என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SLvIND"

    • இலங்கையின் அணியின் கேப்டனாக அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • தனஞ்ஜெயா மற்றும் மேத்யூஸ் அணியில் இடம் பெறவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையின் அணியின் கேப்டனாக அசலங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    தனஞ்ஜெயா மற்றும் மேத்யூஸ் அணியில் இடம் பெறவில்லை. சதீர சமரவிக்ரம மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோரும் அணியில் இருந்து வெளியேறினர். அதற்கு பதிலாக சமிந்து விக்ரமசிங்க, பினுர பெர்னாண்டோ மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ போன்றவர்களை தேர்வுக்குழு தேர்வு செய்தது.

    இந்தியாவுக்கு எதிரான இலங்கை டி20 அணி விவரம்:-

    சரித் அசலங்க (கேப்டன்), பதும் நிசங்கா, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனகா, வணிந்து ஹசரங்கா, துனித் வெல்லலகே, மகேஷ் தீக்ஷனா, சமிந்து விக்ரமசிங்க, மதீஷ பத்திரனா, நுவான் துஷாரா, துஷ்மந்த சமீரா, பினுர பெர்னாண்டோ.

    • இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்படுகிறார்.
    • இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

    இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று இலங்கை சென்றடைந்தது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார்.

    இந்நிலையில் கம்பீர் தலைமையில் முதல் வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டனர். சஞ்சு சாம்சன் மற்றும் துபே ஆகியோருக்கு கம்பீர் ஆலோசனகளை வழங்கினார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்திய அணின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட உள்ளார். 

    • காயம் காரணத்தால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

    இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் இந்திய வீரர்கள் இன்று 2-வது நாளாக வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்க உள்ள நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமீரா, காயம் காரணத்தால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    அவரது காயத்துக்கான காரணம் என்னவென்று இதுவரை சரியாக தெரியவில்லை. இவருக்கு மாற்று வீரரை விரைவில் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27-ம் தேதி நடக்கிறது.
    • நுவான் துஷாரா காயத்தால் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    கொழும்பு:

    இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்தத் தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது.

    இதற்கிடையே, இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சமீரா காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான நுவான் துஷாரா காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக தில்ஷன் மதுஷனகா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    • சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் மற்றும் இளம் வீரர்களின் ஆட்டம் ஆகியவையும் கவனிக்கப்படும்.
    • பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், கலீல் அகமது, ரவி பிஷ்னோய் ஆகியோர் உள்ளனர்.

    பல்லகெலே:

    இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இரு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி நாளை பல்லகெலேயில் நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    20 ஓவர் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன்கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரிங்குசிங், ஷிவம் துபே ஆகிய பேட்ஸ்மேன்களும், ஆல்-ரவுண்டர்கள் ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் உள்ளனர்.

    பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், கலீல் அகமது, ரவி பிஷ்னோய் ஆகியோர் உள்ளனர்.

    20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வென்ற பிறகு ரோகித் சர்மா, கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். அதன்பின் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சென்று 20 ஓவர் போட்டி தொடரை வென்றது.

    தற்போது பலம் வாய்ந்த இலங்கையை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி சந்திக்கிறது. புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாட உள்ளது. இதில் அவரது செயல்பாடு மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் மற்றும் இளம் வீரர்களின் ஆட்டம் ஆகியவையும் கவனிக்கப்படும்.

    அசலங்கா தலைமையிலான இலங்கை அணியில் குசால் மெண்டிஸ், சண்டி மால், நிசாங்கா, குசால் பெரைரா, பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் ஹசரங்கா, ஷனகா, பந்து வீச்சில் மதுஷனகா, பினுரா பெர்னாண்டோ, தீக்ஷனா, பதிரனா ஆகியோரும் உள்ளனர்.

    இந்தியா-சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரிங்குசிங், ரியான் பராக், ஷிவம் துபே, ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ், கலில் அகமது, ரவிபிஷ்னோய்.

    இலங்கை-அசலங்கா (கேப்டன்), நிசாங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரைரா, சண்டிமால், அவிஷ்க பெர்னாண்டோ, கமிந்து மென்டிஸ், ஷனகா, ஹசரங்கா, விக்ரமசிங்கே, பினுரா பெர்னாண்டோ, அஷிதா பெர்னாண்டோ, மதுஷனகா, பதிரனா, தீக்ஷனா, துனித் வெல்லலகே.

    • இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாடுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்டு தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    டி20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாடுகிறது. இதனால் அவரது செயல்பாடு மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் மற்றும் இளம் வீரர்களின் ஆட்டம் ஆகியவையும் கவனிக்கப்படும்.

    இந்நிலையில், ரோகித் சர்மா ஒரு தலைவராக இருந்தார். கடந்த 10 ஆண்டுகளில் கேப்டன்சி பற்றி, குறிப்பாக ரோகித் சர்மாவிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

    • வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் மோசமான தோல்வியால் இலங்கை அணியில் நிறைய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பல்லகெலே:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

    இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

    கடந்த மாதம் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றதும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர். இதைத்தொடர்ந்து ஜிம்பாப்வேயில் நடந்த 20 ஓவர் தொடரை இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    தற்போது இந்திய அணி, உள்ளூரில் பலம் வாய்ந்த இலங்கையை சந்திக்கிறது. இதனை இந்திய அணியின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் எனலாம். ஏனெனில் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய 20 ஓவர் அணி களம் காணும் முதல் ஆட்டம் இதுவாகும். இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

    உலக சாம்பியனான இந்தியா தனது ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் தயாராகியுள்ளது. கோலி, ரோகித் சர்மா இல்லாததால் தொடக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் களம் இறங்குவார்கள். விக்கெட் கீப்பர் இடத்திற்கு ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் இடையே கடும் போட்டி நிலவினாலும் ரிஷப் பண்டுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிகிறது. இவர்களுடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஷிவம் துபே உள்ளிட்டோர் பேட்டிங்குக்கு வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ், ரவி பிஷ்னோய் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் அசத்தக்கூடியவர்கள். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் மோசமான தோல்வியால் இலங்கை அணியில் நிறைய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கேப்டனாக அசலங்காவும், புதிய தலைமை பயிற்சியாளராக ஜெயசூர்யாவும் இந்த தொடரில் இருந்து பொறுப்பேற்று செயல்பட இருக்கிறார்கள்.

    அந்த அணியில் பேட்டிங்கில் குசல் மென்டிஸ், தினேஷ் சன்டிமால், பதும் நிசாங்கா, குசல் பெரேராவும், பந்து வீச்சில் மதுஷன்கா, பதிரானா, தீக்ஷனாவும், ஆல்-ரவுண்டராக ஹசரங்கா, ஷனகாவும் நம்பிக்கை அளிக்கிறார்கள். வேகப்பந்து வீச்சுக்கு சற்று அனுகூலமான இந்த ஆடுகளத்தில் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களான துஷ்மந்தா சமீரா, நுவான் துஷரா ஆகியோர் காயம் காரணமாக ஆடாதது இலங்கைக்கு இழப்பாகும்.

    மொத்தத்தில் தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஓவர் போட்டியில் 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 19 ஆட்டத்திலும், இலங்கை 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய் அல்லது வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் அல்லது கலீல் அகமது.

    இலங்கை: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், குஷல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, அசலங்கா (கேப்டன்), ஹசரங்கா, தசுன் ஷனகா, தீக்ஷனா, அசிதா பெர்னாண்டோ அல்லது பினுரா பெர்னாண்டோ, மதுஷன்கா, பதிரானா.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 3, 4, 5 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார்.
    • தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற கம்பீருக்கு இது முதல் தொடராகும்.

    பல்லகெலே:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார்.

    இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீருக்கு இது முதல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இந்தியா 213 ரன்களை குவித்தது.

    பல்லகெலே:

    இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் பவர்பிளே முடிவில் இந்திய அணி 74 ரன்களை சேர்த்தது.

    முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில் சுப்மன் கில் 34 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஜெய்ஸ்வால் 40 ரன்னில் அவுட்டானார்.

    தொடர்ந்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஜோடி பொறுப்புடன் ஆடியது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 26 பந்தில் அரை சதம் அடித்து 58 ரன்னில் ஆட்டமிழந்தார். பாண்ட்யா 9 ரன்னில் அவுட்டானார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களைக் குவித்தது.

    இலங்கை அணி சார்பில் பதிரனா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடினர்.
    • பதும் நிசங்கா 79 ரன்களை விளாசினார்.

    இலங்கை நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

    பல்லகெலெவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்களை எடுத்த போது சுப்மன் கில் 34 ரன்களில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 40 ரன்களை எடுத்த போது விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

    அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடினர். இருவரும் முறையே 58 மற்றும் 49 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது.

     


    கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. அந்த அணியின் பதும் நிசங்கா 79 ரன்களையும், குசல் மென்டிஸ் 45 ரன்களையும் விளாசினர். அடுத்து வந்தவர்களில் குசல் பெரரா மற்றும் கமின்டு மென்டிஸ் முறையே 20 மற்றும் 12 ரன்களை எடுத்து அவுட் ஆகினர்.

    இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இவர்களில் யாரும் இரட்டை இலக்க ரன்களை எட்டாத நிலையில், கேப்டன் சரித் அசலங்கா மற்றும் தசுன் சனகா, தில்ஷன் மதுசனகா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர்.

    இந்தியா சார்பில் ரியான் பராக் 1.2 ஓவர்களை மட்டும் வீசி 5 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இலங்கை அணி 19.2 ஓவர்களில் 170 ரன்களை எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி 43 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.

    • விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
    • கோலி 125 போட்டிகளில் விளையாடி மைல்கல்லை கடந்தார்.

    இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ். முழு நேர கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தனது பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளார். இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 43 ரன்களில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 58 ரன்களை விளாசி இருக்கிறார். போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து, போட்டியின் ஆட்ட நாயகன் விருது சூர்யகுமார் யாதவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது வென்றதன் மூலம் சூர்யகுமார் யாதவ் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார். சூர்யகுமார் யாதவ் 69 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். மறுபக்கம் விராட் கோலி 125 போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை கடந்தார்.

    விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடிய கடைசி போட்டி 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த போட்டி முடிந்ததும் அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரர்கள்:

    சூர்யகுமார் யாதவ் 69 போட்டிகளில் 16 முறை (இந்தியா)

    விராட் கோலி 126 போட்டிகளில் 16 முறை (இந்தியா)

    சிக்கந்தர் ராசா 91 போட்டிகளில் 15 முறை (ஜிம்பாப்வே)

    முகமது நபி 129 போட்டிகளில் 14 முறை (ஆப்கானிஸ்தான்)

    ரோகித் சர்மா 159 போட்டிகளில் 14 முறை (இந்தியா)

    • முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் கில்லுக்கு பதிலாக சாம்சன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

    பல்லகெலே:

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 43 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடக்க வீரர் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    ×