search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சி.பா.ஆதித்தனாரின் தமிழ் பணிகளை நினைவு கூர்வோம்- ராமதாஸ் புகழாரம்
    X

    சி.பா.ஆதித்தனாரின் தமிழ் பணிகளை நினைவு கூர்வோம்- ராமதாஸ் புகழாரம்

    • தமிழ் மொழி மீது தீராப்பற்று கொண்டிருந்த சி.பா. ஆதித்தனார் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான பணிகளைச் செய்தார்.
    • தமிழ் வளர்ச்சியிலும், தமிழர் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததால் தான் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் 42-ஆம் நினைவு நாளில் அவரைப் போற்றுவோம். தமிழ் மொழி மீது தீராப்பற்று கொண்டிருந்த சி.பா. ஆதித்தனார் தமிழ் வளர்ச்சிக்காக ஏராளமான பணிகளைச் செய்தார்.

    தமிழ் வளர்ச்சியிலும், தமிழர் நலனிலும் அக்கறை கொண்டிருந்ததால் தான் அவர் தமிழர் தந்தை என்று அழைக்கப்பட்டார். தமிழர் தந்தையின் நினைவு நாளில் அன்னைத் தமிழுக்கு தொண்டாற்ற நாம் அனைவரும் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×