search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94568"

    • சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
    • பொக்லைன் உதவியுடன் மண் சரிவு சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. விடிய விடிய பலத்தமழை கொட்டி தீர்த்தது. அவ்வப்போது இடி மின்னலுடன் சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

    சேலம் மாவட்டம் ஏற்காட்டிலும் கன மழை பெய்தது. கனமழையினால் ஏற்காடு பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மின் கம்பிகளும் சேதம் அடைந்தன. இதனிடையே ஏற்காட்டுக்கு செல்லும் குப்பனூர் மலைச்சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

    ஏற்காட்டில் இருந்து கொட்டசேடு வழியாக சேலம் செல்லும் சாலையில் ஆத்துபாலம் என்ற இடத்தில் மன்சரிவு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண் சரிவை சீரமைக்கும் படியில் ஈடுபட்டு வருகின்றனர். பொக்லைன் உதவியுடன் மண் சரிவு சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    மேலும் மழையினால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஏற்காடு மலைச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    • தென்காசி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கும் மேலாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.
    • குண்டாறு அணையில் 20 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கி உள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு, கன்னடியன், சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    சேர்வலாறு, கன்னடியன் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 8 மில்லிமீட்டரும், அம்பையில் 6 மில்லிமீட்டரும், சேரன்மாகாதேவி, களக்காடு பகுதிகளில் தலா 1 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    தென்காசி மாவட்டத்தில் 2 வாரங்களுக்கும் மேலாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ள அணைகளான அடவிநயினார், குண்டாறு, கடனா அணை பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.

    அடவிநயினாரில் அதிகபட்சமாக 21 மில்லிமீட்டரும், குண்டாறு அணையில் 20 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதுதவிர தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    தொடர்விடுமுறை காரணமாக இன்றும் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

    சென்னையில் வரும் நாட்களில் மழைப்பொழிவு எப்படி இருக்கும்? என்று வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா.புவியரசன் விளக்கம் அளித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தின் தலைநகர் சென்னை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு கனமழை பெய்தால் எப்படி தாக்கு பிடிப்பது? என்பது தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் தவிப்பாகவும், மனக்கவலையாகவும் இருக்கிறது. எனவே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானாலே, சென்னை மக்கள் மத்தியில் பதற்றமும், பீதியும் தொற்றி கொள்கிறது.

    மழை

    எனவே சென்னையில் வரும் நாட்களில் மழைப்பொழிவு எப்படி இருக்கும்? என்று வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா.புவியரசனிடம் கேட்டபோது, ‘சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையை இன்று எதிர்பார்க்கலாம். அதன்பின்னர் சென்னைக்கு மழை வாய்ப்பு குறைந்துவிடும். இனி, தென்மாவட்டங்களில்தான் மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என்று கூறினார்.

    சென்னையில் மழை குறையும் என்ற தகவல் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.


    திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழையினால் அரசு ஆஸ்பத்திரி, கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையினால் தாழ்வான பகுதியில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. அப்போது மழைநீருடன், சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். மேலும் வாகன ஓட்டிகள் குளம் போல் தேங்கி நின்ற தண்ணீரை கடந்து செல்ல சிரமப்பட்டனர். திருவாரூர் தியாகராஜர் கோவில் கிழக்குகோபுர வாசல் 2-வது பிரகாரம் பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அவதியடைந்தனர்.

    திருவாரூர் விஜயபுரம் அரசு தாய் சேய்-நல ஆஸ்பத்திரிக்குள் மழை நீர் புகுந்தது. இதில் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் ஆஸ்பத்திரி மருந்தகம், சிகிச்சை பிரிவு, படுக்கை அறை என அனைத்து பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் மகப்பேறு சிறப்பு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தைகளுடன் தாய்மார்கள் அவதியடைந்தனர். தகவல் அறிந்ததும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தாய், சேய் நல ஆஸ்பத்திரிக்குள் புகுந்த மழைநீரை நேரில் பார்வையிட்டார். உதவி கலெக்டர் பாலச்சந்திரன், தாசில்தார் ஆகியோர் உடனடியாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் நோயாளிகளை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் ஊழியர்கள் பொக்்லின் எந்திரன் மூலம் ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். திருவாரூர் ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பும் தண்ணீர் தேங்கி நின்றது.

    மாவட்டத்தில் பல இடங்களில் மழைநீர் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லாததால் தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டனர். எனவே போர்கால அடிப்படையில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், மயிலாடும் தாங்கல் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. ஒரு கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. நேற்று காலையிலும் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடி, தாழ்வான பகுதியில் தேங்கியது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ரிஷிவந்தியத்தில் 95 மில்லி மீட்டரும், தியாகதுருகம்-80, கள்ளக்குறிச்சி-70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழை வெள்ளம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எஸ்.மலையனூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏமம், நத்தகாளி ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த விளைநிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மயிலாடும்தாங்கல் ஏரி நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் உபரிநீர் செல்லக்கூடிய கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், தண்ணீர் கிராமத்திற்குள் புகுந்தது. அங்குள்ள அம்மன் கோவில் மற்றும் 30 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தெருக்களிலும் மழைவெள்ளம் ஆறுபோல் போல் ஓடியதால் கிராம மக்கள் அவதி அடைந்தனர்.

    தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சி காலனியை சேர்ந்த பரிமளகாந்தி(வயது 45) என்பவரது கூரைவீட்டின் சுவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதில் அவரது மகள்கள் கார்த்திகா(19), லீனா(18), மகன் மகேஷ்(15) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்று வருகின்றனர். இதில் கார்த்திகா, அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டும், லீனா 12-ம் வகுப்பும், மகேஷ் (15) 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மழைநீர் சூழ்ந்துள்ள 75 இடங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழை இடைவிடாமல் பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்றுவது சிரமம் ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் இரவு பகலாக இந்த பணி நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னையில் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் போர்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மழைநீர் தேங்க கூடிய பகுதிகளில் தண்ணீர் வெளியேற்ற 850 இடங்களில் மின் மோட்டார் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அதனை இயக்குவதற்கும் ஊழியர்கள் உஷாராக உள்ளனர். எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது என்பதை ஊழியர்கள் கண்காணித்து வெளியேற்றும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

    தி.நகர், வளசரவாக்கம், கே.கே.நகர், மேற்கு மாம்பலம், வேளச்சேரி, கிண்டி சர்தார்வல்லபாய் படேல் சாலை, பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது.

    கடந்த காலங்களில் வெள்ளம் சூழாத இடங்களில் கூட இந்த ஆண்டு மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் கால்வாய்கள் நிரம்பி செல்வதால் தண்ணீரை உள்வாங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.


    தேங்கிய மழைநீர்

    சென்னையில் அதிகம் பாதிப்பு உள்ள 75 பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிகளில் முகாமிட்டு மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் இரவு பகலாக வெளியேற்றப்படுகிறது.

    அடைப்புகளை சரிசெய்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு தேவையான எந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீரை வெளியேற்றுவது சவாலாக உள்ளது.

    ஆனாலும் பொதுமக்கள் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மழைநீர் சூழ்ந்துள்ள 75 இடங்களில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழை இடைவிடாமல் பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்றுவது சிரமம் ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் இரவு பகலாக இந்த பணி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்... செம்மரம் கடத்தல்- ஆந்திர வனத்துறை விரட்டிய போது லாரியில் இருந்து குதித்த தமிழக வாலிபர் பலி

    ரங்கசாமி பா.ஜனதாவிடம் சரணாகதி அடைய கூடாது. மின் துறையை தனியார் மயமாக்க அனுமதிக்க கூடாது. சட்டப்பேரவையில் மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து தீர்மானம் நிறை வேற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய குழு புதுவையில் முழுமையாக மழை சேதத்தை ஆய்வு செய்யவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி நிவாரணமாக ரூ. 300 கோடி கேட்டுள்ளார். ஆனால், இதுவரை மத்திய அரசு மவுனமாகவே உள்ளது.

    அதேநேரத்தில் அதிகாரிகள் ரூ.20 கோடி மட்டுமே நிவாரணம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, தலைமைச் செயலர் அஸ்வினி குமாரை மாற்றக்கோரி மத்திய அரசிடம் பேசியுள்ளார். கடிதமும் அனுப்பி உள்ளார்.

     

    மத்திய அரசு

    ஆனால், இதுவரை தலைமைச்செயலரை மத்திய அரசு மாற்றவில்லை. எங்களுக்கு தொல்லை தந்தது போல் தற்போது முதல்- அமைச்சர் ரங்கசாமிக்கு மத்திய அரசு தொல்லை தருகிறது.

    புதுவை மேல் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.இதன் மூலம் மத்திய அரசு புதுவை ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இல்லை என்பது தெளிவாகிறது. மக்களை ஏமாற்றி பா.ஜனதா ஆட்சியில் அமர்ந்துள்ளதும் புதுவையை பா.ஜ.க. வஞ்சிப்பதும் உறுதியாகிறது.

    ரங்கசாமி பா.ஜனதாவிடம் சரணாகதி அடைய கூடாது. மின் துறையை தனியார் மயமாக்க அனுமதிக்க கூடாது. சட்டப்பேரவையில் மின்துறை தனியார் மயத்தை எதிர்த்து தீர்மானம் நிறை வேற்ற வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்... சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

    தமிழகத்தில் கனமழை தொடர்வதால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.

    குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று அதிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.

    சென்னை உள்பட இன்றும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்போரூர் இள்ளலூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சசிகலா பார்வையிட்டார்.
    சென்னை:

    சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கடந்த 2 வார காலமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களும், வேலூர், கன்னியாகுமரி, திருவாரூர், கடலூர் போன்ற மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிப்படைந்து உள்ளன. பல இடங்களில் ஏழை-எளிய மக்கள் தங்கள் குடிசை வீடுகளில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கிய நிலையில் வாழ வழியின்றி மிகவும் துன்பப்படுகிறார்கள்.

    பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன. வேலூர் மாவட்டத்தில் உள்ள பேர்ணாம்பட்டு என்ற இடத்தில் வீடு இடிந்து விழுந்ததில், 9 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டுவர மத்திய அரசு உரிய நிவாரண தொகையை தமிழகத்துக்கு உடனே வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    திருப்போரூர் இள்ளலூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சசிகலா பார்வையிட்டார்.

    திருப்பத்தூரில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்தது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்தது. திருப்பத்தூர் நகராட்சி சிவராஜ் பேட்டை ஜெயா நகர் பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர், பாதாளச் சாக்கடை கழிவுநீர் கலந்து வீடுகளை சூழ்ந்து முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. மழை விட்டு 3 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை நீரை அப்புறப்படுத்த யாரும் வரவில்லை.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் நகராட்சி பகுதியான சிவராஜ் பேட்டை ஜெயா நகரில் மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து தேங்கி கிடக்கிறது. இதுகுறித்து நகராட்சியில் கூறினால் பாதாள சாக்கடை திட்ட பணிகள் செய்யும் அதிகாரிகளிடம் கூறுங்கள் என்றும், பாதாள சாக்கடை திட்ட பணி அதிகாரிகளிடம் கூறினால் நகராட்சியில் கூறுங்கள் என்றும் கூறுகிறார்கள். பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக மழை நீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
    மழையால் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமலும், வயல் வேலை செய்ய முடியாமலும் தவித்தனர். வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் வருத்தத்தில் இருந்தனர். வேலைக்கு வெளியூர் செல்ல முடியாமல் தொழிலாளர்களும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்ல முடியாமலும் பொதுமக்களும் தவித்தனர்.

    மேலும் மழையால் உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. வயல்வெளிகள், முந்திரி தோட்டங்கள் மற்றும் நிலங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கனமழையால் அனைத்து ஏரிகளும் கரையை ஒடைத்துக்கொண்டு ஓட தொடங்கியதால், சாலைகளிலும், வயல்வெளிகளில் மற்றும் தோட்டங்களிலும் எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு உடையார்பாளையம் மட்டுமின்றி கழுமங்கலம், முனையதரியன்பட்டி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், சோழங்குறிச்சி, தத்தனூர், வெண்மான்கொண்டான், மணகதி, விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, பருக்கள், காடுவட்டாங்குறிச்சி, நடுவலூர், கோட்டியால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்றும் அப்பகுதிகளில் மழை பெய்தது.
    கிராமங்களில் உள்ள கண்மாய், குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கூடலூர் அணைக்கட்டு மதகுகளை சரி செய்ய விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    அரிமளம்:

    புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், சமுத்திரம் ஊராட்சி, துறையூர் ஊராட்சி, கீழ பனையூர் ஊராட்சி, ஓனாங்குடி ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் உள்ள குளங்கள், கண்மாய்கள் நிரம்பவில்லை. கூடலூர் அணைக்கட்டிலிருந்து கொள்ளளவை விட அதிக அளவு தண்ணீர் கிடைக்கும் போது, ஆற்றில் கலப்பதற்கு பல மதகுகளும் கிராம குளங்களுக்கு தண்ணீர் சென்று கலப்பதற்கு சில மதகுகளும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.

    சங்கிலி போன்று உள்ள கிராம குளங்கள் மற்றும் கண்மாய்கள் ஒவ்வொன்றாக நிரம்பி கடைசியில் எஞ்சிய நீர் மற்றொரு வழியாக ஆற்றில் சென்று கலக்கும். இந்நிலையில் கடந்த 10 தினங்களாக பெய்த தொடர் மழையில் சமுத்திரம் ஊராட்சி, துறையூர் ஊராட்சி, கீழப்பனையூர் ஊராட்சி, ஓனாங்குடி ஊராட்சி, அரிமளம் பேரூராட்சி பகுதியில் உள்ள பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் நிரம்பவில்லை. இதற்கு முக்கிய காரணம் கூடலூர் அணைக்கட்டு நிரம்பிய பிறகு மிதமிஞ்சிய தண்ணீர் கிராமங்களுக்கு செல்வதற்காக சில மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கிராமப்புறங்களுக்கு செல்லும் பகுதியில் உள்ள கரைகள் பலவீனமாக இருப்பதால் கிராம பகுதிகளுக்கு செல்லும் மதகுகளை திறக்கும் பொழுது தண்ணீர் மீண்டும் அணைக்கட்டு உள்ளே சென்று ஆற்றில் கலந்து விடுகின்றது. இதனால் குளங்கள், கண்மாய்கள் நிரம்பவில்லை.

    இதை அடுத்து தாஞ்சூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் கூடலூர் அணைக்கட்டிலிருந்து தண்ணீர் கிடைக்காததால் கொத்தடி கண்மாயில் இருந்து பனைய கண்மாய்க்கு வரும் வரத்து வரியை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரும் பணியை சமுத்திரம் ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. கூடலூர் அணைக்கட்டு பகுதியில் கரைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தண்ணீர் திறந்த உடன் மீண்டும் தண்ணீர் ஆற்றில் கலந்து விடுகின்றது. தண்ணீர் ஆற்றில் கலக்காமல் இருப்பதற்காக பொதுப்பணித்துறையினர் மணல் மூட்டைகள் கொண்டு அடக்கி வைத்தாலும் மதகுகள் ஒரு அடி உயரத்துக்கு மேல் திறக்க முடியவில்லை. இதனால் அரை அடி ஒரு அடி உயரத்தில் மட்டுமே கதவுகள் திறக்கப்பட்டு கிராமங்களில் உள்ள குளங்கள், கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இருப்பினும் இது பலனளிக்கவில்லை. விவசாயத்தை அடிப்படையாக கொண்டு திகழும் கிராமப்புறங்களில் உள்ள குளங்கள் கண்மாய்கள் தண்ணீர் இல்லாததால் அப்பகுதியில் உள்ள நெற்பயிர்கள் இந்த ஆண்டு விளையுமா என்பது விவசாயிகளிடம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி கூடலூர் அணைக்கட்டில் உள்ள மதகுகள் கரைகளை சரிசெய்து பலப்படுத்த வேண்டுமென அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    ×