என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SP Adithanar"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 42-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது.
    • சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 42-வது ஆண்டு நினைவு நாள் இன்று (புதன் கிழமை) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சி.பா.ஆதித்தனார் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.

    அதனைத் தொடர்ந்து தினத்தந்தி, டி.டி.நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    தி.மு.க. சார்பில் சிம்லா முத்துச்சோழன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், சூளை குப்புசாமி,

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், இலக்கிய அணி துணைச் செயலாளர் இ.சி.சேகர், நரசிம்மன்,

    ம.தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் பிரியகுமார், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் நன்மாறன், தென்றல் நிசார், நாசர், சிக்கந்தர், அரி,

    பாரதிய ஜனதா சார்பில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்ட பொதுச் செயலாளர் வன்னியராஜா,

    ஓ.பி.எஸ். அணி சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் சைதை எம்.எம்.பாபு, ரட்சன் அம்பிகாபதி, மீனவர் அணி மாநில செயலாளர் கோ.சு.மணி, கிருஷ்ணன், டாக்டர் ஆதிராநேவிஸ், பிரபாகர், வீரராகவன், ஆம்னி பஸ் அண்ணாதுரை, ராயபுரம் சிவா, அஞ்சலட்சுமி

    காங்கிரஸ் சார்பில் எஸ்.கே.அகமதுஅலி, ஆழ்வார் தோப்பு வேலாயுதராஜா, சூளை ராஜேந்திரன், சந்திர சேகர், மலைராஜா,

    சமத்துவ மக்கள் கழகம் சார்பில் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொருளாளர் கண்ணன், வடசென்னை மாவட்ட செயலாளர் பாஸ்கர்.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாகிகள் ஜெகதீசபாண்டியன், டாக்டர் இளவஞ்சி, பர்கானா, பாக்கியராஜன்,

    தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. கு.நல்லதம்பி, பகுதி செயலாளர்கள் செந்தில்நாதன், சரவணன், ரமேஷ்,

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் உதயகுமார், வைகுண்டராஜா, வி.பி.ஐயர், புரசை நாகராஜ், சுந்தரலிங்கம், நளினி மகேந்திரன், ஆரோக்யராணி, ராபர்ட், பாலமுருகன், சுப்பிரமணி, ராஜு, அயன்புரம் செல்வராஜ், கனகராஜ், மடிப்பாக்கம் ரவி, செந்தில், செல்வன், கவிராஜ், முனிராஜ், மணிவண்ணன்,

    அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக பொதுச் செயலாளர் முத்துராமன், சிங்கபெருமாள், நிர்வாகிகள் விஜயலட்சுமி, மைக்கேல்ராஜ், வேணுகோபால், சிவா, மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம நாராயணன், நிர்வாகிகள் பழனி, ஆனந்த், உலக தமிழின பேரியக்க தலைவர் கரு.சந்திரசேகர், த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ்,

    சென்னை வாழ் நாடார் சங்க பொதுச் செயலாளர் தங்கமுத்து, தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் விஜயகுமார், பொருளாளர் மெல்வின், கவுரவ ஆலோசகர் பெருமாள்,

    தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், நாடார் மகாஜன சங்க சென்னை மாவட்ட தலைவர் மணலி தங்கம், எர்ணாவூர் நாடார் உறவின்முறை பொதுச் செயலாளர் சுந்தரேசன், ராயபுரம் நாடார் சங்க தலைவர் எட்வர்ட் ராஜா,

    நாடார் மகாஜன சங்க சென்னை மாவட்ட செயலாளர் சந்திரமோகன், மணலி நாடார் சங்க செயலாளர் ஹரிகரன், பொருளாளர் பொன்ராஜ்,

    இந்திய நாடார்கள் பேரமைப்பு நிறுவன தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சிவக்குமார், வர்த்தக அணி துணை தலைவர் வெங்கட்ராமன், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன், செயலாளர் பாலாஜி, பொருளாளர் குமரன், செயலாளர் செந்தில், தகவல் தொடர்பு பிரிவு பொருளாளர் ரவி ராஜா, இளைஞர் அணி பொருளாளர் தியாகவேல், வர்த்தக அணி துணை தலைவர் எட்வர்ட் ராஜா, கூடுவாஞ்சேரி பீட்டர்,

    நெல்லை-தூத்துக்குடி நாடார் மகாஜன சங்க நிர்வாக செயலாளர் மயிலை சந்திரசேகர பாண்டியன், செல்வகுமார், பாஸ்கர், பூந்தமல்லி தொகுதி தலைவர் பூவை ராமராஜ்,

    நாடார் மகாஜன சங்க சென்னை மாவட்ட தலைவர் அருணாசல மூர்த்தி, சுவைராஜா, மங்களபுரம் நாடார் ஐக்கய சங்க இணை செயலாளர்கள் செல்வ மாரியப்பன், பாலாஜி,

    அகில இந்திய நாடார் சங்க தலைவி விஜயாசந்திரன், பூந்தமல்லி ஐக்கிய நாடார் சங்க தலைவர் ஆர்.சுரேஷ்,

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் சபேச ஆதித்தன், மாநில நிர்வாக குழு செயலாளர்கள் ஆறுமுக நயினார், காயல் இளவரசு, கணேசா, முல்லை ராஜா, மாநில துணை பொதுச் செயலாளர் பால முனியப்பன், திருச்சி நற்பணி மன்ற அமைப்பாளர் ராஜகோபால், கவுரவ ஆலோசகர் தங்கவேல்,

    சி.பா.ஆதித்தனார் பண்பாட்டு கழக பொதுச் செயலாளர் சமுத்திரபாண்டி,

    வடசென்னை வியாபாரிகள் சங்க தலைவர் ராபர்ட், நாகராஜ், துணை செயலாளர் செல்வம், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன், காமராஜ்,

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை மண்டல தலைவர் ஜோதிலிங்கம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஷேக் முகமது, சிந்தாதிரிப்பேட்டை பகுதி தலைவர் ராஜேந்திரன், செயலாளர் கந்தவேல், பொருளாளர் ராஜேந்திரன்,

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் ரவி, பொதுச் செயலாளர் ரமேஷ்குமார், மாவட்ட தலைவர்கள் செந்தில்முருகன், செல்வநாயகம், செய்தித் தொடர்பாளர் எம்.பி.ரமேஷ், சூளைமேடு சக்திவேல்,

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர் கள் சங்க அகில இந்திய தலைவர் டாக்டர் வி.என்.கண்ணன், மாநில அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் பிரபாகரன், செந்தில், ராமையா, சுதாகர், ஆசைதம்பி, முபாரக், ரஜினி, செல்வம், ஜோதிட ஆசான் கீழஈரால் பண்டிதர் பச்சைராஜென் தஞ்சை தமிழ்பித்தன்.

    • உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மனதில் பதியும் வண்ணம் தந்தவர் சி.பா.ஆதித்தனார்.
    • விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செய்திகளை வழங்கியவர் சி.பா.ஆதித்தனார்.

    நெல்லை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லை வந்தார். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு தினத்தையொட்டி நெல்லை மத்திய மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நெல்லை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு வைகோ மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    அப்போது அவருடன் துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் நிஜாம் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் புகழ் அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று உள்ளேன். சிங்கப்பூரிலே வழக்கறிஞராக இருந்து சிறப்பு பெற்று, லண்டனில் பத்திரிகை நிருபராக செயல்பட்டு சாதனை புரிந்தவர் அவர்.

    அந்த விதத்தில் பெரும்பொருள் ஈட்டி தமிழ்நாட்டில் பத்திரிகை ஆரம்பித்தார். மாலை முரசு பத்திரிகை அவர் தொடங்கியதுதான். அதன் பின்னர் தினத்தந்தி பத்திரிகை மூலமாக புரட்சியை ஏற்படுத்தியவர் சி.பா.ஆதித்தனார் ஆவார்.

    காலையில் எழுந்தவுடன் தந்தி, அதன் பின்னர் தான் காபி என்று சொல்லும் அளவுக்கு மாளிகைவாசி முதல் குடிசைவாசிகள் வரையிலும் அனைவரையும் பத்திரிகை வாசிக்க வைத்தவர் சி.பா. ஆதித்தனார்.உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மனதில் பதியும் வண்ணம் தந்தவர். தமிழனுக்காக ஒரு பத்திரிகை வேண்டும் என தொடங்கியவர் அவர். இந்தியாவிலேயே அதிக மக்கள் வாசிக்கும் பத்திரிகையாக தினத்தந்தி திகழ்கிறது.

    தந்தை பெரியாரை அழைத்து சென்று தஞ்சையில் தமிழ் மாநாட்டை நடத்தினார். இதன் காரணமாக தனிச்சிறையில் வாடினார். சபாநாயகராக இருந்தபோது ஒவ்வொரு நாளும் திருக்குறளை வாசித்து தான் சட்டப்பேரவையை தொடங்க வேண்டும் என்ற மரபை ஏற்படுத்தியவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார். என் திருமணத்தை முன்னின்று நடத்தியவர். விருப்பு, வெறுப்பின்றி நடுநிலையோடு செய்திகளை வழங்கியவர் சி.பா.ஆதித்தனார். மண் இருக்கும் வரை அவரது புகழ் நிலைத்திருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் பேசுகையில், முதலீட்டாளர் மாநாடுக்கு வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் வெற்றியோடு திரும்புவார். எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. அதனால் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை குறை கூறி பேசுகிறார்கள். தனித்தமிழ் ஈழத்திற்கு உலக நாடுகளின் ஆதரவு பெருகும்.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். மதுவிலக்கு வேண்டும் என்று தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டேன். எனது சொந்த கிராமத்தில் எனது தாயார் தலைமையில் மதுக்கடையை அடித்து நொறுக்கி அதனை திறக்க விடாமல் செய்தோம்.

    தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையில் 500 கடைகளை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனை பெருகியதன் விளைவாகவே தற்போது உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காதது மிகப்பெரிய தவறு. புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறப்பது அரசியல் ஆகிவிடும். பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

    இந்த பேட்டியின்போது வைகோவின் டெல்லி உதவியாளர் செந்தூர்பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் மணப்படை மணி, செய்தி தொடர்பாளர் மின்னல் அலி, பகுதி செயலாளர்கள் கோல்டன் கான், பொன் வெங்கடேஷ், ஜோசப், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜான் கென்னடி, ஆறுமுகப் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் 42-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருச்செந்தூர்:

    தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் 42-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் உமரிசங்கர், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராம ஜெயம், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, நகர தலைவர் வாள்சுடலை, கவுன்சிலர் ஓடைசுகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கல்லூரி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி மற்றும் பேராசிரியர்கள் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் காமராசு நாடார், திருச்செந்தூர் நாடார் வியாபரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதேபோல் காயாமொழியில் உள்ள சி.பா. ஆதித்தனார் சிலைக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    • தமிழுக்காக சி.பா.ஆதித்தனார் செய்த அரும்பணிகள் ஏராளம்.
    • “பாரிஸ்டர்” பட்டம் பெற்றாலும், தமிழுக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் அரும்பாடுபட்டவர் சி.பா.ஆதித்தனார்.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு நாளையொட்டி வி.ஜி.பி. குழும தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் வெளியிட்டுள்ள நினைவேந்தலில் கூறி இருப்பதாவது:-

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 42-வது நினைவு நாளை தமிழகம் மட்டுமல்ல உலகில் உள்ள தமிழர்கள் எல்லோரும் இன்று நினைவு கூருகின்றனர். அவர் தமிழுக்காக செய்த அரும்பணிகள் ஏராளம். தமிழகச் சட்டசபையில் சபாநாயகராக இருந்து திருக்குறளை அனைவரும் அறியும்படி செய்தவர்.

    தமிழ்! தமிழ்! என்ற தாகத்தோடு பட்டித்தொட்டி எல்லாம் இருக்கின்ற பாமர மக்களும் தினத்தந்தி நாளிதழ் மூலமாக தமிழை படிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தவர். அவர் "பாரிஸ்டர்" பட்டம் பெற்றாலும், தமிழுக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் அரும்பாடுபட்டவர். இன்று அவரின் 42-வது நினைவுநாளை நினைவு கூருகின்றோம். அவர் தம் புகழ் ஓங்குக! வாழ்க தமிழ்! வெல்க குறள் நெறி!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழர் தந்தையும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42-ஆம் நினைவு நாள் இன்று.
    • தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான பணிகளை சி.பா. ஆதித்தனார் செய்தார்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழர் தந்தையும், தினத்தந்தி நாளிதழின் நிறுவனருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42-ஆம் நினைவு நாள் இன்று. தமிழ்ப்பற்றும், நாட்டுப்பற்றும் தான் அவரது இரு முதன்மை நோக்கங்களாக இருந்தன.

    தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழ்ச்சமூக முன்னேற்றத்திற்காகவும் ஏராளமான பணிகளை அவர் செய்தார். அவரது நினைவு நாளில் அவரது சமூகப் பணிகளை போற்றுவதுடன், அவற்றை நாமும் தொடர உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ் மொழி மீது தீராப்பற்று கொண்டிருந்த சி.பா. ஆதித்தனார் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான பணிகளைச் செய்தார்.
    • தமிழ் வளர்ச்சியிலும், தமிழர் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததால் தான் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42-ஆம் நினைவு நாளில் அவரைப் போற்றுவோம். தமிழ் மொழி மீது தீராப்பற்று கொண்டிருந்த சி.பா. ஆதித்தனார் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான பணிகளைச் செய்தார்.

    தமிழ் வளர்ச்சியிலும், தமிழர் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததால் தான் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்டார். தமிழர் தந்தையின் நினைவு நாளில் அன்னைத் தமிழுக்கு தொண்டாற்ற நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் இன்று.
    • சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது இதழியல், அரசியல், சமூகப் பணிகளை நினைவு கூர்ந்து போற்றிடுவோம்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    எளிய மக்களுக்கான இதழியல் என்ற கருத்தாக்கத்தில் தமிழர்களுக்காக 'தினத்தந்தி' நாளிதழைத் தொடங்கி அதில் வெற்றி கண்ட மாமனிதர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் மறைந்த சி.பா.ஆதித்தனாரின் நினைவு தினம் இன்று.

    புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்து, தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, தமிழ் இதழியல் உலகில் நீங்கா இடம்பிடித்து முடிசூடா மன்னராக திகழ்ந்த சி.பா.ஆதித்தனாரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். சி.பா.ஆதித்தனாரின் நினைவு நாளில் அவரது இதழியல், அரசியல், சமூகப் பணிகளை நினைவு கூர்ந்து போற்றிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    "தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சிலை முன்பு அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

    சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

     

    சி.பா.ஆதித்தனார் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணைமேயர் மகேஷ்குமார் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

     

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம்கதிர், பாரோஸ் ஓட்டல், மாலைமுரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.

    மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், தண்டுபத்து ஜெயராமன்.

    தி.மு.க. மாநில மகளிர் ஆலோசனை குழு சிம்லா முத்துசோழன், வர்த்தக அணி மாநில செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நிர்வாகிகள் விஜயகுமார், மோகன், தண்ட பாணி, ரகோத்தமன், தளபதி பேரவை தலைவர் அருள்காந்த்.

    அ.தி.மு.க. நிர்வாகி டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன்.

     

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, நிர்வாகிகள் ஜீவன், வந்தியதேவன், சுப்பிரமணி, மகேந்திரன், சிக்கந்தர்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நிர்வாகிகள் வில்லிவாக்கம் ரவிச்சந்திரன், முனவர் பாஷா, சென்னை நந்து, ஜி.ஆர்.வெங்கடேஷ்.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நிர்வாகிகள் கண்ணன், டேவிட், சீனிவாசன், ராஜேஷ், சாமுவேல், சுடலைமணி, தாஸ், சதீஷ், தங்கராஜ், வேல்முருகன், சண்முகசுந்தரம்.

    அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், பொருளாளர் சிவா.

    சென்னை வாழ் நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.தங்கமுத்து, நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், நிர்வாக செயலாளர் மயிலை சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் ராபர்ட், அருண், செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், கல்விக்குழு உறுப்பினர் செல்வகுமார், ராயபுரம் தொகுதி உறுப்பினர் பூலோக பாண்டியன், சென்னை வாழ் வத்திராயிருப்பு நாடார் உறவின் முறை சங்க தலைவர் வி.வி.எம்.கோகுல்ராம், செயலாளர் காசிராஜன், பொருளாளர் ஆதிமூலம், நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல் ராஜ், இணை செயலாளர் மாரிமுத்து, இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, சென்னை மாவட்ட தலைவர் கே.ரங்கன், செயலாளர் சந்திரமோகன், மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின் முறை மகமை தருமபண்டு தலைவர் சந்திரமோகன், செயலாளர் ஹரிகரன், பொருளாளர் பொன்ராஜ், துணை தலைவர் பாலசுப்பிரமணிய நாடார், மகாஜன பொருளாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் மணலி தங்கம்,

    தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், பொதுச் செயலாளர் ரவி, பொருளாளர் ஆடிட்டர் சிவராஜ், தலைமை நிர்வாக செயலாளர் பொன்ராஜ், ஊடகப்பிரிவு தலைவர் தாமோதரன், எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் சுந்தரேசன், துணை தலைவர் சுதந்திரதாஸ், கள்ளிக்குளம் நாடார் சங்க தலைவர் தங்கத்துரை, தமிழ்நாடு நாடார் சங்க இளைஞரணி தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் சிவஜோதி, அமைப்பாளர் முருகன், பொருளாளர் ராமமூர்த்தி, தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.விஜயகுமார், பொருளாளர் மெல்வின், இணை செயலாளர் டெல்லி வெங்கடேஷ், மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின்முறை பொருளாளர் செல்வராஜ், துணை செயலாளர்கள் சுரேஷ், செந்தில், தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்க நிறுவன தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், துணை தலைவர் காமராஜ், தங்கத்துரை, செல்வகுமார், மாடசாமி, இளைஞரணி தலைவர் ராமராஜன், செயலாளர் மாரிமுத்து, கணேஷ்குமார், ஜான்சன்,

    தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் எம்.மாரிதங்கம், மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் பொன்பாண்டியன், துணை செயலாளர் பாண்டியன், வடசென்னை வியாபாரிகள் சங்க தலைவர் ராபர்ட்,

    தமிழ்நாடு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், துணை பொதுச் செயலாளர் பாலமுனியப்பன், நிர்வாக குழு உறுப்பினர்கள் காயல் இளவரசு, கணேசா மற்றும் வக்கீல் ஆறுமுகநயினார், திருவொற்றியூர் நகர நற்பணி மன்ற தலைவர் டி.முல்லைராஜா, திருச்சி புறநகர் மாவட்ட நற்பணி மன்ற துணை செயலாளர் அணியாப்பூர் செல்வம், அமைப்பாளர் மணலி ராஜ கோபால், சந்தைப்பேட்டை நற்பணி மன்ற செயலாளர் காமராஜ், சீனிவாசன், திருவள்ளூர் மாவட்ட தலைவர் நாகராஜன், ஆர்.கே.நகர் மன்ற செயலாளர் திராவிட சக்கரவர்த்தி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த ஆர்.பால முருகன், கணபதி, பாலம் இருளப்பன், பெஞ்சமின், ராகவன், தியாகராஜன், விமல், தங்கராஜ், எட்வின், ஆதிசங்கர், ஆன்டோ, ஜெபஸ்டின், எழுத்தாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    • உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என முழங்கி தாய்நாடு மீது பற்றும் தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்தவர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்.
    • தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றி புகழ்வோம்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என முழங்கி தாய்நாடு மீது பற்றும் தமிழ் மக்கள் மீது அன்பும் கொண்டிருந்த தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் இன்று.

    எளிய சொற்கள், கவர்ந்திழுக்கும் தலைப்புகள், கருத்துப் படங்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கென தனி பத்திரிகையை தொடங்கி தமிழ் இதழியல் முன்னோடியாக திகழ்ந்ததோடு சட்டப்பேரவை தலைவராகவும் அமைச்சராகவும் தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக சி.பா.ஆதித்தனார் ஆற்றிய பணிகளை போற்றி புகழ்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • சி.பா.ஆதித்தனார் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து வணங்கினார்.

    சென்னை:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 43-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சி.பா.ஆதித்தனார் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து வணங்கினார். அதனைத் தொடர்ந்து தினத்தந்தி, மாலைமலர், தந்தி டி.வி., டி.டி.நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

     மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், நடிகர் எஸ்.வி.சேகர், எழுத்தாளர் டாக்டர் அமுதா பாலகிருஷ்ணன்,

    தி.மு.க. வர்த்தகர் அணி மாநில செயலாளர் காசிமுத்து மாணிக்கம், தி.மு.க. பேச்சாளர் தமிழன் பிரசன்னா, தளபதி பேரவை தலைவர் அருள்காந்த், பொருளாளர் தண்டபாணி, மகளிர் அணி நிர்வாகி ஷகிலா, மாணவர் அணி நிர்வாகி ஆல்வின்.

    தமிழக பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், எழும்பூர் காமேஷ், விஜய குமார், மயிலை பாலாஜி,

    ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணி, ராஜேந்திரன், பார்த்திபன், எழும்பூர் பகுதி செயலாளர் சென்ட்ரல் நிஷார், நிர்வாகிகள் பாஸ்கர், சுரேஷ், அரி, சந்திரமோகன், மகளிர் அணி மல்லிகா தயாளன், தர்மபுரி பாலமுரளி, கவிஞர் மணிவேந்தன், எழும்பூர் செல்லப்பாண்டி, மின்னல் பிரேம், அம்பத்தூர் தாமோதரன், புத்தகரம் ரவிச்சந்திரன், அருண்குமார், 

    த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆர்.எஸ்.முத்து,

    தே.மு.தி.க. துணைச் செயலாளர் ப.பார்த்தசாரதி, மாநில இளைஞரணி செயலாளர் கு.நல்லதம்பி, உயர்மட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் விசாகராஜன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கே.மாறன், நிர்வாகிகள் பூங்கா எம்.ரமேஷ், எஸ்.கே.செந்தில்நாதன், த.பிரபு, வரதன் பாபு, க.கோவேந்தன், சத்தியவேல், லே.பாரதி, அன்பு, ஜோதி, ஸ்ரீநாத், சேகர், மதி, டேவிட், பாலாஜி, லட்சுமணன்,

    புரட்சி பாரதம் கட்சியின் முதன்மை செயலாளர் ருசேந்திரகுமார், நிர்வாகிகள் தரணிமாரி, மகிமைதாஸ், பாக்சர் தாஸ், ரவீந்திரன், சுரேஷ், புரட்சிதாஸ்,

    சமத்துவ மக்கள் கழக பொருளாளர் வக்கீல் கண்ணன், தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், நிர்வாகிகள் சாபுதீன், ராஜேந்திரன், சீனிவாசன், சாமுவேல், சுடலைமணி, பாக்யராஜ், ராஜ்குமார்,

    பெருந்தலைவர் மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் என்.ஆர்.டி. பிரேம்குமார், மாநில செயலாளர் எம்.வி.எம். ரமேஷ்குமார், நிர்வாகிகள் சிவகுமார், சந்தானம், செந்தில்குமார், செல்வன், பாலமுருகன், ராஜ்நாடார், ராபர்ட், நாகராஜ், சுந்தரலிங்கம், சுயம்புலிங்கம், உத்திரகுமார், வி.பி.ஐயர், முருகேச பாண்டி, ரமேஷ்.

    நெல்லை-தூத்துக்குடி நாடார் மகிம பரிபாலன சங்க தலைவர் வி.ஆனந்தராஜ், பொதுச் செயலாளர் பி.சந்திரசேகர், கமிட்டி உறுப்பினர் செல்வகுமார், ராமராஜ்,

    திருநெல்வேலி தட்சண மாற நாடார் சங்க சென்னை கிளை தலைவர் செல்வராஜ், இணை செயலாளர்கள் வேலுமணி, அன்புசெழியன், நிர்வாகிகள் ஆறுமுக பாண்டியன், சாமுவேல் நாகராஜ், சென்னை வாழ் முக்கூடல் நாடார் சங்க தலைவர் ஆர்.சி.சிதம்பரம், கே.கே.நகர் வட்டார நாடார் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் அன்புசெழியன், பொருளாளர் சாம்டேனியல், சென்னை வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்க தலைவர் செந்தில்முருகன், துணை செயலாளர் செல்வகுமார்

    தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேஷ், பொதுச்செயலாளர் வீரக்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் மருதவேல், இளைஞரணி பொருளாளர் ராமமூர்த்தி,

    சென்னை வாழ் நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, கல்விக்குழு உறுப்பினர் செல்லக்குமார், ராஜா அண்ணாமலைபுரம் வட்டார ஐக்கிய சங்க தலைவர் கே.செல்வம், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க பூந்தமல்லி தொகுதி தலைவர் பூவை.ஆர்.ராமராஜ், பூந்தமல்லி வட்டார ஐக்கிய நாடார் சங்க தலைவர் சுரேஷ், நாடார் மகாஜன சங்க சென்னை மாவட்ட தலைவர் மணலி ஏ.தங்கம், செயலாளர் கே.சந்திரமோகன், மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின்முறை சங்க நிர்வாகிகள் கடற்கரை, தங்கம், விநாயகா செல்வம், சென்னை வாழ் நாடார் சங்க செயலாளர் செல்லத்துரை, எர்ணாவூர் நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் சுந்தரேசன், துணைத் தலைவர் சுதந்திரதாஸ், ஆலோசகர் வெள்ளைச் சாமி, நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மின்னல் ஸ்டீபன், தேசிய நாடார் சங்க பொதுச் செயலளார் என்ஜினீயர் டி.விஜயகுமார்,

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் ரஹ்மான், துணைத் தலைவர்கள் வி.எஸ்.பிரபாகர் முருகராஜ், பாலம் இருளப்பன், செயற்குழு உறுப்பினர் வைத்தியநாதன்,

    தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ். சபேஷ் ஆதித்தன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள் காயல் ஆர்.எஸ்.இளவரசு, ஆறுமுக நயினார், ஏ.கணேசா, மணலி சேக்காடு நற்பணி மன்ற தலைவர் காளியப்பன், செயலாளர் அரிகரன், பொருளாளர் பாண்டியன், நிர்வாகி கஜேந்திரன், திருச்சி புறநகர் மாவட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற அமைப்பாளர் ராஜகோபால், மாவட்ட துணை செயலாளர் செல்வம், அணியாப்பூர் சந்தைப்பேட்டை நற்பணி மன்ற செயலாளர் காமராஜ், சீனிவாசன்,

    தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநில தலைவர் மயிலை மாரித் தங்கம், மத்திய சென்னை வியாபாரிகள் சங்க நலச்சங்க தலைவர் மாரிமுத்து, ஞாயிறு அனைத்து வியாபாரிகள் நலச்சங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயல் செயலாளர் வி.எஸ்.லிங்கம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    • திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டிணத்தில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனார் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • சி.பா. ஆதித்தனாரின் நினைவு நாளை முன்னிட்டு காயாமொழியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 43-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலையில் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டிணத்தில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனார் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் தலைமையில் செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர். சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜி ஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் தனலட்சுமி (பொறுப்பு), டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குறிச்செல்வி, டாக்டர் சிவந்தி அகடாமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜூலா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தமிழ்நாடு வணிகர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் காமராசு நாடார் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் செல்வின், மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஸ், மாநில இணைச் செயலாளர்கள் செல்வகுமார், இசக்கி முத்து, ஆகியோர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்கம், காயல்பட்டினம் நாடார் வியாபாரிகள் சங்கம், திருச்செந்தூர் பஜார் வியாபாரிகள் சங்கம், திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில் வளாக வியாபாரிகள் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சி.பா. ஆதித்தனாரின் 43-வது நினைவு நாளை முன்னிட்டு காயாமொழியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் ராகவ ஆதித்தன், பாலசுப்பிரமணி ஆதித்தன், தங்கேச ஆதித்தன், அசோக் ஆதித்தன், ராதாகிருஷ்ண ஆதித்தன், வரதராஜா ஆதித்தன், கார்த்திகேய ஆதித்தன், முருகன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், அச்சுத ஆதித்தன், குமரேச ஆதித்தன், சிவபால ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், குமரகுருபரர் ஆதித்தன், எஸ்.எஸ் ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன்,ராமானந்த ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், அமிர்தலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சபாநாயகராக இருந்து சபையில் தமிழை ஒலிக்கச் செய்தவர் ஐயா சி.பா.ஆதித்தனார்.
    • தமிழுக்கு தொண்டாற்றுவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

    தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சபாநாயகராக இருந்து சபையில் தமிழை ஒலிக்கச் செய்த ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்கள் சகலமானவர்களுக்கும் சமமாக தமிழ் செய்திகளை எளியவருக்கும் எளிய பதிப்பாக சென்றடைய செய்து செய்தியை பாமர மக்களும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு சரித்திரம் படைத்தவர்.

    எளிய செய்தி ஊடகத்திற்கு நாட்டில் மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக திகழ்ந்தவர். அவர் வழியில் இன்று செய்தி ஊடகமாக மட்டுமல்லாமல் ஒளி ஊடகமாகவும் அவரது முயற்சி இன்று வெற்றிகரமாக பரிமளித்து கொண்டிருப்பது மகிழ்ச்சி. தமிழுக்கு தொண்டாற்றுவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×