என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குணால் கம்ரா"

    • மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்திருந்தார்.
    • வானூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள அனுமதி.

    காமெடி நடிகரான (Stand-up comedian) குணால் கம்ரா மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவைக்காக அம்மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தார். ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியிருந்தார்.

    இதனால் கோபம் அடைந்த ஏக்நாத் ஷிண்டே கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர். இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கர் காவல்நிலையத்தில் குணால் கம்ராவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவேளை கைது செய்யப்படலாம் என அஞ்சினார்.

    இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றததில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்ய காரணம் என்ன? என் கேள்வி எழுந்தது.

    குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மும்பையில் வசித்து வருகிறார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கியுள்ளது. மனு குறித்து பதில் அளிக்க மும்பை கர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • நிகழ்ச்சி ஒன்றில் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்யும் வகையில் பாட்டு பாடினார்.
    • ஏக்நாத் ஷிண்டே கட்சியினர் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர்.

    காமெடி நடிகரான (Stand-up comedian) குணால் கம்ரா மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவைக்காக அம்மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தார். ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியிருந்தார்.

    இதனால் கோபம் அடைந்த ஏக்நாத் ஷிண்டே கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர். இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கர் காவல்நிலையத்தில் குணால் கம்ராவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவேளை கைது செய்யப்படலாம் என அஞ்சுகிறார்.

    இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றததில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்ய காரணம் என்ன? என் கேள்வி எழுந்தது.

    குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மும்பையில் வசித்து வருகிறார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    மும்பை கர் காவல் நிலையத்தில் சிவசேனா எம்.எல்.எ. முர்ஜி படேல், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எதிராக அவதூறு கருத்து பரப்பியதாக புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    குணால் கம்ரா முன்ஜாமின் மனுவை விரைவில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேலி செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.
    • நிர்மலா தாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து கருத்து தெரிவித்த குணால் கம்ராவுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், தற்போது மத்திய அமைச்சர் குறித்த கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்கு காவல் நிலையத்தில் விசாராணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல் துறையினர் குணால் கம்ராவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், நேற்று (புதன் கிழமை) குணால் கம்ரா வெளியிட்ட மற்றொரு வீடியோவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கேலி செய்யும் வகையிலான காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

    அந்த வீடியோவில் 1987ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'மிஸ்டர் இந்தியா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஹவா ஹவாய்' என்ற பாடலில் பாப்கார்ன் எமோஜிக்கள் இடம்பெற்று இருந்தன. இவை திரையரங்குகளில் வாடிக்கையாக விற்பனை செய்யப்படும் பாப் கார்ன் மீது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை கிண்டல் செய்யும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், அந்த வீடியோவில் சாலைகளில் குழிகள் இருப்பதும், மெட்ரோ பணிகளுக்காக சாலையில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மேம்பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்களை கேலி செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சரிவாலி தீதி மற்றும் நிர்மலா தாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே குறித்த சர்ச்சைக்கு காவல் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கு பதிலளித்த குணால் கம்ரா காவல் நிலையத்தில் ஆஜராக ஒருவார காலம் அவகாசம் கோரியிருந்தார். காவல் துறையினர் குணால் கம்ரா கோரிக்கையை நிராகரித்ததுடன் காவல் நிலையத்தில் ஆஜராக மீண்டும் சம்மன் வழங்கியுள்ளனர்.

    • அனில் கபூரின் மிஸ்டர் இந்தியா படத்தில் வரும் ஹவாய் ஹவாய் பாடல் வரிகளை மாற்றியமைத்து பரோடி பாணியில் இந்த பாடல் அமைந்துள்ளது.
    • மக்களுக்கு சாப்பிட பாப்கார்ன் தர வந்திருக்கிறார், அவரை நிர்மலா தாய் என்று அழைக்கிறார்கள்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.

    இவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். மேலும், ஸ்டூடியோ விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர்.

    கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கும் சூழலில் குணால் கம்ரா மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராக குணால் கம்ரா 1 வாரம் அவகாசம் கேட்டிருந்தார்.

    காவல்துறையுடன் ஒத்துழைக்க தயார் என்றும் ஆனால் தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவரது கோரிக்கையை மும்பை போலீஸ் நிராகரித்துள்ளது. உடனே அவர் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளது. இதற்கிடையே சேனா ஆதரவாளர்கள் தனது ஸ்டூடியோவை அடித்து உடைக்கும் வீடியோவை பகிர்ந்து அவர்களை கிண்டல் செய்து மேலும் ஒரு நகைச்சுவை பாடலை வெளியிட்டார்.

    இந்நிலையில் மத்திய மாநில பாஜக அரசின் சர்வாதிகார செயல்பாடுகள் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராம்மானை கிண்டலடித்து மேலும் ஒரு நகைச்சுவை பாடல் வீடியோவை குணால் கம்ரா வெளியிட்டுள்ளார்.

    அனில் கபூரின் மிஸ்டர் இந்தியா படத்தில் வரும் ஹவாய் ஹவாய் பாடல் வரிகளை மாற்றியமைத்து பரோடி பாணியில் இந்த பாடல் அமைந்துள்ளது. "உங்கள் வரிப்பணம் வீணாக போகிறது" என்பது இந்த பாடலின் தலைப்பு. "அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், உடைந்துவிழும் பாலங்கள், இது சர்வாதிகாரம்" என்ற வரிகள் பாடலில் இடம்பெற்றுள்ளன.

    மேலும் நிர்மலா சீதாராமன் குறித்த வரிகளில், "அவர் மக்களின் சம்பாத்தியத்தைக் கொள்ளையடிக்க வந்திருக்கிறார், சம்பளத்தைத் திருட வந்திருக்கிறார், நடுத்தர வர்க்கத்தை அடக்கி ஒடுக்க வந்திருக்கிறார், மக்களுக்கு சாப்பிட பாப்கார்ன் தர வந்திருக்கிறார், அவரை நிர்மலா தாய் என்று அழைக்கிறார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.

    பாஜக அரசு பெருநிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரிச்சுமையையும் வழங்கி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

    மேலும் கடந்த வருடம் பாப்கார்னுக்கு மூன்று விதமான வரியை விதித்து அதற்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் கேலிக்கு உள்ளானது. இவற்றை முன்வைத்து குணால் கம்ரா தனது பாடலில் அவரை விமர்சித்துள்ளார்.

    • ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
    • மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.

    இவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். மேலும், ஸ்டூடியோ விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர்.

    குணால் கம்ரா தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பாக குணால் கம்ராவுக்கு சிவசேனா கட்சியை சேர்ந்த பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில், குணால் கம்ராவுக்கு தொலைபேசி மூலம் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை குணால் கம்ராவை கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கும் அழைப்புகள் என்று கூறப்படுகிறது. குணால் கம்ராவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கோர முடியாது என்று மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் என்றும் இதற்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குணால் கம்ரா கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தற்போது மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இருக்கும் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை முன்பொரு காலத்தில் துரோகி என்று கூறி வந்ததாக குணால் கம்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

    • தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை
    • மகா. துணை முதல்வர் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை ஒரு காலத்தில் துரோகி என்று கூறிவந்ததை சுட்டிக்காட்டினார்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

    குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார். சிவசேனாவின் இருந்த ஏக்நாத் ஷிண்டே அக்கட்சியை உடைத்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவிக்கு தாவிய ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதன் பின்னணியிலேயே ஷிண்டேவை துரோகி என குணால் கம்ரா விமர்சித்திருந்தார்.

    ஆனால் அவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர்.

    போதாக்குறைக்கு சேதமடைந்த ஸ்டுடியோவை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். மேலும் குணால் கம்ராவுக்கு தொடர் மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தன்மீதான வழக்கு விசாரணைக்கு ஆஜாராக 1 வார காலம் குணால் கம்ரா அவகாசம் கேட்டுள்ளார்.

    காவல்துறையுடன் ஒத்துழைக்க தயார் என்றும் ஆனால் தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போது ஷிண்டேவுடன் கூட்டணியில் உள்ள மகா. துணை முதல்வர் அஜித் பவாரே ஏக்நாத் ஷிண்டேவை ஒரு காலத்தில் துரோகி என்று கூறிவந்ததையும் குணால் கம்ரா சுட்டிக்காட்டி உள்ளார்.

    அதோடு நிற்காமல் தனது ஸ்டூடியோவை சேனா தொண்டர்கள் அடித்து உடைக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள குணால் கம்ரா அவர்களை கிண்டல் செய்து பாடல் ஒன்றையும் பாடி மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளார். தனது எக்ஸ் பதிவில் அவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.  

    • மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குணால் கம்ரா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. .
    • குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தனர்

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் அவதூறாக பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மறுத்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

    முன்னதாக குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியினர் குணால் கம்ரா சர்ச்சை கருத்து கூறிய ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். மேலும், குணால் கம்ரா தான் பேசியதற்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தனர்.

    பிறகு, அந்த ஸ்டூடியோ விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர். சிவசேனா கட்சியினர் கொதிப்படைந்துள்ள நிலையில், குணால் கம்ரா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் தொடங்கி மாநில அமைச்சர்கள் வரை குணால் கம்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சிவசேனா சிவசேனா ஆதரவாளர் ஒருவர் குணால் கம்ராவிடம் செல்போனில் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த ஆடியோவில் பேசப்பட்டவை:

    குணால் கம்ரா: வணக்கம்

    சிவசேனா சிவசேனா: குணால் கம்ராவா?

    குணால் கம்ரா: ஆமா, சொல்லுங்க.

    சிவசேனா சிவசேனா: ஜெகதீஷ் சர்மா பேசுகிறேன். உங்கள் வீடியோவில் சாஹேப் பற்றி என்ன சொன்னீர்கள்?

    குணால் கம்ரா: எந்த சாஹிப்?

    சிவசேனா சிவசேனா: ஷிண்டே சாஹேப், எங்கள் (துணை) முதல்வர். உங்கள் வீடியோவில் அவரைப் பற்றி என்ன பேசினீர்கள்?

    குணால் கம்ரா: அவர் இப்போது எங்கே முதலமைச்சராக இருக்கிறார்? அவர் துணை முதலமைச்சராக இருக்கிறார்.

    சிவசேனா சிவசேனா: அவர் துணை முதல்வர். அவரைப் பற்றி என்ன வீடியோவை வெளியிட்டிருக்கிறீர்கள்?

    குணால் கம்ரா: நீங்க வீடியோவை பார்த்தீர்களா?

    சிவசேனா சிவசேனா: பார்த்தேன். நீங்கள் நிகழ்ச்சி நடத்திய ஓட்டலை நாங்கள் என்ன செய்தோம் என்று பாருங்கள். நாங்கள் உங்களை எங்கு கண்டாலும் இதே நிலைதான். புரிகிறதா?

    குணால் கம்ரா: தமிழ்நாட்டுக்கு வந்தால் என்னை பார்க்கலாம்.

    சிவசேனா சிவசேனா: நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?

    குணால் கம்ரா - தமிழ்நாட்டில் தான்.

    சிவசேனா சிவசேனா: தமிழ்நாட்டிற்கு வந்து உங்களை அடிப்பேன்.

    குணால் கம்ரா: வாருங்கள், தமிழ்நாட்டிற்கு வாருங்கள்.

    சிவசேனா சிவசேனா: இப்போ தமிழ்நாட்டுக்கு எப்படிப் போறது? தமிழ்நாட்டுக்கு எப்படிப் போறது? நம்ம ஐயாகிட்ட ஒரு நிமிஷம் பேசுங்க.

    காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் இந்த ஆடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இதனை நகைசுவை என்று குறிப்பிட்டார்.

    • ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.
    • சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் அவதூறாக பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மறுத்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. முன்னதாக குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியினர் குணால் கம்ரா சர்ச்சை கருத்து கூறிய ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். மேலும், குணால் கம்ரா தான் பேசியதற்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தினர்.

    பிறகு, அந்த ஸ்டூடியோ விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர். சிவசேனா கட்சியினர் கொதிப்படைந்துள்ள நிலையில், குணால் கம்ரா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் தொடங்கி மாநில அமைச்சர்கள் வரை குணால் கம்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அம்மாநில உள்துறை அமைச்சர் யோகேஷ் ராம்தாஸ் கதம் இது குறித்து கூறும் போது, "உச்சநீதிமன்றம், இந்திய பிரதமர், இந்து கடவுள்களை அவமதிப்பாய் எனில், நீ தண்டனை அனுபவிக்க வேண்டும். நீ செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மகாராஷ்டிரா அல்லது இந்தியாவில் இதுபோல் நடந்து கொள்ள முடியாது. நாங்கள் நகைச்சுவையை ஏற்றுக் கொள்வோம், ஆனால் இத்தகைய நகைச்சுவை மகாராஷ்டிராவில் ஏற்றுக் கொள்ளப்படாது," என தெரிவித்தார்.

    இதேபோல் அமைச்சர் குலாப் ரகுநாத் பாட்டீல் இதுகுறித்து கூறும்போது, "அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், நாங்கள் அவரிடம் எங்கள் மொழியில் பேசுவோம். சிவசேனா அவரை விட்டுவிடாது.. இந்த அவமானத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் வெளியில் வந்து எங்கு மறைந்து கொள்ள முடியும்? சிவசேனா அதன் உண்மை முகத்தை காண்பிக்கும்," என்று எச்சரிக்கை விடுத்தார்.

    முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் கார் காவல் துறை சார்பில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா விசாரணை அதிகாரியிடம் இன்று ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக குணால் கம்ரா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • கேலி பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
    • துணை முதல்-மந்திரி ஷிண்டேவை கேலி செய்து பாடிய குணால் கம்ரா மீது மும்பை கார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மும்பை:

    பிரபல 'ஸ்டாண்டு அப்' காமெடியன் குணால் கம்ராவின் நகைச்சுவை நிகழ்ச்சி மும்பை கார் பகுதியில் உள்ள ஓட்டல் வளாகத்தில் உள்ள ஹபிடட் காமெடி கிளப் ஸ்டூடியோவில் நடந்தது. அப்போது அவர், மகாராஷ்டிரா துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே 2022-ம் ஆண்டு பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்தது தொடர்பாக கேலி பாடலை பாடினார். 'தில் தோக் பாகல் ஹே' படத்தில் இடம்பெற்று இருந்த பாடலை டப்பிங் செய்து கேலி பாடலை உருவாக்கி இருந்தார்.

    அந்த பாடலில் அவர் ஏக்நாத் ஷிண்டேயை கத்தார் (துரோகி) என குறிப்பிட்டு இருந்தார். அவரது கேலி பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனால் கொந்தளித்த சிவசேனா தொண்டர்கள் சுமார் 40 பேர் நேற்று முன்தினம் இரவு நகைச்சுவை நிகழ்ச்சி நடந்த ஹபிடட் காமெடி கிளப் ஸ்டூடியோ அரங்கிற்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 11 பேரை கைது செய்தனர்.



    இதேபோல துணை முதல்-மந்திரி ஷிண்டேவை கேலி செய்து பாடிய குணால் கம்ரா மீது மும்பை கார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில், பிரிஹன் மும்பை மாநகராட்சி ஊழியர்கள் ஹபிடட் ஸ்டுடியோவின் ஒரு பகுதியை நேற்று இடித்துத் தள்ளினர். விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், அது பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. எனினும், இரண்டு ஓட்டல்களுக்கு நடுவே உள்ள இடத்தை ஆக்கிரமித்து இந்த ஸ்டுடியோ கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    முன்னதாக ஹபிடட் ஸ்டுடியோ நிர்வாகம் சார்பில் நேற்று காலையில் வெளியிட்ட அறிக்கையில், "குணால் கம்ரா விவகாரத்தால் ஸ்டுடியோ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கலைஞர்களின் கருத்துக்கு அவர்கள்தான் முழு பொறுப்பு. இதில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், எங்கள் ஸ்டுடியோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. எனினும், கம்ராவின் கருத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என கூறப்பட்டிருந்தது.

    இந்த விவகாரம் நேற்று மகாராஷ்டிரா சட்டசபையிலும் புயலை கிளப்பியது. காமெடியன் குணால் கம்ரா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை முன் சென்று போராட்டம் நடத்தினர். இதனால் சட்டசபை நிகழ்வுகள் 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×