search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95993"

    • பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள்.

    பாட்னா:

    அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போட்டியிட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் மேற்கொண்டு வருகிறார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரி தலைவர்கள், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி உள்ளார்.

    இந்த பேச்சுவார்த்தையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லவும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்தவும் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இந்த கூட்டத்தை பீகாரில் நடத்த மம்தா பானர்ஜி பரிந்துரைத்து இருந்தார். அதன்படி பீகார் தலைநகர் பாட்னாவில் வருகிற 12-ந் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் 12-ந் தேதி இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

    தற்போது இந்த கூட்டம் 23-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பீகார் துணை முதல்-மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இதை அறிவித்தார்.

    நிதிஷ்குமாருடன் இணைந்து பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறுகையில், 'காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளனர்' என தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின்

    மு.க.ஸ்டாலின்

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய வியூகங்கள் குறித்து இந்த தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என தெரிகிறது.

    முன்னதாக எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனை கூட்டத்தில் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும் எனவும், பிரதிநிதிகளை அனுப்புவதை ஏற்க முடியாது என்றும் நிதிஷ்குமார் கூறியிருந்தார்.

    அதன்படி இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களே நேரடியாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.103 கோடியே 62 லட்சத்தை செலவு செய்துள்ளது.
    • இமாசலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ரூ.27 கோடியே 2 லட்சத்தை செலவு செய்திருக்கிறது.

    புதுடெல்லி :

    குஜராத் மாநிலத்தில் 182 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது.

    இமாசலபிரதேச மாநிலத்தில் 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ.க.விடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி செலவு செய்த தொகை பற்றிய விவரங்களை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்தது.

    அதன்படி, குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.103 கோடியே 62 லட்சத்தை செலவு செய்துள்ளது. அதே நேரத்தில் இமாசலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ரூ.27 கோடியே 2 லட்சத்தை செலவு செய்திருக்கிறது. ஆக, இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ரூ.130 கோடி செலவு செய்துள்ளது.

    இமாசலபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. ரூ.49 கோடியே 69 லட்சத்தை செலவு செய்ததாக கணக்கு காட்டி உள்ளது.

    • புதிய நிபந்தனையால் பெங்களூரு மாநிலம் முழுவதும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
    • கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது.

    பெங்களூரு:

    கர்நாடக அரசு, இலவச மின்சார திட்டத்திற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது. இதில் விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனையால் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு திட்ட சலுகை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக அரசு சமீபத்தில், அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் மாதம் தலா 200 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும் என்றும், இந்த திட்டம் ஜூலை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகவும் அறிவித்தது. வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் இலவச மின்சார திட்டம் பொருந்தும் என்று துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறினார். ஆனால் தற்போது ஒருவரின் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அதில் ஒரு இணைப்புக்கு மட்டுமே இலவச மின்சார திட்டம் பொருந்தும் என்று அரசு கூறியுள்ளது.

    இந்த புதிய நிபந்தனையால் பெங்களூரு மாநிலம் முழுவதும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை வீட்டில் வசிப்போர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த திட்டத்திற்கான அரசாரணையை மாநில அரசு பிறப்பித்துள்ளது.

    அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-

    கர்நாடகத்தில் வீடுகளுக்கு மாதம் தலா 200 யூனிட் வரை இலவச மின்சார திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் வணிக நோக்கங்களுக்கு மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பொருந்தாது. மாதந்தோறும் மீட்டர் அளவிடும்போது, மொத்த மின் பயன்பாட்டிற்கு கட்டணத்தை கணக்கிட வேண்டும்.

    ரசீதில் தகுதியான மின் பயன்பாட்டிற்கான தொகையை கழித்துவிட்டு அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை கணக்கிட்டு மின் நுகர்வோருக்கு வழங்க வேண்டும்.

    கூடுதலாக பயன்படுத்திய மின்சாரத்திற்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதுமானது. சேவா சிந்து இணையதளம் அனுமதிக்கப்பட்ட மின் அளவை விட நுகர்வோர் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தி இருந்தால், அத்தகையோருக்கு பூஜ்ஜியம் என்று குறிப்பிட்ட ரசீது வழங்க வேண்டும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயனை பெற விரும்புகிறவர்கள் சேவா சிந்து இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மின் நுகர்வோர் தங்களின் மின் நுகர்வோர் அடையாள எண், கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள பாக்கிய ஜோதி, குடீர ஜோதி, அம்ருத் ஜோதி திட்ட மின் இணைப்புகள் இந்த திட்டத்துடன் இணைக்க வேண்டும்.

    மின் கட்டண பாக்கியை வருகிற 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும். அதற்குள் பாக்கியை செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின் நுகர்வோர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் இருந்தால், அவற்றில் ஒரு இணைப்பு மட்டுமே இந்த திட்டத்தின் பயனை பெற முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருகிற 18-ந் தேதி ராகுல் காந்தி பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • ஆலோசனை கூட்டமானது வட்டார தலைவர் ஹரி நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே ராம் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பாப்பாக்குடி வட்டார தலைவர் ஹரி நாராயணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆலங்குளத்தில் வருகிற 18-ந் தேதி ராகுல் காந்தி பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும், இதில் முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, தனுஷ்கோடி ஆதித்தன், வேல்துரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் பாப்பாக்குடி நகர தலைவர் ஆறுமுக பூபதி, திலகராஜ், தங்கராஜ், செல்வராஜ், பால்பாண்டி, ஜெயபால், பரமசிவம், புலவர் சுரேஷ்ரேவதி, கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
    • ஆங்கிலேயர்களின் தவறால் ரெயில் விபத்துக்கு உள்ளானது என காங்கிரஸ் சொல்லவில்லை என்றார்.

    நியூயார்க்:

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி நியூயார்க்கில் உள்ள இந்திய வம்சாவளியினரை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்த ரெயில் விபத்து எனக்கு நினைவிருக்கிறது. ஆங்கிலேயர்களின் தவறால் ரெயில் விபத்துக்கு உள்ளானது என்று காங்கிரஸ் எழுந்து சொல்லவில்லை.

    காங்கிரஸ் மந்திரி, "இது என் பொறுப்பு, நான் ராஜினாமா செய்கிறேன்" என்று கூறினார். எனவே இதுவே எங்கள் வீட்டில் உள்ள பிரச்சனை, நாங்கள் சாக்குப்போக்குகளை கூறுகிறோம் , யதார்த்தத்தை ஏற்கவில்லை.

    நீங்கள் அவர்களிடம் (பாஜக) எதையும் கேளுங்கள், அவர்கள் திரும்பிப் பார்த்து பழியைக் கடந்து செல்வார்கள். ரயில் விபத்து (ஒடிசா) எப்படி நடந்தது என்று கேளுங்கள், 50 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் என்ன செய்தது என்று பேசுவார்கள் என தெரிவித்தார்.

    • கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையா இருந்தார்.
    • காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பாக 5 இலவச திட்டங்களை அறிவித்திருந்தனர்.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலுக்கு முன்பாக 5 இலவச திட்டங்களை அறிவித்திருந்தனர். அனைவருக்கும் இலவசம் என வாக்குறுதி அளித்தார்கள். தற்போது அந்த இலவச திட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். காங்கிரசின் இந்த இலவச திட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் ஏமாற்று வேலை பற்றி அறிந்து கொள்ள மக்களுக்கு நீண்ட நாட்கள் தேவைப்படாது.

    காங்கிரசின் 5 இலவச திட்டங்கள் பற்றி பேசவோ, விமர்சனம் செய்யவோ எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளுக்கும், தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு இலவசங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதும் வேதனை அளிக்கிறது.

    கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக சித்தராமையா இருந்தார். அவரது தலைமையில் தான் ஆட்சி நடைபெற்றது. அந்த சந்தர்ப்பத்தில் மாநிலத்தில் அரசு பணி இடங்கள் 2¾ லட்சத்திற்கும் மேல் காலியாக இருந்தது. அப்போது காலியாக இருந்த அரசு பணி இடங்களை நிரப்பவோ, வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை வழங்கவோ சித்தராமையா முன்வரவில்லை.

    சித்தராமையா ஆட்சியில் பட்டதாரிகளுக்கு வேலை வழங்காமல், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தனர். பட்டதாரிகளிடம் இருந்து வாக்குகளை பெற்றுவிட்டு, அரசு துறைகளில் உள்ள 2¾ லட்சம் காலி பணி இடங்களை நிரப்பாமல் தற்போது ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறார்கள். அதற்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். 24 மாதம் மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இலவச திட்டங்களுக்காக விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சாலை சீரமைப்பு கோரி அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • சாலை சீரமைக்கும் பணி 40 நாட்களுக்குள் தொட ங்கப்படும்

    விருதுநகர்

    சாத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு முதல் டவுன் போலீஸ் நிலையம் முன்பு வரை உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் வாழை மரக்கன்றுகள் நடும் போராட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை 10 நாட்களுக்குள் முடிவு செய்து நெடுஞ்சாலை துறையிடம் தடையின்மை சான்று வழங்கப்படும் என்று குடிநீர் வடிகால் வாரியம் சாத்தூர் உதவி நிர்வாக பொறியாளர் அவர்கள் தெரிவித்தார்.

    மேற்படி தடையின்மைச் சான்று கிடைக்கப்பெற்று பணி தொடங்கும் வரை சாலையில் தூசி பறக்காமல் இருப்பதற்கு காலை மாலை இரு நேரங்களிலும் சாலை யில் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக் கொண்ட வருவாய் வட்டாட்சியர், அது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர், சாத்தூர் நகர் சார்பு ஆய்வா ளர், சாத்தூர் குறுவட்ட வருவாய் ஆய்வா ளர் மற்றும் சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகி யோர் கலந்து ெகாண்டனர்.

    விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன், சாத்தூர் கிழக்கு வட்டாரத் தலைவர் சுப்பையா, மேற்கு வட்டார தலைவர் கும்கி கார்த்திக், மாவட்டச் செயலாளர் சந்திரன், மேற்கு வட்டார துணைத் தலைவர் முத்துவேல், மேற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் மகேசுவரன், தெற்கு வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சாலை சீரமைக்கும் பணி 40 நாட்களுக்குள் தொட ங்கப்படும் என்று வருவாய் வட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை தற்காலி கமாக நிறுத்தி வைக்கப்படுவதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • வரும் 11-ந்தேதி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
    • ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும்.

    கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கை முக்கிய காரணமாக இருந்தது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதும் காங்கிரசின் வாக்குறுதி.

    அதன்படி, வரும் 11-ந்தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

    மேலும், ஜூலை 1-ந்தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும். ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.

    • ராஜஸ்தானில் பாஜக சார்பில் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து நேற்று ராஜஸ்தானில் பாஜக சார்பில் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

    ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர், "காங்கிரஸ் அளிக்கும் புதிய வாக்குறுதிகளில் சூத்திரம் உள்ளது. அவர்களின் உத்தரவாதங்கள் நாட்டை திவாலாக தான் ஆக்கும்" என்றார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், " பிரதமர் மோடி பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை அள்ளி வழங்குவார். ஆனால், ஏழை எளிய மக்களுக்கு நாங்கள் வாக்குறுதிகள் அளித்தால் அது பிரதமருக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது" என்றார்.

    • மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.
    • காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    டெல்லியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என்று காங்கிரஸ் போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    பா.ஜனதா எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பிரிக்பூஷன் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்ட்ம தீவிரம் அடைந்து வருகிறது.

    இந்த விஷயத்தில் மத்திய பெண்கள் நல மேம்பாட்டுத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் விதமாகவே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை காணவில்லை என போஸ்டர் வெளியிட்டு உள்ளது.

    • கலிபோர்னியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை சேர்ந்த அமிடி மற்றும் ஷான் சங்கரன் ஆகியோருடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
    • தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பில் பொருத்தமான விதிமுறைகள் இருக்க வேண்டும்.

    கலிபோர்னியா:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 10 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று அவர் சான்பிரான்சிஸ்கோ நகரில் சாண்டா கிளாராவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

    இதன் தொடர்ச்சியாக கலிபோர்னியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை சேர்ந்த அமிடி மற்றும் ஷான் சங்கரன் ஆகியோருடன் கலந்துரையாடினார். அவர்களுடன் செயற்கை நுண்ணறிவின் பல்வேறு அம்சங்கள் குறித்து நிபுணர்கள் குழுவின் விவாதத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டார். மனித குலத்தின் மீதான அவற்றின் தாக்கங்கள் மற்றும் அதன் ஆளுகை, சமூக நல நடவடிக்கைகள் மற்றும் தவறான தகவல் போன்ற சிக்கல்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது

    இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    தொழில்நுட்ப பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பில் பொருத்தமான விதிமுறைகள் இருக்க வேண்டும். எனது ஐ போன் கூட ஒட்டுக்கேட்கப்படுவது எனக்கு தெரியும். (அப்போது அவர் தனது ஐ போனில் மிஸ்டர் மோடி என கூறினார்) அதை பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு அரசு உங்கள் தொலைபேசியை ஒட்டுக்கேட்க வேண்டும் என நினைத்தால் யாரும் உங்களை தடுக்க முடியாது. இது எனது உணர்வு. தொலைபேசியை ஒட்டு கேட்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தால் அதை ஒன்றும் செய்யமுடியாது. நான் எதை செய்ய நினைத்தாலும், வேலை செய்தாலும் அது அரசுக்கு தெரியும். அது நாட்டின் நன்மைக்காகவே இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இது தொடர்பாக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷான் சங்கரன் கூறும் போது சமீபத்திய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தது தன்னை வெகுவாக கவர்ந்திழுத்தது என கூறினார்.

    • எதிர்க்கட்சியினரும், ராகுல் காந்தியும் இந்தியாவை அந்நிய மண்ணில் அடித்து நொறுக்குவதில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள்.
    • தாய்நாட்டை பழித்த ராகுல் காந்தியை மக்கள் அடித்து விரட்டும் காலம் விரைவில் வரும்.

    சென்னை:

    அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் காந்தி அங்குள்ள பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் போது பிரதமர் மோடி பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார்.

    ராகுலின் இந்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அந்நிய மண்ணில் சென்று தாய் நாட்டின் புகழை கெடுப்பதா என்று குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இது தொடர்பாக பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    எதிர்க்கட்சியினரும், ராகுல் காந்தியும் இந்தியாவை அந்நிய மண்ணில் அடித்து நொறுக்குவதில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். இது அவர்கள் பார்க்க படிக்க சுவையாக இருக்கலாம். ஆனால் மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தாய்நாட்டை பழித்த ராகுல் காந்தியை மக்கள் அடித்து விரட்டும் காலம் விரைவில் வரும். பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ் இந்தியா வளர்ந்து வருகிறது. உலகில் மிக வேகமாக வளரும் நாடாக தனது சிறகுகளை விரித்து உயர பறக்கிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×