என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Congress"
- மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் பயங்கரவாதிகள் போன்று இந்தியர்களை வெளியேற்றியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- வெளியுறவுத்துறை அமைச்சர் இது நடைமுறையில் உள்ளதுதான் என்கிறார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்கா ராணுவ விமானத்தின் மூலம், இந்தியர்கள் 104 நபர்கள் கைவிலங்குகள் மற்றும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, 40 மணி நேரத்திற்கும் அதிகமாக பயணத்தில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் 19 பெண்களும் அடங்குவர். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருந்துள்ளது. மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் பயங்கரவாதிகள் போன்று இந்தியர்களை வெளியேற்றியதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியுறவுத்துறை அமைச்சர் இது நடைமுறையில் உள்ளதுதான் என்கிறார். கொலம்பியா போன்ற ஒரு சிறிய நாடு, தனது நாட்டின் பிரஜைகளுக்கு துணை நின்று, அமெரிக்கா மீது தனது கோபத்தை காட்டியது. ஆனால், விஸ்வகுரு என்று பாஜகவினரால் பெருமைப்படுத்தப்பட்டு, ஒரு பொய் பிம்பத்தை கட்டி வைத்திருக்கும் பிரதமர் மோடியால் தனது குடிமக்களை அவமானத்திலிருந்து பாதுகாக்க முடியாதா?
இதற்குதான் இந்திய நாட்டினரின் வரிப்பணத்தில் இருந்து 100 கோடிக்கும் மேல் செலவு செய்து 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியை நடத்தினாரா பிரதமர் மோடி?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க சிறப்பு வழிபாடு நடத்த போவதாக அறிவித்தார்.
- பக்தர்களை தவிர மற்ற அமைப்பினர், கட்சியினர் திரண்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை:
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா விவகாரம் இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி வருகிறது.
இதனால் மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து இரு சமயத்தை சேர்ந்த மக்கள் திருப்பரங்குன்றத்தில் திரளுவதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று மாலை சென்னை சத்திய மூர்த்திபவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இன்று மாலை திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் காங்கிரஸ் சார்பில் மத நல்லிணக்க சிறப்பு வழிபாடு நடத்த போவதாக அறிவித்தார்.
திருப்பரங்குன்றம் பகுதியில் தற்போது அமைதி நிலவும் நிலையில் உச்சக்கட்ட பாதுகாப்புடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் செல்வப்பெருந்தகையின் இந்த அறிவிப்பு மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டியிடம் தொடர்பு கொண்டு சில தகவல்களை தெரிவித்தனர். அப்போது அவரிடம் பக்தர்களை தவிர மற்ற அமைப்பினர், கட்சியினர் திரண்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரும் மாநில தலைமைக்கு அதை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காங்கிரசாரின் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் மத நல்லிணக்க வழிபாடு ஒத்திவைக்கப்பட்டு, செல்வப்பெருந்தகையின் பயணமும் ரத்தாகி உள்ளது.