என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "soldier killed"

    • மதுரை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ராணுவ வீரர் பலியானார்.
    • இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள நீரேத்தான் நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 68) முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இவருக்கு விக்ராந்த் என்ற மகன் உள்ளார். அவரும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். நேற்று இரவு கிருஷ்ணமூர்த்தி ஓட்டலில் டிபன் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றார். பழைய நீதிமன்றம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை வாடிப்பட்டி அரசு மருத்துவமனை க்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன்‌ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • பால் வாங்குவதற்கு சென்றபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி நாயுடு வட்டம் ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 65), முன்னாள் ராணுவ வீரர்.

    இவர் நேற்று காலை பைக்கில் வீட்டில் இருந்து பொன் னேரி கூட்ரோடு சாலையில் பால் வாங்குவதற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

    பொன்னேரி கூட்ரோடு சாலையில் வாணியம்பாடி பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.

    இதில் வேணுகோபால் படு காயம் அடைந்தார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் சிகிச் சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது சம்பந்தமாக அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே தடுப்பு சுவரில் மோதி ராணுவ வீரர் பலியானார்.
    • தீபாவளி பண்டிகைக்காக தனது 2-வது மனைவி வீட்டிற்கு சென்றிருந்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் காளிமுத்து (வயது37), முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ரோஷி என்ற சூர்யபிரபா. இவர் வ.உ.சி. நகரில் குடியிருந்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக ராஜபாளையம் அருகே உள்ள செந்தட்டியாபுரத்தில் உள்ள தனது 2-வது மனைவி குருலட்சுமி வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு பண்டிகையை முடித்து விட்டு தனது முதல் மனைவியை பார்ப்பதற்காக காரில் புறப்பட்டார். அவர் ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோட்டில் வந்தபோது திடீரென சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த காளி முத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது சகோதரி பரமேஸ்வரி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து காளிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமில் இன்று கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒரு வீரர் உயிரிழந்தார். #Soldierkilled #cylinderblast #Kathuacamp
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில் உள்ள ஜங்லோட் ராணுவ முகாமில் இன்று சமையலுக்காக கியாஸ் சிலிண்டர்களை கொண்டு சென்றபோது ஒரு சிலிண்டர் திடீரென்று வெடித்த விபத்தில் டார்ஜீலிங் பகுதியை சேர்ந்த நாயக் தீபக் டுவாங்(36) என்ற வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக துறைரீதியான விசாரணை முடிந்து, தீபக் டுவாங்கின் உடல் அவர் சார்ந்திருந்த படைப்பிரிவு (பட்டாலியன்) உயரதிகாரிகளிடம் இன்றிரவு ஒப்படைக்கப்பட்டது. இதே விபத்தில் காயமடைந்த மற்றொரு வீரர் சிகிச்சை பெற்று வருகிறார். #Soldierkilled #cylinderblast #Kathuacamp 
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் உயிரிழந்தார். #Soldierkilled #Pakistanarmy #ceasefire #Rajouriceasefire
    ஜம்மு:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.



    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் ராணுவம்  துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், இன்றும் இதே ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள சுந்தர்பானி செக்டார் பகுதியில் உள்ள கெரி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு இந்திய வீரர் உயிரிழந்தார்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இன்றுவரை பாகிஸ்தான் ராணுவம் 110 முறை இந்திய நிலைகளின்மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Soldierkilled #Pakistanarmy #ceasefire #Rajouriceasefire
    திருவெறும்பூர் அருகே குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 50). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு ராஜேஷ் கண்ணன், ராகுல்கிரண் என்ற 2 மகன்கள் உள்ளனர். கருப்பையாவுக்கு  குடிப்பழக்கம் உண்டு.

    இந்நிலையில் நேற்று மாலையில் கருப்பையா நவல்பட்டு சிலோன் காலனி பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது வாங்கி, அந்த பகுதியில் உள்ள கட்டளை வாய்க்கால் பாலத்தில் மீது அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் போதையில் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் யாரும் பார்க்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை அந்த வழியே நடந்து சென்றவர்கள் கருப்பையா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பையாவின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையின்போது, 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். #JKEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் நாடிகம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை இன்று காலையில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.



    சிறிது நேரம் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். 2 வீரர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. #JKEncounter

    காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் உயிரிழந்தார். #Porterkilled #ceasefire #Pakistanisniper
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா செக்டர் பகுதியில் உள்ள கலால் என்னுமிடத்தில் உள்ள இந்திய கண்காணிப்பு கோபுரங்கள் மீது இன்று பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்திய படையினரும் ஆவேசமாக பதில்  தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் சில நிமிடங்கள் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ வீரர் கோசாவி கேஷவ் சோம்கீர்
    உயிரிழந்தார்.

    முன்னதாக, இதே ரஜோரி மாவட்டத்தில் உள்ள சுந்தர்பானி எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் வருண் கட்டால் என்ற இந்திய வீரர் உயிரிழந்தார்.

    நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஜம்மு மாவட்டத்தில் உள்ள பர்க்வால் எல்லைக்கோட்டுப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டுசென்று சேர்க்கும் போர்ட்டராக பணியாற்றிய  தீபக் குமார் உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம். #Porterkilled #ceasefire #Pakistanisniper
    ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஒரு வீரர் உயிரிழந்தார். #KashmirEncounter #JKSoldierKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் உள்ள பாசல்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினரும் உள்ளூர் போலீசாரும் இணைந்து பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பாதுகாப்பு படையினரை நோக்கி சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.



    இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    பயங்கரவாதிகள் தொடர்பான வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் சோபோர் பகுதியில் இன்று செல்போன் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.  #KashmirEncounter  #JKSoldierKilled
    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். #JKEncounter #MilitantKilled
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ள தூரு என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு படையினரும் அந்த பகுதியை இன்று அதிகாலை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



    அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை முன்னேற விடாமல் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒரு வீரர் உயிரிழந்தார். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது.

    பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்டர்நெட் சேவைகளை அதிகாரிகள் நிறுத்திவைத்தனர். #JKEncounter #MilitantKilled
    ஜம்மு காஷ்மீரின் பன்டிப்போராவில் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் தனது இன்னுயிரை இழந்தார். #Bandiporaencounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பண்டிப்போரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில், ராணுவ வீரர் ஷிவகுமார் தனது இன்னுயிரை இழந்து வீர மரணம் அடைந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Bandiporaencounter
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்திய போராட்டத்தில் ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.#MilitantsInfiltrate
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் தங்டார் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஊடுருவுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு சென்று ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டு தடுத்து நிறுத்தினர். இந்த தாக்குதலின் போது ராணுவ வீரர் புஷ்பேந்திர சிங் வீர மரணம் அடைந்தார்.

    இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், ஊடுருவலை தடுத்து நிறுத்திய போரில் புஷ்பேந்திர சிங் வீர மரணம் அடைந்தார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    ×