என் மலர்
நீங்கள் தேடியது "Special Pooja"
- காலபைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
- பக்தர்களுக்கு தயிர்சாதம் மற்றும் உளுந்து வடை பிரசாதமாக வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.
இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தயிர்சாதம் மற்றும் உளுந்து வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாரயணன், சரஸ்வதி, ஈஸ்வரி செய்தனர்.
- 108 சங்காபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
- பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி காலை 11 மணிக்கு சங்கல்பம், கணபதி பூஜை, ஸ்பதன கும்பகலச பூஜை, 108 சங்கு பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமிக்கு 18 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- குருவித்துறையில் திருமண பத்திரிகை வைத்து சிறப்பு பூஜை நடந்தது.
- இதில் ஆர். பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
சோழவந்தான்
எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா பிறந்தநாள், அ.தி.மு.க. 51-வதுஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, அம்மா பேரவையின் சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் மகள் திருமணம் உட்பட 51 ஜோடிகளுக்கு திருமணம் வருகிற பிப்ரவரி 23-ந் தேதியன்று டி.குன்னத்தூரில் நடை பெறுகிறது.
இதனை முன்னாள் முதல்-அமைச்சர், எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார். இதற்கான திருமண அழைப்பிதழை மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், ஜெனகை நாராயண பெருமாள் கோவில், குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோவிலில் வைத்து சாமி கும்பிட்டு, திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களுக்கும், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், பொதுமக்களுக்கும் சட்ட மன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், பாலகிருஷ்ணன், பேரூர் கவுன்சிலர்கள், நெல்லை பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் காலபைரவருக்கு சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து கால பைரவரை தரிசித்தனர்.
- சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
- காலபைரவருக்கு 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் வளர்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார்.
இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தயிர்சாதம் மற்றும் உளுந்து வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி ரவிநாரயணன், சரஸ்வதி, ஈஸ்வரி ஆகியோர் செய்தனர்.
- புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள முப்பெரும் தேவி பவானி அம்மன் கோவில் அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்றது.
- புத்தாண்டு சிறப்புகள் குறித்து பக்தர்களுக்கு குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.
புளியங்குடி:
தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அருள்வாக்கிற்கு பிரசித்தி பெற்ற முப்பெரும் தேவி பவானி அம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இங்குள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் ஆகிய தெய்வங்களுக்கு குங்குமம், மஞ்சள், தேன், சந்தனம், இளநீர், பால், தயிர், நறுமண பொருட்கள் உள்பட 18 வகை அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
புத்தாண்டு சிறப்புகள் குறித்து பக்தர்களுக்கு குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து சிறப்பு அருள் வாக்கு மற்றும் மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகன்னியம்மன், பால நாகம்மன், ஆகிய தெய்வங்களுக்கு தை பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- கோவில் முன்பு தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி செங்கரும்பு, காய்கறிகள், பழங்கள், பனங்கிழங்கு படையல் வைத்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புளியங்குடி:
புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயத்தில் அருள் பாலிக்கும் பெரிய பாளையத்து பவானி அம்மன், நாகன்னியம்மன், பால நாகம்மன், ஆகிய தெய்வங்களுக்கு தை பொங்கலை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
அதிகாலை 4 மணி அளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர் பவானி அம்மாக்களுக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம், சவ்வாது மற்றும் 21 வகையான நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பெரிய தீபாரதனை காண்பிக்கப்பட்டது. கோவில் முன்பு தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி செங்கரும்பு, காய்கறிகள், பழங்கள், பனங்கிழங்கு படையல் வைத்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவை பற்றி கோவில் குருநாதர் சக்தியம்மா பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அருள் வாக்கு வழங்கப்பட்டது. மதியம் அறுவை அன்னதானம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜையை குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- புற்றுக்கோவிலில் ரத சப்தமி சிறப்புப் பூஜை நடைபெற்றது.
- அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் ரத சப்தமி சிறப்புப் பூஜை நடைபெற்றது. ஆண்டுதோறும் தை மாதம் உத்தராயன புண்ய காலத்தில் வளர்பிறை சப்தமி திதியில் சூர்ய பகவான் ரதம் வடக்கு நோக்கி திரும்பும் நாள். இந்நாளில் அனைத்து சிவ, வைணவ கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது ஐதீகம். இதனையொட்டி காலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கோடிசக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி அம்மனுக்கு, மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார திபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யார் செய்யதுவைத்தார். விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- புற்றுக்கோவிலில் மாத வளர்பிறை கார்த்திகை சிறப்புப் பூஜை நடைபெற்றது.
- 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் மாத வளர்பிறை கார்த்திகை சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பிறகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.இவ்விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது.
- கோவில்பட்டி அருகே பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
- இரவு 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு 18 வகையான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாயரச்சை பூஜை நடைபெற்றது. 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு 18 வகையான மஞ்சள், மா, பொடி, திரவியம், பால், தேன், சந்தனம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஐகோர்ட் மகாராஜா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு படையல் வைத்து சோடனை தீபாராதனை லட்சுமணன் சுவாமி, தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன், மாரியப்பன் செய்தார்கள். இதில் சுப்பாராஜ், சங்கரேஸ்வரி மகாராஜா, மாரிஸ் வரன், கதிர்காம சுப்பிரமணியன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, இசக்கிமுத்து, மாரித்தாய், செல்வராணி, சங்கரி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தார்கள்.
- புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது.
- கோடி சக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. பிறகு ஸ்ரீ கோடி சக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சொர்ணமலை திருச்செந்தூர் பாதயாத்திரை மற்றும் அன்னதான குழு, முருகன், பிரேமா ஆகியோர் செய்திருந்தனர்.
- கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
- காலபைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கோவில்நடை திறக்கப்பட்டது. பின்னர் சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலபைரவருக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டாரப் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தயிர்சாதம் மற்றும் உளுந்து வடை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாரயணன், சரஸ்வதி, ஈஸ்வரி ஆகியோர் செய்தனர்.