search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளச்சாராயம்"

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து 24 பேரை கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
    • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் பலியானார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷ சமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர்.

    இதில் 67 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். 161 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். கருணாபுரத்தை சேர்ந்த மோகன் (50) மட்டும் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதனால் கள்ளச்சாராயம் குடித்து பலியானர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்தது.

    கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து 24 பேரை கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் கொண்டு வந்ததும் தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு வந்த வடமாநிலத்தை சேர்ந்த சில வாலிபர்கள் கள்ளச்சாரயம் கடத்தி வந்ததாக கூடங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட சுமார் 20 பேரை சோதனை செய்தனர். அப்போது அதில் 5 பேரிடம் சுமார் 5 லிட்டர் கள்ளச்சாரயம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    உடனே அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜிக்குமார்(வயது 22), சத்போந்தர் ராம்(21), அவிநாத்குமார்(33), சந்தன்குமார்(29), நாகேந்திர ராம்(33) ஆகியோர் என்பதும், ஏற்கனவே சிலர் இதேபோல் சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • சிலருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம், மாதவச்சேரி, சேஷச முத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 19- தேதி கள்ளச்சாராயம் குடித்ததால் 229 பேர் பாதிக்கப்பட்டனர். 67 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிலருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் 161 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், கள்ளச்சாராய விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார், சாராயம் விற்பனை செய்தது, மெத்தனால் வினியோகம் செய்தது தொடர்பாக 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடந்தது. கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் உயிரிழந்தவர்களின் தொழில் என்ன? எத்தனை நாட்களாக சாராயம் குடித்தார்கள்? இதற்கு முன்பு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா? கள்ளச்சாராயம் குடித்ததற்கு பிறகு என்ன நடந்தது? குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, அவர்கள் செய்யும் வேலை, குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டார்கள். இதற்கு அவர்கள் கூறிய பதில்கள் பதிவு செய்துகொள்ளப்பட்டது. இதில் நேற்று 32 குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து மீதமுள்ளவர்களிடம் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்பட்டது.

    • 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
    • செந்தில், ஏழுமலை, ரவி ஆகியோரின் நீதிமன்ற காவல் முடிவடைய இருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 19-ந்தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் 161 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து இதுவரை 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் கைதான சென்னையைசேர்ந்த கவுதம் சந்த், பன்ஷிலால், சிவக்குமார், கருணாபுரத்தைசேர்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, சின்னத்துரை, ஜோசப், கதிரவன், கண்ணன், மாதேஷ், சக்திவேல், சடையன், செந்தில், ஏழுமலை, ரவி ஆகியோரின் நீதிமன்ற காவல், நேற்றுடன் முடிவடைய இருந்தது.

    இதையடுத்து இவர்கள் 15 பேரையும் காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கவுதம்சந்த் உள்பட 15 பேருக்கும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் எதிரொலி: 78 போலீசார் பணியிட மாற்றம் - இந்த லிங்கை கிளிக் செய்யவும்





    • மேலும் சிலரை காவல் துறை அதிரடி கைது செய்தது.
    • அமைச்சர் இல்லத்திற்கு அருகில் வைத்து படுகொலை.

    தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் அதைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் படுகொலை சம்பவம் என அடுத்தடுத்து படுபயங்கர சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில மாதங்கள், வாரங்கள் என பின்னோக்கி பார்த்தால் பல சம்பவங்கள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, ஒழுங்காகத் தான் இருக்கிறதா என்ற கேள்வியை கண் முன் கொண்டுவரும்.

    மிக சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வைத்து படுகொலை செய்யப்படுகிறார். படுகொலை முடிந்து ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு தொடங்கும் முன் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குகள் பதியப்பட்டன. பிறகு, கொன்றவர்கள் என்று சிலர் சரண் அடைய, மேலும் சிலரை காவல் துறை அதிரடி கைது செய்தது.


     

    இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, காவல் துறை மாற்றங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சரி செய்யும் என்று சென்னை நகருக்கு புதிய ஆணையர் நியமிக்கப்பட்டார். கூடவே காவல் துறையில் சில தலைமை அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டனர். இந்த மாற்றங்களுடன், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காவல் துறை மற்றும் அரசு துறையில் தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    தொடர்ந்து, ரவுடிகளை தொடர்ந்து கண்காணிப்போம், ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்படுவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் குறையும் என்ற தொனியில் சில அறிவிப்புகள் வெளியாகின. இதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்ற மக்கள் நம்ப துவங்கினர்.

    ஆம்ஸ்ட்ராங்க படுகொலை சம்பவத்திற்கு முன் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் அவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வைத்து எரித்து கொல்லப்படுகிறார். இவரது வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், இந்த கொலை பின்னணியில் இருப்பது யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.


     

    இந்நிலையில், நேற்று அதிகாலை (ஜூலை 16) மதுரையில் திமுக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இல்லத்திற்கு அருகில் வைத்து நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணைச்செயலாளராக இருந்த பாலசுப்பிரமணியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சிறார் உள்பட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

    ஒருபுறம் குற்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் போதிலும், அதிகாரிகள் மாற்றம், ஆலோசனை கூட்டம் என அரசு நடவடிக்கை ஒருபுறமும் அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் நேற்று (ஜூலை 16) ஒரே நாளில் மாவட்ட கலெக்டர்கள் உள்பட 65 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

     


    இவர்களில் சிலர் அவர்களாகவே பணியிட மாற்றம் கோரியதாகவும், சிலர் கட்டாயமாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மாற்றப்பட்ட அரசு அதிகாரிகளில் பலர் உயர் பொறுப்புகளை வகித்தவர்கள் ஆவர். உள்துறை செயலாளர்கள், ஆணையர்கள் என மாநிலம் முழுக்க பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

    காவல் துறை மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் மாற்றத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் மாநிலம் முழுக்க இதர நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளை களைய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயங்களில் மக்களுக்கு நிம்மதி பெருமூச்சு கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். 

    • தமிழக-புதுவை மாநில எல்லையோர பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • புதுவை மாநில குவார்ட்டர், புல் பாட்டிலகளும், சாராயமும் இருந்தது.

    வானூர்:

    புதுவை மாநிலத்தில் இருந்து தமிழக எல்லையோர பகுதிகளுக்கு மதுபாட்டில் கடத்தி வந்து விற்கப்படுகிறது. இதனை தடுக்க தமிழக-புதுவை மாநில எல்லையோர பகுதியில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார், தென்கோடிப்பாக்கத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாக்கு மூட்டையுடன் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    அவரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். இதில் புதுவை மாநில குவார்ட்டர், புல் பாட்டிலகளும், சாராயமும் இருந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் புதுவை மாநிலம் உருளையன்பேட்டையை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 130 குவார்ட்டர் பாட்டில், 4 புல் பாட்டில் மற்றும் 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரமாகும்.

    • தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் தங்கமாரிமுத்து புகார் அளித்தார்.
    • கள்ளச்சாராய விற்பனையிலும் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள மலை கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. குறிப்பாக திருமணம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் அந்த குடும்பத்தினரே சாராயம் வாங்கி சப்ளை செய்து வந்ததாகவும் புகார்கள் வந்தன.

    கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் சாராயம் காய்ச்சுபவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக தெரிவிக்கவும், டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆண்டிபட்டி அடுத்துள்ள மேய்க்கிலார்பட்டி ஈஸ்வரன் கோவில் அருகே பழனிக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் தங்கமாரிமுத்து புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டு இருந்த அதே ஊரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (47), கிழக்குத் தெருவைச் சேர்ந்த பொன் இருளன் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் ஊறல்களையும் போலீசார் அழித்தனர்.

    தேனி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா, அதிநவீன போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் கள்ளச்சாராய விற்பனையிலும் வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் தமிழக சட்டசபையில் புதிய மதுவிலக்கு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
    • கடந்த சில நாட்களுக்கு முன் புதிய மதுவிலக்கு திருத்தத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி சேஷ சமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த 19-ம் தேதி விஷ சாராயம் குடித்த 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவக்கல்லூாி மற்றும் புதுச்சோி ஜிப்மா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது வரை 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

    விஷ சாராய சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    தமிழகத்தில் விஷ சாராய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மேலும் இதுதொடர்பாக விரிவான விளக்கமும் அளித்தார்.

    இதையடுத்து, தமிழக அரசு விஷ சாராயத்தை அறவே ஒழிக்கும் வகையில் 1937-ம் ஆண்டு மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்தது. அந்த சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 29-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் கள்ளச் சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை வழங்கவும், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த சட்ட திருத்த மசோதா உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின் சட்டசபையில் நிறைவேறியது. இந்த சட்டம் 2024-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தம்) சட்டம் என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா உடனடியாக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படடது. இதையடுத்து, மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

    இந்நிலையில், மதுவிலக்கு திருத்த மசோதா-2024 சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது

    என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுவிலக்கு திருத்த மசோதா-2024 சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்வோர் மீது ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கள்ளச்சாராயம் விற்பதற்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். ஜாமினில் வெளியே வரமுடியாதபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • 'தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா கடந்த மாதம் 29-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

    கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    எதிர்கட்சிகள் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    தமிழ்நாடு சட்டப்பேரைவையில் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையிலும், அவற்றை விற்பனை செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையிலும், 'தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா கடந்த மாதம் 29-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரைவையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதலுக்கு அனுப்பபட்டது.

    இந்நிலையில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில், கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கான சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

    கள்ளச்சாராயம் தயாரிப்பது, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

    • கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை அர்ஜூனன் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு.
    • மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது உயிரிழந்த தனது மகனுக்கு இழப்பீடு வழங்க கோரி தந்தை தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

    திருச்சி மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக கலையரசன் என்பவர் பணிபுரிந்து வந்தார். பணியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் கடந்தாண்டு உயிரிழந்தார்.

    கலையரசன் இறப்புக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி அவரது தந்தை அர்ஜூனன் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு மீதான விசாரணையின்போது மனுதாரருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், "சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்போது, அப்பாவி மனுதாரருக்கு மகன் இறப்புக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்குவதால் எந்த பாதிப்பும் வராது" என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

    • புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது.
    • எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்,

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது.

    நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று விடியா திமுக முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது.

    அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் திமுக அரசின் மக்கள் மீதான அக்கறையின்மையையும், காவல்துறையின் பொறுப்பற்றத் தன்மையையுமே வெளிப்படுத்துகின்றன.
    • உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பூரிகுடிசை எனும் கிராமத்தில் புதுச்சேரியில் இருந்து கடத்திவரப்பட்ட சாராயத்தை அருந்தியவர்களில் 7 பேர் உடல்நலக்குறைவு காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் சுவடு மறைவதற்குள்ளாகவே, புதுச்சேரி மலிவு விலை சாராயத்தை அருந்தியவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதன் மூலம் சாராய விற்பனையை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ தமிழக அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த டி.குமாரமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இதே புதுச்சேரி சாராயத்தை அருந்தி உயிரிழந்ததாக வந்த செய்தியை மூடி மறைக்க முயன்ற திமுக அரசு, அதனை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே இன்று மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் திமுக அரசின் மக்கள் மீதான அக்கறையின்மையையும், காவல்துறையின் பொறுப்பற்றத் தன்மையையுமே வெளிப்படுத்துகின்றன.

    எனவே, இனியும் இது போன்று அலட்சியப் போக்குடன் செயல்படாமல் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்படும் சாராயத்தை தடுக்க எல்லைக் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கிடுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×