search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95411"

    கரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆய்வுக்கூட்டம் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம் முடிவடைந்ததும் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை புறப்பட்டு சென்றார்.

    இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விழா நிறைவடைந்ததும் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்டார். பயனாளிகள் உள்ளிட்டோர் விழா நடைபெற்ற இரண்டாவது மாடியில் இருந்து லிப்ட் மூலம் கீழே இறங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

    முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் இந்த லிப்டில் 6 பெண்கள் உள்பட 10 பேர் ஏறினர். இரண்டாவது மாடியில் இருந்து தரை தளத்திற்கு வந்த லிப்ட் வேகமாக நின்றது. இதையடுத்து கதவை திறக்க முற்பட்டபோது அதனை திறக்கமுடியவில்லை.

    லிப்டுக்குள் இருந்தவர்கள் பல்வேறு முயற்சிகளை செய்தபோதும் லிப்ட் பழுதாகி செயலிழந்து போய் இருந்தது. நிமிடங்கள் செல்லச் செல்ல உள்ளே சிக்கியிருந்தவர்கள் அபய குரல் எழுப்பினர். தங்களை காப்பாற்றுமாறு கூச்சல் போட்டனர். உடனடியாக விழாவுக்கு வந்திருந்தவர்கள் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் திரண்டு வந்து லிப்டை திறக்க போராடினார்கள். ஆனால் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.

    இதற்கிடையே லிப்டுக்குள் இருந்தவர்கள் தங்களுக்கு மூச்சுத்திணறுவதாக கூறினர். வெளியே நின்றிருந்தவர்கள் அவர்களிடம் ஆறுதல் வார்த்தைகளை கூறி ஆசுவாசப்படுத்தினர்.

    இதற்கிடையே விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அதிரடி நடவடிக்கையாக லிப்ட் கதவை உடைத்து உள்ளே இருந்த 10 பேரையும் பத்திரமாக மீட்டனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அதில் சிக்கியிருந்தவர்கள் வெளியே வந்து நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    இதற்கிடையே லிப்டில் இருந்த மூதாட்டி ஒருவர் மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது. கலெக்டர் அலுவலகத்தில் தயார் நிலையில் 108 ஆம்புலன்சு மூலம் அந்த மூதாட்டி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறிது ஓய்வுக்கு பிறகு அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    • குன்றத்தூர் நத்தம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    • திருவாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் நத்தம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் சிதலமடைந்து காணப்பட்ட இந்த கோவிலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பக்தர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கோவிலை ஆய்வு செய்தனர்.

    பின்னர் கோவிலை சீரமைப்பது குறித்தும் கோவிலுக்கு உரிய இடங்கள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்தும் பல்வேறு பணிகள் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை செய்தனர்.

    • 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகம விதிப்படி ஒவ்வொரு கோவில்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்.
    • 208 கோவில்களில் திருப்பணி நிறைவுற்று குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது.:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான கோவில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்த அறிவுரை வழங்கியுள்ளார்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகம விதிப்படி ஒவ்வொரு கோவில்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். இதனடிப்படையில் கோவில்கள் கீழ்க்கண்டவாறு வகை செய்யப்பட்டு திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தப்படுகின்றன.

    கோவில்கள் மற்றும் கட்டிங்களின் கட்டுமானம், பழுதுபார்த்தல், பாதுகாத்தல், பேணிக்காத்தல், மீட்டெடுத்தல், மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் திருப்பணியில் அடங்குவனவாகும். வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் கொண்டு ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் போற்றிப் பாடப்பட்ட கோவில்கள் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள கோவில்களின் திருப்பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றன.

    இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு 07.05.2021 முதல் 17.06.2022 வரை 208 கோவில்களில் திருப்பணி நிறைவுற்று குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.

    மேலும் 23-ந் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி வரையுள்ள வரும் காலத்தில் 30 கோவில்களுக்கு திருக்குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் 645 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 41 நடமாடும் முகாம்களும் அமைக்கப்பட்டு இருந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 19 லட்சத்து 95 ஆயிரத்து 300 பேர் உள்ளனர். இதுவரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 226 பேருக்கு முதல் தவணையும், 7 லட்சத்து 79 ஆயிரத்து 542 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    2 லட்சத்து 84 ஆயிரத்து 74 பேருக்கு முதல் தவணையும், 3 லட்சத்து 93 ஆயிரத்து 395 பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. இந்தநிலையில் 11-வது கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

    மாவட்டத்தில் ஒரு நபர் கூட விடுபடாமல் கிராமங்களிலும், பேரூராட்சிகளிலும், நகராட்சி மற்றும் மாநகராட்சியிலும் தடுப்பூசி கிடைப்பதற்காக முகாம் அமைத்து விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மாவட்டத்தின் 645 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.  

    41 நடமாடும் முகாம்களும் அமைக்கப்பட்டு இருந்தது. இரவு 7 மணி வரை முகாம் நடக்கிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த, 2,580 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். 

    திருப்பூர் மாநகராட்சியின் 17 நகர் நல மையங்களுக்கு உட்பட்ட 138 இடங்களில் முகாம் நடைபெற்றது. இன்று நடைபெறும் முகாமில் 1லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 
    வாரிசுப்படி மு.க.அழகிரிதான் பொறுப்புக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் கொல்லைப்புறமாக பதவிக்கு வந்தவர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். #LokSabhaElections2019 #DindigulSreenivasan #MKStalin
    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் அ.தி.மு.க. கூட்டணி பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    ஜெயலலிதா இறந்ததும் அ.தி.மு.க.வும், ஆட்சியும் என்னவாகுமோ என்று நினைத்தனர். ஒருபக்கம் ஆட்சியை பிடிக்க மு.க.ஸ்டாலினும், மறுபக்கம் கட்சி மற்றும் ஆட்சியை கைப்பற்ற டி.டி.வி.தினகரனும் முயன்றனர்.

    தெய்வத்தின் அருள் 100 சதவீதம் கிடைத்து எடப்பாடி பழனிசாமி ஒப்பற்ற முதல்-அமைச்சராக, 2½ ஆண்டுகளாக பணியாற்றி சிங்கமாக திகழ்கிறார். மக்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்கிறார்.

    ஜெயலலிதா வழியில் அயராது உழைத்து மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்துகிறார். இவரை பார்த்து, மு.க.ஸ்டாலின் தரம்தாழ்ந்து பேசுகிறார். தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் பல நன்மைகளை செய்து வருகிறார். அதன்படி திண்டுக்கல் தொகுதிக்கு மட்டும் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துள்ளார். திண்டுக்கல்லில் முன்பு 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது.

    தற்போது காவிரியில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு தினமும் வழங்கப்படுகிறது. அதேபோல் அனைத்து தொகுதிகளிலும் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படாமல் முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். இவரை பார்த்து ஆள்வதற்கு தகுதி இருக்கிறதா? என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து படிப்படியாக உயர்ந்து முதல்-அமைச்சரானவர், எடப்பாடி பழனிசாமி.



    மு.க.ஸ்டாலினை பார்த்து நான் கேட்கிறேன். நீங்கள் யார்? உங்களுக்கும் தி.மு.க.வுக்கும் என்ன சம்பந்தம். வாரிசு அடிப்படையில் வரவேண்டும் என்றால் மு.க.அழகிரி தான் பதவிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், கொல்லைப்புறம் வழியாக நீங்கள் வந்து இருக்கிறீர்கள். காங்கிரஸ், தி.மு.க.வும் ஆட்சியில் இருந்த போது தான் அனைத்து ஊழலும் நடந்துள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி, கருணாநிதியின் ஆட்சி தான்.

    நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் நல்லாட்சி நடக்கிறது. அவரை அணுகி தமிழ்நாட்டுக்கு வேண்டிய அத்தனை நன்மைகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெறுகிறார். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வந்ததற்கு, முதல்-அமைச்சரின் சாமர்த்தியமான அணுகுமுறையே காரணம். கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களை நமக்கு கொடுத்ததால், இரட்டை இலையின் கோட்டையான திண்டுக்கல்லை பா.ம.க.வுக்கு கொடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #DindigulSreenivasan #MKStalin
    அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பாக இன்று மாலைக்குள் உரிய பதில் கிடைக்கும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். #MinisterThangamani

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோடை காலத்தில் எவ்வளவு மின்சார தட்டுப்பாடு இருந்தாலும் அதனை சமாளிக்கும் வகையில் மின்சார வாரியம் தயாராக உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு 15 ஆயிரத்து 689 மெகாவாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தது.

    இனி வரும் காலங்களில் 16 ஆயிரம் மெகா வாட் அளவிற்கு மின் நுகர்வு இருந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் மின் உற்பத்தி திருப்திகரமாக  உள்ளது. அதனால் கோடைகாலத்திலும் மின்வெட்டு என்பதே வராது.

    தமிழகத்தில் மதுக்கடை திறந்திருக்கும் நேரத்தில் 2 மணி நேரம் குறைப்பு என்று கோர்ட்டு கூறியுள்ளது. அரசின் கொள்கை முடிவு என்பதால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் கூட்டணியில் இதர கட்சிகள் (தே.மு.தி.க.) இணைவது தொடர்பாக இன்றுமாலைக்குள் உரிய பதில் கிடைத்துவிடும். மத்தியில் 37 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழகத்தில் நலன் கருதியே செயல்பட்டு வருகின்றனர்.

    இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு வாழ்வாதாரம் பெற்றுத்தரும் வகையில் போராடி நிரந்தர தீர்வாக காவிரி ஆணையத்தை பெற்றுத் தந்துள்ளனர்.

    அதேபோல எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளது. மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்தியது பாராளுமன்ற உறுப்பினர்கள் தான். அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றி உள்ளனர்.

    இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார். #MinisterThangamani

    அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். #MinisterKPAnbalagan #Parliamentelection

    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அம்மா வழியில், முதல்-அமைச்சர் மற்றும் துணை-முதல் அமைச்சர் இருவரும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர்.

    இதனை கண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி சென்றவர்கள், பாப்பிரெட்டிபட்டி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோர் அம.மு.க.வில் இருந்து விலகி, மீண்டும் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளோடு அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்துள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலை போலவே அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கூட்டணி குறித்து இன்னும் ஒரு சில கட்சிகள் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கூட்டணியை பொருத்தவரை முதல்வரும், துணை முதல்வரும்தான் முடிவு எடுப்பார்கள்.

    தமிழகத்தில் மக்களுக்கு நல்லாட்சி தரும் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterKPAnbalagan #Parliamentelection

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 49 தமிழக தொழிலாளர்களை அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், வளர்மதி, ராஜலட்சுமி ஆகியோர் வரவேற்று ஆறுதல் கூறினர்.

    சென்னை:

    கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் திருநெல்வேலி சங்கரன் கோயில் தாலுக்காவை சேர்ந்த 49 பேர் வெள்ளைத்துரை என்பவரின் தலைமையில் மலேசியாவில், மலேசியத் தமிழர் ஒருவர் நடத்தும் ஏஜெஎம் எனர்ஜி என்ற நிறுனத்தில் தொழிலாளர்களாக கேபிள் பதிக்கும் பணிக்கு சென்றனர்.

    அவர்கள் அங்கு சென்ற பிறகுதான் பணிபுரிய வேண்டிய இடம் காட்டுப்பகுதி என்று தெரிந்தது. அங்கு சரியான தங்குமிடம் இல்லை. உணவில்லை, பூச்சித் தொல்லை என பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். இந்த இன்னல்களை, நிறுவனத்தின் அதிபருக்கு தெரிவித்த போது, இவர்களை கேவலமாக திட்டியும், மிரட்டியும் உள்ளார்.

    இதனால் இந்த 49 பேரும் அங்கிருந்து தப்பி பட்டுகேவ் பகுதிக்கு சென்றனர். இதை அறிந்த மலேசிய அரசு அவர்களை மலாக்காவில் உள்ள அரசு இல்லத்தில் தங்க வைத்தது.

    49 தொழிலாளர்களின் நிலை அறிந்த தமிழக அரசு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் அவர்களை தமிழகம் அழைத்து வர உரிய நடவடிக்கை எடுத்தது.

    தமிழக அரசின் தொடர் நடவடிக்கை காரணமாக மலேசிய நிறுவனத்தின் மீது மலேசிய அரசால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் 49 தொழிலாளர்களும் புக்கிட் ஜெலின் இமிகிரேசன் டிடென்சன் முகாமுக்கு மாற்றப்பட்டார்கள். அங்கு 3 மாதங்கள் இருந்த பின் தமிழக அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக விடுவிக்கப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 49 பேரையும் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், வளர்மதி, ராஜலட்சுமி ஆகியோர் வரவேற்று ஆறுதல் கூறினர்.

    பின்னர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டு ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களை ஊருக்கு அழைத்து செல்வதற்கான வாகன வசதிக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது.

    ஆந்திர கடலோரத்தில் மீன்பிடித்த 200 தமிழக மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறைப்பிடித்துள்ளனர். அவர்களை விடுவிக்கக்கோரி அரசு சார்பில் அமைச்சர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். #TNfishermen
    திருவொற்றியூர்:

    ஆந்திர கடற்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், அதிக குதிரைத்திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட படகுகளை பயன்படுத்துவதாகவும், ஆந்திர மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி விடுவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆந்திர மாநில கடல் பகுதிக்கு கடந்த 16-ந் தேதி மீன்பிடிக்க சென்ற 27 விசைப்படகுகளையும், அதில் இருந்த 200 மீனவர்களையும் ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்தனர்.

    சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணாபுரம், துப்பிலிபாலம், மைப்பாடு உள்ளிட்ட 20 மீனவ கிராமங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    சிறைபிடிக்கப்பட்ட சென்னை மீனவர்களை விடுவிப்பதற்காக மீனவ சங்க நிர்வாகிகள் ஆந்திரா சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தமிழக மீனவர்களை விடுவிக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆந்திர மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனையும் அவர்கள் ஏற்கவில்லை.

    மேலும் தமிழக மீனவர்கள், ஆந்திர கடற்கரையோரம் மீன்பிடி தொழிலை மேற்கொள்ளக்கூடாது. அதிக குதிரை திறன்கொண்ட என்ஜின், இரட்டை மடி வலைகளை பயன்படுத்தக்கூடாது. 300 அடி தூரத்தில், ஆழ்கடலில் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும். இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்கும் வரை, மீனவர்களை விடு விக்க மாட்டோம் என்று ஆந்திர மீனவர்கள் கூறிவிட்டனர்.

    இந்த நிலையில், சென்னை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்பரிதி, உதவி இயக்குனர் வேலன் தலைமையில் தமிழக அதிகாரிகள், ஆந்திர மாநில மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் ஆந்திர மீனவர்களின் கோரிக்கைகளை ஏற்பதாகவும், சென்னை மீனவர்கள் விதிகளை மீறி மீன் பிடித்தொழில் மேற்கொண்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமரசம் பேசினர். அதன்பின்னரும் தமிழக மீனவர்களை விடுவிக்காமல் ஆந்திர மீனவர்கள் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. #TNfishermen

    இந்தாண்டு பொது தேர்வுக்கு புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #MinisterSengottaiyan

    கோபி:

    கோபி அருகே உள்ள காசிபாளையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    காசிபாளையம் பேரூராட்சியில் 300 நபர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதே பேரூராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப்பணிகள் நடை பெறுகிறது.

    கோபி குடிநீர் திட்டத்திற்கு சுமார் ரூ.53 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதானால் நாள் தோறும் தடையற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    கோபி நகராட்சி மத்தியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை அகற்றவேண்டும் என நீண்டநாட்களாக புகார் வந்துள்ளது. இதற்காக ரூ.62.20 லட்சம் செலவில் புதிய எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. விரைவில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெறும்.

    பள்ளி கல்வித்துறை சார்பில் 1.50 கோடி மரக் கன்றுகள் நட்டு மாணவர்களே பராமரிக்கும் திட்டம் விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

    8,9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசின் 25 சதவிகித பங்குத் தொகையுடன் மத்திய அரசு ஸ்மார்ட் மடிக்கனிணிகள் இந்த மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    இந்தாண்டு பொதுத் தேர்வுக்கு புதிதாக 750 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    கேள்வித்தாளில் எப்படி விடையளிக்க வேண்டும் என்றும் அதற்குறிய மதிப் பெண்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது என்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிகளிலும் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஓராண்டிற்கு பிறகு தமிழக கல்வித்துறை இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே வழிகாட்டியாக திகழும்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #MinisterSengottaiyan

    டிசம்பர் மாதம் வரை சென்னைக்கு தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சட்டசபையில் அமைச்சர் கூறியுள்ளார்.

    சென்னை:

    சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குடிநீர் வழங்குவது குறித்து ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-

    இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக குறைவான தண்ணீரே இருக்கிறது.

    கோடை காலத்தில் குடிநீர் வழங்குவதற்காக ரூ.157 கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இது யானைப்பசிக்கு சோளப்பொரி வழங்குவது போன்றது.

    சென்னையில் மட்டு மல்லாமல் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 110-விதி கீழ் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது.

    அந்த திட்டங்கள் என்ன ஆனது? வருகிற கோடை காலத்தில் குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே கருத்தை காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி வலியுறுத்தினார்.

    இதற்கு பதில் அளித்து அமைச்சர் வேலுமணி கூறியதாவது:-

    அம்மாவின் இந்த அரசு குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 142 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை மிக குறைவாக பெய்து இருக்கிறது. எனவே மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக பணிகளை கண்காணிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தி குடிநீர் வழங்குவதற்கான பணிகளை தூரிதப்படுத்தி வருகிறார்.

    சென்னைக்கு 22 கல்குவாரிகளில் இருந்து தினமும் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வீராணம் ஏரிக்கு மீண்டும் மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பல்வேறு நீர்நிலைகளில் இருந்தும், ஆழ்துளை கிணறுகள் மூலமும், விவசாய கிணறுகள் மூலமும் குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    கிருஷ்ணா நதிநீர் கடந்த 12-ந் தேதி முதல் மீண்டும் கொண்டு வந்து இருக்கிறோம். குழாய் தண்ணீர் செல்லாத இடங்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. தேவைப்படும் இடத்தில் குடிநீர் தொட்டிகளும் அமைக்கப்படுகின்றன.

    சென்னை நகருக்கு வருகிற டிசம்பர் மாதம் வரை தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    இதே போல் மற்ற மாவட்டங்களிலும் குடிநீர் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

    கடல் நீர் குடிநீராக்கும் 5 திட்டங்களில் இரண்டு திட்டங்களை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கடன் உதவியுடன் இது செயல்படுத்த இருக்கிறது. மற்ற திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரில் அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட விருதுநகரை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    விருதுநகரை சேர்ந்தவர்கள் மாரிராஜ், பெரியசாமி. இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக பணம் வசூல் செய்தனர்.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தாங்கள் உதவியாளராக வேலை பார்ப்பதாகவும், எனவே அரசு வேலை எளிதாக வாங்கிவிடலாம் என்றும் பணம் வசூலித்தனர். அரசு வேலை வி‌ஷயமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.

    இதை நம்பி அவரிடம் பலர் பணம் கொடுத்தனர். ஆனால் பணம் கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் அரசு வேலை வாங்கிக் கொடுக்கவில்லை.

    இந்தநிலையில் மாரி ராஜும், பெரியசாமியும் மீண்டும் அபிராமபுரம் பகுதிக்கு வந்தனர். இதே போல் பணம் வசூலில் ஈடுபட்டனர். ஏற்கனவே பணம் கொடுத்தவர்கள் இதை அறிந்து அந்த பகுதியில் திரண்டனர். அவர்கள் மாரிராஜ், பெரியசாமியிடம் அரசு வேலை தொடர்பாக கேட்டனர். அப்போது இருவரும் மழுப்பலான பதிலை தெரிவித்தனர்.

    திடீரென்று அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அதில் மாரிராஜை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பெரிய சாமி அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    பிடிபட்ட மாரிராஜை பொதுமக்கள் அபிராமபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

    அரசு வேலை வாங்கித் தருவதாக 2 பேரும் லட்சக்கணக்கில் மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் அபிராமபுரம் பகுதியில் மட்டும்தான் மோசடியில் ஈடுபட்டார்களா அல்லது தங்கள் சொந்த ஊரான விருதுநகர் பகுதியிலும் மோசடியில் ஈடுபட்டார்களா என்று விசாரணை நடக்கிறது.

    தப்பி ஓடிய பெரிய சாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    ×