என் மலர்
நீங்கள் தேடியது "Congress"
மத்திய அரசின் பள்ளிக் கல்வியில் இந்தி திணிப்பை மேற்கொண்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய சர்சையில் சிக்கி உள்ளது. NCERT பாடமுறையின் கீழ் தமிழநாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கும் இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டுகளில் ஹனிசக்கிள் மற்றும் ஹனி கோம்ப் என்று பெயரிடப்பட்ட ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் இந்த முறை பூர்வி என்று பெயரிடப்பட்டுள்ளன. பூர்வி என்ற இந்தி வார்த்தைக்கு கிழக்கு என்று பொருள்.
ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முறையே மிருதங் மற்றும் சந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளன. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய புத்தகங்கள் முன்னதாக மொழிக்கேற்ப பெயரிடப்பட்டு வந்தன.

ஆனால் இந்த முறை, கணிதப் புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்கு கணித பிரகாஷ் என்ற இந்தி பெயர் வழங்கப்பட்டது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், NCERT-யின் இந்த நடவடிக்கை சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டு, மத்திய பாடத் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு இந்த அமைப்பின் செயல்பாடுகளில் இந்தி மொழி திணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில் என்.சி.இ.ஆர்.டி. வெளியிடும் ஆங்கில பாட புத்தகங்களின் பெயர்களை இந்தியில் மாற்றம் செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். உடனடியாக இந்த பெயர் மாற்றங்களை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- சோனியா காந்தி வக்பு திருத்த மசோ தாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
- சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் சதி இதுவாகும்.
வக்பு சட்டத் திருத்த மசோதா-2025 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் நேற்று நள்ளிரவில் நிறைவேறியது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , மேல் சபை எம்.பி. யுமான சோனியா காந்தி வக்பு திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளார்.
இன்று நடந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
வக்பு திருத்த மசோதா அரசியலமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும். இந்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பா.ஜ.க. வின் சதி இதுவாகும்.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கும் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பை தெரிவிக்கும். அரசியல் அமைப்பை தகர்க்கும் மற்றொரு முயற்சி இதுவாகும்.
கல்வி, சிவில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள், நமது கூட்டாட்சி அமைப்பு அல்லது தேர்தல்களை நடத்துதல் என எதுவாக இருந்தாலும், மோடி அரசு நாட்டை ஒரு படுகுழியில் இழுத்துச் செல்கிறது.அங்கு அரசியல் அமைப்பு வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும். அரசியல் அமைப்பை அழிப்பதுதான் அவர்களது நோக்கமாகும்.
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதிக்கப்படாதது நமது ஜனநாயகத்திற்கு மிகுந்த கவலை அளிக்கும் விஷயமாகும். இதேபோல், மேல்சபையில் எதிர்க்கட்சித் தலைவர் கார்கேவும் தான் சொல்ல விரும்புவதையும் சொல்ல வேண்டியதையும் பதில் அளிக்க மீண்டும் மீண்டும் அனுமதிக்கப்படுவது இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- நாஞ்சில் பிரசாத் கடந்த உள்ளாட்சி தேர்தலில் 165-வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார்.
- இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணிக்கு ஆலந்தூர், ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும்
சென்னை:
சென்னை மாநகராட்சி 165-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராகவும் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர் நாஞ்சில் பிரசாத் (56). ஆதம்பாக்கம் சாந்தி காலனியில் வசித்து வந்தார். எப்போதும் சுறுசுறுப் பாக செயல்படுபவர். கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் மூலமும் பிரபலமானவர்.
கடந்த 21-ந்தேதி லேசான காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக அருகில் உள்ள மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் உடலில் வேறு பாதிப்பு ஏதோ தெரிகிறது. உடனே பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.
இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நாஞ்சில் பிரசாத் சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுநீரகம் முற்றிலுமாக செயலிழந்து இருப்பதை கண்டுபிடித்தனர். உடனே மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிறுநீரகத்தை செயல்பட வைக்க மருத்துவர்கள் போராடி இருக்கிறார்கள். அதற்குள் தொற்று இதயத்தை பாதித்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 4 மணியளவில் நாஞ்சில் பிரசாத் மரணம் அடைந்தார்.
அவரது மரணம் காங்கிரசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் வி.ஆர்.சிவராமன், ரங்கபாஸ்யம் தி.மு.க. சார்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மேயர் பிரியா உள்பட காங்கிரஸ், தி.மு.க. கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
நாஞ்சில் பிரசாத் உடலுக்கு நாளை (வெள்ளி) காலை 11 மணியளவில் இறுதிச் சடங்கு நடக்கிறது. அதன் பின்னர் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது. ஆதம்பாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.
நாஞ்சில் பிரசாத்தின் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள இறச்சகுளம். எம்.ஏ. பட்டதாரியான இவர் வேலை நிமித்தமாக 1989-ல் சென்னை வந்தார்.
1990-ல் நாஞ்சில் பில்டர்ஸ் என்ற பெயரில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தார். கூடவே காங்கிரசிலும் இணைந்து தீவிர அரசியலிலும் ஈடு பட்டார். தொடக்கத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வகித்தார். ஆலந்தூர் நகராட்சி கவுன் சிலர் மற்றும் மண்டல தலை வராக பதவி வகித்தவர்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் 165-வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார்.
மறைந்த நாஞ்சில் பிரசாத்துக்கு சுதா என்ற மனைவியும் காவ்யா, அனன்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களில் காவ்யா பட்டப் படிப்பு படித்துள்ளார். அனன்யா பிளஸ்-2 படித்து வருகிறார்.
நாஞ்சில் பிரசாத் மறைவு குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஆற்றல்மிக்க செயல்வீரர் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் திடீரென காலமான செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இளமை துடிப்போடும், சிரித்த முகத்தோடும் பழகு வதற்கு இனிய பண்பாளராக விளங்கி காங்கிரஸ் கட்சிப் பணிகளில் அயராது உழைத்தவர்.
ஆலந்தூர் தொகுதியில் உள்ள மக்களிடையே இவரது தொண்டால் பொழுதளந்த தூய்மையான சேவையின் காரணமாக அளவற்ற நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர்.
காங்கிரஸ் தோழர்களுடன் மூவண்ணக் கொடியை கையில் ஏந்தி கம்பீரமாக முன்னின்று செயல்பட்ட தேசிய தளபதியை காங்கிரஸ் கட்சி இழந்திருக்கிறது. சிலவற்றை ஈடு செய்ய முடியும். அனால் ஆற்றல் மிக்க தோழர் நாஞ்சில் பிரசாத் மறைவு ஈடு செய்யவே முடியாத ஒரு மிகப்பெரிய இழப்பாகும்.
இதன்மூலம் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தூண் ஒன்று சாய்ந்து விட்டது.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தி னருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்மை விட்டு பிரிந்த நாஞ்சில் பிரசாத்தின் இறுதி ஊர்வலம் நாளை காலை 11 மணிக்கு ஆலந்தூர், ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுவதாக ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. மறைந்த தேசிய செயல்வீரருக்கு அஞ்சலி செலுத்த பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதிய கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு அல்ல.
- ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பைகூட மத்திய அரசு எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது.
சாதிவாரி கணக்கெடுப்பு...! பரவலாக பேசப்படுகிறது. பீகார் மாநிலத்தில் நடத்தி முடித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற குரல் ஒலித்து வருகிறது.
அவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தமிழகத்தில் கிடைக்கப் போகும் பலன் என்ன? என்பது பற்றிய கேள்விக்கு விளக்கம் அளித்து உள்ளார்கள் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-
இந்திய சமூக அமைப்பு 5 ஆயிரம் ஆண்டுகளாக சமசீரற்ற முறையில் இருந்தது. ஒரு தரப்பு உயர் சாதி என்று அதிகார செருக்கில் இருந்தது.
இன்னொரு தரப்பு ஊருக்கு ஒதுக்குப்புறமாக யார் கண்ணிலும் படாமல் உரிமையற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள். அன்றைய சமூக அமைப்பில் அதை நியாயம் என்று கூறி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அவரவர் பிறந்த சமூகத்தின் அடிப்படையில்தான் வாழ வேண்டும். அது ஈஸ்வரன் கொடுத்த வரம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட ஒரு சில சமூகத்தில் பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்ற நிலை இருந்தது. பிறந்தது முதல் இறக்கும் காலம் வரை அப்படித்தான் வாழ வேண்டும். அதையும் எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் அங்கீகரித்தார்கள். ஏற்றுக்கொண்டார்கள். இதைவிட காட்டுமிராண்டித்தனமான அநாகரீகமான, மானுடநெறி பிறழ்ந்த சமூக அமைப்பு இருக்க முடியாது.
மிருகங்களுக்கு இடையே கூட இத்தகைய பாகுபாடு கிடையாது. பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கமும் இங்குதான் இருந்தது. வயதான கிழவருக்கு இளம்பெண்ணை திருமணம் செய்து வைப்பார்கள். அவர் இறந்ததும் அவரது உடலோடு அந்த பெண்களையும் கட்டி வைத்து எரித்து விடுவார்கள். அந்த பெண் பத்தினியாகி விட்டார்.
சிவலோக பதவி அடைந்துவிட்டார் என்று ஏற்றுக்கொள்வார்கள். இந்த காட்டுமிராண்டிதனத்தை ஒழிக்கத்தான் சீர்திருத்தவாதிகளும், புரட்சியாளர்களும் பாடுபட்டார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். மனித உணர்வுமிக்க சமூக நீதியை அவர்கள் நிலை நாட்டினார்கள்.
அதேபோல்தான் இடஒதுக்கீடு முறையும். எல்லா சமூகங்களாலும் உடனடியாக கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் உயர்ந்த நிலைக்கு சென்றுவிட முடியாது என்ற நிலை இருந்தது. அவர்களையும் கைதூக்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் இட ஒதுக்கீடு முறை தேவைப்பட்டது.
நமது அரசியல் சட்டத்தை இயற்றிய போது இடஒதுக்கீட்டை தலைவர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் இட ஒதுக்கீடு அவசியம் என்ற குரல் முதன் முதலில் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கியது. பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு சேவலை வழங்கியது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
அரசியல் சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று கோர்ட்டு சுட்டிக் காட்டியது. இதுதான் இடஒதுக்கீடு அவசியத்துக்கான பொறியாக அமைந்தது. தமிழகத்தில் தந்தை பெரியார் குரல் கொடுத்தார். அவர் அதிகாரத்தில் இல்லாததால் அந்த குரல் எட்ட வேண்டிய இடத்தை எட்டவில்லை.
இந்த பிரச்சனை பெருந்தலைவர் காமராஜரின் காதுகளை எட்டியது. அவரும் அதன் நியாயத்தை உணர்ந்தார். பிரதமர் நேருவின் கவனத்துக்கு கொண்டு சென்று நியாயத்தை எடுத்து சொன்னார். இதனால் அரசியல் சட்டத்தை திருத்தி இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றார்.
அதை ஏற்றுக்கொண்ட நேரு பாராளுமன்றத்தில் சட்ட திருத்த மசோதா கொண்டு வர முடிவு செய்தார். ஆனால் அப்போது எம்.பி.க்களாக அதிக அளவில் இருந்த உயர் சாதியினரும், இடஒதுக்கீடு தேவையில்லை என்பதை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டவர்களும் அரசியல் சட்டம் இப்போதுதான் இயற்றப்பட்டுள்ளது. அதில் உடனடியாக திருத்தம் தேவையா? என்றவர்களும் இருந்தார்கள். இதை உணர்ந்த நேரு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். சுதந்திரம் பெற்றது அனைவருக்கும் சமநீதி, சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான். இப்போது அதற்கு சட்டத் திருத்தம் அவசியமாகிறது. எனவே உங்கள் மாநில எம்.பி.க்களை இந்த சட்டம் நிறைவேற வாக்களிக்க சொல்லுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் அரசியல் சட்ட திருத்தம் நிறைவேறியது. இந்திய அரசியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட முதல் சட்டத் திருத்தமும் அதுதான்.
அப்போது சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரும் தேவையை உணர்ந்து சட்டத் திருத்தத்துக்கு ஒத்துழைத்தார். சட்டப்படி இடஒதுக்கீடு கிடைத்தாலும் சமூகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப துல்லியமாக இல்லை என்ற குரல் எழுந்தது. அனைத்து தரப்பு மக்கள், ஏழைகள் கீழ் நிலையில் இருப்பவர்கள் இட ஒதுக்கீட்டை பெற முடியவில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதிய கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு அல்ல. சாதி ஒரு அடையாளம். அதுபோல் வாழ்க்கை கிடையாது. எந்த சாதியையும் ஆதிக்கம் செலுத்த ஜனநாயகம் அனுமதிக்காது.
பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில் பிற்படுத்தப்பட்ட மக்கள் 63.14 சதவீதம் இருந்தும் அவர்களுக்கு கிடைக்கும் இடஒதுக்கீடு 27 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு.
தமிழகத்திலும் இதே நிலைதான் இருக்கும். சில சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறது. சிலருக்கு உயர்சாதி என்பதால் கிடைப்பதில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அவர்களுக்கு உரிய ஒதுக்கீடு கிடைக்கும். துல்லியமாக அனைத்து தரப்பினருக்கும் இடஒதுக்கீடு தேவை. அதற்கு சாதிவாரியான புள்ளி விவரம் அவசியம். எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல் கேட்டுக்கொண்ட பிறகு நாடு முழுவதும் இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
ஒவ்வொரு பத்து ஆண்டுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பைகூட மத்திய அரசு எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
- கல்லூரி நிறுவனர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கொட்டாரம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அறிவியல் விழா தொடக்க நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கல்லூரி நிறுவனர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.
- தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் அத்துமீறிய வழக்கில் மூளையாக செயல்பட்ட லலித்ஜாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. தபஸ்ராயுடன் நீண்ட காலமாக தொடர்பு இருந்ததாக பா.ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
இது தொடர்பாக மேற்கு வங்க பா.ஜனதா தலைவர் டாக்டர் சுகந்தோ மஜும்தார் தனது எக்ஸ் தளத்தில் ஒரு படத்தை வெளியிட்டார்.
அதில், தபஸ்ராயுடன், லலித்ஜா செல்பி புகைப்படம் எடுத்து கொண்ட காட்சி உள்ளது. அந்த புகைப்படத்துடன் மஜும்தாரின் பதிவில், நமது ஜனநாயக கோவில் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லலித்ஜா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபஸ்ராயுடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
எனவே அவரது உடந்தையை விசாரிக்க இந்த ஆதாரம் போதாதா? என பதிவிட்டு இருந்தார்.
Lalit Jha, the mastermind of the attack on our Temple of Democracy, had been in close association with TMC's Tapas Roy for a long time... Isn't this proof enough for investigation into the connivance of the leader? @AITCofficial @TapasRoyAITC @abhishekaitc #shameontmc pic.twitter.com/1PIVnnbGx9
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 14, 2023
இதே போல பா.ஜனதா கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறுகையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இப்போது திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்பு வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது என கூறியதோடு, இந்தியா கூட்டணி மீதும் புகார் கூறியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் மறுத்துள்ளது. பார்வையாளர்களாக வந்தவர்களுக்கு பாஸ் வழங்கிய பா.ஜனதா கட்சியின் மைசூர் எம்.பி. பிரதாப் சிம்ஹாவை விசாரிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
அதே நேரம் பாஸ்களை வழங்கியதை தவிர குற்றம் சாட்டம் பட்டவர்களுடன் தனக்கு எந்த தொடர்பு கிடையாது என பிரதாப் சிம்ஹா மறுத்துள்ளார்.
- தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
- அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
புதுடெல்லி:
இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகள் உடன் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த மூத்த நிர்வாகிகள் 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
அக்குழுவில், அசோக் கெலாட், பூபேஷ் பாகெல், முகேஷ் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
In the run-up to the General Elections-2024, Congress President Shri @kharge has constituted an National Alliance Committee, as follows, with immediate effect:
— Congress (@INCIndia) December 19, 2023
1. Shri Ashok Gehlot
2. Shri Bhupesh Baghel
3. Shri Mukul Wasnik- Convenor
4. Shri Salman Khurshid
5. Shri Mohan… pic.twitter.com/mUkyLF7yJt
- அரசியல் நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி தெலுங்கானா மாநிலத்தில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
- ரேபரேலி தொகுதியை விட்டு வெளியேறி தெலுங்கானாவுக்கு வருவது உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும்.
தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. அங்கு சோனியா காந்தி அறிவித்த 6 முக்கிய வாக்குறுதிகள் தான் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.
மேலும் சோனியா காந்தி தனி தெலுங்கானா உருவாக முக்கிய பங்காற்றியதாகவும் அந்த மாநிலத்தில் பிரசாரம் செய்தனர். இதனால் சோனியா காந்திக்கு தெலுங்கானா மாநிலத்தில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வருகிற பாராளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என அந்த மாநில காங்கிரஸ் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி தெலுங்கானா மாநிலத்தில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதே பாணியில் சோனியா காந்தி நல்கொண்டா மற்றும் கம்பம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அவர் ரேபரேலி தொகுதியை விட்டு வெளியேறி தெலுங்கானாவுக்கு வருவது உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும்.
இந்த கோரிக்கையை சோனியா காந்தி ஏற்க மறுத்தால் பிரியங்கா காந்தியை தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட வலியுறுத்துவோம் என தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
- கடந்த முறை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
- கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் எல்லா கட்சிகளும் கூட்டணிகள் அமைப்பது, தொகுதிகளை தேர்வு செய்வது போன்ற வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்த கட்சிகள் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்து கேட்டார்.
தமிழகத்தின் சார்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, பொறுப்பாளர் அஜய்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையின்போது கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள், வெற்றி பெற்ற தொகுதிகள், இந்த தேர்தலில் கேட்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகளை கேட்பது, வெற்றி வாய்ப்புகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கடந்த முறை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
இதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. எனவே கடந்த முறை 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதலாக தொகுதிகள் கேட்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் 9 தொகுதிகளில் குறைய கூடாது என்று தெரிவித்து உள்ளார்கள்.
அதே நேரம் கடந்த முறை காங்கிரஸ் வென்ற சில தொகுதிகளில் போட்டியிட தி.மு.க.வும், ஒரு சில கூட்டணி கட்சிகளும் விரும்புவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் காங்கிரசும் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வரலாம் என்று கருதப்படுகிறது. அப்படியானால் மாற்று தொகுதிகளாக எந்த தொகுதியை விட்டுக் கொடுப்பது? அதற்கு பதிலாக எந்த தொகுதியை கேட்பது? என்ற குழப்பம் வரும்.
கடைசி நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் ஏதாவது தொகுதிகளை வாங்க வேண்டிய சூழ்நிலையை தவிர்ப்பதற்காக காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து அந்த பட்டியலையும் தருமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டு உள்ளது.
இதையடுத்து புதிதாக 9 தொகுதிகள் பட்டியலை காங்கிரஸ் தயாரித்துள்ளது. அந்த பட்டியல் வருமாறு:-
திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு.
இந்த தொகுதிகள் பட்டியலும் மேலிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தொகுதிகளை தேர்வு செய்வதற்கு காரணம் தென்காசியில் 9 முறையும் மயிலாடுதுறையில் 7 முறையும் காங்கிரஸ் வென்றுள்ளது. தஞ்சாவூரில் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. ராமநாதபுரத்தில் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. பெரம்பலூர் மற்றும் நெல்லையில் தலா 2 முறையும் காங்கிரஸ் வென்று உள்ளது.
எனவே வெற்றி பெற முடியும் என்று நம்பப்படும் தொகுதிகளை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது.
இதற்கிடையில் தி.மு.க. தரப்பிலும் ஒரு பட்டியல் காங்கிரஸ் மேலிடத்திடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதில் தி.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் காங்கிரஸ் தவிர இதர கூட்டணி கட்சிகள் விரும்பும் தொகுதிகள், அந்த தொகுதிகளில் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் பற்றியும் குறிப்பிட்டு உள்ளன. இந்த பட்டியலில் 30 தொகுதிகளுக்கு மேல் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தொகுதிகளை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தி.மு.க. மேலிட தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளார்கள்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் சார்பில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு விழா இன்று மாலையில் காமராஜர் அரங்கில் நடக்கிறது.
இதையொட்டி காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் மாநில தலைவர் ரஞ்சன் குமார் இளையபெருமாளின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிட ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து காங்கிரஸ் பேரியக்கத்தின் நாடறிந்த தலைவராக உயர்ந்த பெரியவர் எல்.இளையபெருமாள் அரசியல் வாழ்க்கை என்பது, காலத்தாலும், களத்தாலும் வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றதாகும்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக 1952 முதல் 1967 வரை 3 முறை தேர்வு செய்யப்பட்ட பெருமைக்குரியவர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். நேரு பிரதமராக இருந்தபோது அமைக்கப்பட்ட அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு ஆணையத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றியவர் என்பதெல்லாம் இளையபெருமாள் அரசியல் அடையாளங்கள்.

அவர் தலைமையிலான அகில இந்தியத் தீண்டாமை ஆணையத்தின் பரிந்துரையின் பலனாகவே, தீண்டாமைக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்உருவானது என்பதே அவரது அரசியல் லட்சியத்தின் உன்னதத்திற்கும், விழுமியத்திற்கும் வெளிப்படையான வரலாற்றுச் சான்று.
பெரியவர் இளையபெருமாள், 1980-ல் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமையும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். கலைஞருடன் மிகுந்த நெருக்கமும், நட்புறவும் கொண்டிருந்தவர். 1998-ம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் பெயரிலான தமிழ்நாடு அரசின் விருதை முதன்முதலாக பெரியவர் இளையபெருமாள் அவர்களுக்குத்தான் முதலமைச்சர் தலைவர் கலைஞர் வழங்கினார்கள். "சலிப்பேறாத சமூகத் தொண்டர்" என்று கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்டவர்.
இளையபெருமாள் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் ஒன்று அமைக்கப்படும் என்று கடந்த 18.4.2023 அன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளேன்.
பெரியவர் இளையபெருமாள் நூற்றாண்டைக் கொண்டாடுவதுடன், "இளையபெருமாள் வாழ்க்கைச் சரித்திரம்" என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூலையும் வெளியிடுவது பெரிதும் பாராட்டுதலுக்குரிய நிகழ்வாகும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- டெல்லி மேலிட தலைவர்களும் காங்கிரசை வலுப்படுத்த பிரியங்காவின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது என்று கருதுகிறார்கள்.
- இந்திராவின் வலிமையான தலைமையை இந்தியா இன்றும் கொண்டாடுகிறது.
அகில இந்திய காங்கிரசில் பிரியங்கா தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கட்சி பொறுப்புக்கு பிரியங்கா வரவேண்டும் என்ற எண்ணமும் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திக்கு துணையாக பிரியங்காவும் பிரசார களத்தில் இறங்கினார். அவர் சென்ற இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதியது. வரும் காலங்களில் பிரியங்காவும் கை கொடுத்தால் காங்கிரசை கை தூக்கி விட முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க மம்தா பானர்ஜி கூறினார். ஆனால் வட மாநிலங்களில் அவரை ஏற்க காங்கிரசார் விரும்பவில்லை. அதே போல் ராகுலை அறிவிக்க முடியாத சூழ்நிலையும் இருந்தது.
தற்போது பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ளது. வயநாடு தொகுதியில் நடைபெற போகும் தேர்தலில் பிரியங்காவை போட்டியிட வைத்து எம்.பி.யாக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அந்த தேர்தலில் கார்கே தலைமையில் சந்தித்தால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாது.
எனவே பிரியங்காவை கட்சியின் செயல் தலைவராக்கினால் அந்த மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருதுகிறார்கள். இதை வடமாநிலங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் மூத்த தலைவர்களும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
டெல்லி மேலிட தலைவர்களும் காங்கிரசை வலுப்படுத்த பிரியங்காவின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது என்று கருதுகிறார்கள். கார்கேவின் முதுமை, சோனியாவின் உடல் நலக்குறைவு காரணமாக வலிமையான இளம் தலைவர்கள் கட்சியை வழி நடத்தினால்தான் காங்கிரஸ் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எனவே ராகுலுக்கு துணையாக பிரியங்காவை கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். அவருக்கு செயல் தலைவர் பதவி வழங்க பரிசீலித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் தற்போது அமைப்பு செயலாளராக இருக்கும் கே.சி.வேணுகோபால் கேரள மாநில தேர்தலையொட்டி அந்த மாநில அரசியலுக்கு செல்லலாம் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு சென்றால் அமைப்பு செயலாளர் பதவியும் காலியாக இருக்கும். எனவே இரண்டில் ஒரு பதவி அவருக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.
பிரியங்கா செயல் தலைவராக வரவேண்டும் என்று வற்புறுத்தி வரும் தமிழக மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
இந்திராவின் வலிமையான தலைமையை இந்தியா இன்றும் கொண்டாடுகிறது. பிரியங்காவையும் பாட்டி இந்திராவின் மறுபதிப்பாக மக்கள் கருதுகிறார்கள். தேர்தலில் அவரது பேச்சும் செயல்பாடும் மக்களை வெகுவாக கவர்ந்தது. ராகுலுக்கு காங்கிரசில் செல்வாக்கு இருந்தாலும் பிரியங்காவுக்கு கட்சியையும் தாண்டி அனைத்து தரப்பினரின் ஆதரவும் கிடைக்கும். எனவே பிரியங்கா செயல் தலைவராக வருவது கட்சிக்கு பலம் சேர்க்கும் என்றனர்.
- தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி.
- தமிழ் கூறும் நல்லுலகமே உங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது, போற்றுகிறது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி, வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்காக உள்ளூர் முதலீடுகளை திரட்டுகிற அதேநேரத்தில், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்னையில் அந்நிய முதலீட்டாளர்கள் மாநாட்டையும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி அமெரிக்க பயணத்தை மேற்கொண்டு சான்பிரான்ஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் நடத்தப்பட்ட சந்திப்புகளின் பலனாக ரூபாய் 7616 கோடி முதலீடுகளை ஈர்த்து 11,516 நபர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுகிற வகையில் முதலமைச்சரின் முயற்சிகள் வெற்றி பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தை தொழில் வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னணி மாநிலமாக உயர்த்துகிற முயற்சியில் அமெரிக்க பயணத்தின் மூலம் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களை போட்டு இன்று தமிழகம் திரும்பும் அவரை 'முதலீடுகளை ஈர்த்த முதல்வரே வருக வருக" என தமிழக மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு வரவேற்க கடமைப்பட்டுள்ளார்கள்.
அமெரிக்க பயணத்தின் ஒவ்வொரு நாளையும் கடமை உணர்ச்சியோடு தமிழகத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற மிகுந்த ஈடுபாட்டுடன் தனது பணிகளை மனநிறைவோடு செய்து சென்னை திரும்பி இருக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், அவருக்கு பெரும் துணையாக இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்ட தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பயணத்தின் வெற்றி தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி. தமிழ் கூறும் நல்லுலகமே உங்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது, போற்றுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.