என் மலர்
நீங்கள் தேடியது "slug 94484"
- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்
- 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர்.
கோவை:
கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே தூய்மை பணியாளர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தால் 2 நாட்களில் மட்டும் 1000 ஆயிரம் டன் குப்பைகள் தேக்கம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் குப்பை தொட்டிகள் பல இடங்களில் நிரம்பி குப்பைகள் தேக்கத்தால் துர்நாற்றம் வீசியது. பின்னர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் கலெக்டர் சமீரன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 4-ந் தேதி முதல் மீண்டும் பணிக்கு சென்றனர்.
ஆனால் பேச்சுவார்த்தை யில் கூறியதை போன்று கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியா கவில்லை. தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனை அடுத்து தீபாவளி முடிந்த அடுத்த நாள் அதாவாது இன்று (25-ந் தேதி) முதல் மீண்டும் தொடர் வேலை நிறுத்தப்போரா ட்டத்தில் ஈடுபட போவதாக தூய்மை பணியாளர்கள் அறிவித்தனர். இதனை அடுத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தூய்மை பணியாளர் சங்கத்தினர் கூறியதாவது:-
கடந்த அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோம். இந்த போராட்டத்தில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, கோவை அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றக்கூடிய தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
பின்னர் பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் கூறியதை போன்று மாமன்ற கூட்டத்தில் எந்த அறிவிப்பும், தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இன்று முதல் மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதில் 3 ஆயிரம் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் மட்டுமல்லாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
4 ஆண்டுகளாக போராடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்ட கலெக்டர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சியில் ரூ.721, பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ரூ.529, நகராட்சியில் ரூ.606, ஊராட்சியில் ரூ.529 என ஊதிய உயர்வு அறிவித்தார்.
பேரூராட்சி, நகராட்சி களில் இந்த கூலி வழங்கப்பட்ட நிலையில் மாநகராட்சியில் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இதற்கான அரசாணை வெளியிட்ட நிலையில் கூட தற்போது வரை வழங்கவில்லை. எனவே உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். அதுவரை தூய்மை பணியாளர்கள் காலை வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- கருப்பு சட்டை அணிந்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- கோரிக்கையை வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்த 28 நபர்கள் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் கடந்த 1 ந்தேதிமுதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே தொழிலாளர் நலத்துறை உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம் இன்றுடன் 25 வது நாளை எட்டியுள்ளது. நேற்றைய போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் கருப்புச்சட்டை அணிந்து கோஷங்களை எழுப்பினர். இந்த தீபாவளி எங்களுக்கு துக்க தீபாவளியாக உள்ளதென தெரிவித்துள்ள சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.
- உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- தமிழக அரசு கவனம் செலுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டசெங்குறிச்சி சுங்கச்சா வடியில் 28-பணியாளர்கள் சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 21-வது நாளாக சுங்கசாவடி பணியாளர்கள் கை கால்களை கயிறால் கட்டிப்போட்டு நூதன முறையில் செய்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் உடனடியாக மாவட்ட கலெக்டர், தமிழக அரசு கவனம் செலுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியு றுத்தி உள்ளனர்.
- தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி, அ.தி.மு.க.வினர் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை
தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. சட்டமன்ற துணை தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று உண்ணாவிரத போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா தலைமையில் பனகல் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு அக்கட்சியினர் திரண்டனர்.
பின்பு அவர்கள் ஊர்வல மாக நடந்து வந்து கோரிப்பா ளையம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனால் அங்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமரசப்படுத்தினர். ஆனால் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் வில்லாபுரம் ராஜா மற்றும் நிர்வாகிகள் அண்ணாதுரை, எம்.எஸ். பாண்டியன், முன்னாள் மேயர் திரவியம், பரவை ராஜா, சோலைராஜா, குமார், கே.வி.கே. கண்ணன், சுகந்தி அசோக், பாஸ்கரன், மாயத்தேவன் உள்ளிட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு மதுரை ஆயுதப்படை மைதா னத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம்
புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன் தாஸ், வர்த்தக அணி செயலாளர் ஜெயக்குமார், பேரவை பொருளாளர் பாண்டுரங்கன், அவைத் தலைவர் சொ.ராசு, மீனவர் அணி செயலாளர் பாண்டி, நாட்டாமை, பகுதி செயலாளர் சரவணன்,, வட்டச் செயலாளர்கள் எம் ஆர் குமார் மகாராஜன் நாகரத்தினம் தவிட சுப்பிர மணி ஜெயகல்யாணி வேல்ராஜ் ரகுபதி பொன் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலூரில் கைது
மேலூரில் செக்கடி பஜாரில் முன்னாள் எம்.எல். ஏ. தமிழரசன் தலைமையில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றி செழியன், நகராட்சி கவுன்சிலர் திவாகர், தலைமைக் கழக பேச்சாளர் மலைச்சாமி உட்பட 100 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் கைது செய்தார்.
மேலூர் பஸ் நிலையம் முன்பு முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் 50 பேர் மறியலில் ஈடுபட்டனர் அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தேவர் சிலை அருகே எடப்பாடி பழனிசாமி கைது சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருமங்கலம் நகர செயலாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம், ராமசாமி, செல்லம்பட்டி ராஜா, மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மாநில நிர்வாகிகள் ராம கிருஷ்ணன், தன்ராஜ், மாவட்ட பொருளாளர் திருப்பதி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சிங்கராஜ், பாண்டியன், சதீஷ்சண்முகம், கவி காசி மாயன், மகேந்திரபாண்டி, யூனியன் சேர்மன் லதா ஜெகன், கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன், அம்மா பேரவை பாண்டி, வாகைகுளம் சிவசக்தி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், உச்சப்பட்டி செல்வம், ஆண்டிச்சாமி, ஆதி என்ற ராஜா, காசி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
- அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பாப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்ப மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின். காரணமாக அடுத்தடுத்து அங்கு வசிக்க முடியாத சூழலில் மாற்று இடத்திற்கு தற்காலிகமாக குடிபெயர்ந்தனர். தொடர்ந்து தற்காலிக இடத்தில் அவர்கள் வசித்து வரும் நிலையில் அவர்களின் பூர்வீக இடமான 3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை தற் போது,வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் வேறு நபர் களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து பாப்பாபட்டி பொதுமக்கள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதனை அறிந்து அங்கு வந்த ஆலங்குடி தாசில்தார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.
- அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
- சட்டசபையில் நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
அ.தி.மு.க.வில் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் யார்? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டார்.
இது தொடர்பாக சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். சட்டசபை விதிகளின் படி துணைத் தலைவர் பதவி கிடையாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகரிக்காததால் சபாநாயகர் செயலை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தடையை மீறி உண்ணாவிரதம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி இன்று அதிகாலை முதலே வள்ளுவர் கோட்டம் பகுதியில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிய தொடங்கினார்கள்.
அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அதையும் மீறி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு திரள ஆரம்பித்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து இருந்தனர். காலை 9 மணிக்கு எடப்பாடி பழனிசாமி கருப்பு சட்டை அணிந்தபடி அங்கு வந்தார்.
அப்போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அவரை பார்த்து எடப்பாடி பழனிசாமி வாழ்க என்று கோஷமிட்டனர். தமிழக அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
போலீசார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்காததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீரென ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே போலீசார் எடப்பாடி பழனிசாமியிடம் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர். அதற்கு அ.தி.மு.க.வினர் அரை மணி நேரமாவது எங்களுக்கு போராட அனுமதி தாருங்கள் என கேட்டனர். ஆனால் அதற்கு போலீசார் மறுத்து விட்டனர். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி மற்றும் 62 எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்கு தயாராக நிறுத்தி வைத்திருந்த 7 அரசு பஸ்களில் ஏற்றப்பட்டனர்.
அப்போது அங்கு கூடி இருந்த தொண்டர்கள் கைது நடவடிக்கையை எதிர்த்து கோஷமிட்டனர்.போலீசாருக்கும் அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருந்த போதிலும் அங்கிருந்து கலைய மறுத்த அ.தி.மு.க.வினரையும் போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றினார்கள்.
பின்னர் கைதான எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பஸ்களில் இருந்து கீழே இறங்கி வந்த போது அ.தி.மு.க. தொண்டர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.
அ.தி.மு.க. தர்ணா போராட்டத்தால் வள்ளுவர் கோட்டம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
- கலெக்டரிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்
பெரம்பலூர்
கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணை செயலாளர் கீதா தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேஸ்வரி, செயலாளர் சின்னப்பொண்ணு, பொருளாளர் ஷர்மிளா பேகம், துணைத் தலைவர் பொன்மணி, துணை செயலாளர் சாந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட மாதர் சங்கத்தினர், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலையும், கூலியும் வழங்கிட வேண்டும். அந்த திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மாதாந்திர ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட முதியோர்களுக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். நீண்ட காலமாக குடியிருப்பவர்களின் வீடுகளுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். ஏழை குடும்பங்களின் ரேஷன் அட்டையில் என்.பி.எச்.எச். என்ற குறியீடினை பி.எச்.எச். என திருத்தம் செய்து அரசின் நலத்திட்ட உதவிகளை தடையில்லாமல் வழங்கிட வேண்டும். என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்கள் இது தொடர்பான மனுக்களை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.
- துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்றது
- உரிய காலத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்து
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் 167க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் நிரந்தர தொழிலாளர்களுக்கு பணிமூப்பு அடிப்டையில் ஊதியமும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ 385 வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
மாதத்தின் முதல் வாரத்தில் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று 17 தேதி ஆகியும் கடந்த மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது. எனவே வருகின்ற தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு, கடந்த மாதத்திற்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி 167 ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுபட்டனர்.
மேலும் 120க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தினை தொடந்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
போராட்டத்தில் சிஐடியூ ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கர்ணா, சிஐடியு உள்ளாட்சி செயலாளர் மாணிக்கம்,சிபிஎம் நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
- சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல், இந்த ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
- போர்க்கால அடிப்படையில் இவ்விரு ரோடுகளையும் சீரமைக்கவேண்டும்.
திருப்பூர்:
சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டத்தை கையிலெடுக்க பா.ஜ.க., முடிவு செய்துள்ளது.இதுகுறித்து பா.ஜ.க. ஆண்டிபாளையம் மண்டல் தலைவர் பன்னீர்செல்வம், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல உதவி கமிஷனர் மற்றும் நெடுஞ்சாலை துறை பொறியாளர்களிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இடுவம்பாளையத்திலிருந்து வித்யாலயம் மற்றும் பாரப்பாளையத்திலிருந்து முருகம்பாளையம் செல்லும் சாலைகளில், பாதாள சாக்கடை அமைப்பதற்காக ஓராண்டுக்குமுன் குழி தோண்டப்பட்டது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல், இந்த ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது.பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ரோட்டை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். போர்க்கால அடிப்படையில் இவ்விரு ரோடுகளையும் சீரமைக்கவேண்டும். இல்லையெனில், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
- பொன்னரசி நிலவழகன் தலைமையில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்
- பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி பேரூராட்சி நூற்றாண்டை கண்ட பேரூராட்சியாக இம்மாவட்டத்தில் உள்ளது. இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. பேரூராட்சிமன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ராஜேஸ்வரியும், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகுமாரும் பதவி வகித்து வருகின்றனர். பேரூராட்சி மன்ற செயல் அலுவலராக கலாதரன் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஆரணி பேரூராட்சியில் உள்ள வள்ளுவர்மேடு பகுதியில் சீரான முறையில் குடிநீர் வழங்கவில்லை, தமிழ் காலனியில் குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகை வைக்கவில்லை, ஒர்க் ஆர்டர் இப்பகுதியைச் சேர்ந்த 13-வது வார்டு திமுக கவுன்சிலரான தனக்கு காண்பிக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொன்னரசி நிலவழகன் தலைமையில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பேரூராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பேரூராட்சி மன்ற தலைவர், செயல் அலுவலர், நியமனக்குழு உறுப்பினரும், 10-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினருமான கண்ணதாசன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று உறுதியுடன் கூறினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார். மேலும், வள்ளுவர் மேடு பகுதிக்கு பத்து நாட்களுக்குள் சீரான முறையில் குடிநீர் வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதன் பின்னர்,அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இப்போராட்டத்தினால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.
- 3 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், குறைந்தபட்ச திபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
- 8 அமைப்புகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை காட்டூரில் உள்ள தேசிய பஞ்சாலை அலுவலகம் முன்பு பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கத்தினர் 3 மாதமாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், குறைந்தபட்ச திபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், சி.ஐ.டி.யு., ஹெச் எம் எஸ்., எம்.எல் எப்., ஐ.என்.டி.யு.சி., என்.டி.எல்.எப்., அம்பேத்கர் யூனியன், ஏ.டி.பி., ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 8 அமைப்புகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் எச்.எம்.எஸ்சை சேர்ந்த டி.எஸ்.ராஜாமணி, மனோகரன், சி.ஐ.டி.யு. பத்மநாபன், பிரான்ஸிஸ் சேவியர், ஏ.டி.பி. கோபால், தேவராஜ், ஐ.என்.டி.யு.சி. பாலசுந்தரம், வெங்கடசாமி, எம்.எல்.எப். மு.தியாகராஜன், கோவிந்தசாமி, ஏ.ஐ.டி.யு.சி பொன்ராஜ், செல்வராஜ், டாக்டர்.அம்பேத்கார் யூனியன் நீலமேகம், எல்.டி.எல்.எப் ரங்கசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டம் குறித்து தேசிய பஞ்சாலையை காப்பாற்றுங்கள் ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:-
தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமாக இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் 23 ஆலைகள் இயங்கி வந்தன. கொரோனா கால விதிவிலக்கு கொடுக்கப்பட்ட பிறகும் என்.டி.சி ஆலைகள் சட்டவி ரோதமாக வேண்டுமென்றே இயக்கப்படவில்லை.
பாதி ஊதியம் மட்டும் கொடுத்து வந்தார்கள். முழு ஊதியம் கொடுக்க வேண்டும். அதுவரை மில்லை ஓட்டுகிற வரை ஆலைகளை இயக்க வேண்டும் என்று கூறினோம்.
கடந்த 10 மாதங்களாக பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படவில்லை. பாதி ஊதியமும் 3 மாதமாக கொடுக்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் குறந்தபட்ச ஊதியம் வழங்கப்படவில்லை.
தேசிய பஞ்சாலை கழகத்துக்கு ரூ.1 லட்சம் கோடி உள்ளது. நிலம் விற்ற பணம் ரூ.2 ஆயிரம் கோடி வரவேண்டி உள்ளது. அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும். கடந்த 29 மாதங்களாக தொழிலாளர்கள் எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.
கல்விக்கட்டணம் செலுத்த முடியவில்லை, இ.எம்.ஐ உள்ளிட்ட எந்தவித கட்டணமும் செலுத்த முடியவில்லை. இதனால் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம்.
கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. சரியான முடிவு வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்துவதாக சொன்ன தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
- பொங்கல் போனஸ் தொகை உயர்த்தி வழங்க வேண்டும்
கோவை,
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் காலித்தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அகவிலைப்படியுடன் சட்டபூர்வ பென்ஷன் ரூ. 7850 வழங்க வேண்டும்.
பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்துவதாக சொன்ன தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பொங்கல் போனஸ் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.