search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98196"

    • 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.
    • ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    திருப்பதிக்கு தொலைதூரத்தில் இருந்து வர முடியாத பக்தர்களுக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.

    இதுவரை ஆந்திராவுக்கு வெளியே சென்னை, டெல்லி, ஐதராபாத், புவனேஸ்வர் கன்னியாகுமரி, ஜம்மு ஆகிய நகரங்களில் 6 கோவில்களை தேவஸ்தான நிர்வாகம் கட்டியுள்ளது.

    ஜம்மு பகுதி மஜின் கிராமத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டது.

    இதற்கு தேவையான 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.

    இங்கு ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்தார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 9.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று மாலை இந்த கோவிலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் 7-வது ஏழுமலையான் கோவில் கட்ட நேற்று காலை பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நவிமும்பையில் கோவில் கட்டுவதற்காக ரூ.500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக மகாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது. 

    • ஜம்மு பகுதி மஜின் கிராமத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டது.
    • ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நடந்துள்ளது.

    திருப்பதிக்கு தொலைதூரத்தில் இருந்து வர முடியாத பக்தர்களுக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.

    இதுவரை ஆந்திராவுக்கு வெளியே சென்னை, டெல்லி, ஐதராபாத், புவனேஸ்வர் கன்னியாகுமரி, ஜம்மு ஆகிய நகரங்களில் 6 கோவில்களை தேவஸ்தான நிர்வாகம் கட்டியுள்ளது.

    ஜம்மு பகுதி மஜின் கிராமத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டது.

    இதற்கு தேவையான 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.

    இங்கு ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் 7-வது ஏழுமலையான் கோவில் கட்ட நேற்று காலை பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நவிமும்பையில் கோவில் கட்டுவதற்காக ரூ.500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக மகாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது.

    • 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • சன்னதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் வருகிற 25-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடாக பாலாலய விழா நேற்று தொடங்கியது.

    அதன்படி ஜலகண்டேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் உள்பட மூலவ மூர்த்திகளுக்கு பாலாலயம் நடந்தது.

    இதையொட்டி நேற்று முதல் மூலவர் மற்றும் மற்ற சன்னதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் முடியும் வரை அத்தி மரத்தாலான மூர்த்திகளுக்கு அனைத்து பூஜைகளும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • இன்று திருக்கல்யாணமும், சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
    • விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபஆராதனையும் நடைபெற உள்ளது.

    ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ராமநாதபுரம் சமஸ்தான மற்றும் தேவஸ்தான தர்மகர்த்தா ராணி பிரம்ம ராஜேஸ்வரி நாச்சியாருக்கு பாத்தியப்பட்ட உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் உள்ள வெயில் உகந்த விநாயகரை ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் வழியில் பூஜித்து சென்றதாக ராமாயண புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மிக பழமையான இந்த கோவில் கும்பாபிஷேகம் இன்று(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று 4-ம் கால யாக பூஜையும், பூர்ணகுதி, தீபாராதனையும், 5-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 7.45 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், கோபூஜையும், நாடிசந்தானமும், காலை 9.45 மணிக்கு மகாபூர்ணகுதி, தீபாராதனையும், காலை 10.45-க்கு மேல் 11.45-க்குள் விநாயகருக்கு கும்பாபிஷேக விழாவும் நடைபெற உள்ளது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விநாயகருக்கு சித்தி, புத்தி ஆகிய தெய்வங்களுடன் திருக்கல்யாணமும், சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து உலக நன்மைக்காக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபஆராதனையும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை காண சுற்று வட்டார பக்தர்களும், ராமநாதபுரம் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொள்ள உள்ளனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், அஷ்டத் பலி, புற்று மண் எடுத்தல், காப்பு கட்டுதல் ஆகியவை நடந்தது.
    • நாளை முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு மதுரா துண்டுக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது அழகுமுத்து மாரியம்மன் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கணபதி, முருகன், தட்சணாமூர்த்தி, நொண்டிவீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான யாக சாலையில் நேற்று முன்தினம் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், அஷ்டத் பலி, புற்று மண் எடுத்தல், காப்பு கட்டுதல் ஆகியவை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை அனுக்ஞை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் நடந்தது. மாலைஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம், பஞ்சசூத்ர பாராயணம், நவக்கிரஹ பூஜை. நாடி சந்தானம், திரவிய ஹோமம், தேவாரம் திருவாசகம், மந்தாபுஷ்பம், பூர்ணாஹூதி, மஹாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு கோ பூஜை, லஷ்மி பூஜை, தன பூஜை, சாமிக்கு காப்பு கட்டுதல், தத்துவார்ச்சனை ரக்ஷாபந்தனம், ஸ்பர்ணாஹூதி, யாத்ரா தானம், தீபாராதனை ஆகியவை நடைபெற்று .

    10 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்கஅஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி எனவிண் அதிர கோஷம் எழுப்பினர். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.,கன்டோன்மென்ட் சண்முகம், சத்யா பன்னீர்செல்வம், பா.ம.க. மாவட்ட தலைவர் வடக்குத்து ஜெகன், வன்னியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் குபேரன், சாத்திப்பட்டு மதுராவில் உள்ள 16 கிராம மக்கள் ஊர் முக்கியஸ்தர்கள், கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர், இளைஞர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. இரவு வீதி உலா காட்சி நடக்கிறது. நாளை முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சாத்திப்பட்டு துண்டுகாடு கிராமவாசிகள், விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துண்டு காடு கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்காதை முன்னிட்டு காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • இரண்டு பிரம்மோற்சவ விழா மற்றும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.
    • மகா சாந்தி திருமஞ்சனம் ஹோமம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் வருடம் தோறும் இரண்டு பிரம்மோற்சவ விழா மற்றும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பாலாலயம் கடந்த 5-ந்தேதி பாலாலயம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து பகவத் பிரார்த்தனை புண்ணியாவாஜனம், ஹோமம், பூர்ணாஹதி மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டன. நேற்று 6-ந் தேதி காலை புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், ஹோமம், பூர்ணா ஹதி, மாலை மகா சாந்தி ஹோமம், மகா சாந்தி திருமஞ்சனம் ஹோமம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது. இறுதி நாளான இன்று அக்னி பிரவேசம், மகா பூர்ணாஹதி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். இதனைத் தொடர்ந்து பாலாலயம் நடைபெற்று கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • 13 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
    • கோவிலில் உற்சவருக்கு மட்டும் வழிபாடு நடைபெற உள்ளது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் அடுத்த ஒப்பிலியப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

    அதற்காக ரூ. 3 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி கோவில் விமான பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.

    இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் மூலவர் உள்ளிட்ட மற்ற சன்னதிகளுக்கு திருப்பணிகள் மேற்கொள்வதற்காக இன்று காலை மூலவர் பாலாலயம் நடைபெற்றது.

    இதனால் கோவிலில் உற்சவருக்கு மட்டும் வழிபாடு

    நடைபெற உள்ளது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவில் உதவி ஆணையர் சாந்தா கூறுகையில்:-

    ஒப்பிலியப்பன் கோவிலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    அதற்காக திருப்பணிகள் கடந்த ஆண்டில் விமான பாலாலயம் மேற்கொள்ளப்பட்டு,

    ராஜகோபுரம், மூலவர் விமானம், அர்த்தமண்டபம், புதிய கொடி

    மரம், திருக்கண்ணாடி பள்ளியறை உள்ளிட்ட 90 சதவீத

    பணிகள் தற்போது முடிவ டைந்துள்ளன. வருகிற 29-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்றார்.

    • சடையாண்டி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பூசாரி தவமணி, கிராம சேர்வை வகையறாக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    சோழவந்தான்

    விக்கிரமங்கலம் அருகே எட்டுமூலைபட்டி கிருஷ்ணாபுரத்தில் உள்ள சடையாண்டி, கன்னிமார் கோயிலில் கும்பாபிஷேக விழா பூசாரி பெரியகருப்பன் தலைமையில், சிவாச்சாரியார் ஹரிஹரசந்தோஷ் முன்னிலையில் விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கி 3 கால பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து மூலவர் நடு கல்லிற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கன்னிமார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். மூலவருக்கு 12 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூசாரி தவமணி, கிராம சேர்வை வகையறாக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • 6-ந்தேதி இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.
    • அபிஷேகமும், சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ராமநாதபுரம் சமஸ்தானம் மற்றும் தேவஸ்தான தர்மகர்த்தா ராணி பிரம்ம கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியாருக்கு பாத்தியப்பட்ட உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவில் உள்ளது. இக்ேகாவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை (திங்கட்கிழமை) காலை 9.15 மணி முதல் விக்னேசுவர பூஜையும் கணபதி ஹோமமும் வாஸ்து சாந்தி பூஜையும் நடைபெற உள்ளது. பின்னர் மாலை மிருத்சங்கிரஹணஙம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம் கலாகா்ஷணமும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து இரவு முதற்கால யாக பூஜையும், பூர்ணாகுதி தீபாராதனையும் நடைபெறும். மறுநாள் 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை இரண்டாம் கால யாக பூஜையும், பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கிறது. 7-ந் தேதி காலை நான்காம் கால யாக பூஜையும் மாலை ஐந்தாம் கால யாக பூஜையும் நடைபெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து, 8-ந்தேதி (வியாழக்கிழமை) காலை ஆறாம் கால யாக பூஜையும் கோ பூஜையும் நடைபெற்று காலை 10.45-க்கு மேல் 11.45-க்கும் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. மேலும் மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறும். அபிஷேகமும், சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • திருமேனி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • செயலாளர் நாகப்பன், பொருளாளர் கருப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயல்புதூர் கிராமத்தில் உள்ள திருமேனி கருப்பர் மின்னஞ்செட்டி காளியாத்தாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக மூன்று நாட்கள் 4 கால பூஜைகள் நடந்தது. இதில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோபூஜை, லட்சுமி பூஜை போன்ற பல்வேறு பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து பூர்ணாகுதி மற்றும் தீப ஆராதனை நடந்தது. பின்னர் நமசிவாய சிவாச்சாரியார் குழுவினர் தலைமையில் யாகசாலையில் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி விமானத்தில் ஏறி சென்று கும்பத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேலச்சுவபுரி, தேனிப்பட்டி, கீழசேவல்பட்டி, ஓ.சிறுவயல், நாச்சியாபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த வைரவன் கோவில் பிள்ளையார்பட்டி வகுப்பு நகரத்தார்கள் மற்றும் விழா குழு நிர்வாகிகள் தலைவர் நாகப்பன், செயலாளர் நாகப்பன், பொருளாளர் கருப்பையா ஆகியோர் செய்திருந்தனர்.

    • வாழவந்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • நெல்மடூர் கிராம மக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் செய்திருந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே நெல்மடூர் கிராமத்தில் ஸ்ரீ வாழவந்தாள் அம்மன், வைரவர் சுவாமி கோவில் உள்ளது. நேற்று இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா 2 தினங்களுக்கு முன் தொடங்கியது. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக் கிரக ஹோமம், கோ பூஜை மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து முதலாம் கால யாகபூஜை, 2-ம் கால யாக பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் திரவிய ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதன்பின் பக்தர்களுக்கு

    அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நெல்மடூர் கிராம மக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் செய்திருந்தனர்.

    • பாலமேடு அருகே உள்ள தொட்டிச்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • அன்னதானம் வழங்கப்பட்டது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள 66.மேட்டுப்பட்டி உட்கடை பள்ளபட்டி கிராமத்தில் உள்ள தொட்டிச்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கருப்பையா பூசாரி, ஒய்யன் பங்காளிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×