காவது இந்தியா இணைந்து இருக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட "பாரதிய டாக்கிங் சிஸ்டம்" மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது."
"ஆத்மனிர்பார்-இல் இருந்து விக்சித் பாரத்-க்கு முன்னேறும் பிரதமர் மோடியின் குறிக்கோளுக்கு நன்றி. இந்த குறிக்கோள் தான் நம் பயணத்தை விண்வெளித்துறையில் "ககன்யான்" மற்றும் "பாரதிய அந்த்ரிக்ஷா ஸ்டேஷன்" ஆகியவற்றுக்கு வழி வகை செய்யும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- விண்வெளியில் தாவரங்கள் வளர்கிறதா என்பது குறித்து இஸ்ரோ சோதனை.
- விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான CROPS திட்டம் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதாக இஸ்ரோ அறிவிப்பு.
விண்வெளி உயிரியல் ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டி உள்ளதாக இஸ்ரோ பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
விண்வெளியில் தாவரங்கள் வளர்கிறதா என்பது குறித்து இஸ்ரோ சோதனை செய்து வருகிறது. அந்த வகையில், பிஎஸ்எல்வி சி60 திட்டத்தில் விண்வெளியில் விதையை முளைக்க வைத்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.
விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான CROPS திட்டம் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அதன்படி, விண்வெளியில் 4 நாட்களுக்குள் கௌபீயா விதைகள் முளைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விரைவில் இலைகள் உருவாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
POEM 4 என்ற தொகுதியில், 4 நாளில் விதைகள் முளைத்ததை இஸ்ரோ பதிவிட்டுள்ளது.
சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் ராக்கெட் தொகுதியில் விதை முளைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- PSLV-C60 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு காராமணி பயறு விதைகள் வைத்து அனுப்பப்பட்டன.
- விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான CROPS திட்டம் வெற்றியடைந்ததாக இஸ்ரோ அறிவித்தது.
விண்வெளியில் தாவரங்கள் வளர்கிறதா என்பது குறித்து இஸ்ரோ சோதனை செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த டிசம்பர் 30-ம் தேதி PSLV-C60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட CROPS கருவியில் காராமணி பயறு விதைகள் வைத்து அனுப்பப்பட்டன.
விண்வெளியில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அனுப்பப்பட்ட CROPS கருவியில் வைக்கப்பட்ட காராமணி பயறு விதைகள் முளைக்கத் தொடங்கிய நிலையில், அதில் இருந்து முதல் 'இலைகள்' வெளிவந்துள்ளன.
அதாவது விண்வெளியில் 4 நாட்களுக்குள் காராமணி பயறு விதைகள் முளைத்தது என்றும் அதற்கு அடுத்த நாட்களில் காராமணி பயறு விதைகளில் இருந்து முதல் 'இலைகள்' வெளிவந்தன என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதன்மூலம் விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான CROPS (Compact Research Module for Orbital Plant Studies) திட்டம் வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்தது.
சுற்றுவட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் ராக்கெட் தொகுதியில் விதை மற்றும் இலைகள் முளைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- விண்வெளி நிலையத்தின் இறுதிப்பணி வருகிற 2035-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்டு உள்ளது.
- பரிசோதனையை முடிக்க ஓரிரு நாட்கள் தேவைப்படுவதால், வருகிற 9-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்புவதை தொடர்ந்து, நிலவு மற்றும் சூரியன் ஆய்வுக்காக விண்கலங்களையும் அனுப்பி அதிலும் வெற்றி கண்டுள்ளது. இதற்கிடையே விண்வெளியில் இந்தியாவிற்கு என்று தனியாக ஒரு விண்வெளி நிலையம் நிர்மாணிப்பதில் கவனம் செலுத்தி பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பூர்வாங்கப்பணிகள் வருகிற 2028-ம் ஆண்டுக்குள் நிறுவப்பட உள்ளது, இதற்கான வளர்ச்சி சோதனைகள் நடப்பு ஆண்டிலேயே தொடங்க திட்டமிடப்பட்டு பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது. விண்வெளி நிலையத்தின் இறுதிப்பணி வருகிற 2035-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு வைக்கப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் விண்வெளி ஆய்வுப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிக்கிறது.
இதற்கிடையே கடந்த மாதம் 30-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்டில் 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்தின் கீழ் 2 செயற்கைக்கோள்கள் வெவ்வேறு சுற்றுப்பாதைக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன. இவற்றை ஒன்றாக இணைக்கும் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்காக இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது. இதனை இன்று (செவ்வாய்க்கிழமை) நிகழ்த்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்திருந்தனர். இந்தநிலையில் இந்த பரிசோதனை செய்யும் நாள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
செயற்கைக்கோள்கள் இணைப்பு பரிசோதனையை முதலில் தரை பகுதியில் செய்து பார்த்த பின்னரே விண்ணில் உள்ள செயற்கைக்கோளுக்கு செல்ல முடியும். இந்த பரிசோதனையை முடிக்க ஓரிரு நாட்கள் தேவைப்படுவதால், வருகிற 9-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனை வெற்றிகரமாக முடித்தால் அமெரிக்கா, ரஷியா, சீனாவை தொடர்ந்து 4-வது நாடு இந்தியா என்ற பெருமையை பெறும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.